Friday, May 9, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பெண்களின் கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பை கண்டிக்கிறோம் : CCUC

இனியொரு... by இனியொரு...
11/25/2012
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள்
0 0
12
Home பிரதான பதிவுகள் | Principle posts

ஊடகங்களுக்கான அறிக்கை

இலங்கை வாழ் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான ஐக்கியத்தை வலியுறுத்தும் எமது இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம் வட மாகாணத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பெண்களின் கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பை வன்மையாக கண்டிப்பதுடன், அதனை உடனடியாக நிறுத்தும் படி அரசாங்கத்தை வலியுறுத்துவதுடன் வடக்கு இளைஞர்களும், யுவதிகளளும் அவர்களின் பெற்றோர்களும் ஏமாந்தும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு இன்னுமொரு அடிப்படையாக போகின்ற இலங்கை பேரினவாத அரசாங்கத்தின் திட்டமிட்ட கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளுக்குள் மாட்டுப்படாது. விழிப்புணர்வுடன் செயற்படும்படி கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம் தற்போது வட மாகாணத்தில் பெண்களை இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளும் எதேச்சதிகார நடவ்டிக்கைகள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இக்கேந்திரத்தின் இணை அழைப்பாளர்களான இ. தம்பையா, டபிள்யூ.சோமரத்ன ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி, கணேசபுரம் பாரதிபுரம் கிராமங்களை சேர்ந்த 109 தமிழ் யுவதிகளை ஸ்ரீ லங்கா சேர்த்துக் கொண்ட நடவடிக்கையானது தமிழ் மக்களை பேரினவாத இன அழிப்பு சதிக்குள் மாட்டுவதாகும். அது குறித்து எமது கேந்திரத்திற்கு கிடைத்திருக்கும் தகவல்கள் சாதாரண மனிதாபிமானிகளை கூட ஆத்திரமூட்டுவதாக இருக்கிறது.

யுத்தத்தினால் அன்புக்குரியவர்களை இழந்து அவமானப்பட்டு உடமையிழந்து, மனம் நொந்து நடை பிணங்களாக வாழும் தமிழ் மக்களுக்கு யுத்தம் முடிவடைந்தும் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக முகங்கொடுக்க வேண்டிய சவால்கள் வானளவு உயர்ந்து கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு தேவை யுத்த பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கான நல்லிணக்க நடவ்டிக்கைகள், புனர்வாழ்வு, இயல்பு வாழ்க்கை, எல்லாவற்றுக்கும் மேலாக தங்கள் சுயநிர்ணய உரிமையை அனுபவிப்பதற்கான அரசியல் தீர்வு.

பாதிக்கப்பட்டு வறுமைபட்டிருக்கும் தமிழ் மக்கள் அவர்களின் பிள்ளைகளுக்கு குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது என்ற தோரணையில் தங்களுக்கு நம்பிக்கையில்லாத தங்களை ஆக்கிரமித்த தங்கள் உடன் பிறப்புகளின் உயிரிழப்புகளுக்கும் பெண்களின் சீரழிந்த நிலைமைகளுக்கும் காரணமானதென்ற படிமங்களை கொண்ட ஸ்ரீ லங்கா இராணுவத்தில் நிர்பந்திக்கப்பட்டு சேர்க்கப்படுவதை மனப்பூர்வமாக ஏற்கும் நிலையில் இல்லை என்பதை எமது கேந்திரம் நன்கு அறியும்.

