நாங்கள் இலங்கை நிலவரம் குறித்து மிக உன்னிப்பாக அவதானித்து வருகிறோம் என்று அமரிக்க அரச அலுவலகப் பேச்சாளர் பிலிப் கிரவ்ளி ஏ.எப்.பி செய்திகளுக்குத் தெரிவித்தார். சமூகத்தில் ஏற்பட்டுள்ள பிளவுகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் செயற்பட வேண்டிய அவசியம் உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். இன்றைய அரசின் நடவடிக்கைகள் எதிர்கால ஜனநாயக அமைப்புமுறையைப் பாதிக்கும் என பிலிப் மேலும் தெரிவித்தார். வன்னியில் ஐம்பதாயிரம் தமிழர்கள் கொலைசெய்யப்பட்ட காலப்பகுதியில் இலங்கை நிலைமைகள நெருக்கமாக அவதானித்து வருவதாகவும் இலங்கை அரசு மனித உரிமைகளை மதித்து நடக்க வேண்டும் என்றும் அமரிக்க ராஜாங்கப் பேச்சாளர் தெரிவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இலங்கை சுதந்திர தினத்தன்று பயங்கரவாதத்தை அழிக்க்பட்டதாக அமரிக்க ஜனாதிபதி ஒபாம ராஜபக்சவிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தது தெரிந்ததே.
சரத் பொன்சேகாவின் கைது குறித்து கவலையடைந்திருப்பதாக பிலிப் கிரவ்ளி மேலும் தெரிவித்தார். இந்திய அரசோ அதன் பேச்சாளர்களோ இது குறித்த கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவால ஒரு ம… புடுங்க முடியாது.
அமெரிக்கா முள்ளி வாய்க்கால் படுகொலையையும் உன்னிப்பாகத்தான் பார்த்தது. இருபத்தியோராம் நூற்றாண்டில் இந்த உலகத்திலே ஏதாவது சொல்லக்கூடிய நாடொன்று உள்ளதென்றால் அது சீனாதான்.
சீனாவா சார்?அங்கு போனதில்லை நீங்கள்? ஒரு புழுவைப்போல நம்மைப் பார்ப்பான் நாமெல்லாம் மனித சாதியை சாராதவர்கள் என்ற எண்ணம் அவனுக்கு.இங்கு இத்தனை வசதிகள் தந்துமா அமெரிக்காவை உணராது உள்ளீர்கள்.எந்த ஊர் அய்யா நீங்கள்.உன்னிப்பாக் என்பதன் அர்த்தம் எல்லையின் அளவு தாண்டினால் அவ்வளவே.
ஐயா போயிருக்காரு போல.
வேறெ என்ன பாத்தாரு?
ஆமா உன்னிப்பாக பார்த்துபுட்டு பெரிசா ஒண்டுமே புடுங்கமுடியாது இந்த அமெரிக்காவால் …போயா போயி சோலியை பாரும் ஒய் …பின்னால பின்லேடன் வந்தாலும் வந்துடுவான்!!!
சரத்தை தூண்டி விட்டதே இந்த அமெரிக்க பயலுகதான்