Friday, May 1, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இன்றைய முதலாளித்துவ நெருக்கடியும் மூலதனாமும் புதிய உலக ஒழுங்கும்: சபா நாவலன்

இனியொரு... by இனியொரு...
07/31/2013
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
1
Home பிரதான பதிவுகள் | Principle posts

விரைவில் வெளிவரும் இன்றைய முதலாளித்துவ நெருக்கடியும் மூலதனாமும் புதிய உலக ஒழுங்கும் என்ற நூல் ஒரு கூட்டு முயற்சி. இதன் முதலாவது பாகம் முதலாளித்துவ நெருக்கடியின் வரலாற்றுரீதியான பார்வையை முன்வைத்து இன்றைய நெருக்கடியை குறித்த ஆய்வை முன்வைக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் புதிய வர்க்க ஒழுங்கமைப்புக் குறித்து ஆழமான ஆய்வு ஒன்று முன்வைக்கப்படுகிறது. முதலாம் பாகத்திற்கான முகவுரை  இங்கு கட்டுரையாக வெளியாகின்றது. இனியொருவில் தொடர்ச்சியாக வெளிவரும் முதலாம் பாகம் கருத்தாளர்களின் காத்திரமான கருத்துக்களோடு பிரசுரிக்கப்படும்.

KarlMarxதனது புதிய சுற்றில் முதலாளித்துவம் மறுபடி சேடமிழுக்கிறது. கார்ல் மார்க்ஸ் என்ற மாபெரும் அறிஞன் கூறுவது போல முதலாளித்துவத்திற்கு ஒரு குறித்த வாழ்வுக்காலமே உள்ளது. ஒவ்வொரு தடவையும் சரிந்து விழும்போது அதிகாரவர்க்கம் அதனை மறு ஒழுங்கமைபுச் செய்துகொள்கிறது. ஒவ்வொரு ஒழுங்கமைப்பின் ஆரம்பத்திலும் இறுதியிலும் போதும் மாபெரும் அழிவு மிக்க போர்களும், சாரி சாரியான மனிதப் படுகொலைகளும் தவிர்க்கமுடியாத முறைமையாக்கப்படுகின்றது. உழைக்கும் வர்க்கத்திடமிருந்தும் அதன் நட்பு அணிகளிடமிருந்தும் உருவாகும் எதிர்ப்பையும் அவற்றின் ஒழுங்கமைப்பையும் சீர்குலைக்க அதிகாரவர்க்கம் தனது அடியாட்படைகளை நிறுத்திவைத்திருக்கும். இன்று சரிவடைந்து அழிந்து கொண்டிருக்கும் முதலாளித்துவ ஒழுங்கைத் தூக்கி நிறுத்துவதற்காக அதிகாரவர்கம் போர்களையும் அழிவுகளையும் திட்டமிட்டு நடத்திக்கொண்டிருக்கிறது.

உலகத்தின் ஒவொரு சந்துபொந்துக்களிலும் நுளையும் ஏகபோக அரசுகள் உலகின் ஒவ்வொரு தனிமனிதனதும் வாசற் கதவுகளைத் தட்டி மிரட்டுகின்றன. மரண பயத்தை மக்கள் மத்தியில் விதைக்கின்றன. உலகின் ஒவ்வொரு பகுதியிலும் தட்டிக்கேட்டால் அழிக்கப்படுவீர்கள் என்றும், உரிமை கேட்டால் உயிர் பறிக்கப்படும் என்றும், புரட்சி என்றால் புதர்களுள் மரணிக்க வேண்டும் என்றும் அதிகாரவர்கத்தின் கூறுகள் பிரச்சாரம் செய்கின்றன.

1970 களில் உலகின் ஒவ்வொரு மனிதனிடமிருந்தும் உற்பத்தியின் உபரியை அதிகரித்துக் கொள்வதற்கா ஆரம்பிக்கப்பட்ட புதிய ஒழுங்கமைப்பையே நவதாராளவாதம் என்கிறோம்.

