Monday, April 27, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

உத்தபுரத்தில் அமைதி நிலவுகிறதாம்- கருணாநிதி சொல்கிறார்.

இனியொரு... by இனியொரு...
07/15/2010
in இன்றைய செய்திகள்
0 0
5
Home இன்றைய செய்திகள்

உத்தபுரத்தில் தலித் மக்களுக்கு எதிராக வெள்ளாளர்கள் தீண்டாமைச் சுவர் கட்டப்பட்டது, நீண்டகாலமாக தீண்டாமையின் வடிவமாக இருந்து வந்த அந்தச் சுவரின் ஒரு பகுதியை மட்டும் இடித்தது தமிழக அரசு. ஆனாலும் மாவட்ட நிர்வாகமும், போலீசும், தமிழக அரசும் ஆதிக்கசாதிகளுக்கு ஆதரவாக நடந்து கொள்கிற நிலையில் உடைக்கப்பட்ட சுவரின் வழியே உருவாக்கப்பட்ட பாதையில் தலித் மக்களின் அடிப்படை நடமாடும் உரிமை கோரி சி.பி.எம் போராடிவந்தது. போராடியவர்களை கடுமையாகத் தாக்கியது கருணாநிதி அரசு. இந்நிலையில் கேள்வியும் நானே பதிலும் நானே பாணியில் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கேள்வி: மதுரை மாவட்டம், உத்தப்புரத்தில் தலித் மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வருவதோடு, தாங்களும் பலமுறை அதற்காக மாவட்ட கலெக்டரோடு கலந்து பேசி ஒரு சுமூகமான நிலை இருந்து வந்த நிலையில் திடீரென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அங்கே போராட்டம் நடைபெற்றதாகவும், போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதாகவும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஏடுகளில் பெரிதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளன. மேலும், அரசுக்கு எதிர்ப்பு என்றால் உடனடியாக கண்டன அறிக்கை விடும் ஒரு சில கட்சிகளும் அறிக்கை விடுத்துள்ளனவே? உண்மை விவரம் என்ன?

பதில்: உத்தப்புரம் கிராமத்தில் இரண்டு தரப்பினருக்கிடையே உள்ள பிரச்சினையைக் களைவதற்காக – கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசின் சார்பில் எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, அதற்காக நான் எத்தனை முறை மாவட்ட கலெக்டரோடு பேசியிருக்கிறேன் என்பதெல்லாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். உத்தப்புரம் கிராமத்தில் வாழும் மக்களும் தற்போது எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் அமைதியாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்களால் அவர்கள் அமைதியாக இருப்பதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மாதத்துக்கு ஒரு முறை அந்தக் கிராம மக்களைத் தூண்டிவிட்டு ஏதாவது பிரச்சினை செய்ய முடியாதா என்று பார்க்கிறார்கள்.

இதற்கோர், உதாரணம் கூற வேண்டுமேயானால், இந்தச் சம்பவம் நடந்த அதே நாளில் உத்தப்புரம் ஊராட்சி மன்றத்தலைவரும், வேறு சில தலைவர்களும் இணைந்து ஒரு பத்திரிகைக் குறிப்பையே ஏடுகளுக்கு வழங்கியிருக்கிறார்கள். அதில், “உத்தப்புரத்தில் கடந்த சில வருடங்களாக இரு சாதி மக்களிடையே தொடர்ந்து பிரச்சினை நிலவி வருவதாக சில அரசியல் கட்சிகள் விஷமப் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால் உண்மையில் உத்தப்புரம் கிராமத்தில் அனைத்துச் சாதியினரும் ஒற்றுமையுடனும், அமைதியுடனும் வாழ்ந்து வருகிறோம். சில அரசியல் கட்சிகள் தங்களின் அரசியல் ஆதாயத்துக்காகவும், சுயநலத்துக்காகவும், உத்தப்புரம் கிராமத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

எங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் நல்ல முறையில் செய்து வருகிறது. எங்களுக்குள் சிற்சில பிரச்சினைகள் இருந்தாலும் அமைதியுடன் வாழ்ந்து வருகிறோம் என்பதுதான் உண்மை” என்று எழுதி கையெழுத்திட்டிருக்கிறார்கள். இதிலிருந்து அந்தக் கிராம மக்கள் ஒற்றுமையாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்த போதிலும் அங்கே ஒற்றுமை நிலவக் கூடாது என்ற எண்ணத்தோடு செயல்படுபவர்கள் யார் என்பதை சுலபமாகப் புரிந்து கொள்ளலாம். கருணாநிதி குறிப்பிட்டுள்ள எழுதிக் கையெழுத்திட்ட அறிக்கை என்பது போலிசாலும் மாவட்ட நிர்வாகத்தாலும் மிரட்டி தலித் மக்களிடம் இருந்து வாங்கப்பட்ட ஒன்றாகும்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

மாவோயிஸ்டுகளை ஒடுக்க புதிய படை.

