கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரட்டைத் தேசியம் குறித்து நான் இனியொரு இணையத் தளத்தில் எழுதிய கட்டுரை பல தளங்களிலிருந்தும் வட்டாரங்களிலிருந்தும் தாக்குதல்களுக்கு உள்ளாகின. அநேகமானோரின் குறிப்புகளில்களில் கோட்பாடு ரீதியான விமர்சனங்களை விட தனிமனித தாக்குதல்களே முனைப்புற்று இருந்தன. இருப்பினும் சில கருத்துக்கள் நம்பிக்கைத் தரக் கூடியனவையாக அமைந்திருந்தன என்பதும் இவ்விடத்தில் மனங்கொள்ளத்தக்கது. இந்த பின்னணியே இரட்டை தேசியம் குறித்து மேலும் சில குறிப்புகளை வேண்டிய தேவையை உருவாக்கி உள்ளது.
வர்க்கங்களாக பிளவடைந்திருந்த ஐரோப்பிய சமூகத்தில் சமூதாய மாற்றத்தின் பின்னர் புதிய புதிய வர்க்கங்கள் தோன்றின. எடுத்துக் காட்டாக ஆண்டான் அடிமை சமூகம் ஒழிக்கப்பட்ட பின்னர் நிலவுடமையாளர்கள் – விவசாயிகள் எனவும், நிலவுடமை சமூகவமைப்பு சிதைந்த பின்னர் முதலாளி – தொழிலாளி வர்க்கங்களாகவும் மாற்றமடைந்து வந்துள்ளதை உணரலாம். இங்கு முதலாளித்துவம் என்பது தேசிய வடிவில் தமது வர்க்க கட்டமைப்புகளை உருவாக்கிக் கொண்டது. தோழிலாளி வர்க்கப் புரட்சி என்பது வர்க்கங்களை இல்லாதொழிப்பதற்கான போராட்டமாக அமைகின்றது. அதனால் அது தேசியத்திற்குள் புரட்சியை முன்னெடுப்பதாக அமைந்திருக்கின்றது.
முன்னதாய் முதலாளித்துவ ஜனநாயகத்தின் பகுதியாயிருந்த தேசியப் பிரச்சனை சோவியத் ருசியா உருவாகிய பின்னர் சோஷலிஸத்தின் ஒரு பகுதியாக மாறியிருந்தது. சோவியத் யூனியனின் தகர்வின் பின்னதாக இன்றைய உலகமயமாதல் சூழல் தேசியத்தை உலகமேலாதிக்கவாதத்தின் நலன்களுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்தும் நிலை தோன்றியுள்ளது என்பது வேறு விடயம்
ஆனால் எங்களுடைய சாதிய சமுகத்தில் சமுதாயமாற்றங்களின் போதும் பழைய சாதிமுறை புதிய வர்க்க உறவுகளுடன் தொடர்ந்து இயங்கி வருகின்றது. இங்கு நிலவுடமை சமூகவமைப்பு மாற்றமடைந்தாலும் பிராமனர் சில சமயங்களில் பிராமணர் – வெள்ளாளர் சார்ந்த கூட்டாகவும் அதிக்கம் நிலவி வருவதை அவதானிக்கலாம்.
ஒரு இனக்குழு இன்னொரு இனக்குழுவை ஆதிக்கம் செலுத்தியதால் ஏற்பட்ட முரண்பாடு இது. புதிய உற்பத்தி முறை உற்பத்தி உறவுக்குள்ளும் சாதியம் ஆழமாக தாக்கம் செலுத்தியுள்ளதை அவதானிக்கலாம்.
இந்தியா முழுமையையும் தேசமாக ஒன்றுத்திரட்ட முனைந்த பிராமணர்கள் (காங்கிரஸ்) தலித் மக்களின் விடுதலை சார்ந்தும் தீண்டாமையின் கொடூரத்திற்கு எதிராகவும் எந்தவிதமான முயற்சியும் எடுக்கவில்லை. இத்தகையதோர் சந்தர்ப்பத்தில் தான் அம்பேத்கர் போன்றோர் காங்கிரஸிற்கு எதிராக ஆங்கிலேயருடன் சேர்ந்து இயங்க வேண்டிய சூழ்நிலை உருவானது. அது தலித் தேசியமாக இருநத்து. “இன்றுவரை இந்திய இயக்கங்களில் பல இரட்டை தேசிய பிளவுடன் கூடிய இரண்டக நிலையுடையவனாகவே உள்ளன. அம்பேத்காரோ, பெரியாரோ ஏகாதிபத்திய சக்கிகளிடம் விலைப் போனவர்களல்ல. தாம் பிரததிநித்துவப்படுத்திய மக்களுக்காக எதிர்தேசிய நிலைப்பாட்டில் உறுதியாக நின்று போராடியவர்கள்.இன்று உலகமயமாதலின் கையூட்டில் தொண்டு நிறுவனமாக இயங்கித் திவீர தலித்தியம் பேசும் சிலரோ மக்கள் விடுதலைக்கு விரோதமாக ஒடுக்கப்பட்ட மக்களைத் தனிமைப்படுத்தி என்றென்றும் இழிவுப்படுத்தலுக்குள் உழல்வதற்கே வழிகோலுகிறார்கள். தலித் மக்களின் விடுதலை இவர்களுக்கு அவசியமில்லை. ஆண்டாண்டுகால அவமதிப்புகளைப் பேசியே இவர்கள் பிழைப்புவாதத்தை முன்னெடுக்க முயல்கின்றார்கள். பிராமணியம் மக்களை சாதிகளாய்ப் பிளவுப்படுத்திச் சுரண்டலை பேண எந்தளவுக்கு முயல்கிறதோ, ஆதேயளவுக்கு தலித்தியம் எதிர்தளத்தில் இயங்கியவாறு அதே சாதிப்யவாதப் பிளவுப்படுத்தல் தவறையே இழைக்கிறது. இது உலகமயமாதலுக்கு ஆட்படும் அம்சமாகும்.(ந.இரவீந்திரன், சாதி தேசம் பண்பாடு, புதுவிசை, இந்தியா, இதழ்- 2010-யூன்,) 1940 களில் காந்தி “வெள்ளையே வெளியேறு“ என்ற கோசத்தை முன் வைத்து தராளவாத அரை பிராமணித்துவ தேசியத்தை இயக்கச் செயற்பாடாக முன்னெடுத்த போது அம்பேத்கரையும் கடந்து மக்கள் அவ்வியக்கத்தில் இணைந்தனர்.
1942 ஆண்டு மந்திரிசபை உறுப்பினராக இருந்த அம்பத்கர் 1945ஆம் ஆண்டு இடப்பெற்ற தேர்தலில் தோல்வி அடைகின்றார். ஆங்கிலயருடன் இணைந்து தலித் மக்களின் விடுதலைக்காக செயற்பட்ட அம்பேத்கர், ஆங்கிலயர் குறித்த விமர்சனங்களையும் முன் வைக்க தவறவில்லை. மறுப்புறத்தில் காங்கிரஸ் மீதான வெறுப்புக் கொண்டிருந்தமையும் நியாயப்புர்வமானது.
இத்தகைய சூழலை கவனத்தில் கொள்கின்ற போதுதான் இரட்டைத் தேசியத்தை நாம் புரிந்துக் கொள்ளல் அவசியமானதாகின்றது.
சுதந்திர போராட்டம் இந்திய மக்களின் அளப்பரிய தியாகங்களோடு முன்னேடுக்கப்பட்டது. சுதந்திரத்தின் பின்னர் அதிகாரங்களைப் பகிர்வதில் இந்திய மக்கள் சக்திகள் தமது வலுவைப் பிரயோகித்தனர். விடுதலையுணர்வு சார்ந்த போராட்டங்கள் முனைப்புறும் போக்கு தீர்மானிக்கும் சக்தியாக அங்கு இருக்கவில்லை.
இலங்கையில் சுதந்திரத்தின் பின்னரே மக்கள் விடுதலை உணர்வு சார்ந்த போராட்டங்கள் முனைப்படைந்தன. இந்தியப் பிராந்திய மேலாதிக்கத்துக்கு எதிராக இலங்கைத் தேசியம் விழிப்புணர்வை மேற்கொண்ட போது உலகின் இரு மேலாதிக்க வாத நாடுகளையும் சாராது அணி சேராக் கொள்கையில் தீர்க்கமான பாத்திரத்தை வகித்தது. இந்தியத் தமிழிலிருந்து இலங்கைத் தமிழ் பெறும் தனித்துவக் குணாம்சங்கள் வலியுறுத்தப்பட்டன. குறிப்பாக தேசிய விழிப்புணர்வு சார்ந்த இலங்கைத் தமிழ் எமது மக்களின் பல்வேறு அடிப்படை பிரச்சினைகளுக்காகவும் போராடும் பண்பை வெளிப்படுத்தியது.
யாழ்ப்பாணத்தில் உயர் சாதிய வர்க்க சக்திகள் தமிழ்த் தேசியத்தில் அக்கறைக் கொண்ட போது கம்யூனிஸ்ட்டுகளின் தலைமையில் ஒடுக்கப்பட்ட மக்கள் பண்ணையடிமைத் தனத்துக்கு எதிரான தேசிய பிரச்சினைக்காக போராடினார்கள். தலித் தேசிய உணர்வுக்கு எதிரியாகவே உயர்சாதி தமிழ்த் தேசியம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது.
சாதிய தகர்ப்புப் போராட்டமாக முனைப்புற்ற அந்த தலித்தேசியம் இலங்கையின் பல்வேறு தரப்பு மக்களினதும் ஆதாரவை தனது பக்கம் அணித்திரட்டிக் கொண்டது. யாழ்ப்பாணத்தின் அதிகாரச் சாதியினர் மத்தியிலிருந்து அந்த சாதிய தகர்ப்பு போராட்டம் ஆதரவை பெற்றிருந்தது.
இந்திய – இலங்கை வரலாற்றில் அது ஒரு பிரத்தியேக அனுபவம். இந்தியாவில் எங்குமே இதுவரை சாதிய தகர்ப்புக்காக அனைத்து சாதியினரும் ஐக்கியப்பட்டு போராடி சாத்தியப்பட்டிருக்கவில்லை. ஒரு சாதியினர் அடக்கு முறையாளருக்கு எதிராக போராடினால், அடுத்த ஒரு ஒடுக்கப்பட்ட சாதியினர் கூட அதனை ஆதரிக்காத நிலைதான் அங்கே காணப்படுகின்றது. அம்பேத்கரை அவரது மஹர் சாதியினர் மட்டுமே பின்பற்றியிருந்தனர்.
யாழ்ப்பணத்தில் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம் இவ்வகையில் அனைத்து சாதியினரையும் ஐக்கியபப்டுத்திய போது, யாழ் வெள்ளைத் தேசியம் தலித் தேசியத்திற்கு எதிராக செயற்பட்ட சூழலில் இரட்டைத் தேசியம் கோட்பாடு குறித்து அறிய வேண்டிய சூழலை எமக்கு ஏற்படுத்தியுள்ளது. இங்கு தலித் தேசியம் மார்க்சிய வழிக்காட்டலில் சர்வதேச உணர்வுக் கொண்டதாக முன்னெடுக்கப்பட்டது. இந்தியாவில் தலித் தேசியம் முழுவதும் எதிர்த் தேசிய நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உலகமயமாதல் சக்திகளுக்கு காட்டிக் கொடுக்கும் பாத்திரத்தை வகிக்கின்றது.
இத்தகைய வரலாற்றுச் சூழலில் இலங்கையில் பேரின சக்திகளும் சிங்கள பெரும் தேசியவாதமும் தமிழ் மக்களுக்கு விரோதமான அரசியல் பொருளாதார நடவடிக்கைகளையும் உரிமை மீறல்களையும் இனவொடுக்குமுறைகளையும் மேற்கொண்ட போது இனவாதம் பிரதான முரண்பாடாக உருவெடுத்தது. ஆனால் இனவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டமானது துரதிஸ்டவசமாக ஆண்ட பரம்பரை மீண்டும் கையேற்பதற்கான வெள்ளாள தேசியமாக முன்னெடக்கப்பட்டது. இப்போராட்டம் தமிழ் தேசியமாக இருந்த போதினும் பரந்துப்பட்ட ஐக்கிய முன்னணிக்கு அது இடம்கொடுக்கவில்லை.
இன்று இலங்கையில் இனவாதம் என்பது பல்வேறுநிலைகளில் வளர்க்கப்பட்டு வருகின்றன. மறுபுறத்தில் போர்கால இசைவாக மறைந்திருந்த சாதி மக்கள் மத்தியில் பல்வேறு வடிவங்களில் வேர் கொண்டு கிளைப்பரப்பி வருகின்றது. போராட்டங்கள் யாவற்றிலும் சாதியம் என்பது தள்ளி வைக்கப்பட்டிருந்தது போல, தமிழ் தேசிய போராட்டத்தின் போதும் சாதியம் என்பது தற்செயலான சில நெகிழ்வுப் போக்குகளைக் கொண்டிருந்தது. இந்த சூழலில் தான் சாதியத்தை தகர்த்த கூடிய தலித் தேசியமும் தமிழ் மக்களின் சுயநிர்னய உரிமைகான தமிழ் தேசியமும் முற்போக்கான திசையில் முன்னெடுத்து செல்லப்படல் வேண்டும். இவ்விடத்தில் இவ்விரு தேசியமும் அது சார்ந்த குறுகியகால நீண்டகால தந்திரோபாய திட்டங்களை வகுக்கின்ற போது இரட்டைத் தேசியம் குறித்த தெளிவு அவசியமானதொன்றாகின்றது. இரட்டைத் தேசியம் குறித்த சமூகமாற்ற செயற்பாடானது இன்று நம் மத்தியில் காணப்படுகின்ற இன, மத, மொழி, சாதி, பாலின முரண்பாடுகள் அனைத்திற்கும் எதிரான போராட்டமாக திகழ வேண்டும்.
தமிழ் அனுபவம் என்ற வகையில் வள்ளுவம், பெரியாரியம், பாரதியம் என்பனவும் இந்திய வாழ்முறையை கூர்மைப்படுத்திக் காட்டுவனவாக உள்ளன. பௌத்த எழுச்சியும் பக்திபேரியக்கமும் விடுதலைப் போராட்டத்தில் காந்தியம் வகித்த பாத்திரமும் இந்திய புரட்சியில் பண்பாட்டுப் புரட்சியை தீர்மானிக்கும் சக்திகளாக விளங்குவதைக் காட்டுவனவாக உள்ளன. வர்க்கப் பிளவடைந்த ஐரோப்பிய சமூகத்தில் தீர்க்கமான அரசியல் புரட்சி சமூகமாற்த்தையும் பண்பாட்டு மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இனக்குழு முறை முழுமையாக தகர்வுறாது வர்க்க சமூகமாற்றத்துக்கு ஏற்ப சாதியமாக்கப்பட்ட இந்தியச் சமூகத்தில் பண்பாட்டுப் புரட்சியே அரசியல் – சமூக மாற்றங்களைச் சாத்தியப்படுத்தியுள்ளன. இச்தகைய யதார்த்தப் பின்னணிலேயே இரட்டை தேசியம் நிசர்சனமாகியுள்ளது.
புதிய சூழலுக்கான மார்க்சியப் பிரயோகம்
மார்க்சியத்தை இன்றைய யதார்த்த சூழலுக்கு ஏற்றவகையில் புனரமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. மார்க்சியம் என்பது எல்லாக் கால கட்டத்திற்கும் எல்லா சூழலுக்கும் பொருத்தமான திட்ட வட்டமான தத்துவத்தையோ வேலைத்திட்டத்தையோ முன்மொழியவில்லை. அது ஒவ்வொரு வரலாற்றுக் காலங்களிலும் மனித குலத்தின் முன்னேற்றத்திற்கான திசை வழியைக் காட்டி நின்றது என்பதை நாம் புரிந்து செயற்பட வேண்டியுள்ளது.
எமது பண்பாட்டுச் சூழலில், காலமாற்றத்திற்கும் புதிய பொருளாதார சூழலுக்கும் ஏற்றவகையில் பல புதிய புதிய கோட்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன. பல பாரம்பரியங்களும் பழைய சிந்தனைப் போக்குகளும் காலத்திற்கு ஏற்றவகையில் மீட்டெடுக்கப்படுகின்றன. அம்பேத்கர், இரட்டை மலைசீனிவாசன், அயோத்திதாச பண்டிதர் முதலானோர் இத்தகைய பண்பாட்டு மீட்டுருவாக்கத்தில் முக்கிய தத்துவவாதிகளாவர்.
சாதிய ஒடுக்குமுறைக்கு ஆட்பட்டிருந்தமையால் தமது பண்பாட்டு விருத்திக்கு இருந்த தடைகள் குறித்த புரிதல் அவர்களிடம் இல்லாமலில்லை. ஆளும் சாதியினரது மீட்டுருவாக்கம் வேத வேதாந்த சார்பாக அமைந்தது போல அயோத்திதாசரது மீட்டுவாக்கம் இல்லை. இடைக்காலத்தில் வேத வேதாந்த வழி திரிக்கப் பட்டுவிட்டது என அவர்கள் வருந்த, தாம் அடக்கப்பட்டதால் முந்திய மேலான நிலையிழந்தோம் என்ற உணர்வு சார்ந்து சிந்தித்து செயற்பட்ட அம்பேத்கர், அயோத்திதாசர், இரட்டைமலை சீவாசன் குறித்து மீளாய்வு செய்ய வேண்டியுள்ளது.
இத்தகைய பண்பாட்டு மீட்டுருவாக்கம் இரு நிலைப்பட்ட போக்குகளை தத்துவார்த்த தளத்தில் ஏற்படுத்தியுள்ளன. ஒன்று மார்க்சியத்தை நிராகரிக்கும் வகையிலும், அதனை தகர்க்கும் வகையிலும் ஆதிக்க சக்திகளால் மேற்கொள்கின்ற தத்துவார்த்த போராட்டம். இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் காங்கிரஸின் தலைமையிலும் அதன் போக்குகளிலும் பிராமணியத்தின் செல்வாக்கு அதிகமாக காணப்பட்டமையினால் அம்பேத்கர், இரட்டை மலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர் ஆங்கில காலனித்துவாதிகளை ஆதரித்து நின்றதுடன் தாம் சார்ந்த மக்களுக்கான விடுதலை மார்க்கமாகவும் அதனைக் கருதினர்.
மறுபுறத்தில் காங்கிரஸ் தலைமையும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் அடக்கியொடுக்கப்பட்ட மக்களை இணைக்க தவறியதுடன், அவர்கள் சார்ந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தையும் முன்னெடுக்க தவறியது. இதன் விளைவாக இந்திய தேசிய விடுதலைப் போராட்டமானது நண்பன் யார்? எதிரி யார் ? என்பதனை சரியாக இனங்கண்டு கொள்ளத் தவறிவிட்ட சூழலில், பாரதி இவ்விரு முரண்பாடுகளையும் சரியாக இனங்கண்டார். தன் காலவோட்டத்தின் உயிர்நாடிகளைப் புரிந்துகொண்டு செயற்பட்டமையே பாரதியின் முக்கிய ஆளுமையாக அமைந்தது.
இவ்விடத்தில், கியூபாவின் பண்பாட்டு புரட்சியை ஒப்பு நோக்குவது பயன்மிக்கதாகும். கியூப தேசிய விடுதலைப் போராட்டமானது தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மத்திய தர வர்க்கத்தினர் அனைவரையும் தன்னுள் இணைத்திருந்தது போல, கறுப்பின மக்களின் விடுதலையையும் உள்ளடக்கியதாக காணப்பட்டது. இத்தகைய தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்ததில் ஹொஸே மார்த்திக்கு முக்கிய இடமுண்டு. பண்ணையடிமைத்தனத்தை தகர்ப்பது மற்றும் ஏகாதிபத்தியப் பிடியிலிருந்து விடுதலைபெறுவது எனும் இரட்டை தேசியம் குறித்த மார்த்தியி குறித்த மார்த்தியின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க பங்களிப்பனை அன்றைய கியூபா புரட்சியின் முன்னணி தலைவர்கள் சிறப்பாகவே கவனத்திலெடுத்தனர்(உண்மையில் இரட்டைத் தேசிய பிளவு என்ற நடைமுறைச் செயற்பாடு சாதியச் சமூகத்திற்குரிய யதார்த்தம் என்பதை கவனத்தில் கொள்வது அவசியம்).
”கியூபப் புரட்சிக்கான கருத்தியல் அடிப்படையை உருவாக்கிய சிந்தனையாளர் ஹொஸே மார்த்தி” என பிடல் காஸ்ட்ரோவும், ”இந்த நாட்டில் தேச எல்லைகளைக் கடந்து எதையேனும் பேசவோ செய்யவோ வேண்டுமென்றால், நாம் மார்த்தியின் வார்த்தைகளையும் அவரது முன்னுதாரணத்தையும் நினைவில் கொள்ள வேண்டும்” என சேகுவேராவும் சரியான திசையில் இனங்கண்டிருந்தனர்.
