கிழக்கு முதலமைச்சர் பிள்ளையானின் நெருங்கிய சகாவும் ஆலோசகருமான சின்ன மாஸ்டர், எம்.ஆர்.ஸ்டாலின் என்ற பெயர்களில் அழைக்கப்படும் தலித் மேம்பாட்டு முன்னணியின் உறுப்பினரான ஞானம் மற்றும் லண்டனிலிருந்து வருகை தந்திருந்த, எஸ்.எல்.டி.எப் உறுப்பினர்களான ராகவன், கீரன், காண்டீபன் உள்பட சுமார் 18 பேர் வரையில் கலந்து கொண்ட நூல் வெளியீட்டு விழா 21.01.2008 அன்று பாரிசில் நடைபெற்றது.
வடக்கில் தலித்துக்கள் கொலை செய்யப்படுவதற்கு ஈ.பி.டி.பி துணைபோவதாகச் குற்றம் சாட்டிய இதன் முன்னணி உறுப்பினர்கள பிள்ளையானின் கொலைகள் தொடர்பாகக் கருத்துக்கள் வெளியிடாமை ஈ.பி.டி.பி – பிள்ளையான் முரண்பாட்டின் எதிரொலியாகவிருக்கலாம் என கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் இனியொரு இணையத்திற்குக் கருத்துத் தெரிவித்தார்.