இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘‘பிரதமர் நரேந்திர மோடியின் முன்னுரிமைப்படி வெளியிடப்படும் ஆணை – சமூக வலைத்தளங்களில் அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் உள்துறை கேட்டுக் கொள்கிறது” என்ற தலைப்பில் ஒரு ஆங்கில நாளேடு செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டுமென்று கட்டளையிடுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் முதன் முறையாக முடிவெடுத்துள்ளது.
வெளிநாடுகளின் தலைவர்களுடன் உரையாடுவதற்கு இந்தி மொழியையே பிரதமர் நரேந்திர மோடி தேர்ந்தெடுத்துக் கொள்கிறார். அவரது விருப்புரிமையையொட்டி, அரசு அதிகாரிகள் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கருத்துகளைப் பதிவு செய்வதற்கு இந்தி மொழியையே பயன்படுத்திட வேண்டும்.
27.05.2014 அன்று மத்திய உள்துறை அமைச்சகம், அரசும் அரசு அதிகாரிகளும் சமூக வலைத் தளங்களில் இந்தியைப் பயன்படுத்துவதைக் கட்டாயமாக்கி ஆணை பிறப்பித்துள்ளது.
அனைத்து அமைச்சகங்கள், அரசுத் துறைகள், அரசு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஆகியவற்றில் பணிபுரியும் அதிகாரிகளும், அலுவலர்களும் “ட்விட்டர்”, ”பேஸ்புக்” போன்ற தங்களுடைய சமூக வலைத்தளங்களில் இந்தியை அல்லது இந்தி மற்றும் ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம்; ஆனால் இந்தியைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவு அனைத்து அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டு, அது நடை முறைப்படுத்தப்படுவது உறுதி செய்யப்படுதல் வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி, “டிவிட்டரில்” இந்தி மொழியைத்தான் பயன்படுத்துகிறார் என்று ஆங்கில நாளேட்டின் செய்திக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருவரது விருப்பத்திற்கு மாறாக, அவர் மீது அரசாணையின் மூலம் இந்தி மொழியைத் திணிப்பதற்கான செயலின் ஆரம்பம்தான் இது என்பதை யாரும் மறுத்து விட முடியாது.
1938 ஆம் ஆண்டில் இந்தியைக் கட்டாய பாடமாக்கிய போதும், 1965-ம் ஆண்டில் இந்தி ஆட்சி மொழிச் சட்டம் நடைமுறைக்கு வருமென்று அறிவித்த போதும் ஏற்பட்ட பேரெழுச்சியையும், கிளர்ச்சியையும் சரித்திரம் விரிவாகப் பதிவு செய்து வைத்திருக்கிறது.
இந்தி மொழித் திணிப்பு, இசுலாமிய எதிர்ர்பு ஆகியவற்றால் இந்தியாவெங்கும் தீ மூட்டிவிட்டு அதன் வெம்மையில் மக்கள் அறியாமலேயே பல்தேசிய வர்த்தக நிறுவனங்களைக் கொள்ளையிட அனுமதிப்பதே நரேந்திர மோடியினதும், அவரை பிரதமராக்கிய கொள்ளையர்களதும் நோக்கம். இந்தித் திணிப்பிற்கும், பல்தேசியக் கொள்ளைக்கும் தமிழ் நாட்டில் முகவராகச் செயற்பட்ட வை.கோ எங்கே? மோடியின் நட்பிற்காக ஏங்கும் ஜெயலலிதவை ஆட்சியேற்ற உழைத்த சீமான் எங்கே? ஈழத் தமிழர்களைக் 80 களில் ‘காப்பாற்றியது போல’ காப்பாற்றுங்கள் என கண்ணீர்வடிக்கும் தமிழ்த் தேசிய வியாபாரிகச்ள் எங்கே?









wrong heading and provocative.Language is right and no need to beg.
அப்படியானால் இந்தி மட்டும் பெசத் தெரிந்த ஒருவர் பிரதமராக வரக்குடாதா ? இதற்க்கு ஒருவருக்கு இந்தியைத்தவிர எந்த மொழியும் தெரியால் ஆட்ஷி செய்யவில்லையா?
