கருணாநிதி தனது இரண்டாவது மனைவியுடன் வசிக்கும் கோபாலபுரம் இல்லத்தில் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினர். இச் சந்திப்பு பரம திருப்தியளிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்தனர். கருணாநிதி எழுதிக் கொண்டிருக்கும் கடிதங்களுக்கு நன்றி தெவித்துக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன். “முதல்வர் கருணாநிதியுடன் நடந்த பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கிறது. போருக்கு பிறகு இலங்கை தமிழர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். உரிய நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு தவறி விட்டது. வன்னிப் பகுதியில் மீண்டும் ராணுவ மயமாக்கல்தான் நடைபெறுகிறது. இலங்கைத் தமிழர்களை சிறுபாண்மையினராக்க ராஜபக்சே அரசு முயற்சி செய்கிறது.இலங்கைக்கு சிறப்பு பிரதிநிதியை அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். இந்த கோரிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். இந்த கோரிக்கையை இந்திய அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்றார்.
கருணா என்றவுடன் கிழக்குமாகாணத்து புலிகருணாவா என தடுமாறினேன்.இல்லை சாட்
சாட் நம்ம கருனாநிதியே தான்.கலைஞர் கருனாநிதி என்று சொன்னால் எங்களுக்கு புரிதல்
வசதியாக இருக்கும்.
கருனாநிதி என்ன? காமராஜ்ரா? உண்டியும் வேண்டாம் உடலுறவும் வேண்டாம் என்று ஒதிக்கித் தள்ளுவதற்கு ; அவருக்கு தென்பிருக்கு ” சிட்டுக்குருவி லேகியம் ” இருக்கு இதற்குதமிழ்மக்கள் என்ன செய்யமுடியும்? செம்மொழிதான் என்ன செய்யமுடியும்??.
இருக்கிறது ஒரு பிறவிதானே! கிடைத்த பிறவியை யமாச்சுகிடனும்;
அப்புறம் சம்பந்தன் அடைக்கலம் சுரேஸ் தமிழகத்து கலாச்சாரத்திற்கு அதாவது புத்திசாலி தவளைகளுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாதது. நேரத்திற்கு ஏற்றமாதிரி
ஒலி எழுப்பும். கேட்டுக்கிட்டேயிருங்க.
புதியதோர் உலகம் செய்வோம் எனவும் குரல் எழுப்புவாங்க….அப்புறம்?
மெளனத்தில் விளயாடும் மனசாட்சியே ஆயிரம் நினைவாகி ஆனந்தக கனவாகி காரியம் தவறானால் கண்களீல் நீராகி மெளனத்தில் விளயாடும் மனச்சாட்சியே.