இந்திய சூழலில் இத்தகைய வரலாற்றுப் பாத்திரத்தை வகித்த பாரதியின் இரட்டை தேசியம் குறித்த தெளிவை, இந்திய தேசிய விடுதலையின் முன்னணி தலைவர்கள் கவனத்திலெடுக்க தவறியமையே கியூபா விடுதலைப் புரட்சி அடைந்த வெற்றியை இந்திய தேசிய போராட்டம் எட்ட முடியாமல் போனது. இதுவரையும் இந்திய சூழலில் இவ்விடயம் கவனத்தில் கொள்ளப்படாதிருப்பது துரதிஷ்டவசமான தொன்றாகும். இது தொடர்பில் ந. இரவீந்திரன் பின்வருமாறு குறிப்பிடகின்றார்:
ஐரோப்பிய வர்க்கமுறையை அப்படியே பிரயோகிக்க முனைந்தது தோல்வியடைந்ததைப் போன்றே, சாதிச்சமூகம் என்பதற்காக தலித்தியவாதத்தையும் பிரயோகித்தமையும் தோல்வியே தழுவியுள்ளது. மார்க்ஸ், லெனின் ஆகியோரது எழுத்துக்களில் முடங்கிவிடாமல் மார்க்சிய – லெனினியைச் சிந்தனை முறையைக் கற்றுக்கொண்டு நமது சாதியச் சமூகத்துக்கு அமைவாகப் பிரயோகிப்பது அவசியம்.
அந்தவகையிலும் சாதியத்தகர்ப்பின் பொருட்டும் உழைக்கும் மக்களாகவே மிகப்பெரும்பான்மையினரான தலித் மக்கள் உள்ளமையாலும் அதிக முக்கியத்துவமுடைய ஒன்றாகியுள்ளது. அதேவேளை பல்வேறு சாதிப்பிரிவினரும் பாட்டாளிவர்க்கமாக உள்ள காரணத்தாலும், ஏற்றத்தாழ்வைத் தகர்த்து சமத்துவ சமூகம் படைப்பதும் சாதிபேதங்களை ஒழிப்பதும் அதனூடாக மட்டுமே சாத்தியப்படும் என்பதாலும் மார்க்சிய – லெனியைக் கற்றலை புதிய நோக்கில் ஆழப்படுத்துவது அவசியமாகும். (மே.கு.கட்டுரை)
அந்தவகையில் இன்று மார்க்சியம் என்பது இந்த சூழலில் தன்னை புனரமைத்துக் கொள்ள வேண்டிய வரலாற்று நிர்ப்பந்தத்திற்கு உட்படுகின்றது. அம்பேத்கர், அயோத்திதாச பண்டிதர், பெரியார், இரட்டைமலை சீனிவாசன் முதலா னோரிடமிருந்து போர்க்குணத்தை கவனத்திலெடுக்கின்றதன் மறுபுறத்தில், காங்கிரஸ் தலைமையிலான இந்திய தேசிய போராட்டத்தின் முற்போக்கான பாத்திரத்தையும் (அதன் வரையறைக்குட்பட்ட அளவில்) நாம் கவனத்திலெடுக்க வேண்டும்.
தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் புரட்சிகரமான அரசியல் மாற்றத்திற்கு வழிகோலக்கூடிய புதிய பண்பாட்டுப் புரட்சி வடிவங்கள் நடைமுறைவாயிலாக கண்டறியப்படுவது அவசியப் பணியாகியுள்ளது. இக்காலத் தேவையைக் கையேற்கத்தக்கது. வர்க்கமாக, முன்னணிப் படையாக தொழிலாளிவர்க்கத்தை வளர்த்தெடுக்கும் வரலாற்றுக் கடமையின் ஒருப் பகுதியாகவே இரட்டைத் தேசிய போராட்டம் அமைந்துள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மிகப் பிரமாண்டமான வெற்றிகளை பெற்று சாதனையை நிலைநாட்டியவர்கள் கம்யூனிஸ்டுகள். இந்த நூற்றாண்டிலும் அதனை விட பிரமாண்டமான வெற்றிகளை பெறுவதற்கு இந்த காலம் குறித்த சுய விமர்சனத்துடன் செயற்படுவோமாக.
மாக்சியம் ,லெனினியம் நாம் ஏற்கனவே அறிந்தவை. பாரதியம் என்றால் என்ன ?தோழர் மதிவானம் விளக்குவாரா ?
அம்பேத்கர்,பெரியார் போன்றோர் பார்ப்பனீயத்தின் பரம எதிரிகளாக வாழ்ந்தவர்கள் .”சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் “என்று சொன்னவர் அம்பேத்கர்.பார்ப்பனீய மதத்தின் அட்வகேற்றாக இருந்தவன் பாரதி .அவன் எழுதிய கட்டுரைகளையும் படித்தால் புரியும் .பாரதியை தூக்கி பிடிக்கின்ற திரிபுவதிகலான ஜெயகாந்தன் போன்றோரின் சீரழிவு நமக்கு நல்ல பாடமல்லவா .பாரதி பற்றி மறைக்கப்படுகின்ற விடயங்களை இடது சாரிகள் அமபல படுத்த வேண்டும்.
தோழர் வே. மதிமாறன் ஸ்ரீமான் பாரதியை தோலுரிக்கும் கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார்.தோழர்கள் எல்லோரும் படிக்க வேண்டுகிறேன்.
பாரதியம் என்பது ஒரு பாரதி வழிபாட்டுக் கோட்பாடு மட்டுமே என்று தான் சொல்ல வேண்டியுள்ளத
அதன் பயனாக,
பாரதி ஒரு ஆத்திக நாத்திகன் என்பது போன்ற கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
பாரதி கம்யூனிஸ்டாக்கப் பட்டிருக்கிறார்.
இனும் என்னென்னவோ அற்புதங்கள் நடந்துள்ளன.
பாரதி என்பவன் என் பாட்டன் அவனே வயிற்றீற்கு சோறீடல் வேண்டும் இங் கு வாழும் உயிர்களூக்கெல்லாம் எனப் பாடியவன். அறீவை வளர்த்திடல் வேண்டும் மக்கள் அத்தனை பேருக்கும் என்றூ பேசியவன்.என் இனத்தவன் தமிழன். அவனால் தோன்றீயதே பாரதீயம். பாரதி போலோரு கவிஜன் இந்தப் பாரினில் இல்லை பாரதி தந்த தமிழ்ச் சுவை போலொருவர் இன்னும் தருவதற்கில்லை.
Present Sri lankan govt is supposed to be LEFTIST govt, coaliation partners include, commmunist, and NSSP, and Wimal Weerawansa, ex jvp man a marxist, the prseident is supposed belong to leftist ideology, all the left movement in Sri lanka suported him in the 2005, election, its the left movement which is in power todays Sri Lanka, Capitalist parties are less communalist, copared to left movement in Sri lanka, இன்று இலங்கையில் இனவாதம் என்பது பல்வேறுநிலைகளில் வளர்க்கப்பட்டு வருகின்றன. by the left movement
They are pretending to be left. They are not left at all. The lefts are always affiliated with the revolution and humanity .
நமக்கு முதலில் விளங்க வேண்டியது இந்த இரட்டைத் தேசியம் என்பது எவ்வாறு செயற்படுகிறது என்பது தான்.
ஒரு நடைமுறை உதாரணத்தை வைத்து இரட்டைத் தேசியம் எவ்வாறு செயற்படுகிறது என்று விரிவாக. விளக்கினால் உதவும்.
சாதி / தலித் அடயாளத்தைக் கட்டுரையாளர் தேசியமாக வரையறுக்கிறாரா?
அவ் அடையாளம் எவ்வாறு தேசிய அடையாளமாகும்?
இப்போது தேசியம் எனக் கட்டுரையாளர் எதைக் கருதுகிறார் என்ற கேள்வியும் எழுகிறது.
இந்தியாவில் எப்போது தலித் தேசியம் மத மொழி அடையாளங்கள் கடந்து “இந்திய தலித் தேசமான” ஒரு தனித் தேசத்தின் விடுதலை கோரிப் போராடியது?
“தலித்தியம்” அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே தலித்தியம் ஒடுக்கப்பட்ட மக்களை மட்டுமன்றி தாழ்த்தப் பட்ட மக்களையும், குறிப்பாகத் தலித்தியம் தழைத்தோங்கிய தமிழ்நாட்டில், பிளவுபடுத்தியுள்ளது எவ்வாறு?
ஒவ்வொரு சிறிய கேள்விக்கும் எளிய, தெளிவான மறுமொழிகள் தந்தாரென்றல் இந்த இரட்டைத் தேசியக் கோட்பாட்டைப் பற்றிப் பயனுறப் பேச இயலும்.
”தீண்டாமையின் கொடூரத்திற்கு எதிராகவும் எந்தவிதமான முயற்சியும் எடுக்கவில்லை. இத்தகையதோர் சந்தர்ப்பத்தில் தான் அம்பேத்கர் போன்றோர் காங்கிரஸிற்கு எதிராக ஆங்கிலேயருடன் சேர்ந்து இயங்க வேண்டிய சூழ்நிலை உருவானது.”
இந்த வரியிலிருந்து என்னுடைய கருத்தை தொடங்குகிறேன். காங்கிரஸ் எடுக்கவில்லை அதனால் அம்பேத்கார், பெரியார் எடுத்தார் என்று சொல்வது எந்த வரலாற்று ஆதாரங்கள் அடிப்படையில். காங்கிரஸ் ஒரு தரகுமுதலாளிய கட்சி ஆகும் என்பது மாற்றுக் கருத்து எனக்கு இல்லை. ஆனால் தீண்டாமைக்கு எதிரான முதல் தேசிய இயக்கமே காந்தியின் தலைமையில்தான் நடந்தது. அதன்பிறகுதான் பெரியார், பிறகு அம்பேத்கார் அதை எதிர்த்து ஒரு அரசியல் இயக்கமாக நடத்த தொடங்கினர். ஆதலால்தான் அவர் காங்கிரசுக்கு எதிராக ஆங்கிலேயருடன் சேர்ந்தார் என்று சொல்வது அபத்தம்.
இரண்டாவது, பிரிட்டிஷ் வெளியேறியவுடன் காங்கிரஸ் அமைச்சரவையில் இணைந்தார். இறுதி வரையில் காங்கிரசை எதிர்த்து எந்த இயக்கமும் நடத்தவில்லை. இதை எப்படி சமரசப்படுத்தி எழுதப்போகிறீர்கள்.
இரட்டை தேசியம் என்பது உங்களது கண்டுபிடிப்பாக கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. இது பிரிட்டிஷ்காரன் கண்டுபிடித்த பிரித்தாளும் கோட்பாடு. அதை இங்குள்ள மற்ற தலைவர்கள் வழிமொழிந்தனர். 1909 ஆண்டு, 1919 ஆண்டு பிரிட்டிஷ் சட்டங்களே இதற்கு சாட்சி. இதற்கு பிறகுதான மற்றவர்கள் கையிலெடுக்கிறார்கள்.
பிறகு பண்பாட்டு தேசியம். இதுவும் உங்கள் கண்டுபிடிப்பல்ல. ஆட்டோபவ்வர், மற்றும் ரோசா லுக்சம்பர்க். அதை எதிர்த்துதான் லெனின் தேசிய இன சுயநிர்ணய உரிமை என்ற நூலை எழுத வேண்டிய தேவையே ஏற்பட்டது.
நீங்கள் நயவஞ்சகமாக மார்க்சியத்தின் பெயரில் லெனினியத்தை மறுத்து ஆட்டோபவ்வரையும், ரோசா லுக்சம்பர்க்கையும் அழைத்துக்கொள்கிறீர்கள். மார்க்சியத்தை திருத்தவது என்ற பெயரால், குழி தோண்டி புதைப்பதற்கு தாராளவாதம் பேசுகிறீர்கள். மார்க்சியத்தின் அடிப்படையை இனம் தோன்றத்திற்கான அடிப்படையை மூடி மறைத்துவிட்டு பேசுகிறீர்கள்.
இப்பொழுது இந்திய விசயத்துக்கு வருகிறோம். இங்கு சாதியம் எந்த சகாப்தத்திற்கானது என்பதை வரையறுப்பதில் உங்களுக்கு தெளிவில்லை என்பதையும் அறிய முடிகிறது. ஜப்பானில் சாதி, ஆப்ரிக்காவில் இனக்குழுக்களிடையே சாதியின் தன்மைகள் ஆகியவை இருப்பதை தயவு கூர்ந்து தெரிந்துகொள்ளுங்கள். தெரிந்துகொண்டிருந்தால் மறைக்காமல் அதையும் கூறி விவாதியுங்கள். ஆரோகியமாக விவாதம் விரிவடையும்.
அம்பேத்கார் என்ன செய்தார், பெரியார் என்ன செய்தார் என்பதல்ல இந்த கட்டுரையின் சாராம்சம். கருத்துமுதல்வாத சிந்தனையை கிராம்சிகியின் சிந்தனையை முன்மொழிந்த அவர்களின் வழியை மார்க்சியத்திற்கு மாற்றாக பின்பற்றமுடியுமா என்பதே என் கேள்வி. அடிப்படையிலேயே கருத்துமுதல்வாத சிந்தனையும் ( சிந்தனையே சமூகத்தை மாற்றி அமைக்கும் என்ற சிந்தனையை ) ஏகாதிபத்தியத்தை சார்ந்து நின்று சமூக மாற்றத்தை நிகழ்த்தமுடியும் என்ற அவர்களது அடிப்படையை – இதைத்தான் இன்றுள்ள எல்லா தலித் மற்றும் பெரியாரிய இயக்கங்களும் உலகமயமாக்கல் கொள்கையை கூடவோ குறையவோ பின்பற்றுகிறது – பின்பற்ற முடியுமா என்பதை தெளிவுபடுத்துக.
இறுதியாக பாரதியை பற்றி. அவரைப்பற்றி இப்பொழுது விவாதிக்க வேண்டியது ஏகாதிபத்தியத்தை விரட்டாமல் இங்குள்ள சாதியையோ, இனப்பிரச்சனையோ தீர்க்கமுடியாது என்பதைப் பற்றியதே. இந்த விசயத்தில் பாரதி ஒரு முன்னுதாரனம். அதை மறுத்து அம்பேத்கார் பெரியார் போல் ஏகாதிபத்தியத்தை சார்ந்து நின்று சாதியத்தை ஒழிக்க முடியும் கருதுகிறவர்கள் மற்றொருபுறம். இந்த விசயங்களை எல்லாம் மறுத்துவிட்டு வெறும் குரோதத்தை வெளிப்படுத்துவது ஞாயமாகாது. அம்பேத்கார் பெரியார் ஒரு சீர்திருத்தவாத தலைவர்களாக இருந்தார்கள். அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது வேறு. ஆனால் அந்த சீர்திருத்தம் புரட்சிக்கு சமூக மாற்றத்திற்கு சேவை செய்யாமல் எதிர்வினை ஆற்றியதே உண்மை. அதற்கு எடுத்துக்காட்டு இன்றைய தலித் இயக்கங்கள், பெரியாரிய இயக்கங்கள். ஏன் அதை வழிமொழியும் கம்யூனிச இயக்கங்கள் குறிப்பாக புரட்சிகர இயக்கங்கள்.
யார் கருத்துமுதல்வாத சிந்தனையை விடுத்து பொருள்முதல்வாத சிந்தனையை முன்மொழிகிறார்களோ, சமூக அடித்தளத்தை பண்ணையடிமையை அகற்றி, அதற்கு பாதுகாப்பாக நிற்கும் ஏகாதிபத்தியத்தை அகற்றி பண்பாட்டு தளத்தில் மாற்றம் காணமுடியும் என்று கருதுகிறார்களோ அவர்கள்தான் புரட்சிக்கு சமூக மாற்றத்திற்கு சேவை செய்யமுடியும். இப்போது கூறுங்கள் நீங்கள் எதன் பக்கம் நிற்கிறீர்கள் என்று.
இதை விடுத்து நீங்கள் கண்மூடித்தனமாக தொழுவது என்பது முட்டுச் சந்தில் நிற்கும் நபராகவே வெறுத்து “எல்லாம் நான் பார்க்காததா” என்று எதிர்காலத்தில் அனுபவவாதம் பேசும் நபராக மாறிப்போவீர்கள். தொடரும்….
my friend i agre with you and salute you, veluoslo@gmail.com
கட்டுரையாளர் என்ன சொல்ல வந்தார் என்பதே எனக்கு சுத்தமாய் புரியவில்லை. ஆனால் உங்களது பதில் நெத்தியடி. நன்றி. வாழ்த்துக்கள்.
“சாதியத் தேசியம் “ரவீந்திரன் எழுதிய கட்டுரைக்கு நான் எழுதிய பதில் இங்கும பொருத்தம் குறித்து பதிவு செய்கிறேன் .
சாதியத் தேசியம் சாத்தியம் பற்றி இங்கே ரவீந்திரன் எழுதுகிறார். அப்படி ஒன்று இருப்பதாக நான் நினைக்கவில்லை.நேபாளத்தை முன் வைத்து கருத்துக்கள் சொல்லப்பட்டிருப்பது அவரது கருத்தை நிலை நாட்டுவதற்கே .நேபாளத்தில் மாவோயிஸ்டுக்கள் நடைமுறை படுத்தி வரும் முறை என்பது சாதிய தேசியம் என்பதல்ல.அதன் உள்நோக்கம் என்பது பிராமண ஆதிக்கத்தை ஒழிப்பதாகவே உள்ளது.
ஏன் எனில் நேபாள சாதியத்தை உற்று நோக்கினால் இது புலப்படும்.
அங்கே பிராமணர் ,சத்திரியர், குறுங் ,தமாங், நேவார் ,தகாலி ,ராய் ,லிம்பு ,தபா ,தாறு ,திமால், தன்வர் ,செர்பா (மலைவாழ் மக்கள் ),தோமை ,சாரகி ,காமி … என்ற சாதிகள் முக்கியமானவையாக உள்ளன .
இதில் குறுங் ,தமாங், நேவார் ,தகாலி ,ராய் ,லிம்பு ,தபா ,தாறு ,திமால், தன்வர் ,செர்பா (மலைவாழ் மக்கள் ) என்ற சாதிகள் முழுவதும் மொங்கோலிய இன மக்கள்.
பிராமணர் ,சத்திரியர் என்பவர்கள் இந்தியர்களை போன்ற உருவம் உள்ளவர்கள்.
இவர்களை போன்ற உருவ அமைப்பில் உள்ள தோமை ,சாரகி ,காமி சாதியினர்கள் மிகவும் தாழ்த்த பட்டவர்களாக இருப்பது இங்கே குறிப்பிடத் தக்கது.
தோமை -தையல் தொழில்
காமி – கொல்லர்கள்
சார்கி – செருப்பு தைப்ப்பவர்கள் ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது .
எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருக்கும் பிராமணர்,சத்திரியர் போன்றோர் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதும் ,காங்கிரசு ,கம்யூனிஸ்ட் கட்சி போன்ற கட்சிகளின் தலைமை பீடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.எண்ணிக்கையில் சிறுபான்மையினரான இவர்களின் ஆதிக்கமே நேபாள மாவட்டங்களில் இருப்பதுடன் இந்தியாவின் எடுபிடியாகவும் இவர்களே செயற்பட்டும் வருகிறாகள்.ஆக பெரும்பான்மையான மக்களின் ( சாதியின் ) கைக்கு உரிமையை கொடுப்பதென்பது இயல்பாகவே பிராமண,சத்திரிய ஆதிக்கத்தை ஒழிப்பதாகும்.இம்மாதிரியான சட்டங்கள் வந்தால் தமது அதிகாரம் பொய் விடும் என்றே நேபாள பிராமணர்கள் கூச்சல் போடுகிறார்கள்.பிராமணர்களையும் ,இந்திய அடிவருடிகளையும் ஓரனம் கட்ட மாவோயிஸ்டுக்கள் கண்டு பிடித்துள்ள ஒரு வழி முறை தான் இது. ரவீந்திரன் வியாக்கியான படுத்தும் சாதிய தேசியம் என்பதல்ல.பிராமணீயம் தான் இங்கு முதல் எதிரி.மொகொலிய மக்கள் தம்முள் சாதி ரீதியாக மோதி கொள்வதில்லை என்பதாலும் அவர்கள் மத்தியில் இது செல்வாக்கு பெற்றுள்ளது.தமிழ் நாட்டில் இது சாத்தியமே இல்லை.
யோகன்
சாதிய தேசியம் என்று ஒன்று இருந்தால், மதத் தேசியம், பிரதேசத் தேசியம், ஊர்த் தேசியம் என்றெல்லாம் போய்க்கொண்டெ இருக்கலாம்.
தலித்தியம் என்று தொடங்கி இப்போது ஒவ்வொரு சாதிக்கும்நாலு கட்சிகள் முளைக்கிற நிலையில் தமிழக தலித்தியம் குழம்பிப் போயியருக்கிறது. அதற்கு முண்டு கொடுக்கிற ஒரு முயற்சியாகவே ‘சாதிய தேசியம்’ ‘தலித் தேசியம்’ என்றெல்லாம் புரளி கிளப்பப் படுகிறது.
