உலகெங்கிலும் பெரும்பாலான நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது.இந்தியாவிலும் நீண்டகாலமாக மனித உரிமையாளர்கள் மரணதண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிற நிலையில் தூக்கு தண்டனை விதிக்கும் சட்டம் தொடர வேண்டும் என, தேசிய மனித உரிமைக் கழகத் தலைவரும், ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதியுமான கே.ஜி.பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாலகிருஷ்ணன் அளித்த பேட்டியில் கூறியதாவது, கொடிய குற்றங்களுக்காக சில அரிதான வழக்குகளில் மட்டுமே தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. சமூக பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தூக்கு தண்டனை சட்டப்பிரிவு தொடர வேண்டும்.பல நாடுகளில் தூக்கு தண்டனை அளிக்கும் சட்டத்தை ரத்து செய்துள்ளனர். ஆனால் நமது நாட்டில் பல்வேறு வகை குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொள்ள வேண்டும்.தூக்கு தண்டனை சட்டத்தை ரத்து செய்தால் அது சமூகத்தில் குற்றச் செயல்கள் அதிகரிக்க வழிவகுத்து விடும். தூக்கு தண்டனை தொடர வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. இது தேசிய மனித உரிமைக் கழகத்தின் கருத்து அல்ல என்றார்.
பிழையான தீர்ப்புக்கள் வழங்கப்படலாம் என்பதால் தான் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக்கப்பட்டது ஆனால் லண்டனில் பென்லி என்ற சிறூமிகள கொன்றவன் தன்னை சிறயில் தாக்கிறார்கள் என் நட்ட ஈடு கேட்டு வழக்கு போடுவதை பார்த்தால் மரண தண்டனை சரிதான்.
In some cases we need death sentence, for people like in this news. https://inioru.com/?p=15667And for some people who ever cheat the system in our ‘Bharath’
Is justice really dedlivered in ‘your Bharath’?
Until justice and fairplay are in place, it is better to play safe and avoid ‘judicial’ killings.
Worse than death sentences are extra-judicial killings by the police & armed forces of the state.
மரண தண்டனை எப்பொதுமே பிழை. மனிதன் ஒருவனுக்கு, அவன் எந்தநிலையில் இருந்தாலும் நீதிபதியாகவோ அல்லது அரசனாகவோ இருந்தாலும் இன்னுமொரு மனிதனின் உயிரைப் பறிக்க ஒருபோதும் உரிமையில்லை. குற்றம் செயிதவனைத் தண்ட்டிக்க எத்தனையோ வேறு வழ்ககிகள் உள்ளன.