Comments 5

  1. செழியன் says:
    16 years ago

    உத்தபுரத்தில் நிலவும் அமைதி என்பது கருணாநிதி குடும்பத்தில் நிலவும் (தற்காலிக) அமைதி போன்றதுதான்.அதாவது அகத்தில் நெருப்பு முகத்தில் சிரிப்பு..! கோடிகோடியாய் குவிந்திருக்கும் பணத்தை பாதுகாக்கவும் இன்னும் கோடிகோடியாய் கொள்ளையடிக்கவும் ‘இதயம் இனிக்க கண்கள் பனிக்க’ தான் முன்னின்று ஏற்படுத்திய ‘தற்காலிக சமாதானம் போலத்தான் உத்தபுர சமாதானமும்,அமைதியும் என்பது கருணாநிதிக்கு தெரியாததல்ல.’ஆதிக்க ஜாதி நெருப்பு எரியுது’ என்று தோழர்கள் சொன்னால், கண்களை மூடிக்கொண்டு கனவுலகில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும் கருணாநிதி அதை அமைதியின் வெளிச்சம் என்கிறார்.!

    இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டபோது அரை வயிற்று கஞ்சிக்காக உயிரை பணயம் வைத்து பயணம் போகும் அப்பாவி மீனவர்களை ‘பேராசைக்கார மீனவர்கள்’ என்று எழுதிய பேனா கருணாநிதியினுடையது. முள்ளி வாய்க்காலில் யுத்தநிறுத்தம் கேட்டபோது ‘நானொரு அடிமை நீயொரு அடிமை ஒருவர் முதுகிலே ஒருவரடி’என்பது மாதிரி தந்திர அறிக்கை விட்டதைப்போலவே உத்தபுரத்தில் அமைதிக் கொலுவிருப்பதாய் உளறுகிறார் இந்த கோபாலபுரத்து மாஃபியா குடும்பத்தின் தலைவன்.
    மீடியா,சினிமா,ஏற்றுமதி,இறக்குமதி,கட்டுமனத்தொழில்,ஐடி ,ரசாயனம், பர்னிச்சர்,டெக்ஸ்டைல்ஸ்,வாகனம்,மோட்டார்.கல் மண்,குவாரிகள்,கல்வி,மதுபானம்,என்று எல்லா தொழில்களிலும் கால்பதித்து அந்த துறைகளையே கபளிகரம் செய்துவரும் கருணாநிதி குடும்பத்தினர் மட்டும் பேராசையற்ற பெருமக்கள் என நாம் கருத வேண்டும்.அதே போன்று பொன்னுக்கும் பொருளுக்கும் தான்,தன் குடும்பம்,பெண்டு பிள்ளை, பேரப்பிள்ளைகள் என்று சொந்தங்களுக்கும் பந்தங்களுக்கும்,புகழ்ச்சிக்கும் மகிழ்ச்சிக்குமே தான் அடிமை என்பதை கருணாநிதியும் புரிந்து கொள்ளவேண்டும்..!
    தமிழக மக்கள் தொகையில் இசைவேளாளர் என்ற கருணாநிதியின் சமுகம் (சாதி) எத்தனை சதம்? ஆனால் முதல்வர்,துணைமுதல்வர்,திட்டக்குழு தலைவர்,மத்திய கேபினட் அமைச்சர்கள்,ராஜ்ய சபை உறுப்பினர்,இன்னும் பதவி பெறப்போகும் வாரிசுகள் இவைபோக அச்சாதி பெற்றிருக்கும் அதிகார முக்கியத்துவங்கள்,போன்ற விஷயங்களை யாராவது ஆய்வு செய்தால் உத்தபுரம் அமைதியாக இருப்பதன் காரணம் புரியும்.!