சாதி ஒடுக்குமுறை உள்ளளவும் ஒடுக்கப் பட்ட சாதியினர் தனித்தும் இணைந்தும் அதற் கெதிராகப் போராடுவர். அது தேவையானது. அந்தப் போரட்ட்டத்தைத் தேசியத் தன்மையுடையது என்பது தேசம், தேசிய இனம் என்பன பற்றிய விளக்கமின்மையின் வெளிப்பாடு போலவே தெரிகிறது.
இதுவரை லெனின் மதிவானம் இந்த இரட்டைத் தேசியம் என்பது எவ்வாறு செயற்படுகிறது என்பதை விளக்கவில்லை.
இனியாவது விளக்குவார் என எதிர்பார்க்கிறேன்.
நேபாளத்தில் மாஓவாதிகளால் தேசிய இனங்களின் சுய நிர்ணயம் மதிக்கப் பட்டுள்ளது. அவர்கள் சாதியத்திற்கெதிராகக் கடும்நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் சாதிகளைத் தேசங்களாக நோக்கவில்லை. இதை மிகச் சரியாகவே சுட்டிக் காட்டியுள்ளீர்கள்.
சிவா நீங்கள் எழுப்பியுள்ள வினாக்கள் என் கட்டுரைத் தொடர்பில் மேலும் விளக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி நிற்கின்றது.
தமிழர் பண்பாட்டில் வர்க்க மாற்றத்துடன் சாதியின் தாக்கமும் தொடர்ந்து வந்துக் கொண்டதான் உள்ளது. எடுத்துக்காட்டாக இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் காங்கிரஸ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை இணைக்க தவறினர். இதன்விளைவாக தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பாக தோன்றிய தலைவர்களும் பிரித்தானியருடன் இணைந்து தமது மக்களுக்கான சலுகைகளை பெற்றுக் கொள்ள முனைந்தனர். ( ஏகாபத்தியம் தொடர்பான விமர்சனம் அவர்களிடம் இருந்தாலும் அவர்களுடன் இணைந்து செயற்படுவதையே பிரதானமான கொண்டிருந்தனர்.) ஒரு தரப்புக்கு உன்னதமாய் இருப்பது மறுதரப்புக்கு இழிவானதாயோ அவலமானதாயோ தெரியும். உன்மையான விடுதலை வெள்ளைப் பறங்கியைத் துரை என்று சொல்லுவது தகர்க்கப்படுவது மட்டுமல்ல, பார்ப்பானை ஐயரென்று சொல்வதும் இல்லாமலாக்கப்படும் வகையில் அமைய வேண்டும் என்று ஏன் பாரதி சுதந்திரப் பள்ளு பாடினார்? ஊர்ப்பானைதனை உருட்டி தம் தொந்தி வளர்க்கும் பார்ப்பானின் நலனும் தலித் நலனும் ஒன்றாக இல்லை என்பதால்! இந்த முரண்பாட்டை சர்யாக உணர்ந்தவர் பாரதி.
பாரதியின் இந்த அதியுன்னதமான பார்வையை சரியான அடையாளம் காணத்தவறியதன் விளைவே இன்று தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டங்கள் தலித்தியமாக மாறி ஒடுக்கப்பட்ட சாதியினர் ஒவ்வொருவரும் தனித் தனி சாதிகளாக பிரிந்து சென்றுள்ள துர்பாக்கிய நிலைத் தோன்றியுள்ளது. இந்தச் சூழலில் சாதி இழிவையும் தலித் தலைவர்களையும் தமக்கு சாதகமான வகையில் தூக்கிப் பிடித்து குதியாட்டம் போடுகையில் இவர்களின் வரவு நல்வரவாகவும் அர்த்தமுள்ளதாகவும் தோன்றும். ஆனால் சற்று ஆழமாக நோக்கினால்தான் அதன் பின்னணியில் அரசியல் பிற்போக்குத்தனம் மறைந்திருப்பதைக் காணலாம்.
இத்தகைய சூழலில் பிரதான முரண்பாட்டை இனங்காண வேண்டியது சமூகச் செயற்பாட்டாளர்களின் முக்கியமான கடைமையாகும். பிரதான முரண்பாடு என்பது பிரதானமற்றதாகச் செல்வதும் பிரதானமற்ற பிரதானமாக மாறுவதும் வரலாற்றின் நியதியாகும். இம்முரண்பாட்டைச் சரியாக இனங்காண முடியாவிடின் வரலாறு அவர்களின் கையிலிருந்த நழுவி விடும்.
இந்திய தேசியப்போராட்டத்தில் ஏகாதிபத்தியத்தக்கு எதிரான போராட்டமும் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான போராட்டங்களும் பிளவுபட்ட தேசியமாகக் காணப்பட்ட சூழலில் பாரதி இவ்விரு முரண்பாடுகளையும் சரியாக இனங்கண்டிருந்தார். பாரதியின் இத்தகைய தெளிந்த நிலைப்பாட்டை இந்தியச் சூழலில் எந்தளவு உணர்ந்துள்ளனர் என்பது முக்கியமான கேள்வியாகும்.
சிவாவின் வினாவில் வினவப்பட்டதுபோல் இன்று பிரதேச தேசியம், தனித்தனிச் சாதிக்குரிய தேசியம் என முன்னெடுப்பது சமூகமாற்றப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தாதா? படுத்தும் என்பது என்பது எனது பதிலாகும். ஆனால் இரட்டைத் தேசிய நிலைப்பாடு இவ்வம்சத்தையும் கருத்திற் கொள்ளவேண்டும். ஒவ்வொரு சிறு குழுக்களிற்கும் ஏற்றவகையில் தேசிய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுக்கமுடியாது. அதேசமயம் அம்முரண்பாடுகளையும் ஒடுக்குமுறைகளையும் கவனத்திற் கொள்ளாமலும் இருக்கமுடியாது. எனவே அவற்றை இரட்டைத் தேசியத்துடன் இணைத்து முன்னெடுப்பதே சாத்தியமாகும். அப்போராட்டமானது இன மத மொழி பாலின பிரதேச ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டமாகவும் அமையும். தெளிவாகக்கூறின் இப்போராட்டடமானது சகலவிதமான ஒடுக்கு முறைகளுக்கும் எதிரான வர்க்கப்போராட்டம் என்ற விஞ்ஞானத்தளத்துடன் இணைக்கப்படுகின்ற போதே அது அர்த்தமுள்ளதாகின்றது. பாரதியின் படைப்புகளில் இந்நிலைப்பாட்டைத் தெளிவாகக்காணலாம்.
அய்யா, தாழ்த்தப்பட்டவர் தாங்கள் ஒதுக்குபவர் யார்?மனிதரில் தாழ்ந்தவர் என்போர் யார்?சேரியில் வாழ்பவனா?வறூமையில் வாழ்பவனா யாரய்யா தாழ்ந்தவன்?
தாழ்ந்தவர் என்ற சொல்லை முற்போக்காளர்கள் பாவிப்பதில்லை. தாழ்த்தப்பட்டோர் என்பது உயர் சாதியினரல் வலிந்து தாழ்நிலையில் வைக்கப்பட்டோரைக் குறிக்கிறது. (தலித் என்பது அடிநிலையில் உள்ளவன் என்பதைக் குறிக்கிறது). சமூகத்தில் சாதிய ஒடுக்கல் உள்ள வரை இச் சொற்கள் வழக்கில் இருக்கும்.
ஆகா உண்மைதான்.பிராமணர்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் தம்மை ஆழ்கிறார்கள் எனும் மனக்குற நேபாளீகளீடம் இருப்பதை எனது நண்பராய் இருக்கும் நேபாளீகள் என்னிட்ம் சொன்னார்கள்.
பாரதியை அடிப்படையாக வைத்துச் சாதிய, தேசிய, வர்க்க முராண்பாடுகளை எவ்வளவு தூரம் செவ்வையாக ஆராய இயலும் என்று எஙக்குத் தெரியாது.
அவரது காலத்தில் வைதுநோக்கினால், அவர் பல முரண்பட்ட சிந்தனைகளைக் கொண்ட முற்போக்காளர் எனலாமே ஒழிய, அவரைத் தொடக்கப் புள்ளியகக் கொண்டு மார்க்சிச லெனின்சத்துக்கு மாற்றுத் தேடுவதில் எனக்குநம்பிக்கை இல்லை.
எனினும் நீங்கள் எவ்வாறு இந்த இரட்டைத் தேசியத்தைக் கையாளுகிறீர் கள் என்பதைப் பர்ர்த்த பின்பு கருத்துரைப்பது தகும்.
மார்க்சிய – லெனினியத்தை கருவறுப்பதற்கும்,தாழ்த்த பட்ட மக்களை அதில் சேர விடாமல் தடுப்பதற்கும் சில குள்ள நரிகள் தலித்தியம் பேசி ,அதை ஒரு தத்துவமாக்கினார்கள். இன்று அது சீரழிந்த அரசியலில் சங்கமித்தும் விட்டது.
இப்போது “இரட்டை தேசியம் “,“சாதியத் தேசியம் “,”பாரதியம்” என்று புறப்பட்டு விட்டார்கள்.இவை எல்லாம் கட்சி கலைப்பு வாதமாகும். இவற்றை கிளப்பி விட்டு கட்சிகளிடையே குழப்பங்களை விளைவிப்பதாகும்.கட்சிக்கு தலையிடியை கொடுப்பதாகும் .சிந்தனையை திசை திருப்புவதாகும்.
மக்களின் சிந்தனை செய்யும் ஆற்றலை ,நேரத்தை வீணடிப்பதாகும்.
அப்படி உண்மையான கட்சி நேசம் உண்டென்றால் ஆசிரியர் இந்த விவாதத்தை சிவா கேட்ட நியாயமான கேள்விக்கு பதிலை கூறி முடித்து வைக்க வேண்டும்.
வித வித மான பொய்களை கூறி
உருட்டும் உலகமடா – தம்பி
திருந்தி நடந்து கொள்ளடா – இதயம்
திருந்த மருந்து சொல்லடா – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
யோகன், நீங்கள் எப்போதுமே நான் கூறாத கருத்தை எல்லாம் கூறியதாகக் கற்பிதம் செய்து புலம்புகின்றீர். நடிகமணி அண்ணே! எனது எழுத்துக்களில் தலித்தியம் தொடர்பாகவோ அல்லது அதன் விளைவான அடையாள அரசியல் தொடர்பாகவோ
விமர்சனங்களை முன்வைத்து வந்துள்ளேன். நீங்கள்தான் புதியகண்டுபிடிப்பு ஒன்றினைக் கண்டுபிடித்து நான் தலித்தியத்தினை ஆதரிப்பதாகவும் கட்சியைப் பிளவுபடுத்துவதாகவும் ஏதேதோ பாட்டெல்லாம் பாடுகின்றீர்கள்.
ஒருவர் சந்தாசெலுத்திக் கட்சி அங்கத்தவர் ஆகிவிட்டார் என்பதற்காக மட்டும் அவர் மார்சியவாதியாகிவிடமுடியாது. கட்சிக்கு வெளியில் இருக்கின்ற எல்லோரும் பிற்போக்குவாதிகளும் அல்ல. உங்கள் பார்வையில் உங்கள் கட்சியில் அங்கத்துவம் வைகிக்காத மக்கள் எல்லோரையும் பிழையானவர் என்பது உங்கள் கணிப்பா?
இனியொரு வாசகர்களே! யோகன் என்ற புனைபெயரில் உள்ள இவரின் கருத்துக்களை வாசிக்கின்றபோது தயவுசெய்து கட்டுரையாளரின் கட்டுரையையும் ஒருமுறை படிப்பது நன்று. இவர் அவர்களின் கருத்தைத் திரித்துவிடுகின்ற பணியையே செய்துவருகின்றார்.
தலித்தியம் தொடர்பாக நீங்கள் சொன்னதாக நான் எங்கே சொன்னேன்? மற்றவரின் கருத்துக்களை வாசிக்கின்றபோது நுனி புல் மேய வேண்டாம் .
உங்களை எனக்கு யார் என்றே தெரியாது .இங்கு தான் முதன் முதலாக பார்க்கிறேன் .என்னை நன்றாக தெரிந்தவர் போல பேசுகிறீர்கள்.எனது பெயர் பற்றி எல்லாம் வாசகர்களுக்கு எச்சரிக்கை விடுகிரீகள்.இந்த பொன்னான நேரத்தை எல்லாம் சிவா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல பயன் படுத்தலாம்.கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொல்லும் திராணி இல்லை என்பதே இதன் பொருளாகும்.அது தான் வீணான கோபம் கொப்பளிக்கிறது.
நாங்கள் தானே கேட்கிறோம் ,உங்கள் பொன்னான கண்டுபிடிப்பான “பாரதீயம் “,இரட்டை தேசியம் ” என்ன என்று விளக்கும் படி .
மற்றும் ரவீந்திரனின் “சாதீய தேசியம் “என்னவென்று அவரையும் கேட்டுள்ளோம்.
அதற்க்கு முன்னோட்டமாக சிவா சொல்லி இருக்கிறார் ..அது தான் .மதத் தேசியம், பிரதேசத் தேசியம், ஊர்த் தேசியம் என்றெல்லாம் போய்க்கொண்டெ இருக்கலாம்.என்று
நீங்கள் தொகையாக உலறுகிரீகள்…”பாரதியின் அதியுன்னதமான பார்வை” என்று புளுகுகிரீர்கள் .அவர் தாழ்த்த பட்ட மக்கள் எல்லாம் பூணூல் அணிந்தால்.சாதி ஒழிந்துவிடும் என்று கருதியவர்.எம்.ஜி ஆர் போலே !படத்தில் தான் ஒரு பணக்காரர்ப் பெண்ணை மணம் முடித்து வறுமையை ஒழிப்பது போலே.
சிவாவுக்கான பதிலில் காங்கிரசு சுதந்திரத்திற்காக போராடியது என்கிறீகள் .உங்களிடம் சில கேள்விகள் :.காங்கிரசு யாரால் உருவாக்கப்படாது ?காங்கிரசு இந்திய சுதந்திரத்திற்ற்கு போராடியதா ? இல்லை காட்டி கொடுத்ததா? வெள்ளையனே வெளியேறு என்ற கொள்கை ஏன் சத்தமின்றி மௌநிக்கப்பட்டது ?என்னைப் போல்
நீங்கள் ஒரு கட்சியில் அங்கம் வகிக்காதவர் ஆனாலும் மார்க்சிய – லெனினிய புரட்சியை விரும்பும் ஒருவர் என்ற ரீதியில் உங்களிடம் இன்னொரு முக்கியமான் கேள்வி.நீங்கள் தலையில் வைத்து கொண்டாடும் பாரதி தோழா லெனினை வசை பாடினானே ஏன் என்று விளக்க முடியுமா ? நல்ல எழுத்தாளனாக வேண்டும் என்றால் தேடல் தேவை.
பாரதியை தூக்கி பிடித்த ஜெயகாந்தன் படுகிற கேவலம் தெரியாதா உங்களுக்கு ? பாரதி ஒரு சாம்பாரு கவிஞன் . சிவா சரியாக மதிப்பிட்டு சொல்லியுள்ளார்.
“தனக்கெடா காரியம் தன பிடரிக்கு தான் சேதம் ” .
பல்வேறு பின்னூட்டங்களை தொடர்ந்து விவாதிக்கப்பட்டு இருக்கிறது. இதில் சிலவற்றை எனது கருத்தாக கூறுவது:
சிலரது கருத்துக்கள் (யோகன், சிவா) மார்க்சியத்தை உயர்த்த வேண்டும் என்ற விருப்பம் உள்ளது என்பதை அறியமுடிகிறது. ஆனால் லெனின் மதிவானன் அவர்கள் முதலாளித்துவ கருத்தோடு தன்னை நிறுத்திக் கொள்கிறார். இதில் அவர் முதலில் சொன்ன முதன்மை முரண்பாடு மாறுவதை பற்றியது. அது சரியாக மற்றவர்கள் சொன்னதை வழிமொழிந்திருக்கிறார். ஆனால் அதற்கும் இரட்டை தேசியத்திற்கும் என்ன இணைப்பு என்பதை கூறமறுக்கிறார்.
பாரதி அக்டோபர் புரட்சியின் மென்ஷ்விக்குகளுடன் உடன் சேர்ந்து முதலாளித்துவப் புரட்சியை பாராட்டுகிறார். பிறகு லெனின் தலைமையில் போல்ஷ்விக்குகள் மட்டும் நடந்த சோசலிசப் புரட்சியை வசைபாடுகிறார். இதில் சரியாக காணவேண்டும். முதலாளித்துவப் புரட்சியை வரவேற்கும் அளவுக்கு ஜனநாயகவாதி. ஆனால் முழுமுற்றான கம்யூனிஸ்டுகளைப் போல் அனைத்திலும் ஜனநாயகத்தன்மை வேறு மொழியில் சொல்வதென்றால் கம்யூனிச உள்ளடக்கம் கொண்டவரில்லை என்பதில் தெளிவு வேண்டும். ஏகாதிபத்திய எதிர்ப்பு அவரிடம் இருந்தது. அந்தளவில் இங்கு ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கு சாதி மதம் இனம் கடந்து ஒன்றிணைய வேண்டும், ஒரு சுதந்திரத்தை வென்றெடுக்க வேண்டும் என்பதில் அவா கொண்டிருந்தார். அதற்கு கம்யூனிஸ்டாக இருக்கவேண்டும் என்பதில்லை. வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், திப்பு சுல்தான், ஜான்சி ராணி, என்று எத்தனையோ பேர் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடினார்கள். அவரவர்கள் அளவில் ஜனநாயகத்திற்கு சில வேளைகளில் குரல் கொடுத்தும் இருக்கலாம், இருக்கிறார்கள்.
இதே போல்தான் காங்கிரஸ் கட்சி முதலில் எதற்காக அது உருவாக்கப்பட்டது. இங்கிருந்த வளர்ந்துகொண்டிருந்த இந்திய தரகு முதலாளிகளுக்காக உருவாக்கப்பட்டது. ஆனால் புறநிலையில் இந்திய மக்களின் போராட்டம் முழு சுதந்திரத்தினை கொண்டுவந்திடும் என்ற அளவில் ஏற்கெனவே தரகு முதலாளிகளின் நலனுக்காக போராடிக்கொண்டிருந்த காங்கிரசை வளர்க்க ஏகாதிபத்தியம் சம்மதித்தது. அதை ஒரு மாற்றாக வளரவிட்டது. சரியாக சொல்லவேண்டுமானால் ஜப்பான் மாவோவின் செஞ்சீனத்திற்கு மாற்றாக சியாங்கேசேக்கை வளரவிடவில்லையா. அதுவே பொம்மை ஆட்சியினை உருவாக்க ஜப்பான் முயலும் போது தனது தரகு தன்மையை காப்பாற்றிக்கொள்ள செஞ்சீனாவுடன் இணைய ஒத்துகொள்ளவில்லையா. மக்களால் நிர்பந்திக்கப்படவில்லையா.
எப்போதுமே சமரசத்திற்கும் புரட்சிகரமானதிற்குமான போராட்டம் இருக்கும். சில நேரங்க்ளில் பின்னால் நிற்கும், சில நேரங்களில் முன்னால் நிற்கும். ஆனால் நாம் எந்த சகாப்தத்தில் இருக்கிறோம் என்பதை தெரிந்துகொண்டால் அதை எப்படி கையாளமுடியும் என்பதையும் தெரிந்து கொள்ளமுடியும். பிரிட்டிசாரை விரட்டும் வரை, தற்போது ஈராக்கிலிருந்து, ஆப்கானிலிருந்து அமெரிக்காவை விரட்டும் வரை, அங்குள்ள தரகு கட்சிகளையோ, அல்லது நிலப்பிரபுக்களையோ, அல்லது மன்னர்களையோ கூட அவர்கள் அமெரிக்காவை எதிர்த்துப்போராடும் வரையில் ஒன்று சேர்வதில்லையா. அதை கையாளாவிட்டால் சக்திகளின் கூட்டுகளை நீங்கள் சரி செய்ய முடியாது. வெல்ல முடியாது.
லெனின் மதிவானனுக்கு வருவோம். அவர் பேசும் இரட்டைத் தேசியம் பற்றியதானது.
