Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

அரசு மேற்கொள்ளும் ஊழல் மோசடி மற்றும் துஷ்பிரயோகத்தை நிறுத்த கோருகின்றோம்:ஜே.வி.பி.

இனியொரு... by இனியொரு...
04/01/2009
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

01.04.2009.

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கியின் உதவி வேண்டாமெனக்கூறி எமது நட்பு நாடுகளின் உதவியே போதுமென்றது. இப்போது எந்தவொரு வேலைத்திட்டத்தையும் மேற்கொள்ளாது ஊழல் மோசடி மற்றும் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு அரசு பாரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதால் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் விண்ணப்பித்துள்ளது. இக்கடனை பெறுவதற்கு காரணம் வடக்கு,கிழக்கு அபிவிருத்தி எனக் கூறுகின்றனர். இதற்கு தனியார் மயமாக்கல் நிவாரண வெட்டு மற்றும் பல நிபந்தனைகளை முன்வைப்பர்.இதனால் பாதிக்கப்படுவது நாடே யாகும்.

எனவே நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு அரசு மேற்கொள்ளும் ஊழல் மோசடி மற்றும் துஷ்பிரயோகத்தை நிறுத்தி உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க நிவாரணங்களை அளிக்குமாறு கோருகின்றோம் .

கொழும்பிலுள்ள தேசிய நூலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கா கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்;

உலக பொருளாதார நெருக்கடியின் காரணமாக இலங்கை 1929 க்கு பின்னர் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. இதன் தாக்கம் பாரியளவில் ஏற்படுவதற்கு காரணம் 1977 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திறந்த பொருளாதார கொள்கையேயாகும்.

நாடு 80 ஆண்டுகளின் பின் எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு அரசாங்கம் உருப்படியான நடவடிக்கை எதனையும் எடுக்காதிருக்கின்ற நிலையில் இதற்கு பதிலளிக்கும் முகமாக நாட்டை மேலும் சிக்கலுக்குள் தள்ளிவிடும் மூன்று நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அதாவது மக்கள் மேல் வரியை சுமத்துவது, கடன் பெறுவது மற்றும் அரச சொத்துக்களை விற்பதே இந்த மூன்று நடவடிக்கையாகும். முதலாவதாக அரசாங்கம் மக்கள் மீது இது தொடர்பில் விதித்துள்ள வரிகளை பார்க்கும் போது இவ்வாண்டு நிலையான தொலைபேசிக் கட்டண வரியை 10% அதிகரித்துள்ளது.

இதனால் மக்கள் தமது கைத்தொலைபேசி முதல் நிலையான தொலைபேசி பாவனையை கைவிடவேண்டி ஏற்பட்டுள்ளது.

அதுபோல் 2009 பெப்ரவரி 13 ஆம் திகதிய 1588/20 வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் நீர்க்கட்டணம் 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெற்றோல் தற்போது 120 ரூபாவாக விற்கப்படும் நிலையில் உலகசந்தையில் எரிபொருளின் விலை வீழ்ச்சி கண்டதன் பிரகாரம் 38 ரூபாவாக விற்கவேண்டும். ஆனால், அரசாங்கம் இதற்கு வரியை விதித்து 120 ரூபாவாக விற்கின்றது.

இதேவேளை, அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கு மேலதிகமாக வரி விதித்ததன் காரணமாக பெரிய வெங்காயம் கிலோ ஒன்று 25 ரூபாவாலும், உருளைக்கிழங்கு ரூ.25, கடலை ரூ.25, வெள்ளைச் சீனி ரூ.16, கறுப்புச் சீனி ரூ. 12,செத்தமிளகாய் ரூ. 40, மிளகாய்த் தூள் ரூ. 50, ரின் மீன் ரூ.40, அதிகரித்து விற்கப்படுகிறது. அதாவது உலக சந்தையில் உணவுப்பொருட்களின் விலை அதிகரிக்கும் போது அவற்றின் விலைகளை உயர்த்தும் அரசாங்கம் தற்போது அங்கு விலை குறைந்துள்ள நிலையில் குறைக்காமல் பொருட்களின் விலையை குறையவிடாது வரிகளை விதித்துள்ளது.

நெத்தலிக்கும் 25 ரூபா வரியை மேலதிகமாக விதித்துள்ளது.பால்மா கிலோ ஒன்றுக்கு 55 ரூபாவால் மேலதிகமாக வரி அறவிடப்படுகிறது. இதனால் சிறுவர் முதல் வயோதிபர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்விலையுயர்வு காரணமாக தமது பாவனையை குறைத்துள்ளனர்.

இதேவேளை, புதிதாக விதிக்கப்பட்ட தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி வருமான எதிர்பார்ப்பு 17,000 மில்லியனாகவுள்ள நிலையில் இவற்றுக்கு மேலாக 2002 இல் கொண்டு வரப்பட்ட துறைமுக மற்றும் விமான நிலையவரி 3 லிருந்து 5 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர நாட்டின் உற்பத்தியை பாதிக்கும் வகையிலான வரிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதுதவிர உணவுப்பொருட்களுக்கு வரியை விதிக்கும் அதேநேரம் மனித கழிவகற்றலுக்கான வரியையும் அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. அதேபோல் ஒரு குடும்பம்,5 கால்நடைகள் இறைச்சிக்காக வளர்க்கப்படின் அதற்கு வரியை அறவிடவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், உற்பத்தியை பாதிக்கும் அதேநேரம் நாட்டை சிக்கலுக்குள் தள்ளிவிடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும் பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்புவதற்கு அரசு சொத்துகளை தனியாருக்கு விற்கும் செயற்பாட்டில் இறங்கியுள்ளது. புல்மோட்டை கனிய வள கூட்டுத்தாபனம் விற்கப்பட்டுள்ள அதேநேரம் மன்னாரில் எண்ணை அகழ்வை இந்தியாவிடம் கையளித்துள்ளது.எமது இராணுவத்தினர் மன்னாரை கஷ்டப்பட்டு மீட்டுள்ளனர்.இந்நிலையில் 10 பரலை அகழும்போது இந்தியா ஒரு பரலைமட்டுமே வழங்குமென்பதால் எமது வளம் நாசமாக்கப்படுகிறது. இதுபோல் மின்சார சபையின் ஒரு பகுதியை அரசு விற்க தயாராகவுள்ளது. இதனால் நாடு பாரிய சிக்கலுக்குள் தள்ளப்படும் சூழல் எழுந்துள்ளது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

புலிகள் பலவீனப்படுத்தப்பட்டிருப்பதால் மோதல்கள் விரைவில் முடிவுக்கு வரும்:85 வீதமானவர்கள் நம்பிக்கை.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In