அமரிக்க அரசினதும் அங்கு அளவுக்கு அதிகமாக செல்வத்தைக் குவித்து வைத்திருக்கும் மேல்தட்டு வர்க்கத்தினதும் தலைமையில் உலகம் முழுவதும் வழி நடத்தப்படுவதை அறியாமலேயே பலர் ‘ஜனநாயகத்தின் ஊற்றுமூலமான’ அமரிக்காவிற்காக மாண்டு போனார்கள்.

அமரிக்காவின் தலைமையிலான நவ-தாராளவாதப் பொருளாதார அமைப்பிற்கு முன்னதான மூன்று பொருளாதார அமைப்புக்கள் தோற்றுவித்த சிக்கல்களும், வரலாற்று வழிவந்த முதலாளித்துவத்தின் இயக்கமும் இணைந்து இன்று நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் உலக முதலாளித்துவ அமைப்பை உருவாக்கியுள்ளன. அமரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கும் அதன் தலைமையிலான உலக ஒழுங்கிற்கும் ஏற்பட்டுள்ள அமைப்பியல் நெருக்கடி முன்னைய நெருகடிகளோடு தொடர்புடதாயினும் அவற்றிலிருந்து வேறுபட்ட மீள முடியாத பல சிக்கல்களை உருவாக்கியுள்ளது.

இதுவரை காலம், நவ-தாராளவாதப் பொருளாதாரத்தின் கீழ் செயற்கையாகத் தோற்றுவித்த மூலதன இயக்கம் விரல்விட்டெண்ணக்கூடிய மூலதனச் சொந்தக் காரர்களின் நிகர இலாபத்தைப் பெற்றுக்கொள்வதற்கான அனைத்து ஒழுங்குகளையும் கொண்டிருந்தது.

neoliberalismஒரு வர்க்கமுமோ, அன்றி ஒரு நாடோ அதிகாரத்தை நிலைநாட்ட முனையும் ஒவ்வொரு தடவவையும் உலகம் தழுவிய பல முகவர்கள் உருவாகின்றனர். நாவதாரளவாத்த்திலும் அதன் உலகமயமாக்கலிலும் மேல்தட்டு வர்க்கத்தினது மேலணிகள், நிதி நிறுவனங்களாலும் மேல்தட்டு வர்க்கத்தினது ஏனைய அணிகளாலும் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதற்காக ஆதரிக்கப்படுகின்றன. இதன் அடிப்படையிலேயே நவ-தாராளவாத அதிகாரத்தின் தலைமையிலிருக்கும் அமரிக்க அரசு ஏனைய ஏகாதிபத்திய நாடுகளின் பொதுவான ஆதரவைப் பெற்றுக்கொள்கிறது.

அதிகார ஒழுங்கமைப்பின் தலைமையில் அமரிக்க அரசும் அதன் மேல்தட்டுவர்க்கமும் குறிப்பாக மூலதனத்தைச் சொந்தமாக வைத்திருக்கும் சில குடும்பங்களும்ன் உலகின் ஒவ்வொரு அசைவையும் தீர்மானிக்கின்றன.

ஏனைய நாடுகளின் மூலதனச் சொந்தக்காரர்கள் அமரிக்க அதிகாரவர்கத்துடன் உறவைப் பேணுகின்ற அதே வேளை தீர்க்க முடியாத நுண்ணிய முரண்பாடுகளையும் கொண்டுள்ளன.

மிகவும் குறுகிய விரல்விட்டெண்ணக் கூடிய அமரிக்க முதலாளித்துவ வர்க்கத்தின் ஆதரவுத் தளம் சமூகரீதியாகவும் உலகளாவிய தன்மையிலும் பரந்து விரிந்தது. பல உலக அமைப்புக்கள் இவர்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகச் செயற்படுகின்றன. பிரதான அமைப்புக்கள் அமரிக்காவை இயங்குதளமாகக் கொண்டவை.

