இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமை இன்று யாழ்ப்பாணத்தில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்தது.
இச் சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பல்ல. ஏனையநாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரசன்னமாகியிருந்தனர். இந்திய அதிகார வர்க்கத்தின் அடியாளான அப்துல் கலாம், இனப்படுகொலையின் சூத்திரதாரி ராஜபக்விற்கு அங்கீகாரம் தேடும்நோக்கத்தின் அடிப்பையில் இலங்கையில் வலம்வ்ருகிறார் என்ற குறைந்தபட்ச அரசியலைப் புரிந்துகொள்ளாத தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பாக்கியம் செய்தவர்களாகக் கருதிக்கொள்கிறார்கள்.
இந்திய நாட்டின் குடியரசுத்தலைவராக இருந்த தமிழர், சிறந்த விஞ்ஞானி என்ற வகையில் அப்துல் கலாமை சந்தித்தமையானது பாக்கியம் என்று கருதுவதாக செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.
இவ்வாறான பெரியவர்களின் விஜயம் யாழ்ப்பாணத்துக்கு கிடைத்தமை பாக்கியமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
அப்துல் கலாமின் இன்றைய இலங்கை> யாழ்ப்பாண வருகையானது உண்மையில்> இந்தியா அதனது இலங்கை மீதான மேலாதிக்க நிலையைத் ஸ்தரப்படுத்த உதவும் நோக்கத்தையே கொண்டது.
தமிழ் மக்கள் மத்தியில் இன்று இந்தியாவை ஒருவித எதிரியாகக் கருதும் நிலையை மாற்றியமைக்கவே இந்த அப்துல் கலாம் விஜயம் பயன்படுத்தப்படுகிறது.
இன்றைய பூகோள அரசியல் நிலையில்> இலங்கைத் தமிழர்கள் தொடர்ந்தும் பகடைக் காய்கள் ஆகத்தான் பயன்படுத்தப்படுவர் என்பதை அவர்கள் மறந்துவிடக்கூடாது. இதற்கு இதை ஒப்பாரி வைத்துக் கூறவேண்டும் என்பதற்கில்லை.
இன்றைய நிலையில்> இலங்கையின் தமிழ் பேசும் சமூகம்> ஆராயும் வல்லமையையும்> அறிவையும்> உருவாக்க சிந்தனையையும் உச்சப்படுத்த வும்> பொருளாதார ரீதியாக முன்னேறவும் திட்டமிடப்பட்ட செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
அரசியல் தீர்வு என்பது ஒருவித ஏமாற்றாகத்தான் இருக்கும். இந்த ஏமாற்று நடவடிக்கைகளுக்கு> தமிழ் அரசியல் கட்சிகளும் இணைந்துதான் நசயற்படுவர். இந்த யதார்த்தங்களைப் பூpந்து> ஆகவேண்டிய முக்கிய காரியங்களைச் செய்வதுதான் புத்திசாதூpயமானது.
புலம் பெயர்ந்த நாடுகளில் வாழ்பவர்கள் இவற்றைச்செய்யாது வாதங்களில் மாத்திரம் ஈடுபடுவது பயனற்றது> நேரப்போக்கானது!