  2. காணியன் says:
    16 years ago

    Home » உத்தபுரத்தில் அமைதி நிலவுகிறதாம்- கருணாநிதி சொல்கிறார்.
    உத்தபுரத்தில் அமைதி நிலவுகிறதாம்- கருணாநிதி சொல்கிறார்.
    தமிழ்மணம் பரிந்துரை : 0/0

    Pathivu Toolbar ©2010thamizmanam.com

    உத்தபுரத்தில் தலித் மக்களுக்கு எதிராக வெள்ளாளர்கள் தீண்டாமைச் சுவர் கட்டப்பட்டது, நீண்டகாலமாக தீண்டாமையின் வடிவமாக இருந்து வந்த அந்தச் சுவரின் ஒரு பகுதியை மட்டும் இடித்தது தமிழக அரசு. ஆனாலும் மாவட்ட நிர்வாகமும், போலீசும், தமிழக அரசும் ஆதிக்கசாதிகளுக்கு ஆதரவாக நடந்து கொள்கிற நிலையில் உடைக்கப்பட்ட சுவரின் வழியே உருவாக்கப்பட்ட பாதையில் தலித் மக்களின் அடிப்படை நடமாடும் உரிமை கோரி சி.பி.எம் போராடிவந்தது. போராடியவர்களை கடுமையாகத் தாக்கியது கருணாநிதி அரசு. இந்நிலையில் கேள்வியும் நானே பதிலும் நானே பாணியில் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கேள்வி: மதுரை மாவட்டம், உத்தப்புரத்தில் தலித் மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வருவதோடு, தாங்களும் பலமுறை அதற்காக மாவட்ட கலெக்டரோடு கலந்து பேசி ஒரு சுமூகமான நிலை இருந்து வந்த நிலையில் திடீரென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அங்கே போராட்டம் நடைபெற்றதாகவும், போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதாகவும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஏடுகளில் பெரிதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளன. மேலும், அரசுக்கு எதிர்ப்பு என்றால் உடனடியாக கண்டன அறிக்கை விடும் ஒரு சில கட்சிகளும் அறிக்கை விடுத்துள்ளனவே? உண்மை விவரம் என்ன?

    பதில்: உத்தப்புரம் கிராமத்தில் இரண்டு தரப்பினருக்கிடையே உள்ள பிரச்சினையைக் களைவதற்காக – கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசின் சார்பில் எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, அதற்காக நான் எத்தனை முறை மாவட்ட கலெக்டரோடு பேசியிருக்கிறேன் என்பதெல்லாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். உத்தப்புரம் கிராமத்தில் வாழும் மக்களும் தற்போது எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் அமைதியாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்களால் அவர்கள் அமைதியாக இருப்பதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மாதத்துக்கு ஒரு முறை அந்தக் கிராம மக்களைத் தூண்டிவிட்டு ஏதாவது பிரச்சினை செய்ய முடியாதா என்று பார்க்கிறார்கள்.

    இதற்கோர், உதாரணம் கூற வேண்டுமேயானால், இந்தச் சம்பவம் நடந்த அதே நாளில் உத்தப்புரம் ஊராட்சி மன்றத்தலைவரும், வேறு சில தலைவர்களும் இணைந்து ஒரு பத்திரிகைக் குறிப்பையே ஏடுகளுக்கு வழங்கியிருக்கிறார்கள். அதில், “உத்தப்புரத்தில் கடந்த சில வருடங்களாக இரு சாதி மக்களிடையே தொடர்ந்து பிரச்சினை நிலவி வருவதாக சில அரசியல் கட்சிகள் விஷமப் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால் உண்மையில் உத்தப்புரம் கிராமத்தில் அனைத்துச் சாதியினரும் ஒற்றுமையுடனும், அமைதியுடனும் வாழ்ந்து வருகிறோம். சில அரசியல் கட்சிகள் தங்களின் அரசியல் ஆதாயத்துக்காகவும், சுயநலத்துக்காகவும், உத்தப்புரம் கிராமத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

    எங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் நல்ல முறையில் செய்து வருகிறது. எங்களுக்குள் சிற்சில பிரச்சினைகள் இருந்தாலும் அமைதியுடன் வாழ்ந்து வருகிறோம் என்பதுதான் உண்மை” என்று எழுதி கையெழுத்திட்டிருக்கிறார்கள். இதிலிருந்து அந்தக் கிராம மக்கள் ஒற்றுமையாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்த போதிலும் அங்கே ஒற்றுமை நிலவக் கூடாது என்ற எண்ணத்தோடு செயல்படுபவர்கள் யார் என்பதை சுலபமாகப் புரிந்து கொள்ளலாம். கருணாநிதி குறிப்பிட்டுள்ள எழுதிக் கையெழுத்திட்ட அறிக்கை என்பது போலிசாலும் மாவட்ட நிர்வாகத்தாலும் மிரட்டி தலித் மக்களிடம் இருந்து வாங்கப்பட்ட ஒன்றாகும்.