“ஊரில் ஹிந்தி பிகரா அலையுது, ஹிந்தி கத்துகாததுக்கு வருத்த படறேன்” – நண்பரின் வருத்தம் புரிகிறது. வருத்த படாத வாலிபர் சங்கத்தில் சேரவேண்டியது தான்.
பல மாநிலங்களில் வேலை செய்துளேன். பல நாடுகளுக்கு சென்றுள்ளேன்.
வெளி மாநிலங்களில் கர்நாடக, ஆந்திரா மற்றும் ஹிந்தி கரன் ஹிந்தி யில் பேசுவான். நான் வேடிக்கை பார்க்க வேண்டியது தான். கர்நாடக காரனிடம், எனு குரு அர்த்தமகால என்று கேட்டல், அவன் தமிழில் சொல்வான். பெங்களூரில் பிறந்து வளர்த்த , அனைவரும் 4/5 மொழிகள் அருமையாக பேசுவார்கள். தமிழ், கன்னட, தெலுங்கு, ஹிந்தி. பள்ளி, கல்லூரி சென்று இருந்தால் ஆங்கிலமும் பேசுவார்கள். எங்கிருந்து கற்றுகொண்டார்கள்? ஏன் நம்மால் முடியாது?
நைஜீரியா சென்றுளேன். அங்கு 200 அல்லது 300 மொழிகள் பேசபடுகின்றன. அங்குள்ளோர் 20 மொழிகள் பேசுகிறார்கள். பலர் ஆங்கிலமும் சரளமஹா பேசுகின்றனர்.
மலேசியாவில் உள்ள தமிழர்கள் தமிழ், மலாய் மற்றும் அங்கிலம் அருமையாக பேசுகின்றனர்.
அமெரிக்காவில் ஒரு இந்தியனை பார்த்தல், எந்த மொழி என்று தெரியாது, பொதுவாக ஹிந்தியில் பேசுவர். இந்தியன் அனால் ஹிந்தி தெரியாது என்றால் நம்மை வெறுமையுடன் பார்க்கின்றனர். அங்கு அலுவலகத்தில் தெலுங்கன் மற்றும் ஹிந்தி காரன் சந்தித்தால் ஹிந்தியில் உரையாடுவார். அமெரிக்கன் இருக்கும் இடத்தில, அதுவே அவகளின் பலம். தமிழன் மட்டும் ஒதுகபடுவான்.
தமிழ் நாட்டில் தமிழ் மட்டுமே என்று கூறிய தலைவர் கருணாநிதி, மகள் ஹிந்தி Mஆ . ராமதாஸ் பேரன் டெல்லி யில் ஹிந்தி கற்று கொள்கிறார்கள். கடைநிலை தமிழன் கற்க வழி இன்றி தள்ளபடுகிறான்.
இந்தியன் அனால் ஹிந்தி தெரியாது என்றால் நம்மை வெறுமையுடன் பார்க்கின்றனர்.-YOU KNOW DIFFERENCE BETWEEN ” INDIAN &HINDIAN” If someone in another country looks you indiferently as you not knowing Hindi,that is their ignorance about India.750 million tamils OR 900 millions Bengali not to be ignored as minority.If such is the case people prefer being Tamilian,Bengali instead of the so called Indian.As you state in other countries people know more than 2 laungages,what it mean they know to talk with porter,taxi driver maximum to bargain in vegitable shop.
Ya… We remember Alagiri’s position in the parliament…
இந்தியை வேறு மொழி மானிலங்களுக்குள் மத்திய அரசு திணித்தால் அது விவாதிக்கப்படவேண்டிய விடயம்தான். ஆனால் கருணாநிதி இந்த விடயத்தை பிடி கொம்பாக்கி வீழ்ச்சியிலிருந்து எழுந்திருக்க முயற்சி செய்கிறார், இந்தி திணிப்பைக்கூட போராடி நிறுத்திவிடலாம் கருணாவை எழுந்திருக்க அனுமதிக்கலாமா?