முன்னை நாள் இடதுசாரியும் பின்னைய திரிபுவாதியுமான துறைசார் அறிஞர் ஆஷீஸ் நந்தியின் ஆசிஷ் நந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இலக்கிய விழா நடக்கிறது. இதில் நேற்று நடந்த விவாதத்தில் கலந்து கொண்ட ன ஆசிஷ் நந்தி, ‘ஊழல் பேர்வழிகளில் பெரும்பாலானவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவும், எஸ்சி, எஸ்டி இனத்தை சேர்ந்தவராகவும் உள்ளனர்’ என்றார். அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பொதுவாக பார்வையாளர்களும் மேடையில் இருந்தோரும் உடனடையாகவே எதிர்ப்புக்குரல் எழுப்பினர். பின்னர் நந்தி அளித்த விளக்கத்தில், ‘உயர் ஜாதியினர் ஊழல் செய்தால் தப்பி விடுகிறார்கள். மற்றவர்கள் தங்களை காப்பாற்றி கொள்ள முடியவில்லை. அந்த அர்த்தத்தில்தான் பேசினேன்’ என்றார். பழங்குடியினர் நல ஆர்வலர் ராஜ்பால் மீனா என்பவர் ஆசிஷ் மீது போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து எஸ்சி, எஸ்டி சட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆசிஷ் பேச்சு அடங்கிய வீடியோவை பார்த்த பிறகு நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
நந்தி போன்றவர்களும் பின்னதாக அடையாள அரசியலை முன்னிலைப்படுத்தும் அவரை எதிர்க்கும் தாழ்த்தப்படீடவர்களில் உயர்ந்தோருக்கும் அப்பால் இவர் போன்றோரின் புத்திஜீவிக் குற்றவியல் அணுகப்பட வேண்டும்.