//மார்க்சியத்தை இன்றைய யதார்த்த சூழலுக்கு ஏற்றவகையில் புனரமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது//
//எமது பண்பாட்டுச் சூழலில், காலமாற்றத்திற்கும் புதிய பொருளாதார சூழலுக்கும் ஏற்றவகையில் பல புதிய புதிய கோட்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன//
ஆகிய இவரது வார்த்தைகளை கூர்ந்து நோக்கினால்
//இது இப்போது “இரட்டை தேசியம் “,“சாதியத் தேசியம் “,”பாரதியம்” என்று புறப்பட்டு விட்டார்கள்.இவை எல்லாம் கட்சி கலைப்பு வாதமாகும். இவற்றை கிளப்பி விட்டு கட்சிகளிடையே குழப்பங்களை விளைவிப்பதாகும்.கட்சிக்கு தலையிடியை கொடுப்பதாகும் .சிந்தனையை திசை திருப்புவதாகும். // என்று யோகன் கூறுவது உண்மையேயாகும். இந்த வகையில் லெனின் மதிவான சொல்லும் இரட்டைத் தேசியம் என்று சொல்வது மார்க்சியத்தை குழி தோண்டி புதைப்பதே ஆகும். இதில் கட்சியில் இருப்பதாலோ அல்லது இல்லாமல் இருப்பதாலோ அதுனுடைய உண்மைதன்மை, இரட்டை தேசியம் என்பது கலைப்புவாதம் என்பதிலிருந்து வேறுபட்டது. அதற்கான உள்நோக்கோடே அதை அவர் பேசுகிறார். அவர் அடிப்படை மார்க்சியத்தை தேசிய வரையரையை மாற்றியமைக்க முயற்சிக்கிறார். அதனால் இன்றைய நிலையில் மார்க்சியம் மாறிவிட்டது அதற்கேற்றார்போல், இந்தியாவிற்கு ஏற்றமாதிரி மார்க்சியத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று பிதற்றுகிறார்.
சம்பவங்களை மதிவானன் சொல்வதாலேயே அது இல்லை என்று பொருளாகிவிடாது. அதை பார்க்கும் ஒவ்வொருபார்வையும், அதை கையாளும் ஒவ்வொருவருடைய வர்க்க தேவையுமே வேறுபடும்.
அதே போல் நேபாளை பற்றிய உங்களது பார்வை அரைகுறையுடனே இருக்கிறது. அங்கு ஒரு பெரிய சமூக மாற்றத்திற்கான போராட்டம் நடந்தது. அது ஒரு கனிசமான அளவு முன்னேறியும் வந்தார்கள். பண்ணை அடிமை ஒழிப்புதான், நிலப்பிரபுத்துவ அழிப்புதான், மன்னரின் ஒழிப்புதான் சாதியை ஒழிக்கும், இன விடுதலையை உத்திரவாதப் படுத்தும் என்பதை புரிந்து செயல்பட்டார்கள். ஆனால் செப்டம்பர் 11, 2001 ஆம் ஆண்டு நிகழ்வுக்கிற்குப் பிறகு அவர்கள் அரசியல் ரீதியில் சரணடைந்தார்கள். தரகுமுதலாளிகளின் அரசியல் நிலைக்கு தாழ்ந்து போனார்கள். அதுவரையில் அவர்கள் அனுகியவை மாறலாயின. தற்போது சாதி ஒழிப்பிற்கு அடிப்படையான நிலச்சீர்திருத்த கோரிக்கையை கைவிட்டு, அதை திருப்பி ஒப்படைக்க தயாராயினர், தனது படைகளை கலைக்க ஒப்புக்கொண்டனர். இனி ஒரு கட்சி ஆட்சிமுறை இல்லை பாராளுமன்ற வழியில் பலகட்சி ஆட்சிமுறைதான் வழி என்று மாறிக்கொண்டனர். ஏகாதிபத்தியத்தைப் பற்றிய வரையரையை மறுவார்ப்பு செய்தார்கள், இந்திய சீன விஸ்தரிப்புவாதிகளின் மீதான சமரச அனுகுமுறையை மேற்கொண்டார்கள். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிட்டார்கள், அரசு பற்றிய பார்வையை, புரட்சி பற்றிய பார்வையை முதலாளித்துவ அறிவுஜீவிகளின் பார்வையளவுக்கு கொண்டுவந்தார்கள். இவையெல்லாம் அரசியல் ரீதியில் மார்க்சியத்தை விட்டு ஓடி இன்று கலைப்புவாதிகளாக மாறி நிற்கிறார்கள். அவர்கள் 2003க்கு முன் எது மார்க்சியத்திற்கு எதிரானது என்று கூறினார்களோ அதையே அவர்கள் 2004ல் தனது தத்துவமாக மாற்றிக்கொண்டார்கள். சரியாக சொல்லப்போனால் 2001க்கு முன் இருந்த பிரச்சந்தாவிற்கு எதிராக 2004க்குப் பிறகான பிரச்சந்தாவாக மாறிபோனார்கள். இதையே உலகிலுள்ள புரட்சிகர கட்சி என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு கலைப்புவாத கருத்துக்களை அள்ளிகொடுக்கும் மூலகர்த்தாக்களாக மாறிப்போனார்கள்.
பாரதியின் பங்களிப்பை அதனுடைய வரலாற்றுப் பாத்திரத்தை அளவை அந்த அளவுவரையில் புரிந்துகொள்ளவேண்டும். ரவீந்திரன் ஒர் பின்நவீனத்துவ வாதி, அதை தொழும் லெனின் மதிவானனும் அவ்வாறே இருக்க வேண்டும். இரட்டைத் தேசியம் என்பது இந்தியாவைப் பொறுத்தவரையில் தலித் தேசியம், திராவிட தேசியம் என்று race, இனமரபை அடிப்படையாக கொண்டவை. இன்று நாம் போராட அறைகூவல் விடுவது முதலாளித்துவ காலகட்டதினது தேசியம். பாட்டாளிவர்கத்தின் தலையில் விழுந்த இனவிடுதலைக்கான தேசியம். நிச்சயம் தேடல் தேவை. விவாதிப்போம் அதிலிருந்து மீண்டும் கற்போம். ஆனால் எதை விவாதிக்கிறோமோ அந்த அடிப்படையை, மார்க்சிய அடிப்படையை சேர்த்தே விளக்க முயற்சிப்போம். அதில் வேறுபடுவது தெரியாமல் விவாதிப்பது, தேடலேகூட சலிப்புத் தரும்.
மேற்கண்டவற்றில்
இரட்டைத்தேசியம் என்பது இனமரபு தேசியமே! வரலாற்றை பின்னுக்கு இழுத்துச்செல்வதே!
பண்பாட்டு தேசியம் என்பது கலைப்புவாதமே! இன்றும் ஏகாதிபத்தியம் முரண்பாடே பிரதான முரண்பாடாக உள்ளது!
பண்ணை அடிமைத்தனத்தை ஒழிப்பதே சாதி ஒழிப்பிற்கான வழி, இன சமத்துவத்திற்கான வழி!
இன்று நம்மை சுற்றியுள்ள கட்சிகளில் நேபாள கம்யூனிஸ்டு கட்சியின் (மாவோயிஸ்டுகளின்) வழி கலைப்புவாதமே!
பாரதி என்பவர் ஏகாதிபத்திய எதிர்பாளனே, ஜனநாயகவாதியே, சோசலிசவாதியல்ல!
தோழர் பாரதி பல விடயங்களை சரியாக சுட்டிகாட்டி உள்ளார்.
சு.பாரதிக்கு மட்டும் ஒரு சிறிய சலுகையா ?அவர் ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பாளன் அல்ல என்று அவரே கைப்பட ஆங்கில அரசுக்கு எழுதிய கடிதம் கிழே உள்ளது .வாசகர்கள் தீமாநிக்கட்டும்
————-
1918 டிசம்பர் .10 ம திகதி .கடலூர் சிறையில் இருந்து சென்னை மாகாண பிரிட்டிஷ் கவர்னருக்கு பாரதி எழுதிய மன்னிப்பு கடிதம்.
மேதகு .
தங்களுக்கு நான் மீண்டும் உறுதி கொண்டுக்கிறேன். நான் எல்லாவிதமான அரசியல் ஈடுபாடுகளையும் துறந்து விட்டேன்.நான் எப்போதும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு விசுவாசமாகவும் ,சட்டத்திற்கு உட்ப்பட்டு வாழ்பவனாகவும்
என்றென்றும் இருப்பேன் .
சுப்ரமணிய பாரதி
உள்ளப்பகையே பகை ,புறப்பகை பகையன்றூ ,தானே தன் க்குப் பகைவன் என்றூம். முக்தி என்றோரு நிலை சமைத்தாய் அங் கு முழுதினையும் உணரும் உணர்வமைத்தாய்,பக்தி என்றோரு நிலைவகுத்தாய் எங்கள் பிரம்மா என்ற பாரதியையும் குற்றவாளீயாக்கினோம் பாரத மக்களே,
பாரதியை அவரது சமூகப் பின்னணியிலும் காலச் சூழலிலும் வைத்துநோக்கத் தடையாக இருப்பது ”பாரதி வழிபாடு’.
பாரதியின் பெண் விடுதலைக் கருத்துக்களும் சாதிய எதிர்ப்புக் கருத்துக்களும் . மொழி பற்றிய கருத்துக்களும், தேசிய விடுதலைக் கருத்துக்களுடன் ஒப்பிட்டால், முழுமையற்றவையும் குறைபாடானவயுமே. அதனால் அவை அப்படியே புறமொதுக்கத் தக்கனவல்ல.
ஆனால் அவற்றையே விடுதலைப் பாதை எனப் பரிந்துரைக்கும் போது அவற்றின் மீதான கடுமை பாரதியயும் சாடுகிறது.
ஏனவே பாரதியைப் புனிதராக்கி, தவறுகட்கு அப்பார்பட்ட, எக் காலத்துக்குமான, வழுவற்ற கருத்துக்களையே கூறிய திரிகாலமும் உணர்ந்த ஞானியாக்குவோர் பாரதியை நிந்திப்போரை விட மோசமாக அவரை இழிவு செய்கின்றனர்.
எவருமே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டோரல்ல.
நேபாள மாவோயிஸ்ட்டுக்கள் தொடர்பாக சில கருத்துக்கள்.
————————————————————————————————–
புலிகளின் அழிவிற்கு காரணம் அவர்கள் 11 .செப் .2001 இக்கு பின்னான நிலைமைகளை புரிந்து கொள்ள தவறியதே முக்கிய காரணம் என பலராலும் சுட்டி காட்டப்பட்டது.முதலாளித்துவ சார்ந்த நிலைப்பாடு கொண்ட புலிகளையே அழிப்பதற்கு தங்கள் அளவில் முரண்பாடுகள் கொண்ட நாடுகள் பலவும் ஒன்றாக கைகோர்த்து இலங்கை அரசுக்கு உதவின என்பதை நாம் மறந்து விட கூடாது.
நேபாள மக்கள் மத்தியில் இன்று உள்ள கேள்வி என்னவென்றால் ஆயுத போராட்டத்தை தொடர்வதா இல்லை வேறு விதமான முறையில் போராட்டத்தை தொடர்வதா ? ஆயுத போராட்டம் ஒன்றை நேபாளத்தின் வடக்கே உள்ள சீனாவோ ,தெற்க்கே உள்ள இந்தியாவோ விரும்பவில்லை.இந்தியா நயவஞ்சகமான சதிகாளில் ஈடுபடுவது உலகறிந்த ரகசியம்.சீனாவுக்கும் அது உவப்பில்லை.நேபாள மாவோயிஸ்டுகள் மத்தியில் ஆயுத பாதையா ?மாற்று பாதையா ? கேள்வி எழுப்படுள்ளது.சிலர் சி .பி.கஜிறேல் ,மோகன் கிரண் போன்ற தலைவர்கள் ஆயுத போராட்டத்தை ஆதரிக்கிறார்கள் .எங்கே மீண்டும் ஒரு தாக்குதல் நடக்கும் என்று அதை வைத்து மாவோயிஸ்டுக்களை ஒழித்து கட்ட அமெரிக்காவும் , இந்தியாவும் ,உள்ளூரில் அதன் எடுபிடிகளும் தரணம் பார்த்து காத்திருக்கிறார்கள்.
ஆயுத போராட்டம் ஒன்றை மீண்டும் நடாத்தி மாவோயிச இயக்கம் முழுவதும் அழிவது நல்லதா?அல்லது மக்கள் திரளை இந்த சூழ் நிலைகளை பயன் படுத்தி மேலும் அணி திட்டுவது நல்லதா ? என்பதை வெளியில் இருக்கும் நாம் நம்மை முதலில் கேட்டு பார்த்தல் நலம் என நினைக்கிறேன்.
மாவோயிசுக்கள் ஆயுதங்களை ஒப்படைக்கவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.நேபாள கம்யூனிஸ்டு கட்சியின் (மாவோயிஸ்டுகளின்) நமது பிரச்சனையாய் பார்ப்போம்.பாரதிக்கு காட்டும் வீணான சலுகையை / கருணையை அவர்களுக்கு காட்டுவோம்.
யானையின் காதுக்குள் புகுந்த வண்டு .
————————————————————-
நேபாள கம்யூனிஸ்டு கட்சியின் (மாவோயிஸ்டுகளின்) பிரச்னையை நமது
———————
பிரச்சனையாய் பார்ப்போம்.பாரதிக்கு காட்டும் வீணான சலுகையை / கருணையை அவர்களுக்கு காட்டுவோம்.
நேரடியாக மோதினால் நேபாள மாவோயிஸ்ட்டுக்களின் போராட்டத்தை ஒடுக்க துணிந்த இந்திய அரசு அவர்களின் இன்றைய போக்கால் அவர்களை எப்படி கையாள்வது என்று தெரியாமல் கை பிசைந்து நிற்கிறது. .
யானையின் (இந்திய ) காதுக்குள் புகுந்த வண்டு (மாவோயிஸ்டுக்கள் ) போல இந்தியா அங்கும் இங்கும் ஓடுகிறது.
நேரடியாக போராட்டம் தொடர்ந்திருந்தால் இந்தியாவுக்கு இலகுவாக இருந்திருக்கும்.
பாரதி பற்றிய சிவாவின் நிதானமான கருத்துக்கள் மனம் கொள்ள தக்கவை .
பாரதியார் பற்றிய சில விசயங்கள். திலகர், வ.உ.சி. சுப்பிரமணிய சிவா போன்றவர்களின் வழியை வழிமொழிந்தவர் பாரதி. இவர்கள் சிறைக்கு சென்றபிறகு காந்திய வழியில் வந்தவர்கள் மேலெழுந்தபோதே பாரதி விரக்திக்கு ஆளானார் என்பது உண்டு. ஆனால் அவர் அப்படி கடிதம் எழுதியபோதும், தனது வழிதான் சரியான வழி என்று பெரியாரைப் போலோ, அம்பேத்காரைப் போலோ ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பை கைவிட்டுவிட்டு சமூக இயக்கம்தான் முன்மையானது என்று சப்பைக்கட்டுகள் சொலிக்கொள்ளியது இல்லை. பாரதி விமர்சனமே செய்யக்கூடாதவர் அல்ல. ஆனால் ஆக்கப்பூர்வமானதாக இருக்கவேண்டும். கடிதத்திற்கு முன் அவர்நிலைபாடு தவறாகிவிடாது.
//புலிகளின் அழிவிற்கு காரணம் அவர்கள் 11 .செப் .2001 இக்கு பின்னான நிலைமைகளை புரிந்து கொள்ள தவறியதே முக்கிய காரணம் என பலராலும் சுட்டி காட்டப்பட்டது.//
இவர்கள் சரியாக புரிந்துகொண்டிருந்தார்கள். அதனால் பேச்சுவார்த்தை என்று போனார்கள். ஆனால் அந்த நேரத்தில் பாசிசத்தை எதிர்த்து ஈழ மக்கள், சிங்கள மக்கள் மத்தியில் அரசியல் கிளர்ச்சிகள் அரசியல் அணிசேர்க்கைகள், அரசியல் வழியினை மேற்கொள்ளவில்லை என்று சொல்லாம். ஆனால் தனது கோரிக்கையை விட்டுவிட்டோ, ஆயுதத்தை கீழே வைத்துவிட்டு, தளங்களை கலைத்துவிட்டோ, போகவில்லை. இது ஒரு பதுங்கல்தான், இதை புரிந்துதான் செய்தார்கள். ஆனால் 2005க்குப் பிறகான உலக நிலமைகளை அதாவது ஏகாதிபத்தியத்துக்குள் பகைமுரணை புரிந்துகொள்ளவில்லை. அமெரிக்காவை எதிர்த்து எதுவும் செய்யமுடியாது என்று நினைத்திருந்தார்கள். ஆனால் இலங்கை பாசிச அரசோ, அமெரிக்காவிற்கு மாற்றாக ரஷ்யாவையும், சீனாவையும் நாடினார்கள். அதைவைத்து அதன் ஆதரவு பெற்று ஒடுக்க நினைத்தார்கள். இவர்களுக்கும் இலங்கையின் புதிய மார்கெட் தேவைப் பட்டது, இராணுவ கூட்டு தெற்காசியாவில் தேவைப்பட்டது. இதை தெரிந்திருந்தார்கள். ஆனால் கையாளத் தெரியவில்லை. ராணுவ ரீதியாக கிளிநொச்சியில் பின்வாங்குவதாக அறிவித்தார்கள். ஆனால் செயல்படுத்தவில்லை. ஆனால் எந்த காலத்திலும் ஆயுதங்களை கீழே போட மறுத்தே வந்தார்கள். அதை பயன்படுத்தாமல் இருக்கலாம், ஆனால் கீழே போடுதல் என்பதே பணிந்துபோதல்தான், சமரசம்தான். இறுதியாக தன் தோல்வி தெரியும்போது அமெரிகாவிடம் அடிபணிந்தார்கள். ராஜபட்சே அரசு சீனாவையும், ரஷ்யாவையும், இந்தியாவையும் (அமெரிக்கா இந்தியாவை தன்னை பேட்டை ரவுடியாக அங்கீகரிக்கவில்லை, சீனாவைத்தான் அங்கீகரிக்கிறது, பாகிஸ்தானைதான் அங்கீகரிக்கிறது என்ற முரண் உண்டு) வைத்து இறுதி போரை நடத்தி முடித்தது. அமெரிக்காவிற்கும், இரஷ்யாவிற்கும், ஜெரிமனிக்கும், பிரான்சிற்கும் இருக்கும் பகைமுரண்பாடுகளை கையாளத் தெரியவில்லை. அதற்கான அறிவும் இல்லை. இதன் உள் விவகாரங்களில் இன்னும் நிறைய விவாதிக்க வேண்டியுள்ளது. ஏன் என்றால் அமெரிகாவிடம் பணிந்துபோக விடுதலைப்புலிகளின் சில தலைவர்கள் நிர்பந்தித்தப் போது, அமெரிக்கா ஒன்று அனைத்து ஏகாதிபத்தியத்தின் தலைவன் ஆகையால் அவர்களிடம் பேரம் பேசலாம் என்று கூறும்போதே அதை பிரபாகரன் எதிர்த்துவந்தார். ஆனால் அரசியல் ரீதியில் தன் நிலை சரியானது என்பதை நிலைநாட்டும் அளவுக்கு (மார்க்சிய நிலையில் புரிந்துகொண்டிருந்தால்) அரசியல் போதாமையாக இருந்தது. ஆனால் தன் கோரிக்கையை எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்கவில்லை.
இதற்கு நேரெதிராக நேபாள மாவோயிஸ்ட்டு நிலை. இவர்கள் அதே நிலை ஏற்பட்ட போது இனி தனியொரு நாட்டில் புரட்சி சாத்தியம் இல்லை (டிராட்ஸ்கி நிலை) என்று முடிவுக்கு வந்தார்கள். காரணம் எல்லா ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையிலும் பொருளாதாரரீதியாக அரசியல் ரீதியாக நட்பு ஏற்பட்டுவிட்டது. அவர்கள் அமெரிகாவை தன் தலைமையாக ஏற்றுக்கொண்டார்கள் இனி அவர்கள் போரிலாமல் மற்ற நாடுகளை கூட்டு சேர்ந்து போர்செய்து அடிமைப்படுத்தி பங்கிட்டுக்கொள்வார்கள் (காவுத்ஸ்கி நிலை) ஆகிய கருத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அதனால் இனி ஆயுதப் புரட்சி சாத்தியம் இல்லை என்று அறிவித்தார்கள். இந்தியா சீனாவெல்லாம் ஏகாதிபத்தியத்தின் பேட்டை ரவுடிகள் அவ்வளவே.