யுத்தத்தின் போதும் பின்பும் அதிகமாக உடல் உள ரீதியாக பாதிக்கப்படுபவர்கள் பெண்களே. பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது அடக்குமுறையாளர்களின் மிகவும் மலிந்த செயற்திட்டம் என்பதை எல்லோரும் அறிவர். தமிழ் பெண்களை இராணுவத்தில் சேர்க்கும் ந்டவ்டிக்கையானது அத்தகைய அடக்கு முறைகளின் நீட்சியாக இருக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

யுத்த அழிவிலும் அடக்கு முறைகளிலிருந்தும் இன்னும் மீளாதிருக்கும் தமிழ் தேசிய இனத்தின் பெண்களை ஸ்ரீ லங்கா இராணுவத்தில் இணைப்பது என்பது இன அழிப்பினதும் , அடக்கு முறையினதும் இன்னொரு வழிமுறை என்றே நாம் கருதுகிறோம். இது எவ்வகையிலும் இன நல்லிணக்கத்துக்கான வழிமுறையாகவோ தேசிய இன பிரச்சனைக்கு தீர்வாகவோ அமையாது. மாறாக தமிழ் மக்களின் மனங்களில் அழுத்தங்களையும் கிலேசங்களையும் ஏற்படுத்துவதாகவே இருக்கும்.

தமிழ் மக்கள் இலங்கை தமது நாடென்ற நிலைமைக்கு இன்னும் திரும்பவில்லை இந்நிலையில் அவர்கள் வெறுத்து ஒதுக்கும் மன நிலையிலிருக்கும் ஸ்ரீ லங்கா இராணுவத்தில் சேர்க்கப்படுவதை ஏற்கப்போவதில்லை.

எனவே தமிழ் இளைஞர்களையும், யுவதிகளையும் ஸ்ரீ லங்கா இராணுவத்தில் சேர்ப்பதை விடுத்து இன நல்லிணக்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சமூக அரசியல் நடவ்டிக்கைகளில் ஈடுபடுவது தமிழ் மக்களின் ஜனநாய உரிமைகளை வலியுறுத்தும் சக்திகளின் தற்போதைய தலையாய கடமை என்பதை எமது கேந்திரம் நினைவு படுத்துகிறது. இது குறித்த திட்டமிட்ட, ஐக்கியபட்ட அல்லது பொது இணக்கப்பாட்டுடனான நடவடிக்கைகளை வலியுறுத்திகிறது.

இப்படிக்கு,
இ. தம்பையா
டபிள்யூ. சோமரத்ன
இணை அழைப்பாளர்கள்

இராணுவத்தில் 109 பெண்கள் – அறுக்கப்படுவதற்கான ஆடுகள் – என்ன செய்யலாம்?
இனச் சுத்திகரிப்பு என்ற கட்டத்தை அடைந்துள்ள ஒடுக்குமுறை: பாதுகாப்பு இயக்கம்

 

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
பாண்டி பஜார்  துப்பாக்கிச் சூட்டு  வழக்கிலிருந்து  பிரபாகரனின் பெயர் நீக்கம்

பாண்டி பஜார் துப்பாக்கிச் சூட்டு வழக்கிலிருந்து பிரபாகரனின் பெயர் நீக்கம்

Comments 12

  1. சி.சந்திரமெளலிசன் says:
    12 years ago

    While congratulating the statement and appreciating the paragraph “தமிழ் மக்களின் ஜனநாய உரிமைகளை வலியுறுத்தும் சக்திகளின் தற்போதைய தலையாய கடமை என்பதை எமது கேந்திரம் நினைவு படுத்துகிறது” may I kindly request the இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம் to come foward with its action plan about this tragedy and real revolutionary action .

    • Dr. Sri S. Sriskanda says:
      12 years ago

      I am confused. Are they forcibly conscripting? I think they are meeting some local requirements.

  2. சி.சந்திரமௌலீசன் says:
    12 years ago

    Yes they are forcibly recruiting . it is confirmed .

    In Srilanka and in other countries there is a process for recruitment . 
    Like gazette advertisement , interview  , selection process . etc .  

    These  are done by adequately qualified professionals or senior members of the military .
    Nothing this sort happened here . 

    We have nursing ,teaching , bank , administrative and management vacancies in Tamil areas these are filled by Sinhalese from South. 
     
