இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தின் வசனங்கள் திருப்தி அளிப்பதாக அமையவில்லை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிpவத்துள்ளார்.
அமரிக்கா தீர்மானம் கொண்டுவருவது தமிழ் மக்களைத் திருப்திப் படுத்துவதற்கு என மக்களை நம்பக்கோரியது சுரேஷ் பிரேமச்சந்திரனும் ‘சாணக்கியன்’ சம்பந்தனுமே தவிர வேறு யாருமில்லை. தகவல் தொழில் நுட்பம வளர்ந்த இந்த நூற்றாண்டில் அமரிக்காவும் ஐரோப்பாவும் என்னசெய்யும் என்பது பத்துவயது சாணக்கியச் சிறுவன் கூடப் புரிந்துகொள்ளக்கூடிய நிலையில் சுரேஷ் பிரேமச்சந்திரன் குழுமம் வசதிக்கேற்ப மட்டுமே புரிந்துகொள்ளும்.