இதற்காக இவர்கள் வந்தடைந்த முடிவு என்ன தெரியுமா. இனி அரசியல் கிளர்சிதான் ஆயுதப் போராட்டம் எப்பவுமே சாத்தியமில்லை (2004க்குப் பிறகு அவர்கள் ஆயுதப் போராட்டம் எதிர்காலத்தில் சாத்தியம் என்றளவுக்காவது ஏதாவது பேட்டிகள், அறிக்கைகள், கொள்கைப் பிரகடனங்கள் இருந்தால் காட்டுங்கள் அறிந்துகொள்கிறேன்) என்று முடிவுக்கு வந்தார்கள். அப்படி வந்ததை நம்பவைப்பதற்கு அமெரிக்காவிற்கு தன் உள்ளக்கிடக்கை தெரியப்படுத்துவதற்கு ஆயுதப்போராட்டத்தை கைவிட்டதாக அறிவித்தார்கள், தளங்களை கலைக்க ஒத்துக்கொண்டார்கள், மக்களுக்கு நிலச்சீர்திருத்தத்தின் மூலம் ஒப்படைத்த நிலங்களை திருப்பி ஒப்படைப்பதாக அறிவித்தார்கள். இராணுவத்தை கலைப்பதற்கு இணையாக ஏகாதிபத்தியத்தின் எடுபிடிப் படையுடன் இணைக்க ஒத்துக்கொண்டார்கள். மன்னர் ஒழிப்புதான் பண்ணையடிமை ஒழிப்பு இல்லை என்பதை தன் நடவடிக்கையின் மூலம் நிரூபித்து ஏகாதிபத்தியத்தின் புரட்சி பூதத்தின் மீதான பயத்தினை போக்கினார்கள். இதற்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல் இவர்கள் வந்தடைந்த சமரசப் பாதையை, துரோகப் பாதையை மூடிமறைக்க லெனினியம் 20ஆம் நூற்றாண்டினது, அது 21ஆம் நூற்றாண்டிற்கு பொருந்தாது (ஆதாரம் International Dimensions of Prachanda Path, Maoist Information Bulletin 1)என்று மார்க்சிய லெனினியத்தை குழிதோண்டி புதைத்தார்கள். நாங்கள் சொல்வதுதான் மார்க்சியம் என்றார்கள். நாங்கள் தற்காலிகமாக பதுங்குகிறோ, சாதகாமன சூழ்நிலைவந்தால் மீண்டும் நாங்கள் தொடர்வோம் என்று கூறவில்லை. இதுதான் இனி உலகம் முழுவதும் மார்க்சியம் லெனினியம் என்றார்கள். இதைத்தான் பிரசந்தாபாத் என்றார்கள். இதை வழிமொழியவும், ஆதரிக்கவும், அவர்களின் கொள்கைகளை மிகப்பெரிய அரசியல் யுக்தி என்றும் கூறி சில புரட்சிகர கட்சிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் கூட உலகம் முழுவதும் ஒரு கும்பல் ஆதரித்து புளங்காகிதம் அடைந்தார்கள். அது நேபாளுக்கு பொருந்தும் என்று மற்றவர்கள் சொல்வது, இல்லை நாங்கள் சொல்வது உலகம் முழுவதற்கும் பொருந்தும் என்றும் நேபாள மாவோயிஸ்டுகள் சொல்வது நடந்துக்கொண்டிருக்கிறது. இதில் கரிசனப்பார்வை காட்டமுடியாது. இதை எந்த ஈவிறக்கம் இல்லாமல் எதிர்த்துப் போராடாமல் சரியானதை நிலைநிறுத்தமுடியாது.
புலிகள் விசயத்தில் ஒன்று மீண்டும் நினைவுப்படுத்துகிறேன். அவர்கள் கம்யூனிஸ்டுகள் கிடையாது. எங்கள் வழிதான் உலகம் முழுவதற்குமான கொள்கைவழி என்று பிரகடனப்படுத்தியது கிடையாது. இறுதியில் கூட நாங்கள் தோல்வி கண்டுவிட்டோம், ஆகையால் தற்காலிகமாக ஆயுதத்தை மவுனிக்கிறோம் என்று தன் தோல்வியாகத்தான் அறிவித்தார்கள். நான் ஏற்கெனவே சுட்டிக்காட்டியது போல் தோல்வியால் அறிவித்து சரண்டராவது வேறு; அதையே உலகத்தின் உன்னத வழி என்று அதற்கு மார்க்சிய முலம் பூசி அந்த கடைசரக்கை உலக முழுக்கும் விற்பது என்பது வேறு. புலிகள் தோல்விமீது கருணை வரலாம். அதிலிருந்து எப்படி தோல்வியை கூட வரமால போராடுவது என்ற படிப்பினையைப் பெறலாம். ஆனால் நேபாள மாவோயிஸ்ட்டுகள் விசயத்தில் எப்படி கருணை வரும், நாங்கள் செய்வதுதான் உலகத்தின் மிகச்சிறந்த இராஜதந்திரம், மார்க்சியம் என்று துரோகத்தைத்தான் கற்றுக்கொள்ளமுடியும்.
தற்காலிகமாக ஆயுதப்போராட்டத்தை கைவிட்டு பின்வாங்குவதோ, இல்லை தளங்களை கைவிட்டு பதுங்குவதோ தவறில்லை. இதை நீண்டபயனத்தின் போது மாவோ செய்திருக்கிறார். 1905ல் ரஷ்யப் புரட்சியின் தோல்வியில் லெனின் செய்திருக்கிறார். அதை தற்காலிகப் பின்னடைவாக, ஒரு தோல்வியாக அறிவித்து வெற்றிக்காக எப்படி தவறுகளை திருத்திக்கொண்டு போராடவேண்டும் என்று கற்றுக்கொடுத்தார்கள். ஏன் விடுதலைப் புலிகளே கூட கடந்தக் காலங்களில் தளங்களை விட்டு வேறு இடத்திற்கு காட்டிற்கோ இல்லை வேறு சாதகமான இடத்திற்கோ சென்று பதுங்கி மீண்டும் சாதகமான சூழ்நிலை வந்தபோது வென்றிருக்கிறார்கள். ஆனால் சாபக்கேடு நேபாள மாவோயிஸ்டுகள் மட்டுமே இதி பின்வாங்கல் என்று கூறாமல் இதுதான் இனி ஒரு மார்க்சிய வழி என்று அறிவிக்கிறார்கள். இது தற்காலிக பின்னடைவு ஒரு சரியான காலத்திற்காக காத்திருக்கோம் என்று கூறவில்லை. மாறாக இதுதான் மார்க்சியம் என்றார்கள். மார்க்ஸ் சொன்னதையே லெனின் சொன்னதையே அவர்கள் பெயராலேயே தூக்கியெறிந்திருக்கிறார்கள். இவர்களிடம் கருணை காட்டாதீர்கள். இவர்கள் அங்குள்ள கட்சி ஊழியர்களை ஏமாற்றுகிறார்கள், மக்களை ஏமாற்றுகிறார்கள். மீண்டும் முறியடித்து வெற்றிப்பெற வேண்டுமானால் தவறை எந்த வித மன சாய்வுக்கும் ஆளாக்காமல் விமர்சனப்படுத்துங்கள், ஒரு வேளை அந்தக் கட்சிக்குள்ளேயே சிலர் இதையெல்லாம் விமர்சனப்படுத்தி வெளிப்படையாக (வெளிப்படையாக என்பதை அழுத்திச் சொல்கிறேன்) வருவாரே என்றால் அவர்மீது கருணை கொள்ளுங்கள். உதவுங்கள். அதற்கு மாறாக இருக்கும் என்றால் வலது திரிபுவாதம், சமரசவாதம், ஏகாதிபத்திய சரணடைவு ஒரு வழியாக மாறும். இது மனித குலத்திற்கு எதிரானது. இந்த கலைப்புவாதத்தை முறியடிக்கவில்லை என்றால் மார்க்சிய லெனினியத்தை எந்தக் காலத்திலும் காக்க முடியாது.
இந்துத்துவத்தின் ,ஜாதியின் பரம எதிரிகளான அம்பேத்காரும் ,பெரியாரும் வாய் சவடால் அடித்த பாரதியும் ஒன்றல்ல.
‘இந்தியாவில் பெரும்பான்மையான பாஷைகள் ஸமஸ்கிருதத்தின் திரிபுகளேயன்றி வேறல்ல. அங்ஙனம் திரிபுகளல்லாததுவும் ஸமஸ்கிருதக் கலப்புக்குப் பிந்தியே மேன்மை பெற்றன.’‘நமது முன்னோர்களும் அவர்களைப் பின்பறி நாமுங் கூடப் புண்ணியி பாஷையாக கொண்டாடி வரும் ஸமஸ்கிருத பாஷை மிகவும் அற்புதமானது. அதை தெய்வபாஷை என்று சொல்வது விளையாட்டன்று. மற்ற ஸாதாரண பாஷைகளையெல்லாம் மனித பாஷையென்று சொல்லுவோமானால், இவை அனைத்திலும் சிறப்புடைய பாஷைக்கு தனிப்பெயர் ஒன்று வேண்டுமல்லவா? அதன் பொருட்டே அதைத் தெய்வபாஷை யென்கிறோம். ” -பாரதி.
இப்படி ஆயிரம் உளறல்களை கொட்டியிருக்கிறார் சு.பாரதி.
……..மாவோயிஸ்டுகள் முன்வைக்கும் கூட்டுத்துவக் குடியரசு என்பது தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமையும், சிறுபான்மை இனத்தவருக்கு சுயாட்சி உரிமையும், எவ்வித அந்நியத் தலையீடுமற்ற சுதந்திரமும் சுயாதிபத்திய உரிமையும் கொண்ட குடியரசாகும். இதனடிப்படையில், ஏற்கெனவே 9 மாவட்டங்களில் இணையான அரசை நடத்திவரும் மாவோயிஸ்டுகள், கடந்த நவம்பர் 25 தொடங்கி டிசம்பர் 18க்குள் 13 சுயாட்சிப் பிரதேசங்களை அடுத்தடுத்து அறிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 16ஆம் தேதியன்று 5000 க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் செங்கொடி ஏந்தி முழக்கமிட்டபடியே வந்து, நாடாளுமன்றக் கட்டடமான தர்பார் அரங்கத்தை முற்றுகையிட்டு காத்மண்டு பள்ளத்தாக்கைத் தனி சுயாட்சிப் பிராந்தியமாக அறிவித்தனர். நேவா சுயாட்சி அரசு என்று அதைக் குறிப்பிட்டு, துப்பாக்கி வேட்டுகள் முழங்க, இந்த அறிவிப்பை மாவோயிஸ்டு கட்சித் தலைவர் தோழர் பிரசந்தா பிரகடனப்படுத்தியுள்ளார். கடந்த டிசம்பர் 20ஆம் தேதியன்று நடந்த மாபெரும் பேரணிக்குப் பின் நடந்த பொதுக்கூட்டத்தில், “”நேபாள காங்கிரசுக் கட்சியுடன் பேசிப் பார்த்தேன்; பலனில்லை. ஆளும் போலி கம்யூனிஸ்டு கட்சியான ஐக்கிய நேபாளப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்டுலெனினிஸ்டு)உடன் பேசிப் பார்த்தேன்; பலனில்லை. இனி அவர்களின் எஜமானர்களான டெல்லியுடன் பேசலாம் என்று கருதுகிறேன்” என்று பெருத்த ஆரவாரத்துக்கிடையே, இந்திய மேலாதிக்கவாதிகளை அம்பலப்படுத்திக் கிண்டலாகக் குறிப்பிட்டார், தோழர் பிரசந்தா. ஏற்கெனவே மூன்று கட்டங்களாக நடந்த போராட்டம், வருமாண்டு ஜனவரி 24 முதலாக நாடு தழுவிய காலவரையற்ற பொது வேலைநிறுத்தப் போராட்டமாகத் தொடரும் என்று மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளனர்.
ரஷ்யாவில் 1905 ஆம் ஆண்டில் நடந்த புரட்சியை ஒத்த நிலைமைதான் இன்று நேபாளத்தில் நிலவுகிறது. நேபாள மக்கள் தற்போதைய அரசின் அதிகாரிகளைப் பொருட்படுத்தவில்லை; சட்டத்தைப் பொருட்படுத்தவில்லை; சட்டங்களையும் அதிகாரத்தையும் மக்கள் போராட்டம் மீறுகிறது. சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படாத செயல்கள் மூலம் புதியதோர் ஏற்பாட்டை, கண்ணெதிரே காணும் உண்மையாக உருவாக்குகிறது. புதிய புரட்சிகர அதிகாரத்தின் மூலம் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ளும் ஏற்பாட்டை செய்துகொள்ளுமாறு, அது மக்களின் முன்முயற்சியைக் கட்டவிழ்த்து விடுகிறது. ரஷ்யாவில் எவ்வாறு தொழிலாளர் விவசாயிகளின் சோவியத்துகள் உருவாகியதோ, அதைப்போல மக்கள்திரள் அரசியல் வேலைநிறுத்தங்கள் மூலம், புதிய மக்கள் சோவியத்துகளைக் கட்டியமைக்கும் திசையில் நேபாளம் முன்னேறுகிறது.
இந்தியஅமெரிக்கத் தலையீட்டையும் மேலாதிக்கத்தையும் வீழ்த்த, நேபாள மக்களையும் உலகெங்குமுள்ள புரட்சிகரஜனநாயக சக்திகளை மட்டுமே மாவோயிஸ்டுகள் நம்புகிறார்கள். ஆயுதமேந்திய சாகசச் செயல்கள் மூலமோ அல்லது சந்தர்ப்பவாத பேரங்கள் மூலமோ இதைச் சாதிக்க முடியாது என்பதையும் அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். விடுதலைப் புலிகளைப் போல, இந்திய ஓட்டுக்கட்சிகளிடம் உறவு கொண்டு, இந்திய அரசை நைச்சியமாகத் தமக்கு ஆதரவாக நிற்குமாறு அவர்கள் பேரங்களை நடத்திக் கொண்டிருக்கவில்லை. அல்லது காங்கிரசு ஆட்சிக்குப் பதிலாக, பா.ஜ.க.வும் ஜெயலலிதாவும் ஆட்சிக்கு வந்தால் தமக்குச் சாதகமாக அமையும் என்று கருதவுமில்லை.
நாடு தழுவிய மக்கள்திரள் அரசியல் போராட்டங்கள் எனும் செயல்தந்திர உத்தியின் வழியாக, மக்களை அரசியல்படுத்துவதன் மூலம், அவர்களின் முன்முயற்சியைக் கட்டவிழ்த்துவிட்டு, மக்கள் தமது செõந்த அரசைக் கீழிருந்து கட்டியமைக்கவும் பாதுகாக்கவும் அவர்கள் போராடி வருகிறார்கள். மேலிருந்து அதிகாரத்தைச் செலுத்திப் புரட்சியைத் தொடருவதற்கான வாய்ப்புகள் கிடைத்தபோது அதைப் பயன்படுத்திக் கொண்ட மாவோயிஸ்டுகள், இப்போது அந்த வாய்ப்பு பறிக்கப்பட்ட நிலையில், கீழிருந்து மக்கள்திரள் போராட்டங்கள் மூலம் புரட்சியைத் தொடர்கிறார்கள்…- நன்றி :புதிய ஜனநாயகம்
//இந்திய ஓட்டுக்கட்சிகளிடம் உறவு கொண்டு, இந்திய அரசை நைச்சியமாகத் தமக்கு ஆதரவாக நிற்குமாறு அவர்கள் பேரங்களை நடத்திக் கொண்டிருக்கவில்லை. அல்லது காங்கிரசு ஆட்சிக்குப் பதிலாக, பா.ஜ.க.வும் ஜெயலலிதாவும் ஆட்சிக்கு வந்தால் தமக்குச் சாதகமாக அமையும் என்று கருதவுமில்லை.//
நேபாள் மாவோயிஸ்ட்டு பிரதிநிதிகள் இந்தியா வந்தபோது பி.ஜே.பி. உட்பட அனைத்து ஓட்டுக் கட்சிகளையும், ஆளும் வர்க்க கட்சிகளையும் சந்தித்துவிட்டுப் போனது உங்களுக்கு தெரியாதா. சீனாவில் அந்த தரகுமுதலாளித்துவ அரசை சந்தித்துவிட்டு வந்தார் அது தெரியாதா. என்னுடைய பதில் அதுவல்ல. உள்நாட்டில் எதை விட்டுக்கொடுத்து எதை விடாப்பிடியாக பற்றி போரடவேண்டும் என்பதே. இதில் நேசச் சக்திகளை மதிப்பிடுவதில் புலிகள் தவறிழைக்கலாம். ஆனால் தனது கொள்கையில் எந்தவித சமரசத்தையும் மேற்கொள்ளவில்லை. தனி ஈழம் என்பதை எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்கவில்லை. இடைக்கால அரசாங்கம், பேச்சுவாரத்தையில் போலி ஜனநாயக வாதிகளின் முகத்திரையினை கிழிக்க மிகச் சரியாக பிரிந்துபோவதுடன் கூடிய தேசிய சுயநிர்ண்ய உரிமை வைத்தும் பேசி இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் தேசிய உரிமையை ஒத்துக்கொள்ளாத எந்த உரிமையையும் விட்டுக்கொடுக்கவில்லை.
நேபாளைப் பற்றி சிலவற்றை மீண்டும் கற்கிறேன். சில விசயங்களை தெளிவுப்படுத்தும் அளவுக்கு கற்று விட்டு விளக்கம் கொடுக்கிறேன். பொறுங்கள்.
பாரதியையும் அம்பேத்கரை அல்லது பெரியாரையும் ஒப்பிடுவது பொருத்தமற்றது. அவர்கள் பிரதான முறண்பாடாகக் கண்டவை வெவ்வேறு விடயங்கள்.
பாரதியின் சிந்தனை அவரது பார்ப்பன மரபு சார்ந்த் சிந்தனையிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டு வருவதை நாம் அவரது படைப்புக்களிலிருந்து காணலாம். அவ் விடுபாடு பூரணமயிருந்திருக்க வேண்டியதில்லை அதற்கான சமுகச் சூழல் பாரதிக்கு வாய்த்ததாகவும் நாம் கொள்ள இயலாது. பாரதியை முற்போக்கான ஒரு தேசியச் சிந்தனையாளர் என்ற அளவிலும் பல சமூக ஒடுக்குமுறைகளைத் துணிந்து எதிர்த்தவர் என்ற அளவிலும் மெச்ச இடமுண்டு.
அவரை ஒரு முழுமையான புரட்சிவாதியாகவோ சிலர் செய்ய முயல்வது போல ஒரு கம்யூனிஸ்ட்டாகவோ காட்ட முனைவது அபத்தம். தமிழில் நவீனத்துவத்தைப் புகுத்தியோரில் அவருக்கு முக்கியமான இடமுண்டு. அதைக் கூட நாம் ஒரு விருத்திப் போக்கின் வழியாகவே நோக்க வேண்டும்.
இலங்கையில் பாரதியைத் தமிழ்த் தேசியவாதிகள் கணிப்பில் எடுக்காத காலத்தில் அவரது முற்போக்கான பக்கங்களை இடதுசாரிகள் அடையாளங் கண்டு மெச்சினர். அது அடிப்படையில் நிதானமான மதிப்பீடு. அதை மிகைப்படுத்துகிற ஒரு போக்குப் பின்னர் விருத்தி பெற்றுள்ளது. அது நல்லதல்ல.
தமிழக விவாதம் வேறுபட்ட உரிமைகோரல்களின் அடிப்படயில் நடந்தது. பார்ப்பனியத்தின் தொடர்ச்சியான இருப்பும் அங்கு விவாதங்களில் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.
பெரியாரும் அம்பேத்கரும் இந்திய சுதந்திரம் என்பது பிரித்தானிய ஆட்சியின் இடத்தில் பார்ப்பன ஆட்சியைக் கொண்டுவரும் என அஞ்சினர். அதில் நியாயமிருந்தது. அதனால் அவர்கள் எடுத்த முடிவுகள் சரி என்றோ ஏற்கத் தக்கவை என்றோ ஆகி விடா. அதே வேளை அம் முடிவுகளை வைத்து அவர்களைச் சந்தர்ப்பவாதக் கொலனிய ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்துவது மிகத் தவறனது.
கொலனியம், பார்ப்பனியம் என்ற இரண்டு எதிரிகளிடையே ஒன்றைத் தெரிய வேண்டி வந்த சூழ்நிலையை விளங்கிக்கொள்ள வேன்டும். அன்று கம்யூனிஸ்ட்டுக்கள் விடுதலை இயக்கத்துக்குத் தலைமை தாங்கும் நிலை இருந்து பெரியாரும் அம்பேத்கரும் தங்கள் முடிவுகளை எடுத்திருந்தால் விமர்சனங்கட்கு வலுவான நியாயம் இருந்திருக்கும்.
காங்கிரஸ் பார்ப்பனிய ஆதிக்கத்துக்குட்பட்ட கட்சியாக இருந்த்ததை மறுக்க இயலுமா?
பாரதியை மெச்ச வேண்டி அம்பேத்கரையும் பெரியாரையும் தாழ்த்திப் பேசும் தேவை என்ன?
சிவா அவர்கள் பாரதி பற்றிய மதிப்பீடு சரியானதே. ஆனால் அம்பேத்கார் பெரியார் பற்றிய மதிப்பீடு மனச்சாய்வுக்கு ஆளாகும் வண்ணம் உள்ளது. பாரதியை மெச்ச வேண்டி போட்டிக்காக அம்பேத்கார் பெரியாரை தாழ்த்திப் பேச வேண்டியதில்லை என்பது சரிதான். ஆனால அவர்களின் வரலாற்றுப் பாத்திரம் பற்றிய ஒரு பார்வை நிச்சயம் வேண்டும். அவர்களை யார் பின்னாலேயும் போகச் சொல்லவில்லை. ஒரு சுய சிந்தனை அடிப்படையில் கூட ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதும், இன்னொரு அம்சமாக இருக்கக்கூடிய பண்ணை அடிமைத் தனத்தை எடுப்பதும் தேவை.
