Sunday, May 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ஜெனீவா ஐ.நா முன்றலில் தீக்குளித்த தமிழர் மரணம்

இனியொரு... by இனியொரு...
02/13/2009
in இன்றைய செய்திகள்
0 0
8
Home இன்றைய செய்திகள்
இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களை காப்பாற்றக்கோரி சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை ஐரோப்பிய தலைமையகம் முன்பாக ஈழத்தமிழர் ஒருவர் தீக்குளித்துள்ளார்
காவற்துறையினர் தீக்குளித்த தமிழரை அவசரமாக வைத்தியசாலைக்கு எடுத்து சென்று மருத்துவ சிகிச்சைசெய்தும் பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இளைஞர் லண்டனில் வசிப்பவர் எனவும், இந்த இளைஞரின் பெயர் முருகதாஸ் எனவும், இவருக்கு 27 வயது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர், 7 பக்கங்களுக்கு “உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்”  என்ற தலைப்பில் ஒரு மரண சாசனம் எழுதி வைத்து விட்டு தீக்குளித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

பிரித்தானிய வெளியுறவுச் செயலர், மகிந்த தொலைபேசி உரையாடல்!

Comments 8

  1. msri says:
    17 years ago

    கடந்த கால் நுhற்றாண்டு காலமாக கொலைகளும் தற்கொலைகளுமே; அரசியலாகிப்போன தமிழ்மக்கள் வாழ்வில் முருகதாசினுடைய தீக்குழிப்பு எவ்வித மாற்றத்தையும் தந்துவிடாது: புலம்பெயர் வாழ்வின்> “முதலாவது தீக்குழிப்பாளன்” என்ற படடத்தைக் கொடுக்கலாம்! அவரின மரணசாசனம் கேட்டு-படித்து-சலித்துப்போன ஒன்று!

  2. thami says:
    17 years ago

    எம்சிறீ அண்னை நேற்று மகிந்தா அரசு வன்னிதமிழ்அகதிகளை வவுனியா
    கொண்டு செல்ல பாசினப்புலிகள் பஸ்சுக்கு குண்டடிச்சு தொந்தரவு கொடுத்திருக்கிறார்கள்.
    குழப்பியிருக்கிறார்கள்.பாசிசம் இல்லாத நாங்கள் இனி என்ன செய்யலாம்.
    விடை தருவீர்களா ?

  3. நோர்வே நக்கீரா says:
    17 years ago

    மரணம்

    மரணம் ஜனனம் போல் இயற்கையான ஒன்று, இயற்கையாகவே வரவேண்டும். எமது உடலிலும் ஆயிரக்கணக்கான கலங்கள் பிறந்து பிறந்து இறக்கின்றன. மரணம் அர்த்தமுள்ளது தான். இது இயற்கையாகவும், கொலையாகவும், தற்கொலைகளாகவும் மரணம் சம்பவிக்கலாம். உங்கள் உயிரை எடுப்பதற்கு உங்களுக்கு மட்டுமல்ல உயிர்கொடுத்தவர்களுக்குக் கூட உரிமை கிடையாது.

    முத்துக்குமாரில் இருந்து முருகதாஸ் வரை நடந்த தீக்குழிப்புத் தியாகங்கள், மரணங்களாக கணக்கு வழக்கு இன்றித் தொடருமானால் அது அர்த்தமற்ற ஒன்றாகி விடுவதுடன், இவர்களின் தியாக நோக்கைத் திசை திருப்பிவிடும். ஆயுத்கலாச்சாரம், வன்முறைக்கலாச்சாரம் போல் தற்கொலைக்கலாச்சாரம் என்று உலகம் கண்டும் காணாமாலும் இருந்து விடும்.

    என்னினத்து இளம் தமிழ் உயிர்களே! என் உயிரெடுத்து, உதிரம் ஊற்றியே இதை எழுதுகிறேன். நீங்கள் எழுந்தவாரியாக, தான்தோன்றித்தனமாக, உணர்வுகளுக்கு அடிமையாகி தற்கொலை முயற்சியில் ஆங்காங்கே ஈடுபடுவீர்களாயின் சிங்களவனது இனவழிப்புக்கு நீங்களும் உடன் போவதாக அமைந்துவிடும். என்னினத் தமிழ் உயிர்களே! உங்களது உயிரானது பெற்றோர், சகோதரங்கள், உறவுகளுக்கு மட்டுமல்ல தமிழுக்கும், தமிழ் இனத்துக்கும் வேண்டும். நீங்கள் இருந்து சாதிக்க வேண்டியது பல உண்டு. ஒவ்வொரு மனிதனும் சாதனையாளன்தான். நம்புங்கள் இது உண்மை.

