கேப்பாபுலவு மக்கள் மக்கள் இடம்பெயர்ந்த மக்கள் அல்ல. இவர்களுக்கு மாற்றீட்டு காணிகள் வழங்கப்பட்டுள்ளன.சூரியபுரத்தில் இவர்களுக்கு நாம் சுகாதார, குடிநீர் வசதிகளை செய்து கொடுத்துள்ளதுடன், வீடுகளை அமைத்துக் கொடுக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதென பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார். மகாவலித் திட்டத்தின் போது, மலையகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டனர். அதை அந்த மக்கள் இப்போது மறந்து விட்டார்கள்.
தெல்தெனிய கிராமமே நீரில் மூழ்கியது. மக்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். அந்த நடவடிக்கை நாட்டின் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்பட்டது. இது பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படுகிறதென வன்னிப் படைத் தலைமையகத் தளபதி தெரிவித்துள்ளார்.
மக்கள் அவர்களது சொந்த இடங்களை நாட்டின் பாதுகாப்பிற்காக மறந்துவிட வேண்டும் என்றார். அந்த மக்கள் தமது சொந்த நிலங்களை விட்டு துரத்தியடிக்கப்பட்டு காடுகளில் அனாதரவாக விடப்பட்டுள்ளனர். இன அழிப்பின் கோரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிசெய்வதாகக் கூறும் தொண்டு நிறுவனங்கள் கூட அவர்களின் சொந்த நிலம் குறித்துப் பேசுவதில்லை. மக்களின் பாரம்பரிய நிலம், அழிக்கப்படும் அவர்களின் அடையாளம் ஆகியவற்றை நிராகரிக்கும் ‘பேரினவாத போலி இடதுசாரிகள்’ சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ பௌத்தமயமாதல் குறித்தோ நிலப்பறிப்புக் குறித்தோ வாய்திறப்பதில்லை.









It is good to know that Major General Boniface Perera is there in the Wanni now . He did great here in the East.