இதில் சுதந்திரம் இல்லாமல் ஜனநாயகம் சாத்தியமில்லை என்பதை தெளியவேண்டும். அந்தப் பார்வை அவர்களிடமும் இல்லை, உங்களிடமும் அது பற்றாக்குறையாகவே இருக்கிறது. அவர்கள் வெளிப்படையாகவே இனி நாங்கள் அரசியல் இயக்கத்தை விட்டு சமூக இயக்கத்தை எடுக்கிறோம் என்று பிரிட்டிஷ் ஆட்சிக்கு பயந்து முடிவெடுத்தார்கள். அது கூட சுயமாக சரியானது என்று எடுத்த முடிவில்லை. அப்படி எடுத்து ஒரு வழியை தேர்ந்தெடுத்திருந்தாலும் அது அவர்களின் கருத்துக்களை நேர்மையாக எடுத்த முடிவு என்று கூறலாம். இவர்கள் பயந்து எடுத்த முடிவை இனி இதுதான் வழி என்றும், அவ்வாறு எடுக்காதவர்களை துரோகிகளாகவும், எதிரிகளாகவும் இட்டுக்கட்டியதை மறுக்கமுடியாது. ஒரு பின்னடைவை பின்னடைவாக அறிவிக்க வேண்டும், இது ஒன்றே சரியானதை எடுத்துச் செல்வதற்கும், தோற்றவர்களிலிருந்து படிப்பினை பெறுவதற்கும் அடுத்த சந்ததிதிக்கு உதவும்.
நமக்கு இருக்கும் வேலை எல்லாம் – நாம் செய்யவேண்டிய வேலை எல்லாம் சமுதாய சம்பந்தமானதே தவிர, அரசியல் வேலை அல்ல… அன்னியனை ஒழிக்கவேண்டாமா என்று சிலர் கேட்கிறார்கள். இதிலும் உண்மையோ அறிவுடைமையோ இருப்பதாக நான் கருதவில்லை.(குடி அரசு 6.7.1931)
பொதுவுடமைக்கு வெள்ளையராட்சிதான் விரோதமானதாக இருக்கிறது என்பதை நான் ஒப்புக்கொள்ள முடியாது. நமது நாட்டில் உள்ள வருணாசிரம தருமந்தான் – பொதுவுடைமைக்கு விரோதமானதாகும்.
என்பதினுடைய பொருளை நீங்கள் பிரதிபலித்திருக்கிறீர்கள். உங்களுடைய நோக்கம் ஒருவேளை பார்ப்பனியத்தை எதிர்ப்பது மட்டுமே இருக்கலாம். நான் பேசுவது ஏகாதிபத்திய எதிர்ப்பு. ஏகாதிபத்திய எதிர்ப்பில் இவர்கள் வாய்சவடால்கள் கூட இல்லை. ஒரு இலக்கியவாதியினுடைய பணி கருத்துப் பிரச்சாரத்தினை மட்டுமெ எடுத்துக்கொண்டுபோவது. ஒருவேளை மக்சீம் கார்க்கியை கூட நீங்கள் அவ்வாறு மதிப்பிடலாம். ஆனால் சரியான மதிப்பீடு கிடையாது என்பது மட்டு சொல்லமுடியும். இன்று உங்களுக்கு முதன்மையாக இருப்பது முன்னணியில் இருப்பது இந்துமத எதிர்ப்பாக இருக்கலாம். ஆனால் அமெரிகாவோ, ஏனைய ஏகாதிபத்தியதினதும் அடிமைத்தனத்தினைப் பற்றி உங்களுக்கு கவலை இல்லையோ என்று தெரியவில்லை. மேற்கண்ட பெரியாரின் கூற்றையே நீங்கள் வழிமொழிந்திருக்கிறீர்கள்.
இரண்டாவது பெரியார் கடவுளை ஒழித்தால்தான், மதத்தை ஒழித்தால்தான், சாதி ஒழியும் என்றார். இந்து மதத்திலிருந்து புத்தமதத்திற்கு மாறினால்தான் சாதி ஒழியும் என்றார் அம்பேத்கார். இதை எதை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். சாதி ஒழிப்பிற்கு ஏகாதிபத்திய ஒழிப்பு இல்லாமல் சாத்தியமில்லை என்பதை நீங்கள் ஏற்கிறீர்களா என்று தெரியவில்லை. அப்படி தெரியவில்லை என்பதே தொடர்ந்து நீங்கள் எழுதும் கருத்தில் தெரிந்துகொள்கிறேன். அது தவறான கருத்து.
பெரியாருடனும் அம்பேத்கருடனும் இந்திய சுதந்திரம் பற்றிய நிலைப்ப்பாடுகளில் நான் உடன்படவில்லை.
ஆனால் அவர்கள் எவ்வாறு அந்த நிலைப்பாடுகளை எடுக்க நேர்ந்தது என்பதைக் கொஞ்சம் அனுதாபத்துடன் தான் பர்க்கிறேன். அவர்கள் மார்க்சியக் கண்ணோட்டத்தில் உலகை நோக்காதவர்கள் என்பதாலேயே அத் தவறுகள் நேர்ந்தன. அதனால் அவர்களது சமூக நீதிக்கான போராட்டங்களை நாம் குறைத்து மதிப்பிடும் ஆபத்து உள்ளது என்பதே என் அக்கறை.
புலிகளும் மாவோயிஷுக்களும் ஒன்றா ?
புலிகள் சாகசவாதிகள்,மக்களை நம்பியதைவிட ஆயுதங்களையே நம்பியவர்கள்.இந்தியாவின் இலங்கை மீதான ஆக்கிரமிப்புக்கு / அதன் நலனை நோக்கிய ஏற்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டவர்கள்.புலிகளுக்கு தேவையான ஆயுதம்,பயிற்சி எல்லாம் தாராளமாக வழங்கப்பட்டது.
கைக்கூலிகளை வைத்து காரியம் சாதிப்பது ,சிங்கள அரசுகளிடம் மாறி ,மாறி பேரம் பேசுவது ,கோடிக்கணக்கான பணம் வாங்குவது,ஆயுதம் வாங்குவது ( மக்கள் என்ன நிலையில் இருந்தாலும் கவலை கிடையாது.) இஸ்ரேலிடம் பயிற்சி எடுப்பது ,அதற்கு கொலம்பியா மாபியாக்களுடன் சேர்ந்து போதை பொருள் கடத்துவது .இவற்றை விமர்சிப்பவர்களை கொல்லுவது ,அவர்களை இன விரோதிகளாக சித்தரிப்பது.வெளிநாடுகளில் வியாபார தாபனங்களை நடாத்துவது ,சினிமா வீடியோக்களை விற்பது ,அதே நேரத்தில் ஈழத்தில் அவற்றை தடை பண்ணுவது.
அப்பாவி சிங்கள மக்களை கொல்லுவது, முஸ்லீம் மக்களை ஊரை விட்டே கலைப்பது,மக்கள் குடியிருப்பு பகுதிகளில் தாக்குதல் நடாத்தி விட்டு ஓடி ஒழிவது.தோழர் என்ற சொல்லை கேலி பண்ணுவது.
இவை எல்லாவற்றையும் மறைக்க அவர்கள் செய்த சவடால் தான் அவர்கள் காட்டிய கொள்கை பிடிவாதம். ( என்ன இருந்தாலும் எங்கடை பொடியள் கொள்கையிலே பிடிவாதமாக இருக்கிராங்கலல்லே)
உலக நாடுகள் ஒன்றையாவது வைத்து தனி ஈழத்தை நிறுவி விடலாம் என்று கனவு கண்டனர் புலிகள். “பிரதேச தன்னாட்சி” என்று தங்களுக்கு முழு அதிகாரமுமு கிடைக்கும் பட்சத்தில் தமிழீழ கோரிக்கையையும் கைவிட புலிகள் தயாராய்த்தான் இருந்தார்கள். 2002 இல் தாய்லாந்தில் நடந்த பேச்சுக்களில் இது வெளிப்பட்டது . (இப்போ தலைவருக்கு வயது பொய் விட்டது த்ரில் பொய் விட்டது என்றெல்லாம் புலி ஆதரவாளர்களே பேசி கொண்டார்கள்.)தனி தமிழ் ஈழம் இலங்கையில் சாத்தியமில்லை என்று ஈழ மாவோவாதிகளுக்கும் ,தமிழ் தேசிய வாதிகளுக்கும் இடையில் நடந்த ( தமிழ் ஈழம் சாத்தியமில்லை,சாத்தியம் ) விவாதத்தில் மாவோயிச வாதிகள் வைத்த வலுவான காரணங்களை காட்டி நீதிபதி சாத்தியமில்லை என்றே தீர்ப்பு வழங்கினார் .அதை எல்லாம் புலிகள் சீர் தூக்கி பார்க்கவில்லை. இன்று இவ்வளுவு சீரழிவுக்கு காரண புலிகளின் இந்த வரட்டு,முரட்டு பிடிவாதமே.
பகவத் கீதையில் மார்க்கியம் ,மார்க்சியவாதிகளின் கம்பராமாயணம் பேச்சு,பாரதியார் ஒரு பொதுவுடைமை வாதி ,…இதெல்லாம் பேசிய போதுவுடைமைவாதிகளை விட அம்பேத்காரும் ,பெரியாரும் இந்திய மக்களை அழுத்தி ,நசுக்கிய பிராமணியத்தை எதிர்த்தது முர்ப்போக்கானது.நல்ல வேளை நக்சல் பாரி இயக்கம் தோலுரித்தது , இவற்றை எல்லாம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.
//என்ன இருந்தாலும் எங்கடை பொடியள் கொள்கையிலே பிடிவாதமாக இருக்கிராங்கலல்லே//
புலிகள் கொள்கையில் பிடிவாதமாக இருந்தார்கள் என்பதை ஒத்துக்கொண்டுவிட்டு
//“பிரதேச தன்னாட்சி” என்று தங்களுக்கு முழு அதிகாரமுமு கிடைக்கும் பட்சத்தில் தமிழீழ கோரிக்கையையும் கைவிட புலிகள் தயாராய்த்தான் இருந்தார்கள்.//
என்ற உங்கள் யூகத்தையும் கூறியிருக்கிறீர்கள்.
பிறகு மீண்டும் பிடிவாதமாக இருந்ததால்
//இன்று இவ்வளுவு சீரழிவுக்கு காரண புலிகளின் இந்த வரட்டு,முரட்டு பிடிவாதமே.
//
என்று கூறுகிறீர்கள். உங்களுடைய கருத்தின் மீதான ஊசலாட்டம் தெரிகிறது. இதையெல்லாம் விட நீங்கள் மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை ஆனால் அந்த பெயரை சொல்லிக்கொண்டு உங்களுக்கு சாதகமாக கருத்துசொல்லும் கட்சிகளை மட்டும் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
ஆனாலும் நான் மார்க்சிய கருத்திலிருந்தே பதில் கூற விரும்புகிறேன். ஏனென்றால் அதுதான் சரியான தீர்வினை கூறக்கூடியது
ஒரு தேசிய இன பிரச்சனைக்கு போராடக் கூடிய இயக்கத்தினைப் பற்றி மார்க்சியம் எவ்வாறு மதிப்பிடுகிறது என்று தெரிந்துக்கொள்வோம்.
லெனினிசத்தின் அடிப்படை அம்சங்கள் – ஸ்டாலின் – பக்கம் 102 – கீழைக்காற்று வெளியீடு
“பொதுவாக தேச விடுதலை இயக்கங்களின் புரட்சித் தன்மை பற்றியும் இவ்வாறே தவறாமல் கூறியாக வேண்டும். தேச விடுதலை இயக்கங்களில் மிகப் பெரும்பாலானவை, கேள்விக்கிடமின்றி புரட்சிகரத் தன்மையுடையவையாக இருப்பது எப்படி பிற விசயங்களுடன் தொடர்புடையதாகவும் குறிப்பான இயல்புடையதாகவும் இருக்கிறதோ, அதே போல, குறிப்பிட்ட தேசவிடுதலை இயக்கங்கள் பிற்போக்குத்தன்மை கொண்டவையாக இருப்பதற்கும் சாத்தியம் உண்டு. ஏகாதிபத்திய ஒடுக்குமுறைச் சூழ்நிலையின் கீழ் உள்ள ஒரு தேசவிடுதலை இயக்கத்தின் புரட்சித் தன்மையை தீர்மானிக்க – இயக்கத்தில் பாட்டாளி வர்க்க சக்திகள் இருக்கவேண்டும் என்பதையோ, ஒரு புரட்சிகரமான அல்லது குடியரசுக்கான ஒரு வேலைத் திட்டத்தை அது கொண்டிருக்க வேண்டுமென்பதையோ, அந்த இயக்கம் ஜனநாயக அடிப்படையை உடையதாக இருக்க வேண்டுமென்பதையோ நாம் முன்னிபந்தனையாக்க வேண்டியதில்லை. அப்படிச் செய்வது அவசியமுமல்ல. ஆப்கானிஸ்தானுடைய சுதந்திரத்திற்காக அதன் மன்னர் (எமிர்) போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார். அவரும் அவருடைய துணைவர்களும் முடியாட்சிக் கோட்பாடுகளைத் தமது கண்ணோட்டமாகக் கொண்டிருந்த போதிலும், அப்போராட்டம் எதார்த்தத்தில் புரட்சிகரமான போராட்டமாகவே இருக்கிறது. ஏனென்றால், அது ஏகாதிபத்தியத்தைப் பலவீனப்படுத்துகிறது, உருக்குலைக்கிறது, அதற்குக் குழி பறிக்கிறது”
பக்கம் 105
“இந்தியா, சீனா போன்ற பிற பெரிய காலனிய சார்பு நாடுகளின் தேசவிடுதலை இயக்கங்களைப் பற்றி நான் இங்கு குறிப்பிடவே வேண்டியதில்லை. அவை பெயரளவிலான ஜனநாயகக் கோரிக்கைகளுக்கு எதிராகவும்கூட செல்பவையாக இருந்தபோதிலும், அவற்றின் ஒவ்வொரு அடிவைப்பும் சந்தேகத்திடமின்றி புரட்சிகரமானதுதான். ஏனென்றால், அவற்றின் முன்னேற்றமானது ஏகாதிபத்தியத்தின் தலையில் விழும் பலமான இயந்திரச் சம்மட்டி அடி போன்றதாகவே இருக்கிறது.”
இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது அந்த அமைப்புகளை விமர்சனம் செய்தாலும் அவர்கள் நடத்தும் போராட்டத்தை ஆதரிக்கவும் வேண்டும்.
நீங்கள் மிகவும் தெளிவில்லாமல் இருக்கவேண்டும். இல்லையென்றால் நீங்கள் எடுத்த முடிவை அறிவிக்க அச்சம் கொண்டிருக்கவேண்டும். ஏனென்றால் அவர்கள் பிடிவாதமாக தனி ஈழக் கோரிக்கையில் நின்றதை விமர்சனப் படுத்துகிறீர்கள். பிறகு அவர்கள் 2002ஆம் ஆண்டு சமரசப் படுத்த முயற்சி செய்தார்கள் என்று கூறுகிறீர்கள். நீங்கள் தனி ஈழத்தை ஆத்ரிக்கிறீர்களா என்றால் இல்லை என்றே இதன் மூலம் நான் அறிய முடிகிறது. அப்படி ஆதரிக்காத போது அவர்கள் எந்த முறையில் அடைய் வேண்டும் என்று பேசுவதில் பயனில்லை. தனி ஈழம் சரியா? தவறா? என்று முடிவு செய்வதுதான் தீர்வாகும். லெனினியம் சேர்ந்து சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் இணைந்திருப்பது என்றும், இனத்தின் அடிப்படையில் எப்படி தனி நாட்டை பெறுவதும் என்றும் வழிமுறைகள் மார்க்சியம் கூறியிருக்கிறது. அதை விவாதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் விவாதிக்கலாம்.
இதையெல்லாம் விட முட்டாள்தனமானது. தனி ஈழம் சாத்தியமில்லை? சாத்தியம்? என்று வாதிடுவதுதான். தனி ஈழம் சரியா? தவறா?. தனி ஈழம் சரியானது என்று முடிவு செய்து விட்டால், அதற்கான சாத்தியம் எப்படி என்று கற்றுக்கொள்ளமுடியும். இதில் சாத்தியத்திற்கும், அவசியத்திற்கும் உள்ள வேறுபாட்டை தெரிந்துகொள்ளாமல் பேசுவது. ஒருவர் வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டால் சாத்தியப் பட்டாலும் தேவையில்லை என்று பொருள்.
இப்படி மார்க்சியத்தின் அடிப்படையில் மதிப்பிடாமல் ஏதோ ஒரு மார்க்சிய இயக்கம் ஏகாதிபத்திய எதிர்ப்பை விட சாதி எதிர்ப்பும், மத எதிர்ப்பும், பார்ப்பனிய எதிர்ப்புமே சர்வரோக நிவாரணியாக பார்க்கப்படுகிறது. இது ஏகாதிபத்தியத்தை விட்டுவிட்டு ஜனநாயகக் கோரிக்கைக்காக போராடுவது சரியென்று பேசுவது அறிவாளித்தனமாகாது.
“மந்தி கையில் மலர் மாலை ” என்று கலைஞர் எழுதிய பட வசனம் போலே நீட்டி முழக்கிக்கே கொண்டே போகிறீர்கள் பாரதி !
புலிகளின் போராட்டத்தால் எந்த ஏகாதிபத்தியத்தின் தலையில் அடி விழுந்தது. புலிகளுக்கு தெரிந்ததெல்லாம் சிங்கள ஏகாதிபத்தியம்!! மட்டுமே !அவர்களுக்கு தெரிதேல்லாம் ஆண் வர்க்கம் ,பெண் வர்க்கமே. பாலஸ்தீனியர்களை அழித்தொழிக்கும் இஸ்ரேலிடம் இராணுவபயிற்சி பெற்றவர்கள் அல்லவா அவர்கள் .அந்த சுய நலம் தான் வெளிநாடுகளில் வாழும் புலிகள் கூட எந்த பிற விடுதலை இயக்கங்களோடு தொடர்புகள் இல்லாமல் இருந்தார்கள்.வைகோ வருவார் ,நெடுமாறன் வருவார் , கஸ்பர் வருவார்,ஹிலரி வருவார்,ஒபாம வருவார் என்று கூவி திரிந்தது தான் அவர்கள் செய்த ஏகாதிபத்திய எதிர்ப்பா?
.” …ஆப்கானிஸ்தானுடைய சுதந்திரத்திற்காக அதன் மன்னர் (எமிர்) போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார். – லெனினிசத்தின் அடிப்படை அம்சங்கள் – ஸ்டாலின் நூலிலிருந்து மேற்கோள் காட்டி இருக்கிறீர்கள்.ஸ்டாலின் என்ன சிங்கள எகாதிபத்தியத்தையா குறிப்பிடுகிறார்.??
இன்றைய ஆப்கானிஸ்தான் ,ஈராக் போன்ற நாடுகளில் நடக்கும் போராட்டங்களை தேவை என்றால் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம் எனலாம்.
புலிகள் இப்படி உலக ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களை ஆதரித்ததுண்டா?
“கொள்கை பிடிப்பு ” என்ற ஒன்றை நீங்கள் தூக்கி பிடித்து கொண்டு தெளிவில்லாமல் வார்த்தை ஜாலம் பண்ணுகிறீர்கள் .மாபியா தொழில் செய்பவர்களும் ,சினிமாகாரங்களும் தான் பணம் பண்ணுவதையே “கொள்கையாக” கொண்டிருக்கிறார்கள் . பிடிவாதமாக இருக்கிறார்கள் .அதனால் அவர்களது கொள்கை சிறந்ததாகி விடுமா ???
சாதி எதிர்ப்பும், மத எதிர்ப்பும், பார்ப்பனிய எதிர்ப்பு போன்றவற்றை உள்வாங்காமல் சில சீரழிந்த மார்க்சிய கட்சிகள் போடும் ஏகாதிபத்திய எதிர்ப்பு கூச்சல் போல இருக்கிறது உங்கள் கருத்து.
இப்படி நோகாமல் போராட்டம் நடத்தி வருவது தான் சி.பி.எம் கட்சி .அதை தான் நீங்கள் முன்மொழிகிறீர்களோ ?உங்கள் தெளிவின்மை இங்கே தெரிகிறது.
தாம் செய்த தவறை எல்லாவற்றையும் மறைக்க அவர்கள் செய்த சவடால் தான் அவர்கள் காட்டிய “கொள்கை பிடிவாதம். “நான் சொன்ன காரணங்களை எல்லாம் மறைத்து விட்டு சும்மா தத்துவ வாளை சுழட்டுவதில் பயன் இல்லை.
இது சம்பந்தமாக நீங்கள் ஒரு நூலை எழுதினால் எங்களுக்கு எல்லாம் பயன் படும் .புரட்சிகர கட்சிகளுக்கும் பயன் படும்.