    No Comments
    செழியன்
    Posted on 07/15/2010 at 3:34 pm
    உத்தபுரத்தில் நிலவும் அமைதி என்பது கருணாநிதி குடும்பத்தில் நலவும் அமைதி போன்றதுதான்.அதாவது அகத்தில் நெருப்பு முகத்தில் சிரிப்பு..! கோடிகோடியாய் குவிந்திருக்கும் பணத்தை பாதுகாக்கவும் இன்னும் கோடிகோடியாய் கொள்ளையடிக்கவும் ‘இதயம் இனிக்க கண்கள் பனிக்க’ தான் முன்னின்று ஏற்படுத்திய ‘தற்காலிக சமாதானம் போலத்தான் உத்தபுர சமாதானமும்,அமைதியும் என்பது கருணாநிதிக்கு தெரியாததல்ல.’ஆதிக்க ஜாதி நெருப்பு எரியுது’ என்று தோழர்கள் சொன்னால், அதை அமைதியின் வெளிச்சம் என்கிற கருணாநிதி,கண்களை மூடிக்கொண்டு கனவுலகில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறார் என்றுதான் கருத வேண்டியிருக்கிறது.

    இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டபோது அரை வயிற்று கஞ்சிக்காக உயிரை பணயம் வைத்து பயணம் போகும் அப்பாவி மீனவர்களை ‘பேராசைக்கார மீனவர்கள்’ என்று எழுதிய பேனா கருணாநிதியினுடையது. முள்ளி வாய்க்காலில் யுத்தநிறுத்தம் கேட்டபோது ‘நானொரு அடிமை நீயொரு அடிமை ஒருவர் முதுகிலே ஒருவரடி’என்பது மாதிரி தந்திர அறிக்கை விட்டதைப்போலவே உத்தபுரத்தில் அமைதிக் கொலுவிருப்பதாய் உளறுகிறார் இந்த கோபாலபுரத்து மாஃபியா கும்பலின் தலைவன்.
    மீடியா,சினிமா,ஏற்றுமதி,இறக்குமதி,கட்டுமனத்தொழில்,ஐடி ,ரசாயனம்,பர்னிச்சர்,டெக்ஸ்டைல்ஸ்,வாகனம்,மோட்டார்.கல் மண்,குவாரிகள்,கல்வி,மதுபானம்,என்று எல்லா தொழில்களிலும் கால்பதித்து அந்த துறைகளையே கபளிகரம் செய்துவரும் கருணாநிதி குடும்பத்தினர் மட்டும் பேராசையற்ற பெருமக்கள் என நாம் கருத வேண்டும்.அதே போன்று பொன்னுக்கும் பொருளுக்கும் தான்,தன் குடும்பம்,பெண்டு பிள்ளை, பேரப்பிள்ளைகள் என்று சொந்தங்களுக்கும் பந்தங்களுக்கும்,புகழ்ச்சிக்கும் மகிழ்ச்சிக்குமே தான் அடிமை என்பதை கருணாநிதியும் புரிந்து கொள்ளவேண்டும்..!
    தமிழக மக்கள் தொகையில் இசைவேளாளர் என்ற கருணாநிதியின் சமுகம் (சாதி) எத்தனை சதம்? ஆனால் முதல்வர்,துணைமுதல்வர்,திட்டக்குழு தலைவர்,மத்திய கேபினட் அமைச்சர்கள்,ராஜ்ய சபை உறுப்பினர்,இன்னும் பதவி பெறப்போகும் வாரிசுகள் இவைபோக அச்சாதி பெற்றிருக்கும் அதிகார முக்கியத்துவங்கள்,போன்ற விஷயங்களை யாராவது ஆய்வு செய்தால் உத்தபுரம் அமைதியாக இருப்பதன் காரணம் புரியும்.!

