தமிழக முதல்வர் கருணாநிதி செம்மொழி மாநாடு அறிவித்துள்ளார். தேவர் சாதி சங்கத் தலைவர் வாண்டையார், வாலி, வைரமுத்து, பா.விஜய் போன்ற திமுக ஆதரவு சினிமாக் கவிஞர்கள் திமுக கூட்டணி அரசியல் தலைவர்களைக் கொண்டு செம்மொழி மாநாடு நடக்க தமிழை ஆக்கபூர்வமான முறையில் அங்கீகரிக்கும் படியான கோரிக்கையோடு மதுரையில் வழக்கறிஞர்கள் 6-வது நாளாக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் வழக்கறிஞர்கள் பகவத்சிங், நடராஜன், ராஜா, ராஜேந்திரன், எழிலரசு, பாரதி ஆகியோர், தமிழை உயர் நீதிமன்ற அலுவலக மொழியாக ஆக்கிடவும், தமிழில் வழக்காடும் உரிமை கோரியும் சாகும்வரை உண்ணாநோன்பு மேற்கொண்டுள்ளனர்.
இன்று இவர்களை ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ள வைகோ, ” உண்ணாவிரதம், ஆறாவது நாளாகத் தொடர்கிறது. அவர்களது கோரிக்கை நியாயமானது. மறுமலர்ச்சி திமுக ஆதரிக்கிறது. அவர்களது கோரிக்கை வெற்றி அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறது.தமிழை, நடுவண் அரசின் ஆட்சி மொழிகளுள் ஒன்றாகவும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு மொழியாகவும் ஆக்கிட வேண்டும் என மதிமுக வலியுறுத்தி வந்திருக்கிறது.ஏழு கோடித் தமிழர்களின் உரிமையை நிலைநாட்டிடும் வகையில், உடனடியாக இந்தக் கோரிக்கையை நிறைவேற்றிட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார் வைகோ. செம்மொழி மாநாடு துவங்குவதற்கு முன் இப்போராட்டம் தமிழகம் முழுக்க பரவாமல் தடுக்கவும், எப்படியாவது இப்போராட்டத்தை நசுக்கவும் பல் உத்திகளை கையாள்கிறது கருணாநிதி அரசு.