இலங்கையை அழிப்பதற்கு ஆயுதங்களை வழங்கி மக்களை கொன்று குவித்த உலகமே தேடும் பயங்கரவாதியான கே.பி. குற்றமற்றவர் என அரசு தெரிவித்துள்ளமை சரியானால் பிரபாகரனின் 12 வயது மகனைக் கொலை செய்தமை பாரிய குற்றமாகும் என ஐக்கிய தேசிய கட்சி எம்.பி. மங்கள சமரவீர நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்து உரையாற்றும்போதே மங்கள சமரவீர எம்.பி. தெரிவித்தார்.ஆசியாவின் பழைமையான ஜனநாயக நாடான இலங்கையில் இன்று அரசியல் மோகம் பிடித்தவர்களால் நீதியின் கிரீடம் பறிக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளது.
நீதிமன்றங்களால் பிடியாணை வழங்கப்படுவோர் பாதுகாப்பாக உள்ளனர். கே.பி. போன்ற சர்வதேச குற்றவாளி உயர்பதவிகளை வகிப்போருடன் சுதந்திரமாக நடமாடுகிறார். இன்ரபோல் பொலிஸாரால் பகிரங்க பிடியாணை விடுக்கப்பட்டவர் கே.பி. சி.ஐ.ஏ. இவரைப் பின்தொடர்ந்துது என அவர் மேலும் குறிப்பிட்டார்.









/////////இலங்கையை அழிப்பதற்கு ஆயுதங்களை வழங்கி மக்களை கொன்று குவித்த உலகமே தேடும் பயங்கரவாதியான கே.பி. குற்றமற்றவர் என அரசு தெரிவித்துள்ளமை சரியானால் பிரபாகரனின் 12 வயது மகனைக் கொலை செய்தமை பாரிய குற்றமாகும் /////// Right to life is not guaranteed in SL constitution . UN has been fighting for this for years .
Both UNP and SLFP is refusing to amend the constitution to give the right to life a place in the constitution.
it is on this background we should read this statement by Mangala another Singhala chauvinist
I don’t understand the logic behind this statement .
is he trying to say it is ok to kill Prabakarans Children if KP is locked up.
The truth is right to life is fundamental right of all human beings .
Whether KP is locked up or not any human being has right to life including 12 year Prabharan’s son .
ohhhh ,
sorry right to life is denied in Srilankan constitution .
UN report states that “It regrets in particular that the
right to life is not expressly mentioned as a fundamental right in chapter III of the
Constitution of Sri Lanka”
http://lib.ohchr.org/HRBodies/UPR/Documents/Session2/LK/UNHCR_LKA_UPR_2008_UnitedNationsHighCommissionerforRefugees_uprsubmission.pdf
Srilankan defines constitution fundamental rights is dealt with in Chapter III .
http://www.priu.gov.lk/Cons/1978Constitution/1978ConstitutionWithoutAmendments.pdf
There is no place for right to life in and Sri Lankan constitution and Srilanka is refusing to amend the constitution to this effect although UN requested it .
these Sinhalese both UNP and SLFP is refusing to amend the constitution to that effect .
UN has been demanding this for more than a decade.
further news on Tamilnet on this matter
http://www.tamilnet.com/art.html?artid=5756&catid=13
Over all it is very soothing that Mangala Samaraweera has talked about that in the Parliament. First we all did not know that he had a second son until the February 2002 accord mediated by Norway. Samawaeera is now in the UNP.
போராட்ட பங்களிப்பை குற்றம் சுமத்த சுமந்திரன் யார் ?
கடந்த சில நாட்களாக கே பி யின் பெயர் அடிபடுகிறது “கே பி தமிழர் பிரதி இல்ல ” எனக் குறிப்பிட்டார் சம்பந்தன் ஐயா. இது மிகவும் சரியானதே தொடர்ந்து ஐ.தே.கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் இணைந்து 21 .10.2012 அன்று கூட்டு செய்தியாளர் மகாநாட்டை நடத்தினர். இதில் ஐ .தே . க உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜெயவர்த்தன கே .பி பயங்கரவாதி என்றார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர் சுமந்திரன் கே பி குற்றவாளி எனும் விதத்தில் கருத்து தெரிவித்தார்.
அதாவது 18.05. 2009 க்கு முந்திய கே பியின் செயல்பாடுகள் குறித்ததாகவே அவரது குற்றச்சாட்டுக்கள் அமைந்திருந்தன . இக் காலப்பகுதிக்குள் கே பியின் செயல்பாடுகள் அனைத்திற்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே பொறுப்பு . அந்தவகையில் இவர் யாரை மறைமுகமாக குற்றம்சாட்டுகிறார் என்பதை நாம் நோக்க வேண்டும், 18.05.2012 க்கு பிந்திய கே பி யின் செயல்பாடுகள் பற்றி குறிப்பாக அவர் கைதான பின்னர் நடந்து கொண்ட முறையை, அவரது கருத்துக்களை ( அதிலும் நெடுமாறன் ஐயா குறித்த அவரது கருத்துக்களை) ஈழத் தமிழர்கள் ஏற்கவில்லை. ஆனால் திரு. சுமந்திரன் சொல்லும் குற்றச்சாட்டுக்களின் காலப்பகுதியை நோக்குகையில் அது விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் பற்றியது என்ற வகையில் ஆராய வேண்டியது நம் கடமை.