    உங்கள் உயிர் தியாகங்களும் தீயில் எரியும் போது ஏற்படும் உத்தரிப்புகளும் அர்த்தமற்றுப் போய்விடக்கூடாது. முதன் முதல் மகாத்மா காந்தி உண்ணாவிரதம் இருந்தபோது அது வெள்ளையனுக்கு மட்டுமல்ல உலகிற்கே புதிதானதும் வித்தியாசமானதுமாக இருந்தது. ஒருபாவமும் அறியாதவன் உண்ணாமல் உத்தரிக்கிறானே எனும் பொழுது மனிதம் எழுந்தது வெற்றி கொண்டது. இதே உண்ணாவிரத்தை பார்த்தீபன் (திலீபன் புனைபெயர்) அதுவும் காந்திதேசத்துக்கு எதிராகச் செய்தபோது காந்தி பெயரையே கொண்ட காந்தியர்கள் என்ன செய்தார்கள்? பார்த்தீபன் கொல்லப்பட்டான் என்பதுவே உண்மை.

    இன்றும் எத்தனையோ உண்ணாவிரதங்கள் நடந்தன. அதில் உண்மை, அடிப்படை நேர்மை இருந்ததா? வயிறு முட்ட உண்டுவிட்டு வருவதுடன் தம்மை இடையில் உண்ணாவிரதத்தை விட்டு எழுப்புவதற்கு ஆட்களைத் தயார்படுத்தி விட்டே வருகிறார்கள். அடிப்படை நேர்மை, நீதி, வெல்வோம், முடிப்போம் என்ற நம்பிக்கையில்லாத எந்த ஒரு தியாகமும் வெற்றியளிக்காது. தயவுசெய்து என்இனத்து மக்காள் முத்துக்குமார் முதல் முருகதாஸ் வரையிலான தியாகங்களை அர்த்தமாக்குங்கள்.

    தயவு செய்து சிந்தியுங்கள். முத்துக்குமாரினதும் முருகதாஸினதும் தீக்குளிப்புகளே முக்கியமாகப் பேசப்படுகின்றன? காரணம் என்ன என்று சிந்திப்பீர்களா? இவர்கள் தம்எண்ணங்களை வெளிப்படுத்தும் முகமாக மக்களை எழுற்சியுறச் செய்வதற்காய் மரணசாசனம் ஒன்றை எழுதிவைத்து விட்டு இறந்தார்கள். இதைப்போல் நீங்களும் மரணசாசனம் எழுதிவைத்துவிட்டுத் தீக்குழியுங்கள் என்று சொல்லவில்லை. எல்லாவற்றுக்கும் இடம் பொருள் ஏவல் என்று ஒன்று உண்டு. இந்த இடம் பொருள் ஏவல்தான் இவர்களினது மரணங்களைத் தியாகமாக்கியது.

    900இற்கும் மேற்பட்ட தமிழ் இந்திய மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் இந்துசமுத்திரத்தில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். இந்திய மத்திய அரசுமுதல் தமிழ்நாடு மாநில அரசு வரை என்ன செய்தார்கள்? காசு கொடுத்துக் கண்ணீரை அடைக்க முயற்சித்தார்கள், வெற்றியும் கண்டார்கள். ஊர்வலம் போனீர்கள், கொடிபிடித்தீர்கள். யாருங்களுக்குக் குடைபிடித்தார்கள்?

    இந்தியத் தமிழர்களின் கண்ணீரான இலங்கையின் அரசை என்ன செய்ய முடிந்தது? இந்தியத்தமிழனைக் கொன்றதற்காக இந்தியவரசு தமிழ்நாட்டு மாநில அரசின் அனுரசணையுடன் இலங்கையரசுக்குப் பரிசு கொடுத்தது. எப்படி? இன்னும் தமிழனைக் கொல்ல இராடாராக, ஆயுதங்களாக, கவசவாகனங்களாக, இராணவமாக இன்னுமின்னும்…..!! இதுவரை இலங்கையரசால் கொல்லப்பட்ட இந்தியமீனவர்களும் சரி, கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களும் சரி என்ன பிழை செய்தார்கள்? என்ன பாவம் செய்தார்கள்? தமிழராய் பிறந்ததைத்தவிர. ஈழத்தமிழர்கள் வாழும் உரிமையையும் அதற்கான இருப்பையும் கேட்டார்கள். இந்த இந்திய தமிழ் மீனவர்கள் என்ன கேட்டார்கள்?