dollஉலக நவதாராளவாத ஒழுங்கு அல்லது நவதாராளவாத உலகமயமாக்கல் என்பது ஏகாதிபத்தியங்களின் தலைமை நாடான அமரிக்காவிலிருந்து ஏனைய நாடுகளுக்கு அதன் நட்பு ஏகாதிபத்திய நாடுகளின் ஒத்துழைப்புடன் திணிக்கபட்டது. நவதாராளவாதத்தின் உலகமயமாக்கலில் பொருளாதார வன்முறை இராணுவ வன்முறையாக லத்தீன் அமரிக்க நாடுகளில் ஆரம்பத்திலும் இன்று அரேபிய நாடுகளிலும் ஆசிய நாடுகளிலும் கட்டவிழ்த்துவிடப்படுகிறது. அரேபிய நாடுகளில் நவதாராளவாத உலகமயமாக்கலின் இறுதிக்காலத்தில் உருவாக்கப்பட்ட பொருளாதார வன்முறையே அரபு வசந்தம் என அழைக்கப்பட்டது.

ஏகாதிபத்திய நட்பு அரசுகளை உள் நாடுகளில் உருவாக்குவதே பொருளாதார வன்முறையின் உடனடிவடிவமாகவிருந்தாலும் இது மேலும் சிக்கலான முறைமைகளைக் கொண்டது என்பதை எதிர்வரும் அத்தியாயங்களில் விளக்குகிறோம்.

முதலாளித்துவ நாடுகளை மீண்டும் குடியேற்ற நாடுகளைப் போன்று உருவாக்குவதற்கான அந்த நாடுகளின் மேல்தட்டு வர்க்கத்தின் ஒத்துழைப்புப் பெற்றுக்கொள்ளப்படும் அதே வேளை எகாதிபத்தியக் கூறுகளான நேட்டோ(NATO), உலக நாணய நிதியம்(IMF), உலக வங்கி, உலக வர்த்தக மையம்(WTO), ஐக்கிய நாடுகள் அமைப்பு(UN), தன்னார்வ நிறுவனங்கள்(NGOs) போன்றவற்றின் பங்களிப்பு இன்றியமையாதது. இவை அனைத்தும் அமரிக்காவின் கையளவு மேல்தட்டு வர்க்கத்தினது இலாபத்தை அதிகரிப்பதற்கு மட்டுமே என்பது இறுதி நோக்கமாக அமைகிறது என்பது அருவருக்கத்தக்க வியப்பாகும்.

உபரி இலாபத்தை அதிகரிக்கும் நோக்கில் மூன்றாமுலக நாடுகளின் வளங்களைச் சுரண்டவும், உலகம் முழுவதும் ஊதியப் போட்டியை ஏற்படுத்தி கூலி உழைப்பச் சுரண்டவும், அன்னிய மூலதனத்தின் நேரடி முதலீடுகள் ஊடாக உள்நாட்டின் பண்ட உற்பத்தியைக் கையகப்படுத்தவும் நவதாராளவாத உலகமயமாக்கல் வழியேற்படுத்திக்கொடுத்தது.

இன்று தவிர்க்கமுடியாத நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் நவதராளவாத ஒழுங்கின் ஆரம்பமும் முடிவும் ஆராயப்படவேண்டும். முன்னைய உலக ஒழுங்குகளும் அதன் தொடர்ச்சியான இன்றைய நெருக்கடியும் அலசப்பட வேண்டும். நவதாராளவாதம் ஏற்படுத்திய புதிய உற்பத்தி உறவுகள், வர்க்க அடுக்குமுறை, உற்பத்தி சக்திகளின் செயற்கையான வளர்ச்சி என்பன மேலும் தெளிவாக்கப்பட வேண்டும், அடுத்த அத்தியாயங்களில் இவை குறித்த ஆழமான ஆய்வுகளைக் காண்போம்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

பேரினவாத அரசின் பங்காளியான இந்திய அரசும் சம உரிமை கோருகிறது

Comments 1

  1. Dr. Sriskanda says:
    13 years ago

    These are good for brain storming. The people who think that they are all intellectuals.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...