இரட்டை தேசியம் நடைமுறையில் எவ்வாறு உள்ளது ,பாரதீயம் போன்றவை இன்னாமும் விளங்கப்படுத்தப்படவில்லை.அந்த தார்மீக பொறுப்பு ஆசிரியருக்கு இல்லை .ஆகவே நாம் இதை நீட்ட வேண்டிய அவசியமில்லை என எண்ணுகிறேன்.
தாங்கள் செய்த தவறூகளயும் ,தமக்குள் நடக்கும் கோளாறூகளயும் மறக்க அவர்கள் தாக்குதல்கள் மக்கள் அனைத்தயும் மறந்தார்கள்.முள்ளீவாய்க்கால் வரை தொடர்ந்த இந்த நாடகத்தின் இறூதியில் புலிகள் முட்டாளாகிப் போனார்கள்.
ஒரு மன்னர் நடத்தினாலே அதை ஆதரிக்கவேண்டும் என்கிறார் ஸ்டாலின். ஒரு அமைப்பு எவ்வளவு பிற்போக்கு என்பதல்ல. எந்த கோரிக்கைக்காக மக்கள் போராட வேண்டும் என்று நீங்கள் நிலையெடுக்கிறீர்களோ அதை எந்த அமைப்பு விடாப்பிடியாக நின்று போராடுகிறது அது எந்தளவுக்கு பிற்போக்காக இருந்தாலும் அந்த போராட்டத்தில் ஊண்றி நிற்கும் வரையில் அதை ஆதரிக்கவேண்டும். இந்த சாரம்சம்கூட புரிந்துகொள்ளும் அளவுக்குகூட உங்களுக்கு அரசியல் தெளிவில்லாமல் இருந்ததற்கு வருந்துகிறேன். நல்ல வேளை மார்க்சியம் எல்லாம் ஜெர்மனியில் உள்ளவர்களுக்குதான் சொன்னார், லெனினியம் எல்லாம் ரஷ்யாவில் உள்ளவர்களுக்குத்தான் சொன்னார், மாவோவுடைய அரசியல் சிந்தனை எல்லாம் சீனாவுக்கு மட்டும்தான் சொன்னார் என்று விளக்கம் கொடுக்கவில்லை. இல்லை இந்த பின்னூட்டத்திற்கு பிறகு நீங்கள் அப்படி பதில் சொன்னாலும் ஆச்சரியப் பட ஏதுமில்லை.
எப்படி சுற்றி வளைத்து பேசினாலும் ஒன்றுக்கு மட்டும் நீங்கள் நேர்மையாக பதில் சொல்லவேண்டும். முதல் விசயம் நீங்கள் தனி ஈழத்தை ஆதரிக்கிறீர்களா இல்லையா? இதைப் பற்றி பேசாமல் நயவஞ்சகமாக மற்ற ஏதோதோ பதில் சொல்வது ஞாயமில்லை. அதுமட்டுமில்லாமல் இதுவரையில் விவாதிதது வீண்வேலையாகிவிடும். மீண்டும் வேறொரு பதிவில் வாய்ப்பிருந்தால் விமர்சனத்தை தொடருவேன்.
//சாதி எதிர்ப்பும், மத எதிர்ப்பும், பார்ப்பனிய எதிர்ப்பு போன்றவற்றை உள்வாங்காமல் சில சீரழிந்த மார்க்சிய கட்சிகள் போடும் ஏகாதிபத்திய எதிர்ப்பு கூச்சல் போல இருக்கிறது உங்கள் கருத்து.//
ஏகாதிபத்திய எதிர்ப்பை கூச்சல் என்றும், மற்றவை மட்டுமே அதையும் எதிர்ப்பு என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். நீங்கள் பெரியாரிய அம்பேத்கரிய சிந்தனையோடு நின்று கொள்வது உங்கள் விருப்பம். நான், சாதி ஒழிப்பு, நிலப்பிரபுத்துவ ஒழிப்பு, தரகுமுதலாளித்துவ ஒழிப்பு, ஏகாதிபத்திய ஒழிப்பு இதில்தான் என் சிந்தனை உண்டு. ஆகையால் பெரியாரிஸ்டான உங்களுக்கு ஏகாதிபத்திய ஒழிப்பு என்பது கூச்சலாகத்தான் இருக்கும்.
ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது நோகாமல் நடத்தும் போராட்டம் என்கிறீர்கள். அதிலும் சி.பி.எம். எப்போது ஏகாதிபத்திய எதிர்ப்பு கூச்சல் போடுகிறது. அது அந்நிய மூலதனத்தை பறிமுதல் செய்தல் என்ற கோட்பாட்டை எப்போது கைவிட்டு விட்டதோ அப்போதே அது உங்களைப் போல் அதுவும் ஏகாதிபத்திய எதிர்ப்பையும் கைவிட்டுவிட்டது. அந்தளவுக்கு அரசியல் புரிதல் இருக்கிறது என்பது எனக்கு தெரியாது. இனி உங்களுடன் விவாதிக்க நேர்ந்தால் அரிச்சுவடியிலிருந்தே தொடங்குகிறேன். உங்களுக்கும் புரிய வைக்க முயற்சிசெய்கிறேன்.
மீண்டும் “மந்தி கையில் மலர் மாலை ”
புலிகளின் போராட்டத்தால் எந்த ஏகாதிபத்தியத்தின் தலையில் அடி விழுந்தது. ?
புலிகள் சாகசவாதிகள்,மக்களை நம்பியதைவிட ஆயுதங்களையே நம்பியவர்கள்.இந்தியாவின் இலங்கை மீதான ஆக்கிரமிப்புக்கு / அதன் நலனை நோக்கிய ஏற்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டவர்கள்.புலிகளுக்கு தேவையான ஆயுதம்,பயிற்சி எல்லாம் தாராளமாக வழங்கப்பட்டது.
கைக்கூலிகளை வைத்து காரியம் சாதிப்பது ,சிங்கள அரசுகளிடம் மாறி ,மாறி பேரம் பேசுவது ,கோடிக்கணக்கான பணம் வாங்குவது,ஆயுதம் வாங்குவது ( மக்கள் என்ன நிலையில் இருந்தாலும் கவலை கிடையாது.) இஸ்ரேலிடம் பயிற்சி எடுப்பது ,அதற்கு கொலம்பியா மாபியாக்களுடன் சேர்ந்து போதை பொருள் கடத்துவது .இவற்றை விமர்சிப்பவர்களை கொல்லுவது ,அவர்களை இன விரோதிகளாக சித்தரிப்பது.வெளிநாடுகளில் வியாபார தாபனங்களை நடாத்துவது ,சினிமா வீடியோக்களை விற்பது ,அதே நேரத்தில் ஈழத்தில் அவற்றை தடை பண்ணுவது.
அப்பாவி சிங்கள மக்களை கொல்லுவது, முஸ்லீம் மக்களை ஊரை விட்டே கலைப்பது,மக்கள் குடியிருப்பு பகுதிகளில் தாக்குதல் நடாத்தி விட்டு ஓடி ஒழிவது.தோழர் என்ற சொல்லை கேலி பண்ணுவது…
“தாங்கள் செய்த தவறூகளயும் ,தமக்குள் நடக்கும் கோளாறூகளயும் மறக்க அவர்கள் தாக்குதல்கள் மக்கள் அனைத்தயும் மறந்தார்கள்.முள்ளீவாய்க்கால் வரை தொடர்ந்த இந்த நாடகத்தின் இறூதியில் புலிகள் முட்டாளாகிப் போனார்கள். “thamilmaran
நீங்கள் தான் ஏகாதிபத்திய எதிர்ப்பாளன் என்று புழுகுவது நல்ல நகைச்சுவை.உங்கள் பெயரிலேயே (சு.பாரதி )இந்தியாவின் தலைசிறந்த ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்பாளன் இருந்தார்.
நான் ஒரு பெரியாரிஸ்டா ?உங்கள் கண்டு பிடிப்புக்கள் எல்லாவற்றையும் எழுதுங்கள்!.
எப்படி சுற்றி வளைத்து பேசினாலும் ஒன்றுக்கு மட்டும் நீங்கள் நேர்மையாக பதில் சொல்லவேண்டும். முதல் விசயம் நீங்கள் தனி ஈழத்தை ஆதரிக்கிறீர்களா இல்லையா? இதைப் பற்றி பேசாமல் நயவஞ்சகமாக மற்ற ஏதோதோ பதில் சொல்வது ஞாயமில்லை.
தேசிய இனப் பிரச்சனைக்கு கம்யூனிஸ்டுகள் போராடலாமா கூடாதா. எந்த தேசிய இனமும் தனி நாடு கோரக்கூடாதா?
பாரதி .
நீங்கள் நினைக்கும் ஒரு கருத்துக்கு சார்பாக விவாதத்தை அங்கும் இங்கும் இழுத்துக்கொண்டே போகிறீர்கள்.முதலில் ஏகாதிபத்திய எதிர்ப்பா இல்லையா என்றீர்கள் பின் .இப்போ தனி ஈழத்தை ஆதரிக்கிறீர்கலா ? இல்லையா ?என்று உங்கள் இஷடத்துக்கு விவாதத்தை எங்கெங்கோ அலைக்கிரீர்கள்.அதில்லையா ? இதில்லையா ?என்கிறீர்கள். மீண்டும் தேசிய இனப் பிரச்சனைக்கு கம்யூனிஸ்டுகள் போராடலாமா கூடாதா. எந்த தேசிய இனமும் தனி நாடு கோரக்கூடாதா?என்கிறீர்கள்.
இந்த வகையான விவாதம் யாருக்கும் உதவ போவதில்லை.
என்னய்யா இது ? சிறு பிள்ளை தனம்.??!
“….பெரியாரும் அம்பேத்கரும் இந்திய சுதந்திரம் என்பது பிரித்தானிய ஆட்சியின் இடத்தில் பார்ப்பன ஆட்சியைக் கொண்டுவரும் என அஞ்சினர். அதில் நியாயமிருந்தது. அதனால் அவர்கள் எடுத்த முடிவுகள் சரி என்றோ ஏற்கத் தக்கவை என்றோ ஆகி விடா. அதே வேளை அம் முடிவுகளை வைத்து அவர்களைச் சந்தர்ப்பவாதக் கொலனிய ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்துவது மிகத் தவறனது.
கொலனியம், பார்ப்பனியம் என்ற இரண்டு எதிரிகளிடையே ஒன்றைத் தெரிய வேண்டி வந்த சூழ்நிலையை விளங்கிக்கொள்ள வேன்டும். அன்று கம்யூனிஸ்ட்டுக்கள் விடுதலை இயக்கத்துக்குத் தலைமை தாங்கும் நிலை இருந்து பெரியாரும் அம்பேத்கரும் தங்கள் முடிவுகளை எடுத்திருந்தால் விமர்சனங்கட்கு வலுவான நியாயம் இருந்திருக்கும்….”
என்ற சிவாவின் கருத்து முன் மொழிய கூடியது.சாதிய போராட்டமும் சரி, ,தேசிய விடுதலைக்கான போராட்ட முயற்சிகள் என்றாலும் சரி இலங்கை முன் உதாரணமாக இருந்திருக்கிறது.
இன ஒடுக்கல் ஏன் தோன்றுகிறது? இங்குள்ள உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு விலங்கிடுவதற்காக தேசங்கள் உருவாக்கம் நிகழாமல் பார்த்துக்கொள்வதில் எல்லா ஏகாதிபத்திய நாடுகளுக்கும் அக்கறையுள்ளது. இந்தியாவை தேசிய இனங்களின் சிறைக் கூடமாக ஆக்கியதே ஒரு ஏகாதிபத்திய ஆட்சிதான். இந்தியாவிலுள்ள அனைத்து இனங்களையும் சுரண்டுவதற்காக அவற்றை அடக்கி ஒடுக்கி வைக்கவேண்டிய தேவை ஏகாதிபத்தியத்திற்கு ஏற்படுகிறது. இது சிறுபான்மை இனங்கள் மீது பெரும்பான்மை இனத்தை ஏவி விடுவதன் மூலமே சிறப்பாக செய்யமுடியும். அதே போல்தான் இலங்கயிலும் சுரண்டுவதற்கு ஏற்றவடிவமான அனைத்து பிற்போக்கையும் ஏகாதிபத்தியம் ஆதரித்து சுரண்டும். எந்த விதமான ஜனநாயக கோரிக்கைக்கும் போராடாமல் ஒடுக்கும். அப்போதுதான் ஆக பிற்போக்கான ஆட்சியையும் உகந்த சூழ்நிலையையும் அது ஒடுக்குமுறையையும் சுரண்டலையும் கொண்ட ஆட்சியை கொண்டுவர முடியும். அதை எதிர்த்து அனைத்து ஜனநாயக உரிமைகளுக்கும் போராடவேண்டும். அப்படி போராடுவதற்கான சூழ்நிலையில் ஒன்று சேர்ந்து போராடுவதற்கு பதில் அந்த இனவெறியை அடிப்படையாக வைத்து அந்த மக்களை பிரித்தும் தங்களுக்குள் அடித்துகொண்டு இருப்பதும், ஒன்று சேர்ந்து வாழ்வதற்கோ போராடுவதற்கோ ஒரு பலமான இயக்கம் இல்லாதிருக்கும் போது ஒடுக்கப்பட்ட இனம் தனித்து போராடும் நிலையில் தள்ளப்படும். இச் சூழ்நிலையில் இலங்கை கம்யூனிஸ்ட்டு என்று சொல்லிக்கொள்ளும் கட்சிகள் எல்லாம் முதன்மை முரணான இன முரணை கைவிட்டு சாதி, மத முரணை முன்கொண்டு வந்து போராடும் தவறினை செய்துகொண்டிருந்ததால், தவிர்க்க முடியாமல் ஏதோ ஒரு அமைப்பு இன முரணுக்கு போராடினாலும் அதை ஆதரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
லெனின் கூறுவதாவது “வளரும் முதலாளித்துவம் தேசிய(இன)ப் பிரச்சனையில் இரு போக்குகளை அறிந்திருக்கிறது. முதல் போக்கு: தேசிய வாழ்வில் விழிப்புணர்வு அடைதலும் தேசிய இயக்கங்கள் உருவாகி எழுதலும்; தேசிய ஒடுக்குமுறை அனைத்திற்கும் எதிராகப் போராடுதலும் தனி தேசிய அரசுகள் உருவாதலும். இரண்டாவது போக்கு: பொதுவாக பொருளாதார வாழ்வு அரசியல், விஞ்ஞானம், இன்னும் பிறவற்றில் உலகளாவிய ரீதியில் தேசங்களுக்கு இடையிலான எல்லா வகைகளிலுமான ஒன்று கலத்தல்கள் வளர்ச்சியுறுதலும் முடுக்கி விடப்படுதலும்; தேசிய எல்லைகள் நொறுங்கிப் போதல்; மூலதனம் சர்வதேச ரீதியில் ஐக்கியமடைவது உருவாதல்” … ஏகாதிபத்தியத்துக்கோ, இவ்விரு போக்குகளும் சமரசப்படுத்த முடியாத முரண்பாடுகளாக மலைபோல் முன்னிற்கின்றன. ஏனென்றால், காலனிகளைச் சுரண்டாமலும், “பிரிக்க முடியாத முழுமை” என்ற சிறைக்குள் காலனிகளை கட்டாயப்படுத்தி வைக்காமலும், ஏகாதிபத்தியம் நிலைத்திருக்கவோ உயிர்வாழவோ முடியாது. ஏனென்றால், பிரதேசக் கைப்பற்றல்களும் காலனிய ஆக்கிரமிப்புகளும் என்ற வழிமுறையைத் தவிர்த்து, வேறு முறைகளில் தேசங்களை ஒன்றுபடுத்துவதை ஏகாதிபத்தியத்தால் செய்யவே முடியாது. பொதுவாக கூறுவதனால், ஆக்கிரமிப்புகளில் ஈடுபடாத ஏகாதிபத்தியத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கவே முடியாது.இதற்கு நேர்மாறாக, கம்யூனிசத்தைப் பொறுத்தவரையில் இந்த இரு போக்குகளும் ஒரே நோக்கத்தின் இரு பக்கங்களே ஆகும். ஏகாதிபத்திய நுகத்தடியிலிருந்து ஒடுக்கப்படும் மக்களை விடுவிப்பது என்பதே அந்த ஒரே நோக்கம். ஏனென்றால், தேசங்கள் ஒன்றின் மீது ஒன்று கொள்ளும் நம்பிக்கை, தேசங்களுக்கு இடையிலான சுயவிருப்ப அடிப்படையிலான ஒப்புதல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே, ஒரே உலகப் பொருளாதாரக் கட்டமைவில் பல தேசங்களைச் சேர்ந்த மக்களின் ஒற்றுமை சாத்தியமாகும் என்பதை கம்யூனிசம் நன்றாக அறிந்திருக்கிறது. “பிரிக்க முடியாத முழுமை” என்ற ஏகாதிபத்தியச் சட்டகத்திலிருந்து காலனிகளைப் பிரிப்பதன் வாயிலாகவும், காலனிகளை சுயேச்சனியான அரசுகளாக மாற்றுவதன் வாயிலாகவுமே, பல தேசங்களை சேர்ந்த மக்களின் சுயவிருப்ப அடிப்படையிலான ஒன்றிணைவை உருவாக்கும் பாதை சாத்தியம் என்பதை கம்யூனிசம் நன்றாக அறிந்திருக்கிறது.”
“ஒடுக்கும் நாடுகளில் உள்ள தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் சர்வதேசியவாதக் கல்வியில், அழுத்தந்திருத்தமான வலியுறுத்தல் எதுவாக இருக்க வேண்டும்? ஒடுக்கப்படும் நாடுகள் பிரிந்து போவதர்கான உரிமையை அவர்கள் தவறாமல் ஆதரிப்பதாகவும் உயர்த்திப் பிடிப்பதாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு செய்யாமல் போனால், சர்வதேசியம் என்பதே இருக்க முடியாது. இத்தகைய பிரச்சாரத்தை மேற்கொள்ளத் தவறும் ஒடுக்கும் தேசத்தைச் சேர்ந்த சமூக – ஜனநாயகவாதிகளை, ஏகாதிபத்தியவாதிகள் என்றும் கயவர்கள் என்றும் கண்டனம் செய்வது நமது உரிமையும் கடமையும் ஆகும். சோசலிசத்தைக் கட்டியமைப்பதற்கு முன்னரே, இவ்வாறு பிரிந்து செல்வதற்கான சாத்தியத்திற்கும் வசதிக்குமான வாய்ப்பு ஆயிரத்தில் ஒரு பங்காக இருந்தாலும்கூட. இது முற்றுமுழுதான ஒரு கோரிக்கையாகும்…”
பெரியாரும் அம்பேத்காரும் எந்த சூழ்நிலையில் என்ன முடிவு எடுத்திருந்தால் சரியாக இருந்திருக்கும் என்பதல்ல வாதம். அவர்கள் எடுத்த முடிவு என்பது பின்பற்ற்க் கூடிய வழியல்ல. பின்பற்றக் கூடாத வழி. எந்த சூழ்நிலையில் எதை எதிர்த்துப் போராடவேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டிய வழி. அதே போல் அவர்கள் சாதி, மதத்திற்கு எதிராகப் போராடுவது என்பதே நிலப்பிரபுத்துவ ஒழிப்புக்கு உடன்பட்டார்கள் என்பது அதிலும் அபத்தமானது. பார்ப்பனர்கள் வெளியேற்று இயக்கம் நடத்தியபோது அதை இடையில் நிறுத்திவிட்டார். காரணம் பார்ப்பனர்கள் அல்லாத நிலப்பிரபுக்களை எதிர்த்த இயக்கமாக அது வளர்ச்சியடைந்தபோது அவர்களுடைய பிரதிநிதியின் வேண்டுகோளுக்கு இணங்க அதை நிறுத்திவிட்டார். அதே போல் மதம் மாற்றம், இடஒதுக்கீடு மட்டுமே சாதி ஒழிப்புக்கு தீர்வு என்றார். இவை இரண்டும் கூட பின்பற்றக்கூடிய வழியல்ல.
பின்னோக்கிய பார்வையில் பெரியாரையும் அம்பேத்கரையும் பாரதியையும் விமர்சிப்து எளிது. அவர்களது காலத்தில் அவர்கள் முன்னாலிருந்த தெரிவுகளை எவை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
அவர்கள் பிரதான முரண்பாடுகளகக் கண்டவற்றை முற்றாக நிராகரிக்கலாமா என்பதைக் கவனிக்க வேண்டும்.
பலவற்றையும் கருத்தில் வைத்தே நாம் முடிவுகட்கு வரலாம்.
பெரியாரோ அம்பேத்கரோ கம்யூனிஸ்ட்டுக்களாக வளரவில்லை என்றால் அவர்கள் காலத்துக் கம்யூனிச்ட்டுக்கள் பற்றியும் விசாரிக்க வேண்டும்.
