பிரபாகரன் இறந்து போயிருக்கலாம், அல்லது இறந்து போனவரகச் சித்தரிக்கப்பட்டிருக்கலாம். இதுவரை எந்த சாட்சியும் இதற்கில்லை. ஆனால், மக்கள் கூட்டம் கூட்டமாகக் கொன்று போடப்படதற்கு சாட்சிகளாக இந்த அழிவைப் பார்த்துக்கொண்டிருந்த எல்லோரும் இன்னும் உயிரைக் காவிக்கொண்டு உலாவுகிறோம்.
புலிகளின் தலைவர் பிரபாகரன் செத்துப் போனாரா இல்லையா என்று பூசாண்டி காட்டிக்கொண்டே நாட்களை விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கும் இலங்கை அரசு, செத்துப் போன அப்பாவிகளை அப்புறப்படுத்திக் கொண்டிருக்கிறது. சாட்சி இல்லாமலே மரணித்த மனிதர்களை மறைத்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசிற்குத் துணைபோகும் சர்வதேசமும்,அரசும், அரச ஆதரவுத் தமிழ்க் குழுக்களும் இறந்து போன மக்களைப் பற்றி மூச்சுக்கூட விடவில்லை. தெற்காசியாவின் சன சந்தடியில்லாத ஒரு மூலையில் ஐம்பதாயிரம் அப்பாவிகள் சாட்சியின்றிக் கொன்று வீசப்பட்டனர் என்று என்றாவது ஒருநாள் ஒரு குழந்தை மனிதனாகிக் குரலெழுப்பும்.
இங்கு அழிந்து போனது புலிகளோ வெற்றி கொண்டது அரசோ அல்ல. மனிதம் அழிந்திருக்கிறது. மக்கள் தோற்று போயிருக்கிறார்கள்.
தமது சொந்த தேசத்தின் இன்னொரு மூலையில் பிணக்குவியல்கள் அனாதையாக எந்தத் தேசிய அடையாளமும் இழந்து சுத்தம் செய்யப்படுவதற்காக் காத்துக்கிடக்கும் போது, இந்த அப்பாவிகள் தாம் வெற்றி பெற்றுவிட்டதாக ஆனந்தக் கூத்தாடுகின்றனர்.
சர்வதேச நாசகார சக்திகள், இலங்கைப் பாசிச அரசுடன் இணைந்து, நன்கு திட்டமிடப்பட இராணுவ நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றி முடித்திருக்கின்றன. கொல்லப்பட்ட தமிழர்கள் இவர்களுக்கெல்லாம், போர்ப் பரிசோதனை கூடத்து விலங்குளாகவும், மகிந்த அரசின் பாசிசப் பசிக்கு விருந்தாகவும், தம்மை அர்ப்பணித்திருக்கிறார்கள்.
பௌத்த மதக் கொடியோடு அன்னிய தேசத்திலிருந்து இலங்கை வந்திறங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தான் வளர்த்தெடுத்த பாசிசத் தீயிற்கு எண்ணையூற்றியிருகிறார்.
தமனது உறவுகளின் தலைகளில் இரசாயனக் குண்டு விழும் போது அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருந்த பச்சைக் குழந்தைகளும், பட்டினி போடப்பட்டு சாகடிக்கப்பட தடை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவிகளும், இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்களுக்காகக் கண்ணீர்வடிக்கும் தமிழக உறவுகளும், பேரின வாதத்தின் பிடியிலிருந்து தப்பியோடுவந்த தமிழ்ப் பேசும் மக்களும், தம்மை அறியாமலே அரசியற் தற்கொலை செய்து கொண்டிருக்கும் பெரும்பான்மைச் சிங்கள மக்களும் மகிந்த வளர்தெடுக்கும் பாசிசத்தை எங்காவது முட்புதருக்குள் என்றாவது ஒரு நாள் புதைத்து விடுவார்கள்.
அரச பயங்கரவதிகள் பாவித்த மரண ஆயுதங்களு, எரிகுண்டுகளும், கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையும் போருக்குப் பின்னால் பரிமாறப்பட்ட கோடிக்கணக்கான வியாபர ஒப்பந்தங்களும் மௌனமாய் மறைக்கப்பட்டிருக்கின்றன.
