நாடுகடந்த தமிழீழத்தைச் சேர்ந்தோர் லண்டன் இந்தியத் தூதரகத்தின் முன்பாக போராட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். ரஜீவ் கொலையுடன் தொடர்பற்ற மூன்று சாமானியர்களான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரைக் கொலைசெய்யத் திட்டமிட்டிருக்கும் இந்திய அரசிற்கு எதிராகவும் அதனை மௌனமாக அங்கீகரிக்கும் தமிழக அரசுக்கு எதிராகவும் பரவலான போராட்டங்கள் தமிழகம் எங்கும் நடைபெற்று வருகின்றன.
02.09.2011 செவ்வாய் மாலையிலிருந்து ஏழுமணிவரை இப் போராட்டம் நடத்தப்படவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போராட்டம் இந்திய அரசை இரஞ்சும் வகையில் நடைபெறுமா அன்றி இந்திய அரச பயங்கரவாதத்தை எதிர்ப்பதாக அமைந்திருக்குமா என்பது இன்னும் தெளிவாகவில்லை.
இந்திய அரசு பழங்குடி மக்களை வேட்டையாடுகின்ற செய்தி வருகின்ற போதெல்லாம் உணர்ச்சி பூர்வமான போராட்டங்கள் இந்தியத் பிரித்தானியாவிலுள்ள இந்தியத் தூதரகத்திற்கு முன்னால் நடைபெற்றது. நேபாள மாவோயிஸ்டுக்களின் ஆதரவாளர்கள் ஐரோப்பாவில் போராட்டம் நடத்துகிறார்கள் என்று செய்தி வந்தால் அது இந்தியத் தூதரகத்தின் முன்னால் நடக்கும் ஆர்ப்பாட்டமாகத் தானிருக்கும்.
பிரித்தானியாவில் முன்னதாக சிலர் போராட்டங்கள் நடத்த முயன்ற போதும் பொலீஸ் அனுமதி வழங்க மறுத்திருந்தது. இப்போது போராட்டத்திற்கான அனுமதியாவது வழங்கப்பட்டுள்ளது. இப் போராட்டம் நாடுகடந்த தமிழீழத்தின் போராட்டம் என்பதற்கு அப்பால் ஏனைய அமைப்புக்களும் இச் சந்ததர்பத்தைப் பயன்படுத்தித் தாமும் கலந்துகொள்வதும் சுயாதீனமான சுலோகங்களை முன்வைப்பதும் இந்திய அரசை அம்பலப்படுத்துவதும் அவசியமானது.








இதிலாவது உங்கள் கோமணக்கொடியை பிடிக்காதீர்.
தேசியக் கொடியை அவமதிப்போர் தேசத் துரோகிகள்!எந்த ஒருநாட்டிலும் தமிழீழ தேசியக் கொடி தடை செய்யப்படவில்லை!
உங்களால் கொடுக்கப்படும் மரணதண்டனைகளை கண்டிப்போரிற்கும்
நீங்கள் கொடுப்பது மரணதண்டனை. உங்கள் தேசியக் கொடியே இதற்கு
சாட்சி.
புலி- தானே இரைதேடி வளர்ந்த கொழுத்த மானை பிடித்துத் தின்பது.
தானாக கஸ்டப்படாது. (உலக புலி முகவர்கள் மாதிரியென்று கூறினால்
விளங்க இலகுவாகும்)
துப்பாக்கி: தமிழரைக்காக்க வல்ல ,புலியின் தலைவர்கள் தங்களைக்காக்க
தமிழரை அரணாக்குவார்கள். அந்த அரணை யாராவது தாண்டினால்
துப்பாக்கி சூடு இலங்கை ராணுவத்திற்கல்ல முதலில் உயிரைக்காக்க
தப்பியோடும் தமிழருக்குத்தான்.
இதுவே தேசியக்கொடியின் பெருமை. தமிழா தலை நிமிரவேண்டுமானால்
தேசியக் கொடியை தலை குனிந்து வணங்கு. மறுத்தால் தலையில் விழும் குண்டு.-துரை
அறிக்கைவிடும் அமைப்பு போராட்டம் நடத்துகிறது என்று சொன்னால்
மக்கள் வரமாட்டார்கள். பொது மக்கள் என்று சொல்லுங்கள்.
அப்படியே இந்த மக்குகள் அவையும் நாதி அற்ற த்மிழீழ கூட்டத்தோடு சேர்ந்து தீக்குளிக்கலாம், தூக்கிலடபட விருக்தும் சாந்தன் பத்மனாபா கொலையில் சம்பந்தபட்டவன், தெய்வம் நின்று அறுக்கின்றது, வாய்மையே வெல்லும்
ஆம் வாய்மை வெல்லும்!குற்றம் சாற்றப்பட்டவர்கள் அனைவரும் நிரபராதிகள் என்று தமிழக மக்களே சொல்கிறார்கள்.உ-ம்;பேரறிவாளன் தாய்.உங்கள் காழ்ப்பை வி.பு களுடன் நிறுத்திக் கொள்ளுங்கள்!இறைவன் படைத்த உயிரைப் பறிக்க எவருக்கும் அருகதையில்லை!ஏதோ ஒரு வகையில் குற்றம் புரிந்த நீங்கள் தான் வி.பு.களை வைகிறீர்கள் என்பது வெள்ளிடை மலை!
இறைவன் படைத்த உயிரைப் பறிக்க எவருக்கும் அருகதையில்லை! அப்ப புலி பறித்த உயிர்களுக்கு என்ன மாதிரி தம்பி, புலி மட்டும் மற்றவர்கள் உயிரை பறிக்கலாமோ
அப்படியே எல்லோரும் தீக்குளியிங்கள், எங்களுக்கு னிம்மதி