தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் பாடுதல் வேண்டும். தமிழில் பாடக் கூடாது என அண்மையில் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளமை ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் பேரினவாத நிலைப்பாட்டை வெளிப்படுத்க்ம் ஒரு முடிவேயாகும். இதன் மூலம் இனங்களுக்கிடையில் கசப்புணர்வு மேலோங்கவும் இன மோதல் தோற்றுவிக்கப்படவும் கூடிய சூழலே உருவாகும். எனவே மேற்படி தீர்மானத்தை எமது புதிய-ஜனநாயக மாக்சிச – லெனினிசக் கட்சி வன்மையாகக் கண்டித்து நிராகரிக்கின்றது. அத்துடன் மேற்படி தீர்மானத்தை அரசாங்கம் கைவிடவேண்டும் என வற்புறுத்துகின்றது.
இவ்வாறு புதிய – ஜனநாயக மாக்சிச – லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாகப் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளர்.
மேலும் அவ் அறிக்கையில், கடந்த அறுபத்திரண்டு வருடகால பாராளுமன்ற – நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையின் கீழ் பெரும்பான்மையின் பெயரால் எடுக்கப்பட்டு வந்த பேரினவாத முடிவுகளும் செயற்பாடுகளும் தான் நாட்டின் இன்றைய அவல நிலைக்கு அடிப்படையாகும். அதன் விளைவே தேசிய இனப் பிரச்சினை இன்றும் பிரதான பிரச்சினையாக இருந்து வருகிறது. இத்தகைய சூழலில் அதற்கு நியாயமான அரசியல் தீர்வை முன்வைத்து இனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஐக்கியம் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டிய ஜனாதிபதியும் அரசாங்கமும் அவற்றுக்கு வேட்டு வைப்பது போன்று முற்றிலும் இனவாத அடிப்படையைக் கொண்ட சிங்களத்தில் மட்டும் தேசிய கீதத்தைப் பாடும் தீர்மானத்தை எடுத்திருப்பது கண்டனத்திற்குரியதாகும். இத்தகைய மலிவான இனவாதத் தீர்மானங்கள் மூலம் சிங்கள மக்கள் முன் எழுந்து நிற்கும் பாரிய பொருளாதாரப் பிரச்சினைகளைத் திசைதிருப்பி வைத்திருக்க மட்டுமே உதவக் கூடியதாகும். அத்துடன் ஐக்கியப்பட வேண்டிய தமிழ், சிங்கள, முஸ்லீம், மலையகத் தமிழ் உழைக்கும் மக்களிடையே குறுகிய இனக் குரோத உணர்வுகள் தூண்டப்படுவதற்கும் களம் அமைக்கப்படுகிறது. அதன் மூலம் உழைக்கும் வர்க்க மக்களைப் பிளவு படுத்தி பேரினவாத முதலாளித்துவ ஆட்சி அதிகாரத்தை நீடித்துக் கொள்ளும் ஒரு வழிமுறையாகவும் தேசிய கீதம் பற்றிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றே கொள்ள முடியும்.
சி.கா. செந்திவேல்.
பொதுச் செயலாளர்.
எனக்கு ரூபவாகினி தொலைக்காட்சி வந்த காலத்தில் இருந்து இலங்கை அரசின் மீது எரிச்சல் உண்டு இப்படி எதை எடுத்தாலும் சிங்களம். இந்த விலங்குக் கூட்டத்தை நைஸ் பீப்பிள் என்றூ கிறீஸ்மஸ் காலத்தில் பைலாப் பாடல் போட்டு ஆடி மகிழ்விக்கும் குரங்குக் கூட்டத்தில் நானும் ஒருவன்.வெள்ளவத்தையிலும்,பம்பலப்பிட்டியிலும் குப்பை கொட்டி விட்டு லண்ட்ன் வருகிறவர்க்கு மலையகத்திலும், உடைப்பிலும் அவதிப்படும் தமிழர் கஸ்டம் தெரியாது.தெரிந்தது கசிப்பு,கள்ள உறவு, விபச்சாரம்.அதனால் எந்த வலியும் தெரியாது.அதனால் என்ன?மெண்டிஸ் அடிக்கும்.விவா குடிக்கும்.தேசிய கீதமா?தமிழிலா?நான் இப்ப அரசியல் பேசுறதில்ல, அரசியலும் புடிக்கேல்ல.