    What happened here is girls were picked up by foot soldiers.  This is clear indication of “comfort women ” 
    Now the danger is every military camp will go in to this operation . 
    each and every village girls will face this danger. 
    it can happen in Kilinochchi , Baticaloa , Trinco , Jaffna , Mannar etc.
    one day victim of this “comfort women” operation will be anyone’s wife , sister, cousin  etc.

     I can only remind  the “then they came ………..) quotation from   Martin Niemöller (1892–1984) 
    When the Nazis came for the communists,
    I remained silent;
    I was not a communist.
    When they locked up the social democrats,
    I remained silent;
    I was not a social democrat.
    When they came for the trade unionists,
    I did not speak out;
    I was not a trade unionist.
    When they came for the Jews,
    I remained silent;
    I wasn’t a Jew.
    When they came for me,
    there was no one left to speak out.

    http://tamilwhiteelephant.blogspot.co.uk/2012/11/blog-post_5956.html

    • M.Thiru says:
      12 years ago

      When the Nazis came for the communists,
      I remained silent;
      I was not a communist.
      When they locked up the social democrats,
      I remained silent;
      I was not a social democrat.
      When they came for the trade unionists,
      I did not speak out;
      I was not a trade unionist.
      When they came for the Jews,
      I remained silent;
      I wasn’t a Jew.
      When they came for me,
      there was no one left to speak out
      It’s true Mauleesan, all the government are more or less the same.
      But,
      Do you know about this?
      When the Nazis came for the communists,
      I remained silent;
      I was not a communist.
      Yes I did because I wasn’t a communist;
      They killed Vijayananthan, Annnamalai for their views.
      When they locked up the social democrats,
      I remained silent;
      I was not a social democrat.
      Yes I did because I wasn’t a social democrat.
      They killed Mano, Selvi, Thillai and so on.
      When they came for me,
      there was no one left to speak out
      I managed to escaped.
      I was leading a good life.
      Watching the killings of innocents.
      Now I know,
      We have to learn to not to be silence at all.
      What do you think. ?

  3. MustangGT says:
    12 years ago

    இத எத்தன வாட்டிதான் காப்பியடிச்சு போடுவீங்கோ ?

    • சி.சந்திரமௌலீசன் says:
      12 years ago

      ஹி ஹி இவனுகளுக்கு எத்தனை வாட்டி சொன்னாலும் புரியுதில்லையே ??? ஒருவேளை irreversible ஆக சிந்தனை 
        ஊனமுற்றவர்களாக இருப்பார்களோ யோசிக்கின்றேன் . இன்னும் பரிசோதனைகள் முடியவில்லை . தோற்று நோயோ என்றும் தெரியவில்லை திரு திரு திரு என்று விழிக்க வேண்டி இருக்கின்றது .– எரிச்சல் ஊட்டியதுக்கு தயவு செய்து மன்னிக்கவும்…………………………

      • MustangGT says:
        12 years ago

        இதுக்கெல்லாம் எரிச்சலாகி ஏன் இரத்த அழுத்தத்தை ஏத்தனும்?

  4. சி.சந்திரமௌலீசன் says:
    12 years ago

    Mr Thiru and others,

    In rhetoric and ethics, two wrongs make a right and two wrongs don’t make a right are phrases that denote philosophical norms. “Two wrongs make a right” is a fallacy of relevance, in which an allegation of wrongdoing is countered with a similar allegation. Its antithesis, “two wrongs don’t make a right”, is a proverb used to rebuke or renounce wrongful conduct as a response to another’s transgression.
    http://en.wikipedia.org/wiki/Two_wrongs_make_a_right

    நிற்க 
    All our martyrs from all our organisations genuinely believed what they are doing is right for the Tamil nation .
     We have been defeated because almost all our organisations did do mistakes. no doubt about that .

    What you are trying to say is one wrong does make all the wrongs right.
    you are wrong that one wrong will not make another wrong right. 
    You are wrongly seeing the aspects of wrongs.
    The wrongs that  you listed above does not make “109 Comfort Woment ” operation right.