இவரை செய்தியாளர் மகாநாட்டுக்கு அனுப்பிய செயலர் மாவை சேனாதிராஜா சில விடயங்களைச் சிந்தித்திருக்க வேண்டும் ஏனெனில் போராளிகளை உருவாக்கிய தமிழ் இளைஞர் பேரவையில் அவர் முக்கிய பதவி வகித்தவர். யாழ் பிரதான வீதியில் அமைந்திருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பணிமனையிலிருந்து ஆரம்பித்த சட்டமறுப்பு ஊர்வலம், வட்டுக்கோட்டை பிரகடனமான தமிழீழமே முடிந்த முடிவு எனும் தீர்மானத்தை முன்வைத்து சர்வஜன வாக்கெடுப்புக்காக நடைபெற்ற 1977 பொதுத்தேர்தல் போன்றவற்றில் வட பகுதியின் அப்போதைய இளைஞர்களின் கதாநாயகன் இவரே.
சற்று வளர்ந்த முடி, தலையில் சிவப்பு பட்டி என சேகுவராவின் நிழல் பிரதி போல் அக்காலத்தில் காட்சியளித்தார். இவர் „இரத்தம் சிந்தியேனும் தமிழீழம் அமைப்போம்” என இவரைப் போன்றோர் ஆற்றிய உரைகள் தமிழ் இளைஞர்களை மெய் சிலிர்க்க வைத்தன. அதில் உணர்ச்சி வசப்பட்டு மாவீரர் கப்டன் பண்டிதர் போன்றோரும் பின்னாளில் பொட்டம்மான் போன்றோரும் (1981ல்) தமது கைகளைக் கிழித்து இரத்தத்திலகமிட்டனர். பின்னாளில் இதே இளைஞர்கள் பல்வேறு விடுதலை இயக்கங்களில் இணைந்துகொண்டனர். அவர்களில் கணிசமானோர் மாவீரர்களயினர். இவர்களுக்கு ஆதரவுவளித்த இளைஞர்கள் பலர் தேடப்படும்போது இயக்க உறுப்பினர்களாக வேண்டிய நிலை ஏற்பட்டது.
அவ்வாறானவர்களில் ஒருவரே கே பி இவர் அக்கால கட்டத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவனாக இருந்தார். ஆனால் இந்த இளைஞர்களைத் துண்டிவிட்ட மாவை போன்ற பேச்சாளர்கள் திலகமிடும்போது இவர்களின் சட்டையின் சிந்திய இளைஞர்களின் குருதியைக் கழுவிவிட்டு தமது சொந்த வாழ்க்கை அரசியல் பயணம் குறித்து கவனம் செலுத்தினார்.
இவர்களை பிரபாகரன் சரியாக புரிந்து வைத்திருந்தார். அதனால்தான் 1986 ல் தமிழகத்தில் நீராகாரம் கூட அருந்தாது உண்ணாவிரதமிருந்தபோது தன்னை பார்வையிட வந்த மாவை சேனாதிராசாவின் முகத்தில் விழிக்க பிரியப்படவில்லை. இது புதினம் பார்க்கும் விடயமல்ல என்பது அவரது நிலைப்பாடு.
இக் காலப்பகுதியிலேயே தமிழரின் ஆயுதபலம் பெருகியது. கே பியின் முக்கியத்துவம் இக் காலப்பகுதியில்தான் ஆரம்பித்தது. திரு. பிரபாகரன் மொட்டை யடித்தபடி LMG துப்பாக்கி, அதற்கான ரவைச் சங்கிலி என்பனவற்றுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கும் புகைப்படம் என்னும் பலரிடம் உண்டு,
கே பியால் அனுப்பப்படும் முதலாவது ஆயுதக்கப்பல் பத்திரமாகக் தமிழகத்தை வந்தடைய வேண்டும் என பழனி முருகனுக்கு அவர் நேர்த்தி வைத்திருந்தார். கப்பலும் பத்திரமாக வந்து சேர்ந்தது அந்தக் கப்பலில் வந்த AK ரக துப்பாக்கிகளில் ஒன்றை தனது அன்பளிப்பாக அப்போதைய தமிழக முதலமைச்சரும், தனது மரியாதைக்குரியவருமான எம் .ஜி. ஆர்ருக்கு வழங்கினார்.
பிரபாகரன் தனது நேர்த்தியின் பிரகாரம் பழனியில் அவர் மொட்டை போட்டுக்கொண்டார். அக்காலப் பகுதியில் எடுத்தபடமே அது. தொடர்ந்து ஆயுதங்கள், எறிகணைகள், பல்குழல் ரக பீரங்கிகள் உட்பட இந்தப் போராட்டத்திற்குத் தேவையான அனைத்தையுமே சாத்தியமான சகல வழிகளிலும் பெற்றுக்கொடுத்தார் கே பி.
