புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களான ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், நொயல் நடேசன் உட்பட பல இலங்கை அரச சார்புப் பிரமுகர்கள் இணைந்து இலங்கையில் எழுத்தாளர்கள் மாநாடு ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு ஜனவரி மாதமளவில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டிருக்கும் இந்த மாநாட்டிற்கான ஏற்ப்பாடுகள் ஆரம்பமாகிவிட்டதாகத் தெரியவருகிறது. மகிந்த ராஜபக்ச அரசின் திட்டமிட்ட இன அழிப்பை மூடி மறைக்கும் வகையிலான செயற்பாடுகளில் இதுவும் ஒன்றென அடையாளம் காணப்படுகிறது. தமிழ் நாட்டைச் சேர்ந்த பல எழுத்தாளர்களும் இதற்கென அழைக்கபட்டுள்ளனர் எனத் தெரியவருகிறது. எழுத்துரிமை சாகடிக்கப்பட்ட மரண பூமியில் எழுத்தாளர் மாநாட்டினை ஏற்பாடு செய்கின்ற தமிழ்ப் பேசும் அரச தொங்குதசைகளை இன்று இனம்காணத் தவறினால் நாளைய சமூகத்திற்கு நாம் செய்யும் துரோகமாகக் கருதப்படும்.
அண்மையில் ஈபிடிபியின் அரசியலை இன்னும் வலுப்படுத்தும் மறைமுக திட்டமாக லண்டனில் நிகழ்ந்த அரசில் ஒருங்கிணைப்பு கூட்டமும் ‘தமிழ்ப் பேசும் அரச தொங்குதசைகளை என்பதை இனம்காணத் தவறினால் நாளைய சமூகத்திற்கு நாம் செய்யும் துரோகமாகக் கருதப்படும். ‘