    In a good discussion genuine parties come out with subject matter . 
    Here the subject matter is  “Comfort women-பாலியல் அடிமைகளாக”  

    இங்கு வரும் கருத்தாளர்கள் பலரிடம் இருக்கும் இரு தவறுகள் .
    கேட்கப்பட்ட பொருளுக்கு வெளியே விவாதத்தை இழுத்துச் செல்லல் .
    ஒரு தவறு நடந்து இருக்கின்றது அதற்கு ஒண்டும் செய்யவில்லை எனவே இப்பொழுது நடக்கும் தவறு பற்றி நாம் பேச முடியாது என்ற வழுநிலை வாத போக்கு .
    சாதி -ஊர் போன்ற பிர்போக்குவாத சமூகத்தில் பிறந்த காரணமோ என்னவோ  கருத்தை சுற்றி தனிபட்டவர் முன்பு என்ன இயக்கத்திற்கு ஆதரவாக இருந்தார் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை மையமாக வைத்து பேசுதல் இது சாதி வெறியை விட எந்த வகையிலும் குறைந்ததல்ல.   தாழ்ந்த சாதி எனப்படும் பிறந்த ஒருவன் அந்த சாதி தொழில் செயாவிட்டாலும் அவனை .அவன் எத்தனை உயரிய  பண்புகளுடன் வாழந்தாலும் . அவனை சாதி சொல்லி பேசுவது போன்ற செயல் இது .

     “Comfort women-பாலியல் அடிமைகளாக”  கடத்தப்பட்ட பெண்கள் தொடர்பாக என்ன செய்யலாம் “.
    Please avoid fallacious arguments .

  5. சி.சந்திரமெளலிசன் says:
    12 years ago

    these girls never joined in the first place , இலங்கையில் சில தினங்களுக்கு முன்னதாக இராணுவத்தில் சேர்க்கப்பட்ட 109 பெண்களில் 6 பேர் சுயவிருப்பின் பேரில் விலகிச் சென்றுள்ளதாக இலங்கை இராணுவப் பேச்சாளர் நிஹால் ஹப்புஆராச்சி தெரிவித்துள்ளார்.

    இராணுவத்தில் இருந்து தமிழ் பெண்கள் தப்பி ஓடியதாக முன்னர் வந்த செய்திகளை அவர் மறுத்துள்ளார்.

    அதேவேளை, அந்தப் பெண்கள் துன்புறுத்தப்பட்டதாகவும், அடைத்து வைக்கப்பட்டதாகவும் வந்த செய்திகளையும் அவர் மறுத்துள்ளார்.

    ‘ஏமாற்றப்பட்டு இராணுவத்துக்கு சேர்க்கப்பட்டனர்’

    தமிழ் பெண்கள் ஏமாற்றப்பட்டே இராணுவத்தில் சேர்க்கப்பட்டதாக சிறிதரன் எம்பி கூறுகிறார்.

    கேட்கmp3
    இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

    மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்
    மாற்று மீடியா வடிவில் இயக்க
    முன்னதாக, இராணுவத்துக்கு சேர்க்கப்பட்ட 109 தமிழ் பெண்களில் 3 பேர் தாம் ஏமாற்றப்பட்டு இராணுவத்தில் சேர்க்கப்பட்டதாக கூறி, அதில் இருந்து விலகிச் சென்றுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கூறியிருந்தார்.

    அலுவலகப் பணிகளுக்காக, கணினி பயிற்சிகளுக்காக என்று பொய்யாக கூறி சேர்க்கப்பட்ட தாம் இராணுவ பணிகளுக்கு பயன்படுத்தப்படலாம் என்று தெரிய வந்ததுடன் இராணுவத்தில் இருந்து விலக அந்தப் பெண்கள் கோரியதாகவும், ஆயினும் ஒரு நாள் வரை தடுத்து வைக்கப்பட்ட அவர்கள் பின்னர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் சிறிதரன் எம்பி கூறியுள்ளார்.