    Reply செழியன்
    Posted on 07/15/2010 at 3:41 pm
    உத்தபுரத்தில் நிலவும் அமைதி என்பது கருணாநிதி குடும்பத்தில் நிலவும் (தற்காலிக) அமைதி போன்றதுதான்.அதாவது அகத்தில் நெருப்பு முகத்தில் சிரிப்பு..! கோடிகோடியாய் குவிந்திருக்கும் பணத்தை பாதுகாக்கவும் இன்னும் கோடிகோடியாய் கொள்ளையடிக்கவும் ‘இதயம் இனிக்க கண்கள் பனிக்க’ தான் முன்னின்று ஏற்படுத்திய ‘தற்காலிக சமாதானம் போலத்தான் உத்தபுர சமாதானமும்,அமைதியும் என்பது கருணாநிதிக்கு தெரியாததல்ல.’ஆதிக்க ஜாதி நெருப்பு எரியுது’ என்று தோழர்கள் சொன்னால், கண்களை மூடிக்கொண்டு கனவுலகில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும் கருணாநிதி அதை அமைதியின் வெளிச்சம் என்கிறார்.!

    இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டபோது அரை வயிற்று கஞ்சிக்காக உயிரை பணயம் வைத்து பயணம் போகும் அப்பாவி மீனவர்களை ‘பேராசைக்கார மீனவர்கள்’ என்று எழுதிய பேனா கருணாநிதியினுடையது. முள்ளி வாய்க்காலில் யுத்தநிறுத்தம் கேட்டபோது ‘நானொரு அடிமை நீயொரு அடிமை ஒருவர் முதுகிலே ஒருவரடி’என்பது மாதிரி தந்திர அறிக்கை விட்டதைப்போலவே உத்தபுரத்தில் அமைதிக் கொலுவிருப்பதாய் உளறுகிறார் இந்த கோபாலபுரத்து மாஃபியா குடும்பத்தின் தலைவன்.
    மீடியா,சினிமா,ஏற்றுமதி,இறக்குமதி,கட்டுமனத்தொழில்,ஐடி ,ரசாயனம், பர்னிச்சர்,டெக்ஸ்டைல்ஸ்,வாகனம்,மோட்டார்.கல் மண்,குவாரிகள்,கல்வி,மதுபானம்,என்று எல்லா தொழில்களிலும் கால்பதித்து அந்த துறைகளையே கபளிகரம் செய்துவரும் கருணாநிதி குடும்பத்தினர் மட்டும் பேராசையற்ற பெருமக்கள் என நாம் கருத வேண்டும்.அதே போன்று பொன்னுக்கும் பொருளுக்கும் தான்,தன் குடும்பம்,பெண்டு பிள்ளை, பேரப்பிள்ளைகள் என்று சொந்தங்களுக்கும் பந்தங்களுக்கும்,புகழ்ச்சிக்கும் மகிழ்ச்சிக்குமே தான் அடிமை என்பதை கருணாநிதியும் புரிந்து கொள்ளவேண்டும்..!
    தமிழக மக்கள் தொகையில் இசைவேளாளர் என்ற கருணாநிதியின் சமுகம் (சாதி) எத்தனை சதம்? ஆனால் முதல்வர்,துணைமுதல்வர்,திட்டக்குழு தலைவர்,மத்திய கேபினட் அமைச்சர்கள்,ராஜ்ய சபை உறுப்பினர்,இன்னும் பதவி பெறப்போகும் வாரிசுகள் இவைபோக அச்சாதி பெற்றிருக்கும் அதிகார முக்கியத்துவங்கள்,போன்ற விஷயங்களை யாராவது ஆய்வு செய்தால் உத்தபுரம் அமைதியாக இருப்பதன் காரணம் புரியும்.!

    • THAMILMARAN says:
      16 years ago

      காணீயன் பின்னூட்டத்தை மிகவும் ரசித்தோம்.தொடர்ந்து வாருங்கள்.

  3. thamilmaran says:
    16 years ago

    அன்பார்ந்த தமிழ்க மக்களே சாதியால் பிரிந்து நிற்காது தமிழராய் ஒன்றூ படிங்கள்.உதாரணமாய் ஈழ்த் தமிழர் இருக்கிறோம்.ஒட்டு மொத்த தமிழரையும் ஒரு தலித்தே தலமை தாங்கினார் தலித்,சாதி இந்து எனப் பாராது நாம் தமிழராய் வாழ்கிறோம் நீங்க்ள் மட்டும் ஏன் பிரிந்து நிற்கிறீர்கள்.தமிழாய் தமிழ் உணர்வாய் பொங்கிப் பாயும் தமிழ் உறவுகளாய் நீங்கள் மாற வேண்டாமா?

    • xxx says:
      16 years ago

      யாரந்தத் தலித்?
      காமராஜரா? நாடார் சமூகம் தன்னைத் தலித் என்று ஏற்காது.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...