மகிந்த ராஜபக்ச லொக்கு அத்துல என்ற உதவியமைச்சரை அடித்துக்கொலை செய்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் இதுவரை கருத்துத் தெரிவிக்கவில்லை என்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. தவிர, வெளிநாட்டில் வசிக்கும் சுனந்த தேசப்பிரியவின் சகோதரரான தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவைத் தனிமைப்படுத்திவிட்டு தேர்தல் அலுவல்களைக் கவனிப்பதற்கு மகிந்தவின் ஊரைச் சேர்ந்த பெலியத்த அமரே என்பவர் சட்டத்திற்குப் புறம்பாக நியமிக்கப்பட்டுள்ளார். இத்தகவல்கள் கொழும்பு உள்வட்டாரங்களில் வெளியாகியுள்ளன. பெலியத்த அமரே தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் தனது அலுவலகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளார். தவிர, போலிஸ் சேவையில் ஈடுபட்டுள்ள அனைவரும் தபால் மூலம் வாக்களிப்பில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கை அரசியலில் மேற்கு ஏகாதிபத்தியங்களாலும் இந்திய அரசாலும் பயன்படுத்தப்பட்ட மகிந்த ராஜபக்ச தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் இறுதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இலங்கையில் கிறீஸ்தவப் பரம்பரையில் பிறந்து அரசியலுக்காக பௌத்தர்களாக மாறிய ராஜபக்ச குடும்பம் கடந்த பத்து வருடங்களாக இலங்கையின் ஒவ்வொரு மூலையையும் சூறையாடியது. ஏகாதிபத்தியங்களின் இனப்படுகொலை அடியாளாகப் பயன்பட்ட ராஜபக்ச இன்று அதே ஏகாதிபத்தியங்களின் வலையில் சிக்குண்டு அழிக்கப்படும் நிலையிலுள்ளார். தன்னை அழிவிலிருந்து தற்காலிகமாகத் தற்காத்துக்கொள்ள ராஜபக்ச நேரடியாகப் பங்காற்றிய கொலையான லொக்கு அதுலவினது. எதிர்வரும் காலங்களில் இலங்கையில் மேலும் இரத்தக்களரிகள் ஏற்படலாம்.
ராஜபக்சவிற்கு எதிராக நிறுத்தப்பட்டுள்ள பேரினவாதியான மத்திரிபால சிரிசேன மேற்கு ஏகாதிபத்தியங்களின் புதிய அடியாள். தேசிய இன ஒடுக்குமுறையை ஆழப்படுத்தி அரசியல் பிழைப்பு நடத்துவதே மைத்திரிபாலவின் நோக்கமுமாகும்.
ராஜபக்ச நடத்திய இனப்படுகொலைக்குப் பக்கபலமாகச் செயற்பட்ட மைத்திரிபால பேரினவாத அரசியலைத் தொடர்ந்து முன்னெடுக்க ஏகபோக அரசுகளின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மீண்டும் இலங்கையில் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் மத்தியிலும், வர்க்கப் போராட்டம் சிங்கள மக்கள் மத்தியிலும் தோன்றுவது மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்குரிய முன்நிபந்தனையாகியுள்ளது. இரண்டுமே ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரால் தலைமைதாங்கப்படுவது மட்டுமே எதிர்கால சமாதனத்தை உறுதிப்படுத்தும்.
லொக்கு அத்துலவின் மரணம் பற்றிய தகவலை கிசுகிசுகளை வெளியிடும் இணைய தளம் ஒன்றே வெளியிட்டது. இந்தத் தகவல் ஊர்ஜிதப்படுத்தப்படாத ஒன்றாகும்.