    முற்றிலும் இராணுவத்தினாலும், அதன் உளவுப் பிரிவினாலும் சூழப்பட்டுள்ள நிலையில் அதில் இருந்து மன்னார், துணுக்காய் பகுதியைச் சேர்ந்த இந்தப் பெண்கள் தப்பி ஓடியதாக வெளிவந்த செய்திகள் தவறு என்றும் சிறிதரன் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக தான் உரிய இடங்களில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் சிறிதரன் தமிழோசைக்கு தெரிவித்தார் http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/11/121124_girlsdeserters.shtml

  6. சி.சந்திரமௌலீசன் says:
    12 years ago

    “Comfort-women -பாலியல் அடிமைகளாக ” கடத்தபட்ட பெண்களை விடுவிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்து. தமிழர் அமைப்புக்கள் அனைத்தும் மவுனம் . இணைய சிப்பாய்கள் மூடர்களாய் உறங்குகின்றார்கள் .  போலி இனப் பற்றாளர்கள் முகம் கிழிகின்றது . 
    என்னடா அணியாம் இது . 
    http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=baadc745-0192-4265-a68f-b2b13c64071c

  7. சி.சந்திரமெளலிசன் says:
    12 years ago

    தமிழ்ப் பெண்களின் ஆட்சேர்ப்பு சட்டரீதியானதல்ல – நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்
    [ திங்கட்கிழமை, 26 நவம்பர் 2012, 00:38 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]
    புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளிகள் சிறிலங்கா இராணுவத்தில் சட்டவிரோதமாக இணைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்ன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

    “இந்த ஆட்சேர்ப்பு மோசமான கவலையளிக்கும் ஒரு விவகாரம்.

    இது தொடர்பான உரிய வர்த்தமானி அறிவித்தல் ஏதும் முறைப்படி வெளியிடப்படவில்லை.

    இந்த ஆட்சேர்ப்பு சட்டவிரோதமாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சிறிலங்காவின் வடக்கு இராணுவத் தளபதி வீடுவீடாகச் சென்று, கட்டாயப்படுத்தி பெண்களை இராணுவத்தில் சேர்த்துள்ளார்.

    இந்தப் பெண்களுக்கு எந்தவொரு இராணுவப் பயிற்சியும் அளிக்கப்படாது என்று அவர் கூறியுள்ளார்.

    ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பெண்கள் ஏன் அழுகிறார்கள் என்று சிறிலங்காவின் பெண் இராணுவத்தினரிடம் அல்ஜெசீரா கேள்வி எழுப்பியதற்கு, குடும்பத்தினரை விட்டு பிரியும் உணர்ச்சியால் அழுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

    கட்டாயமாக ஆட்சேர்க்கப்பட்டதாகவும், இராணுவத்தில் வேலைக்காக இவர்கள் கொண்டு செல்லப்படுவதாகவும் சிலர், கூறியுள்ளனர்” என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

    அதேவேளை, “பெண்கள் மட்டும் ஏன் தெரிவு செய்யப்பட்டனர்?” என்று கேள்வி எழுப்பியுள்ள நவசமசமாசக் கட்சியின் விக்கிரமபாகு கருணாரத்ன. ”இது மிகவும் மோசமான விவகாரம்” என்றும் தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.org/view.php?20121126107341

  8. சி.சந்திரமெளலிசன் says:
    12 years ago

    “One hundred and nine Tamil women youth have been recruited to the Sri Lanka army. They have been recruited to the 6th battalion of the women’s voluntary forces. The media spokesman for the Sri Lanka Army Brigadier Ruwan Wanigasuriya said that they will be deployed in Mullathivu and Kilinochchi districts upon completion of their training. They will undertake civil activities in the Sri Lanka Army. A function in this connection was held at Bharathipuram in Kilinochchi today in accordance with Hindu religious rites under the leadership of Kilinochchi Army Commander Major General Udaya Perera .”http://www.slbc.lk/index.php/component/content/article/1-latest-news/12943-109-tamil-women-youth-recruited-to-sri-lanka-army

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...