நான்கு படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை இலங்கைக் கடற்படையின் உதவியுடன் சுற்றி வளைத்த இலங்கை மீனவர்கள் ஒரு படகில் சக்தி வாய்ந்த குண்டை வைத்து வெடிக்க வைத்தனர். இதில் பல லட்சம் ரூபாய் பெருமானமுள்ள படகு சேதமடைந்தது, இந்திய இலங்கை தமிழ் மீனவர்களுக்கிடையில் மோதலை உருவாக்கி நீண்டகால அரசியல் நோக்கம் ஒன்றை நிறைவேற்றும் நோக்கோடு மீனவர்களிடையே முரண்பாடுகளை ஊக்குவிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு இப்போது வலுத்துள்ளது. சமீபத்தில் கச்சத்தீவு அந்தோனியார் விழாவில் வைத்து யாழ் மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்குமான் பேச்சுவார்த்தைக்கு ஒழுங்கு செய்திருந்தார்கள் அது கடைசியில் நடக்கவில்லை.
இனி ஓரிரண்டு நாட்களுக்கு சுடச் சுட அறிக்கைகள் தமிழக அரசியல் வியாதிகளிடமிருந்து பறக்கும் அதன் பின் கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்……..! பாவம் தமிழ் மீனவர்கள். மறுபடியும் பிரபா வரும் வரை காத்திருங்கள்.