Monday, April 27, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

கைதான குற்றவாளி ஈ.பி.டி.பியைச் சேர்ந்தவரே – உறுதிப்படுத்தும் இராணுவம்

இனியொரு... by இனியொரு...
01/09/2011
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட அதிஷ்ட இலாபச்சீட்டுக்களை விற்பனை செய்து கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் யாழில் கைது செய்யப்பட்டிருக்கும் சேதுபதி என்பவர் தமது கட்சி உறுப்பினர் அல்ல என ஈ.பி.டி.பி அறிவித்துள்ளது.
இதேவேளை அரச படையினர் இவர் ஈ.பி.டி.பி உறுப்பினரே என உறுதிப்படுத்தியுள்ளனர். கடத்தப்ப்பட்ட மோட்டார் சைக்கிளும் இவரிடம் காணப்பட்டதாகப் படையினர் கூறுகின்றனர். இதே வேளை யாழ்ப்பாணத்தைக் கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பது குறித்து கோதாபாயவிற்கும் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அதன் வெளிப்பாடே இந்தக் கைது எனவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இராணுவத்தின் ஒத்துழைப்புடன் நடைபெற்றுவரும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஈபிடிபி உறுப்பினர் கோதாபாய – டக்ளஸ் முரண்பாட்டின் வெளிப்பாடாகக் கைதாகியிருக்கலாம் எனத் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாண பல்கலைக் கழகத் துணை வேந்தர் நியமனத்தின் போதும் இந்த முரண்பாடு வெளிப்பட்டதாகத் தெரியவருகிறது. அதே வேளை இலங்கை அரசு சார் புலம்பெயர் ஊடகம் ஒன்று டக்ளஸ் தேவாந்தாவைக் கண்டித்துக் கருத்து வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

அரச துணைக் குழு ஒன்றிற்கும் அரசிற்கும் இடையேயான வெளிப்படையான முதலாவது முரண்பாடாக இது கருதப்படுகிறது.

ஈ.பி.டி.பியினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை வருமாறு………
08.01.2011
ஊடக அறிக்க
யாழில் கைதுசெய்யப்பட்டிருப்பவர் எமது கட்சி உறுப்பினர் அல்ல. யாராக இருப்பினும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட அதிஷ்ட இலாபச்சீட்டுக்களை விற்பனை செய்து கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் யாழில் கைது செய்யப்பட்டிருக்கும் சேதுபதி என்பவர் தமது கட்சி உறுப்பினர் அல்ல சில காலங்களுக்கு முன்னர் தமது கட்சி வேலைகளில் ஈடுபட்டிருந்து பின்னர் கட்சியில் இருந்து விலக்கப்பட்டிருந்தார். கடந்த ஐந்து வருடங்களாக எம்மோடு எந்த வித உறவுகளோ, தொடர்புகளோ இல்லாத குறித்த நபரின் சட்ட விரோத நடவடிக்கைகளை எமது கட்சியோடு எவரும் சம்பந்தப்படுத்துவது கண்டனத்திற்குரிய விடயமாகும்.
அன்மைக்காலமாக குறிப்பாக யாழ் குடாநாட்டில் அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்கள் குறித்து எமது செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் அவர்களினதும் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்ததை சகலரும் அறிவர்.
இதே வேளையில் இந்த விடயங்கள் குறித்து நாடாளுமன்றத்திலும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்மையில் உரையாற்றும்போது யாழ்ப்பாணத்தில் நடக்கும் சட்டவிரோதச் செயல்கள் மற்றும் சமூக விரோதச் செயல்கள் தொடர்பாக எமது கண்டனத்தைத் தெரிவித்ததோடு அவை தடுக்கப்படவேண்டும் என்றும் குற்றவாளிகள் சட்டத்துக்கு முன்னால் கொண்டுவரப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் ஒரு தனிநபரின் சட்ட விரோத நடவடிக்கையை எமது கட்சியோடு சம்பந்தப்படுத்தும் விதமாக செய்திகளை திரிபுபடுத்துவது வன்மையான கண்டனத்திற்குரிய விடயமாகும்.
கைது செய்யப்பட்டிருக்கும் சேதுபதி என்ற நபர் குறித்த விசாரணைகள் பொலிசாரால் நடத்தப்பட்டுள்ள நிலையில் அவர் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட அதிஷ்ட இலாப சீட்டுக்களை விற்பனை செய்திருந்தார் என்ற குற்றச்சாட்டே பதிவில் உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
எனினும்; கைதுசெய்யப்பட்ட நபரை தொடர்ந்தும் விசாரணைக்குட்படுத்தி சட்ட விரோத அதிஷ்டஇலாப சீட்டின் பின்னணிகளையும் அறிந்து அவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதையே நாம் விரும்புகின்றோம்.
மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போல் அவலப்பட்டு துயரங்களை சுமக்கும் எமது மக்கள் மீது மேலும் துயரங்களை சுமத்தும் வகையிலான வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவது எமது கட்சி கொள்கையோ அன்றி நடைமுறையோ அல்ல. அவ்வாறு செயற்படுவோர்களுக்கு எமது கட்சியில் உறுப்புரிமையும் இல்லை.
ஆனாலும், அரசியல் காழ்ப்புணர்ச்சிகளின் காரணமாக கடந்த காலங்களிலும் எம்மீதான பழிகள் சுமத்தப்பட்டு வந்திருந்தமையும், அதை எமது மக்கள் புரிந்து கொண்டு எமக்கான அரசியல் அங்கீகாரத்தை தொடர்ந்து வழங்கி வந்திருக்கிறார்கள்.
எமது மக்களை துன்புறுத்தும் வகையிலான வன்முறை மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் எந்த தரப்பாக இருப்பினும் அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்களே. இதையே எமது கட்சியின் செயலாளர் நாயகம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சோடிக்கப்பட்ட செய்திகளை வெளியிட்டு பழிகளை வேறு திசையில் சுமத்தி விடுவதால், வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் உண்மையான குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ளவும், தொடர்ந்தும் அதே வன்முறை சம்பவங்களில் ஈடுபடவுமே வழிவகுக்கும்.
ஆகவே எமது மக்கள் முகம் கொடுக்கும் மனிதாபிமானப் பிரச்சினை குறித்து சகலரும் பொறுப்புணர்ச்சியோடு நடந்து கொள்ள முன்வரவேண்டும் என நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
கந்தசாமி கமலேந்திரன் (கமல்)
அமைப்பாளர
யாழ் மாவட்டம்.
ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சி

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

9 மாவோயிஸ்டுக்கள் பலி : காவல்துறை

Comments 1

  1. Vijey says:
    15 years ago

    மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போல்?
    அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சோடிக்கப்பட்ட செய்திகளை ?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...