எதையும் எவரையும் 100% சரியாயிருக்க வேன்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து நோக்குவது ஆபத்தானது.
இன்று நம் முன் பெரியார் வழிபாடும் அம்பேத்க்ர் வழிபாடும் அவற்றை விட மோசமாகப் பாரதி பற்றிய புனைவுகளை வைத்து நடக்கும் பாரதி வழிபாடும் உள்ளன.
இவற்றின் ஆபத்துக்களைப் பற்றி நாம் கவனிக்க வேண்டும்.
“இரட்டைத் தேசியக்” கருத்துக்குக் கூட இவை அடிப்படைகளா என்று இப்போது நான் ஐயுறுகிறேன்.
பாரதி/ பெரியார்/ அம்பேத்க்ர் சொன்னபடி தான் விடுதலைப் போராட்டம் எதுவும் அமையலாம் என்பவர்களல்லவா பிரச்சனைக்குரியோர்!
முற்றாக நிராகரிப்பது என்பது சரியான அனுகுமுறையல்ல. ஆனால், ஏகாதிபத்தியத்தை எதிர்த்த சுதந்திரப் போராட்டத்தை தவிர்த்துவிட்டு, விடுதலையை தவிர்த்துவிட்டு ஜனநாயகத்தை வென்றெடுப்போம் என்று கூறுவது போகாத ஊருக்கு வழி சொல்வதாகும். ஆனால் ஒரு சரியான கம்யூனிஸ்ட் பாதை என்னவாக இருக்க முடியும் என்றால், ஏகாதிபத்தியத்தை எதிர்த்த விடுதலைப் போராட்டமும், பண்ணயடிமையை எதிர்த்த, தேசிய இன விடுதலையை வென்றெடுக்க ஜனநாயகப் போராட்டமும் ஒருங்கே இணையாக கொண்டு செல்ல வேண்டிய போராட்டமே சரியானது. அதுவே புதிய ஜனநாயகப் புரட்சியும்மாகும்.
ஆனால் சில நேரங்களில் ஏகாதிபத்தியப் போராட்டத்தை எதிர்த்தப் போராட்டங்கள் சில அமைப்புகள் போராடலாம். அதாவது நேரடியாக ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம் இல்லையென்றால் கூட தனது விடுதலையை விடாப் பிடியாக எதிர்த்துப் போராட்டம் நடத்தலாம். இல்லை சில நேரங்களில் அடக்கப் பட்டுக்க் கொண்டு இருக்கும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அது அல்லாத வேறு ஒரு ஏகாதிபத்தியத்தின் உதவியோடு தனது காலனிய விடுதலைக்குப் போராடலாம் (நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் போல) ஆனால் அதுதான் ஜனநாயகப் போரட்டத்திற்கு உத்தரவாதப் படுத்தும். சுதந்திரம் இல்லாமல் ஜனநாயகம் சாத்தியமில்லை என்பதை எந்த நேரமும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய விசயமாகும்.
இதையெல்லாம் மீறி அவர்கள் சாதி, மத ஒடுக்குமுறை எதிர்த்து போராடியிருந்தாலும் கூட, அந்த வழியும் பின்பற்றி நாம் செல்ல முடியாது. ஏனென்றால் அவர்கள் காட்டிய வழி மூலமாக நாம் ஜனநாயகத்தை வெல்ல முடியாது. அது ஒரு கருத்துமுதல்வாத அடிப்படையில் மனங்களை மாற்றுவதின் மூலம் சமூக மாற்றத்தை கோரும் வழியாகும். ஆனால் அரசியல் கைப்பற்றல்கள் இல்லாமல், புரட்சி இல்லாமல், பழைய ஆட்சி அதிகார முறையை ஒழிக்காமல் அதை வைத்துக்கொண்டே மாற்றிக்காட்டுவது சாத்தியமில்லை. அது தவறான வழியாகும், அடைய முடியாத வழியாகும். ஆகையாலே ஒரு சரியான கம்யூனிசப் பாதையின் மூலம் தான் வரலாற்று இயக்கிவியல் பொருள்முதல்வாத வழியின் மூலம்தான் வெல்ல முடியும்.
நான் சொல்வதெல்லாம் ஒரு வரலாற்றுச் சூழலில் எது பிரதான முரண்பாடாகத் தெரிகிறது என்பதை அச் சூழலில் வைத்தே மதிப்பிட வேன்டும் என்பதே.
ரஷ்யாவில் லெனினினோ சீனாவில் மாஓவோ வியற்னாமில் ஹோ சி மின்னோ கினி பிஸ்ஸோவில் கப்றாலோ எடுத்த எடுப்பில் சரியான நிலைப்பாட்டை அடையவில்லை.
தவிரவும் இந்தியா என்பது ஒரு தேசமல்ல. அதில் இருந்த சாதிய ஒடுக்குமுறையை ஒத்த ஒன்று பிற நாடுகளில் இருந்ததில்லை.
காங்கிரஸைக் கம்யூனிஸ்டுகளால் மேவ முடியாத காரணம் என்ன?
பின்னோக்கிய பார்வையில் ‘சரியான முடிவுகளை’ நம்மால் வந்தடைய முடியும். அவ்வக் காலச் சூழல்களின் சிக்கல்கள் பற்றியும் உடனடிநெருக்குவாரங்கள் பற்றியும் நம்மால் என்ன சொல்ல முடியும்?
குறிப்பிட்ட மூவரின் அரசியலும் காங்கிரசில் தான் தொடங்குகிறது. காங்கிரஸ் என்ற தேசிய(?) முதலாளிய நிறுவனத்தினுள் அவர்கள் முகங்கொடுத்த பிரச்சனைகள் அவர்களது பார்வையை முடிவு செய்கின்றன.
அவர்கள் பற்றி மாக்சிய அளவுகோல்களை வைத்து முடிவுக்கு வருவது எவ்வளவு பொருந்தும்?
அவர்களை அவர்களது காலத்து முக்கிய சமூகச் சீர்திருத்தவாதிகள் என்ற வகையில் நோக்கினால் பயனுண்டு.
நாம் அவர்களது அனுபவங்களிலிருந்து கற்பதற்கு நிறைய உண்டு. அவர்களைப் பற்றித் தீர்ப்பு வழங்கும் தேவை இல்லை.
அவர்கள் பற்றிய தவறன, மிகைப்படுத்தப்பட்ட வியாக்கியானங்கள் பற்றி விழிப்புடன் இருப்பதே இன்றைய தேவை என நினைக்கிறேன். ஏனெனில் அது நமது உடனடிப் பாதை பற்றிய பிரச்சனைகளை எழுப்புகிறது.
//நான் சொல்வதெல்லாம் ஒரு வரலாற்றுச் சூழலில் எது பிரதான முரண்பாடாகத் தெரிகிறது என்பதை அச் சூழலில் வைத்தே மதிப்பிட வேன்டும் என்பதே.//
ஆமாம் அப்படி மதிப்பட்டதால்தான் ஏகாதிபத்திய முரண்பாடே பிரதான முரண்பாடாக பிரிட்டிஷ் காலனியான இந்தியாவில் நிலவியது.
//குறிப்பிட்ட மூவரின் அரசியலும் காங்கிரசில் தான் தொடங்குகிறது. காங்கிரஸ் என்ற தேசிய(?) முதலாளிய நிறுவனத்தினுள் அவர்கள் முகங்கொடுத்த பிரச்சனைகள் அவர்களது பார்வையை முடிவு செய்கின்றன.அவர்கள் பற்றி மாக்சிய அளவுகோல்களை வைத்து முடிவுக்கு வருவது எவ்வளவு பொருந்தும்?//
இரண்டு பேர் மட்டுமே காங்கிரசில் தொடங்கிய அவர்களின் அரசியல் ஏகாதிபத்திய எதிர்ப்பாகவே இருந்தது. பிறகு ஒருவர் சமதர்ம இயக்கம் ஆரம்பிக்க கம்யூனிஸ்டோடு கைகோர்க்கும் போது ஏகாதிபத்திய மிரட்டலால் அடிபணிந்து இனி அரசியல் போராட்டம் நடத்த மாட்டேன் இனி சமூக சீர்திருத்தப் போராட்டம்தான் முடிவுக்கு வந்தார். இன்னொருவர் 1946 வரை காங்கிரசின் வழியை ஏற்றது கிடையாது. பிறகு அந்த அரசில் அங்கம் வகித்தார். இன்னொருவர் இடையிலேயே இறந்து போனார். இப்படியாக இருக்க நாம் முடிவுக்கு வருவது மார்க்சிய அடிப்படையிலேயே இருக்க வேண்டும்.
எல்லா கட்சிகளைப் பற்றியும், அதன் தலைவர்களைப் பற்றியும், அதன் தத்துவத்தைப் பற்றியும் மார்க்சிய வரையரையின் அடிப்படையிலேயே நிர்ணயிக்க வேண்டும். ஆனால் ஓவ்வொருவரையும் எவ்வாறு கையாள வேண்டும் என்பதையும், இதில் கையாளபட முடியாதவர், அவர் வழிமுறையை பின்பற்ற முடியாதவர்கள் யார்யார் என்பதை நிர்ணயம் செய்ய வேண்டும். இதையெல்லாவற்றுக்கும் மேலாக அந்த நேரத்தில் எது முதன்மைமுரண்பாடாக இருக்கிறதோ அதற்கு போராடுபவர்களை விமர்சனத்தோடோ விமர்சனமில்லாமலோ ஆதரிக்கலாம். ஆனால் அதை விடுத்து புரட்சிக்கு சேவை செய்யாத அனைத்து சீர்த்திருத்தவாதத்தையும் எதிர்த்துப் போராடுவதில் ஊசலாட்டம் இருக்கக்கூடாது.
அந்தக் காலக்கட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மீது தலைமைத் தாங்குவதில் விமர்சனங்கள் இருந்தாலும், அவர்களுடைய காலத்திலேதான் தெலுங்கானா போராட்டம், சுதந்திரமும், விடுதலையும் ஒரு சேர போராடி வெற்றி பெற்ற தெலுங்கான போராட்டமும் இருந்தது. அதை ஆதரித்தோ, அதை வழிமொழிந்தோ, அல்லது அது சரியானதோ என்றுகூறி இருவருமே என்றுமே பேசியதோ, எழுதியதோ, இல்லை அதற்கு ஆதரவாக இயக்கம் எடுத்ததோ இல்லை. கம்யூனிஸ்டுகள் ஒரு சில பகுதிகளில் தலைமை எடுத்திருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என்பதை மட்டும் நினைவில் வையுங்கள்.
அம்பேத்கர் விடயத்தில் நான் சொன்னதில் தவறுண்டு. அவர் காந்தியிடம் கேட்ட கேள்விகட்கு திருப்தியான பதில் வராததால் தான் காந்தியை நிராகரித்தார். சுட்டிக் காட்டியதற்கு நன்றி
நான் பெரியாருடனும் பாரதியுடனும் அம்பேத்கருடனும் அவர்களது முடிவுகளில் உடன்படவில்லை. ஆனால் அவர்களது முடிவுகளை அவர்கள் ஏன் எடுக்க நேர்ந்தது என்பதை விளங்கிக் கொள்ள முனைகிறேன்.
பின்னோக்கிய பார்வையில் நம்மால் ‘சரியானவற்றைக்’ காணல் ஒப்பிடுகையில் எளிது.
பெரியாரோ அம்பேத்கரோ, தமது இலக்குக்களின் அடிப்படையில், நம்பிப் பின்செல்லக் கூடிய நிலையில் கம்யூனிஸ்டுக்கள் இருந்தனரா? இதை நான் கம்யூனிஸ்டுக்கள் மீது குற்றச்சாட்டாகக் கூறவில்லை.
பெரியாரும் அம்பேத்கரும் தமது பிரதான பணிகள் என்று முடிவெடுத்தவற்றின் அடிப்படையில் அவர்களது பிற முடிவுகளை நோக்குவது கூடப் பயனுள்ளது.
இது உங்களுக்கு உடன்பாடற்றதெனின் இதை நான் மீண்டும் மீண்டும் வற்புறுத்திப் பயனில்லை.
என்னைப் பொறுத்தளவில் சாதியத்துக்கும் பர்ப்பனியத்துக்கும் எதிராகப் போராடிய எவருமே புரட்சிக்குப் பங்களித்தோர் தாம். பங்களிப்பின் குறைபாடுகளைப் பங்களிப்பின் பெறுமதியுடன் நாம் குழப்பிக்கொள்ளக் கூடாது.
தெலுங்கானா போராட்டம் போருக்குப் பிந்திய காலத்தில் நிஜாம் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் தொடங்கி ‘சுதந்திரத்தின்’ பின் மிகக் கடுமையான ஒடுக்குமுறையைச் சந்தித்தது. அது ஈற்றில் முறியடிக்கப் பட்டது. அதைக் காட்டிக் கொடுத்தோர் யார் என்பது இன்னமும் விவாதிக்கப் படுகிறது.
பெரியாரோ அம்பேத்கரோ போராட்டத்தைக் கண்டித்து ஏதாவது சொன்னார்கள் என்றால் அறிய ஆவலாக உள்ளேன்.
திரும்ப திரும்ப ஒரே புராணம் .இங்கே யார் சொன்னது ?பெரியாரும் .அம்பேத்காரும் தான்
கம்யூனிஸ்ட் ஆட்சியை கொண்டு வர போகிறார்கள் என்று.!!.
பாரதி இருந்திருந்தால் கண்டிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலைமை தாங்கியிருப்பான் என்பது தான் முடிவுரையோ ? இடையில் செத்து போனார் பாவம்.
//பாரதி அக்டோபர் புரட்சியின் மென்ஷ்விக்குகளுடன் உடன் சேர்ந்து முதலாளித்துவப் புரட்சியை பாராட்டுகிறார். பிறகு லெனின் தலைமையில் போல்ஷ்விக்குகள் மட்டும் நடந்த சோசலிசப் புரட்சியை வசைபாடுகிறார். இதில் சரியாக காணவேண்டும். முதலாளித்துவப் புரட்சியை வரவேற்கும் அளவுக்கு ஜனநாயகவாதி. ஆனால் முழுமுற்றான கம்யூனிஸ்டுகளைப் போல் அனைத்திலும் ஜனநாயகத்தன்மை வேறு மொழியில் சொல்வதென்றால் கம்யூனிச உள்ளடக்கம் கொண்டவரில்லை என்பதில் தெளிவு வேண்டும்.//
என்ற எனது பழைய பின்னூட்டத்தைப் பார்க்கவில்லை, படிக்கவில்லை என்பதை மீண்டும் அறிய முடிகிறது. அதையெல்லாம் மீறி, உங்கள் பக்கத்து வீட்டில் இருக்கும் பாரதி என்ற பெயர் வைத்தவர்கள் மீது வசைமாறி பொழியும் அளவுக்கு, தன் மனப் போக்காக இருக்கிறீர்கள். எந்த விவாதமோ, இல்லை தகவல்களோ எதுவும் தொடராமல் வெறும் வசைமாறி இருக்கிறது. இது எந்த விதத்திலும் பயன்படப் போவதில்லை. குறைந்த பட்சம் அடுத்தவர் என்ன சொல்கிறார் என்பதையாவது புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். நான் ஏற்கெனவே சொல்லிய கருத்தைக்கூட கணக்கில் எடுக்காமல் பின்னூட்டம் இடுவது யோதோ சம்பிரதாயமாக செய்யும் விசயமாக தெரிகிறது.
ஒருவரைப் பற்றி மதிப்பிடுவது என்பது எந்த அடிப்படையில் எந்த காலச் சூழ்நிலையில் எவ்வாறு செய்யவேண்டும் என்பதைப் பற்றி அறிந்துகொள்ளவே இந்த விவாதம். அப்போதுதான் தற்காலத்தில் எதை முன்னிறுத்தி யாரை அணிசேர்த்து போராடமுடியும் என்பதை அறிய ஒரு முன்னோட்டமாகவே இந்த விவாத முயற்சி என்று எனது கருத்து. இதில் அகநிலை கண்ணோட்டத்தில் மட்டுமே உங்கள் கருத்து இருக்கிறது. இன்னும் சரியாக சொன்னால் உங்களுக்கு இந்த சமூகத்தின் அவலங்களைப் பார்த்த குரோதம் தான் இருக்கிறதே தவிர, அதை எப்படி அரசியல் ரீதியில் புரிந்து கொண்டு மாற்றியமைக்க போராடவேண்டும் என்ற கருத்து உங்களிடம் இல்லை. மற்ற கட்டுரைகளின் பின்னூட்டங்களிலும் இதுவே பிரதானமாக தெரிகிறது. வருத்தம்……
காந்தி மாக்ஸியவாதியல்ல. மாக்ஸியத்தை ஏற்றுக் கொண்டவருமல்ல.சோவியத்யூனில்
போல்சேவிக்களின் தேட்டங்கள்-ஒட்டுமொத்த மத்தியகுழு உறுப்பினரின் கொலைக்கும்-நாஷிகளின் வெற்றியை தொடர்ந்தும் “தனியாருநாட்டில் சோசலிசம் “மேலும் ஒரு கொஞ்சகாலம் கெட்டிபட ஆரம்பித்தது.
1940ல் ரொஸ்சியின் கொலையுடன் சர்வதேசரீதியாக கம்யூனிஸ்களின் பலம் ஈடாடத் தொடங்கியது.இதுவே இந்தியாவிலும் காந்தியத்தை இன்னும் மேல் நிலைக்கு கொண்டு
வந்துமல்லாமல் இந்தியரீதியாக மத்தியதரவர்கத்தை காந்திய போராட்டத்திற்குள் உள்வாங்கிகொண்டதுமல்லாமல் இந்தியாவிலும் தொழிலாளிவர்கத்திற்கு தோல்வியைக்
கொடுத்தது.
காந்திய போராட்டத்தால் விளைந்த பயன் எதுவென்று கேட்டால் பிரிஷ்ராரிடம் இருந்து
அதிகாரத்தை எடுத்து இந்தியதேசியமுதலாளிகளிடம் கையளித்ததே!
இது காந்தியபோராட்டத்தால் நிகழ்ததா?நடந்துமுடிந்த உலகயுத்தத்தால் சமநிலை மாற்றமடைந்து பொருளாதார பலத்தை அமெரிக்கா பெற்றுக் கொண்டதா?எதுவாக
இருக்கும்?
இந்தியா சுகந்திரம் அடைந்தது என்று சொன்னால் அது பள்ளிக்கூட பாடப்புத்தகத்திலும்
முதாலித்துவ பண்புகளிலும் தான்.இன்று இந்தியாவில் சாதிக்கொருசங்கமும் சாதிக்கொரு கட்சியும் பழங்குடிமக்கள் தமது பூர்வீக குடிநிலைங்களை இழப்பதும் மல்லாமல் அவர்கள் உயீர்வாழ்வுக்கே உத்தரவாதம் இல்லாமல்லிருப்பதும் கடந்த பத்துவருடத்தில் இரண்டுலட்சம் விவசாயிகளின் தற்கொலைகள் எல்லாம் சர்வதேச தொழிலாளிவர்கத்தின் தோல்வியில் இருந்து பிறந்தவையே!.
காந்தியத்தின் வெற்றி இந்தியாவில் -இந்தியமுதலாளிகளின் வெற்றி.இன்னொரு பக்கத்தில் தொழிலாளிவர்கத்தையும் புதுவழியில் வளர்சியடைப் பண்ணியிருக்கிறது.
தற்போதைக்கு என்னபெயரில் என்னவடிவத்தில் தொழில்சங்கங்கள் இருந்தாலும்
ஸ்தாபனப்படுதலும் ஒன்றினைவதுமே முதாலித்துவத்தை எதிர்பதற்கான ஒருவழிப்
பாதையாகும்.இருந்தால் மட்டுமே! விவசாயிகள் பழம்குடிமக்கள் அங்காடிதெருமக்களின் வாழ்வையும் பாதுகாத்திடமுடியும்.
குட்டிமுதாலித்துவாதிகள் தமது வீரத்திலும் இரும்பு ஆயுதத்திலும் நம்பிக்கை தவறாக
ஊட்டி மக்களை தவறாக வழிநடத்தி இறுதியில் தோல்விக்கும் இட்டுசெல்லுகிறார்கள்.
தொழிலாளிவர்கத் தலைமையோ தொழிலாளிவர்கத்ததின் போர்குணத்தில் நம்பிக்கை
அவர்களே சக்திவாய்ந்த ஆயுதமெனபுரிந்து கொண்டு மாபெரும் புயலுக்காக காத்திருக்கிறார்கள்.
திரு. லெனின் மதிவானம் இரட்டைத் தேசியம் பற்றி விரிவாக விளக்கி எழுதப் போவதாகச் சொன்னார்.
இன்னமும் ஒன்றையும் காணவில்லை.
ஏன் என்றாவது விளக்குவாரா?
அவரல் இயலாவிட்டால் அவர் சார்பாக இடுகைகளை வழங்கி வந்த ஜெயகாந்த் போன்ற அறிஞர்கள் யாராவது விரிவாக விளக்கி எழுத முன்வருவார்களா?