ஆனால் “பிடித்து வைத்தால் பிள்ளையார் வழித் எறிந்தால் சாணி“ என்பதே எமது மக்களின் நிலைப்பாடு. ஜெயசிக்குறு கதாநாயகன் கருணாவைத் தூக்கி எறிந்தது போலவே கே பி யையும் தூக்கி எறிந்துவிட்டனர் எமது மக்கள். அவர்கள் மனதில் அவர் உயர்ந்த இடத்தை வகிக்க முடியாது. ஆனால் “சந்துல சிந்து பாடுவது போல” போராட்ட காலத்தில் இடம்பெற்ற செயல்பாடுகளுக்காக பங்களிப்புகளுக்காக குற்றம் காணமுனைகிறார் சுமந்திரன். போராட்ட காலத்தில் மக்கள் தொடர்பான விடயங்களில், அணுகு முறைகள் தொடர்பானவற்றை விமர்சிப்பதில் தவறில்லை ஆனால் போராட்டத்துக்கான பங்களிப்புக்களை விமர்சிக்க, குற்றம் சுமத்த சுமந்திரனுக்கோ, மாவை சேனாதிராசாவுக்கோ தகுதியில்லை என்பது எமது மக்களின் குறிப்பாக மாவீரர்களின் பெற்றோரின் நிலைப்பாடு. ஏறிவந்த ஏணியை எட்டி உதைக்கும் இவர்கள் செயல்பாட்டை நாம் அங்கீகரிக்க போவதில்லை. சிங்கக் கொடி விவகாரத்தில் தனது மெல்லிய முனுமுனுப்பை காட்டினார் மாவை. ஆனால் சுமந்திரன் விடயத்தில் விஷமத்தனமான மௌனத்தைக் கடைப்பிடிக்கிறார் அவர். தமிழகத்தில் அறிஞர் அண்ணா, மு.கருணாநிதி, எம் .ஜி .ஆர் , ஜெயலலிதா, என அனைவரின் பதவிக் காலங்களிலும் “நம்பர் ரூ” வாக இருந்தவர் இரா.நெடுஞ்செழியன். அது போலவே சுமந்திரன் நாளை தலைவரானாலும் இரண்டாம் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமென அவர் நினைத்தால் எமது மக்களின் உணர்வை அவர் புரிந்துகொள்ளவில்லை என்பதே அர்த்தம். இதற்கிடையே மாவை சேனாதிராஜா வின் பிறந்த நாள் அன்று வலி – தென் மேற்கு பிரதேச சபையின் புதிய கட்டிடத் திறப்பு விழா நடைபெற்றதாக வீரகேசரி (29.10.2012 பக் ,07) செய்தி வெளியிட்டது. ஒ ஹோ ……… பாதை புரிகிறது பள்ளத்தில் விழாமல் இருந்தால் சரி. அதாவது தனது மகனை அரசியலுக்குள் திணிக்கமாட்டர் என நம்புவோம்.
தமிழகத்தில் ஸ்ராலின் அரசியலில் புகுந்த நேரத்தில் சில சலசலப்புக்கள் எழுந்தன. அதற்கு தி.மு.க தலைவர் கருணாநிதி “தனக்குரிய தொழில் என்னவென்பதை அவன் தான் தீர்மானிக்க வேண்டும்“ எனக் கூறினார். அரசியலை பரம்பரை தொழில் என கருதுகிறரா இல்லையா என திரு. மாவை தான் தீர்மானிக்க வேண்டும்.
பிரபாகரன் அன்று திருப்பி அனுப்பிய மாவையை மன்னித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கிய காலத்தில் அவரைச் சந்தித்தார். எமது மக்கள் யாரையும் மன்னிக்கமாட்டார்கள் தூக்கி எறியவும் தயங்க மாட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்வது நல்லது.
சங்கீதன்
பழனியில் மொட்டை யடித்த பிரபாகரனும் கே.பியை குறைகூறும் சுமந்திரனும்.
http://www.supeedsam.com/
the article is about Mangala what are you talking sangeethan .
anyway ,
பிரபாகரன் , போராளி சொற்கள் சங்கீதனின் கருத்தில் அடிக்கடி வந்து மறைகின்றது .
ஆனால் கதையின் மூலப் பொருள் கதிரையை யார் பிடிக்க வேண்டும் என்பது தான் .
எனவே பிரபாகரனை போராளிகளை இழுப்பது வேண்டாத வழுநிலை விவாதம் . வழுநிலை விவாதம் பற்றி அறிய இங்கு அழுத்தவும் .
கதிரையில் இருக்க என்ன தகுதி என்பது மூன்று தளங்களில் பார்க்க படவேண்டும் . அவர் முன்னர் என்ன செய்தீர்கள் -இப்போ என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள் – இனி என்ன செய்ய திட்டமிடுகின்றஈர்கள் .
இந்த மூன்றையும் கொண்டதாக ஒரு பாட்டு பாடுவீரா சங்கீத குயிலே????? !!!!ஹி ஹி ஹி
குறிப்பு நான் யார் பக்கமும் இல்லை சுவாமி ஆளை விடுங்க .