மருத்துவ மனைகள் மீதும், மக்கள் குடியிருப்புக்கள் மீதும் எரிகுண்டுகளைப் போட்டு அழித்துவிட்டு, வெற்றிக் களியாட்டம் நடாத்தும் இலங்கை அர்சசிற்கு இந்திய அரசு வாழ்த்துச் செய்தி அனுப்பிவைத்திருக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருகிறது. மனிததாபிமானம் பற்றியும், ஜனநாயகம் பற்றியும் கூக்குரலிடும் மேற்குலகம் கண்துடைபிற்காகச் சில அறிக்கைகளை விடுத்துச் சமாளித்திருக்கிறது.
குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை தன்னை இனிமேலும் நம்ப வேண்டாம் என்று உலகின் ஒடுக்கப்படும் மக்களுக்கு ஆணித்தரமாகச் சொல்லிவைத்திருக்கிறது.
இவைகளையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கோடிக்கணக்காவர்கள் சாட்சியாக வாழ்ந்து கொண்டிக்கிறார்கள். இனிமேல் இவர்கள் யார் மீதும் நம்பிக்கை வைக்கப்போவதில்லை. சமாதானம், ஜனநாயகம், மனித உரிமை என்ற அழகான வார்த்தைகளோடு ஊலா வந்த சர்வதேச நாசகர சக்திகளெல்லாம் தங்களை மக்களுகு இனம் காட்டிவிட்டன. இனியொரு போராட்டம் இவர்களின் போலி வார்த்தைகளையும், கபட நாடகங்களையும் மீறி உருவாகும் என்பதற்கான அடித்தளமே இவர்கள் அம்பலப் பட்டுப் போயிருப்பது தான்.
கானல் நீரை தண்ணீரென நினைத்து இலங்கை அரசு குடிக்க நினைக்கின்றது.நா வரட்சிதான் மிஞ்சப் போகின்றது.கிரிபத் சாப்பிட்டவர்களுக்கு அவரளவில் இலாபமே.
ஐ.நா சபை உண்மையில் ஆண்டிகள் மடந்தான். அதனால் ‘ஒப்புக்கு ஒப்பாரி’ வைக்கத் தெரிந்தளவுக்கு உருப்படியாக எதனையும் செய்யும் திராணி கிடையாது என்பதை மீண்டும் ஒரு தடவை நிரூபியத்திருக்கிறது அவ்வளவுதான்.
உலகத் தமிழர்கள் இனியும் உறக்கத்தில் இருப்பார்களேயானால் அவர்கள் ‘தமிழர்கள்’ என்று சொல்லிக்கொள்வதை நிறுத்திக் கொள்வது தமிழுக்கு கெளரவம் தரும் !
ஒரு தீர்க்கமான பார்வை.
இன வக்கிரமற்ற நோக்கு.
கட்டுரையாளருக்கு நன்றி.
தமிழர்களும் சிங்களவர்களும் ஒன்றாகவே பலியாகிவிட்ட ஒரு யுத்தம் முடிவிற்கு வந்து விட்டதாக சிலர் கனவு காண்கிறார்கள.
அவர்களின் கனவுகள் பொய்ப்படும்.
மனித உரிமைகள் என்றும் ஜனநாயகமென்றும் அதுவென்றும் இதுவென்றும் பினாத்தியவர்கள் தங்கள் மாயைகளிலிருந்து விடுபடவேண்டிய காலம் வந்துவிட்டது.
யார் செய்தது சரி. யார் செய்தது பிழை என்று நீதித் தீர்ப்புகள் வழங்கும் நேரம் தாண்டிவிட்டது.
எல்லோரும் பிழை இழைத்திருக்கிறார்கள்.
இபபோ சுயமுனைப்பை விடுத்து அப்பாவிச் சனங்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் எல்லோரும் ஈடுபடவேண்டும் என்பதுதான் வேண்டுதல்.
// இங்கு அழிந்து போனது புலிகளோ வெற்றி கொண்டது அரசோ அல்ல. மனிதம் அழிந்திருக்கிறது. மக்கள் தோற்று போயிருக்கிறார்கள்
சமாதானம், ஜனநாயகம், மனித உரிமை என்ற அழகான வார்த்தைகளோடு ஊலா வந்த சர்வதேச நாசகர சக்திகளெல்லாம் தங்களை மக்களுகு இனம் காட்டிவிட்டன //
உண்ம, நல்ல பார்வை.
