மஹிந்தவைச் சந்திப்பதில் இந்தியக் கலைஞர்களுக்குத் திடீர் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இவர்களது இந்தச் சந்திப்பிற்கு இந்து ராம் ஒருங்கிணைப்பாளராகச் செயற்படுவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சந்திப்புகளின் ஒரு பகுதியாக இந்தியாவின் பிரபல இசைக் கலைஞர் ரவிசங்கர் மகிந்த றாஜபக்சவை அலரி மாளிகையில் நேற்றைய தினம் சந்தித்திருக்கிறார்.
இதன் தொடர்ச்சியாக அடுத்த மாதமளவில் ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சனும் மகிந்த றாஜபகச்வைச் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.








hindu ram is bramin also a maamaa
இதே நேரத்தில் முன்னாள் தமிழீழ விடுதலை புலிகள் (LTTE ) போராளியும், பின்னர் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும் (TMVP ) கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் அவர்கள் நேற்று இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா இராவ் உடனான சந்திப்பில் அவருக்கு விடுத்ததாக அறியப்பபடும் இந்திய அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்று
பேச்சுவார்த்தை நடத்துவதற்காக புதுடில்லிக்கு புறப்படவுள்ளார் என அறியப்படுகிறது.
அத்துடன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP ) கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை நிருபமா ராவ் பார்வையிட்டிருப்பதாகவும், அவர்களின் கொள்கைகளை மேம்படுத்துவதற்கான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும் என சிவநேசத்துரை சந்திரகாந்தனிடம், நிருபமா இராவ் உறுதியளித்திருந்ததாகவும் அறியப்படுகிறது.
இவ் ஒழுங்கின் பின்னணியில் முன்பு வடகிழக்கு முதலமைச்சர் வரதருடன் இருந்து பின் டக்கிலசுவுடன் இருந்து, பின் சித்தர், சங்கரி கூட்டு வைத்து…… தற்போது பிள்ளையான் என அழைக்கப்படும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உடன் இருக்கும் விக்னேஸ்வரன் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கலாம். மேலும் இவரின் ஆலோசனையின் பேரிலேயே வடக்கிலும் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP ) தேர்தலில் குதித்துள்ளனரோ தெரியவில்லை.
இது இப்படியிருக்க, இந்தியத்தூதரகத்தின் அலுவலகமொன்றை யாழ்ப்பாணத்தில் திறப்பதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பிரேரணை குறித்து இந்தியா விடுத்த வேண்டுகோளுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வளவு காலமும் மலையக இந்திய வம்சாவளிக் குடியினரின் வசதி கருதி இந்தியத்தூதரகத்தின் அலுவலகம் கண்டியில் மாத்திரமே உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதைப்பற்றி இந்திய வெளியுறவுச்செயலாளர் நிருபமா இராவ் ஜனாதிபதியுடன் பேசியுள்ளதாகவும் வெளிநாட்டு இணையதள தகவல்கள் தெரிவித்துள்ள வேளையில், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் புதுடில்லி பயணம்; வடக்கில் TMVP போட்டியிடுவது; யாழில் இந்திய தூதரக அலுவலகம்………..ஒரு தொடர்பு உள்ளது மாதிரித் தெரியவில்லையா?
முன்னைய கருத்துப் பகுதியில் குறிப்பிட்டது மாதிரி, சோழியன் குடும்பி சும்மா ஆடாது. (https://inioru.com/?p=11184)
“மேலும், தற்போது இலங்கையின் மிகப்பெரும் கொடையாளி நாடாக சீனா உள்ளதாலும், பாரிய முதலீடுகளில் ஈடுபடுவது மட்டுமல்லாமல், எந்நேரமும் இராணுவ மயமாக்கப்படக் கூடிய எண்ணெய்குதங்களைக் கொண்ட அம்பாந்தோட்டை துறைமுகம் முதற்கொண்டு இந்து சமுத்திரத்தில் இந்தியாவின் சுற்றை மியான்மார் தொடங்கி கடல் பாதையை ஆக்கிரமித்து வரும் நிலையில், இலங்கை கடற்பரப்பில் எண்ணெய் வளம் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகப் செய்திகள் வரும் நிலையிலும், இந்தியா எந்நேரமும் 80களின் அனுராதபுர படுகொலைகளையோ, மன்னார் இரயில் தாக்குதலையோ, சாவகச்சேரி போலிஸ் நிலைய தாக்குதலையோ தொடரலாம். இவ் சீன அச்சுருத்தல்களுக்காகவே தற்போது கடுமையான பேச்சு வார்த்தைக்கு முன்பு இலங்கைத் தூதுவராக இருந்த, இந்திய வெளிவிவகார செயலர் நிருபாமா இராவை அனுப்பியுள்ளார்கள். மற்றும்படி ஈழத்தமிழருக்காகவோ, 13வது சீர்திருத்த சட்டம் அமுலாக்கப் பட வேண்டும் என்ற உணர்வில்லோ அல்ல.” – Posted on 03/05/2010 at 4:09 pm
– https://inioru.com/?p=11058
ஒரு பக்கம் சுரேஷ், சம்பந்தர் மூலம், மற்ற பக்கம் பிள்ளையான் (விக்னேஸ்வரன்) மூலம், இன்னும் முன்னாள் அவர்களின் தொடர்பு இருந்து பின் எல்லாம் விட்டிட்டு இருந்தவர்களை அவர்கள் இருந்தவர்களுடன் திரும்ப சேர்பித்து ஊடுருவ விட்டு…..இப்படியே எமது போராட்டம் போகட்டும்……..இன்னும் வரதர் இந்தியாவில், ENDLF இந்தியாவில்…….
– அலெக்ஸ் இரவி.