இந்தியாவின் ஆகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டான ஸ்பெக்டராம் ஊழல் சர்ச்சையில் சிக்கியிருப்பவர் திமுகவின் மத்திய அமைச்சர் ராஜா. பாராளுமன்றத்தில் ராஜா மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக தொடர்ந்து கேள்வி எழுப்புவதால் கடும் அமளி ஏற்படுகிற நிலையில், ராஜா தலித் என்பதால்தான் இப்படி பிரச்சனை எழுப்புகிறார்கள் என்று ஸ்பெக்டரம் ஊழலுக்கு புதிய சாயம் பூசினார் இந்நிலையில் நேற்று தனது ஆதரவாளர்களுடன் சென்னை திரும்பிய மத்திய அமைச்சர் ராஜாவை காட்சி, அச்சு ஊடக நிருபர்கள் சூழ்ந்து கொண்டு ஸ்பெக்டராம் ஊழல் தொடர்பாக கேள்வி எழுப்பினர். நிருபர்களின் எந்த கேள்விகளையும் பொருட்படுத்தாத ராஜா அங்கிருந்து நகர அவரது பின்னாலேயே சென்று கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்த நிருபர்கள் மீது ராஜா ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினார்கள். ஆங்கில தொலைக்காட்சி நிருபர்கள் மீது நடத்தப்பட்ட இந்த அநாகரிகச் செயல் அடுத்த சர்ச்சைக்கு அடித்தளம் போட்டுள்ளது.
mmmm:is it so?
எமெர்ஜென்சியில் சஞ்சய் மற்றும் இந்திரா பண்ணாத அட்டகாசமா ,கடைசியில் என்னவானது ,ராசா அவர்களே சற்று சினம் காக்க .
ராஜாவின் நேர்மையும் நேர்மையீனமும் ஒருபுறமிருக்க, ஊடகவியலாளர்களின்நடத்தை பற்றிய கேள்விகளும் உள்ளன.
யாரையும் எங்கேயும் மறித்துக் கேள்வி கேட்கவும் தனிமனிதரின் அந்தரங்கத்தை மீறவும் ஊடகவியலாளர்கட்கு எந்தளவு உரிமை உண்டு?
ராஜா பதில் சொல்ல மறுத்தால் அவரைத் தொடர்வது தொல்லை கொடுக்கும் செயல்.
அவர் பேச மறுத்ததே குற்றத்துக்குப் போதுமான சாட்சியமாகலாம்.
அதே வேளை, அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கியது ஏற்கத்தக்கதல்ல.
ஊடகவியலாளர்கட்கான நடத்தை விதிகள் உள்ளன. ஊடகங்கள் நீதி மன்றங்களின் பணியைப் பொறுப்பேற்க முடியாது.
அது போல தலைவர்களின் அடியாட்கள் பொலிஸ் பணியைப் பொறுப்பேற்க முடியாது.