    பிறப்பு நாம் கேட்டு வந்தது இல்லையே. பிறப்பும் இறப்பும் எம்கையில் இல்லாததால் எம்கையில் இருக்கும் வாழ்வை அர்த்தமாக்கப் பாருங்கள். தமிழுக்காக, தமிழனுக்காக, இனத்துக்காக வாழ்ந்து சாதியுங்கள்.

    தமிழ் தலைவர்களும், அரசியல்வாதிகளும் செய்யவேண்டியதை ஒரு தமிழனாக கட்டுரையூடாக நான் என்சிறுபணியைச் செய்ய முயல்கிறேன். என்னினத்து உயிர்களே ஒரு தமிழ் உயிர் உலகைவிட்டு அநியாயமாகப் போவதை அனுமதிக்க இயலாது. உங்கள் தீக்குழிப்புக்களையும், தியாகங்களையும் அரசியலாக்கிப் பணமாக்க கழுகுகள் காத்துக்கொண்டிருக்கின்றன.

    புதியதாகச் சிந்தியுங்கள். இல்லை மகாத்மா காந்தியின் வழியில்தான் செயற்பட விரும்புவீர்களானால், மகாத்மா காந்தி எம்மிடம் இன்னுமொரு ஆயுதத்தைத் தந்துவிட்டுத்தான் போயிருக்கிறார். அதுதான் ‘ ஒத்துழையாமை’

    வெளிநாட்டில் வாழும் தமிழர்களே! இலங்கை, இந்திய, பாக்கிஸ்தானிய, சீன , இஸ்ரவேலின் பொருட்களை, உணவுகளை வாங்காது விடுவதுடன், இதை வாங்க முயலும் உங்கள் நாட்டு மக்களைத் தடுங்கள். பிரசுரங்கள் மூலம் ஏன், எதற்காக, உங்கள் பணம்தான் எம்மை மறைமுகமாகக் கொல்கிறது என்பதை நீங்கள் வாழும் நாட்டுவர்க்கு விளக்குங்கள். இது இரட்டிப்பான வெற்றியை எமக்குத்தரும்.

    1.தமிழர்களின் இனச்சுத்திகரிப்பையும், சிங்கள அரசின் துவேச கொடுங்கோண்மையையும் சாதாரண மக்களிடையே கொண்டு செல்லும், அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

    2.பொருளாதார ரீதியாக, சிறுதுளி பெருவெள்ளமாக இலங்கை இராணுவத்துக்கு உதவும் நாடுகளின் பொருளாதாரம் அழியும்.

    சிந்தியுங்கள், செயற்படுங்கள் உங்கள் கருந்துக்களை எதிர்பார்க்கிறேன் இன்னுமொரு இதழின் புதிய சிந்தனையுடன் சந்திக்கிறேன்

    அன்புடன்

    உங்கள் நோர்வே நக்கீரா

  4. msri says:
    17 years ago

    தமீஅண்ணா பாசிசம் இல்லாத நாங்கள் >எமக்குப் பெரும்பிரச்சினையாகவுள்ள புலி-அரசுப் பாசிசங்களை இல்லாதொழிக்கவேண்டும் அதற்காக தயவுசெய்து “தீக்குளிப்பு போராட்டம்” பற்றி யோசித்துவிடாதீர்கள்! இப்போ எமது பிரதான வேலை பாசிசத்திற்கெதிரான போராட்டமல்ல! “தீக்குளிப்பிற்கு எதிரான போராட்டமே”