இனியொரு தோழர்களின் அரசியல் பார்வை நேர்மையாக வெளிப்பட்டுள்ளது. இங்கு தமிழகத்தில் ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை வைத்து பிழைப்பு நடத்துவதே அரசியல் கட்சிகளின் குழுக்களின் தொழிலாக அமைந்துவிட்டது. எனவே ஈழத்தமிழர்கள் இனிமேலும் தமிழக இந்திய அரசியல்வாதிகளின் பேச்சுக்களை நம்பி பலியாகாதீர்கள். ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்தை அழித்தொழித்தது சீறிலங்கா சிங்கள அரசல்ல. இந்திய வல்லாதிக்க அரசுதான் என்பதை ஈழத்தமிழர்கள் உணரவேண்டும். இந்திய வல்லாதிக்க அரசையும் அதை நம்பி அரசியல் பிழைப்பு நடத்துவோரையும் நீங்கள் இனம் கண்டு அவர்களுக்கெதிரான போராட்டத்தை நடாத்துவதற்கூடாகவே ஈழத்தமிழர்களாகிய நீங்கள் உங்கள் லட்சியத்தை சென்றடைய முடியும். இன்று உங்களின் பிரதான எதிரி வல்லாதிக்க இந்திய அரசுதான்.
சுருங்கக் கூறின் தற்போதைய ஈழப்போரை இந்திய அரசும் ஆளும் வர்க்கங்களும் சேர்ந்து இயக்குகிறது என்பதை புரிந்து கொள்ளாமல் சில அதிகாரிகள், காங்கிரசின் சோனியா முதலான தனிநபர்கள் நடத்துவதாக கற்பித்துக் கொண்டு ஒரு வகையான லாபி வேலை செய்தால் போர்நிறுத் தத்தை சாதித்து விடலாம் என குறுக்குப் பாதையில் சென்றார்கள். இந்தியாவின் தேர்தல் முடிவுகளை வைத்து தப்பலாம் என நம்புமளவுக்கு புலிகள் அரசியல் ரீதியில் பலவீனமாக இருந்தார்கள். தமிழகத்திலோ விருப்பு வெறுப்பின்றி உண்மையைப் பேசும் நண்பர்களை அவர்கள் பெற்றிருக்கவில்லை.
மறுபுறம் புலிகளை அழிப்பதற்கான விரிவான திட்டமும், கால அட்டவணையும், ஆயுதங்களும் இந்தியாவால் சிங்கள அரசுக்கு தரப்பட்டன. அதன்படி தேர்தலுக்கு முன்பு வரை புலிகளை பெருமளவு ஒடுக்குவது, முடிந்த பின் தலைமையை அழிப்பது என்ற திட்டம் இலங்கை ராணுவத்தால் கச்சிதமாக நிறைவேற்றப்பட்டது. இந்தியாவின் இந்த மேலாதிக்கத்தை அறிந்தததினாலேயே மேலை நாடுகள் ஒப்புக்கு ஈழப்பிரச்சினை குறித்து பேசின. அதுவும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் நெடிய போராட்டத்தினால்தான் அந்த ஒப்புக்கு சப்பாணி அறிக்கைகளும் வந்தன. மற்றபடி இந்த கண்டனங்களை ராஜபக்ஷே எதிர்கொண்ட முறையிலிருந்தே அதன் பின்னணியையும் நம்பகத் தன்மையைபயும் புரிந்து கொள்ளலாம். ஆனால் மேலைநாடுகள் நிச்சயமாக தலையிடுமென புலிகளும், அவர்களின் ஆதரவாளர்களும் மலைபோல நம்பினார்கள். அந்த அளவுக்கு அவர்களது உலக அரசியல் கண்ணோட்டமும், ஏகாதிபத்திய கட்டமைப்பில் ஒரு தேசிய இனம் விடுதலை அடைவது எவ்வளவு சிக்கலானது என்பன போன்ற அரசியல் பார்வையெல்லாம் புலிகளிடமோ, அவர்களுக்கு நல்லெண்ணத் தூதர்களாக செயல்பட்ட தமிழக அரசியல் தலைவர்களிடமோ இல்லை
http://www.vinavu.com/2009/05/19/eelam-war-is-not-over/
ஆரம்பத்தில் அடிமை வாழ்வு பின்
அரசியல் வாழ்வு முடியாத போது ஆயுத வாழ்வு
அடுத்தது என்ன?
இனியாவது எதாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில்
நாம் எல்வோரும்….
அன்புடன் லக்ஸ்மன்.