  5. nallamuttu says:
    17 years ago

    // 900 இற்கும் மேற்பட்ட இந்தியத்தமிழ் மீனவர்கள் இந்துசமுத்திரத்தில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு சிங்களஇராணுவத்தால் கொலை செய்யப்பட்டார்கள் //
    இதில் எத்தனை நுhறு இந்தியமீனவர்கள் இலங்கைராணுவ சீர்யுடையணிந்து வந்த புலிகளால் கொலை
    செய்யப்பட்டார்கள் என்பதையும் கணக்கில் எடுத்து எழுதுவது சிறப்பானது.
    காரணம்; தமிழ்நாட்டில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி எவ்வகையிலேயும் இந்தியஅரசிக்கும் இலங்கைஅரசிற்கும்
    பகையை ஏற்படுத்தி அதில் குளிர்காய்வதற்கு புலிகள் வெகு ஆவலாக இருந்தார்கள்.
    புலி எதிர்பார்தபடி நடக்கவில்லை. காற்றும் திசைமாறி வீசியது.அழிவிற்கு நாளும் குறித்தாயிற்று. இனிவரப்போகிற
    மீனவர் கொலைகளின் விகிதாசாரத்தை வைத்து இதன் உண்மையை புரிந்து கொள்ளமுடியும்.என்ன? சிறிது காலதாமதம் ஆகும்.
    தீக்குளிப்பு என்பது வன்முறையே ! தமது இலட்சியத்தை அடைவதற்கு இவ்வழியைக் கையாளுகிறார்கள். இவர்கள்
    இலட்சியம் தமிழ்மக்கள் அல்ல. புலிகளையும் புலிலைமையின் இருப்பை பாதுகாப்பதே !.

  6. கீரன்(யாழ்) says:
    17 years ago

    சிந்தியுங்கள் தீக்குளிப்பு என்பது ஒரு ஜனநாயக ரீதியிலான அகிம்சைப்போராட்டமா? அல்லது காட்டுமிரான்டித்தனமான வன்முறைப்போராட்டமா? நீங்களே சிந்தித்து முடிவுகாணுங்கள்.சிந்திக்க தெரியாவிட்டால் பக்கத்தில் உள்ளவரிடம் கேட்டுதெரிந்து கொள்ளுங்கள். எம்மவரிடையே பலதரப்பட்டவர்களிடம் அண்மையில் தீக்குளித்தவர்கள் பற்றிய பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவினாலும் சரி பிழைக்கு மேலாக அவர்கள் எம்மவவரின் படும் அவலத்தை தாங்கமுடியாது இம்முடிவுக்கு வந்திருப்பார்களாயின் தமிழன் ஒவ்வொருவனும் தங்கள் நெஞ்சிலே அவர்களை தாங்கியே ஆக வேண்டும்.நான் இங்கே இவர்கள் விரும்பி உணர்வுபூரமாக செய்தார்களா? அல்லது உணர்ச்சிவசப்பட்டு செய்தார்களா? செய்யத்தூண்டப்பட்டார்களா? காசுக்காக வறுமையின் நிமிர்த்தம் செய்யப்பட்டார்களா? என்று குதக்கம் செய்ய முற்படவில்லை. ஆனால் இவர்களது தியாகத்தை பக்கம் பக்கமாக ஊடகங்களிலே எழுதி வியாபார பொருளாக மாற்ற வேண்டாம் என தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன். மனித நேயம் அற்ற இன்றைய உலகில் உரிமைக்காக போராடும் போது போராட்டதத்தில் இறத்தல் என்பதைத்தவிர உண்ணாவிரதம் இருந்து இறப்பதோ தற்கொலைத்தாக்குதலில் உயிரை மாய்ப்பதோ தீக்குளித்து உயிரை விடுதலோ (சாக்கிரட்டீஸ் கூறியதுபோல “இந்த நாற்றமெடுத்த சமுதாயத்தில்”) தவிக்கப்பட வேண்டியதொன்றாகும்.

  7. tambi says:
    17 years ago

    // பிரதானபோராட்டம் பாசிசத்திற்கான போராட்டம் அல்ல “தீ குளிப்புக்கெதிரான போராடமே”// எம்சிறீ
    தீப்பெட்டியை ஒளித்துவைக்கலாமா ? மண்எண்னையை இல்லாமல் செய்து விடலாமா? ……

    இதோ மாதிரி புலி-அரசு பாசிசத்திற்கும் கொஞ்சம் விளக்கம் தயவுசெய்து தரவும்.

  8. msri says:
    17 years ago

    புலி-அரசுப் பாசிச்ம் >கொழுக்கட்டை மோதகம் போன்று உருவம் வேறு ஊள்ளடக்கம் ஒன்றே!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In