Monday, June 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பிரித்தானியாவில் பல தமிழ் மாணவர்களின் விசா அனுமதி பறிமுதல் செய்யப்படலாம்

இனியொரு... by இனியொரு...
07/01/2014
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

uk_visaதேசிய இன ஒடுக்குமுறை இலங்கை போன்ற நாடுகளில் ஏற்படுத்தியுள்ள அச்சமும் பாதுகாப்பின்மையும் வறுமையும் அங்கிருந்து இளைய சமுதாயத்தை வெளியேற்றிக்கொண்டிருக்கின்றது. நாளாந்த வாழ்க்கை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த இடைவெளிக்குள் மேற்கு ஏகபோக நாடுகள் தமது பொருளாதாரக் கொள்ளையைத் தங்குதடையின்றி நடத்திவருகின்றன. இலங்கை போன்ற நாடுகளிலிருந்து மாணவர்களாகவும் அகதிகளாகவும் பலர் வெளியேறி மேற்கு நாடுகளில் தஞ்சமடைகின்றனர். மேற்கு நாடுகளில் கூட மூன்றாம்தர மனிதர்களாக அவமானத்திற்கு உள்ளாக்கப்படும் இடம்பெயர்வோர் வாழ்விழந்த தெரு மனிதர்களாக தமது நாட்களைக் கடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மாணவர்களுக்குச் சட்டரீதியாக வேலை செய்யும் அனுமதி மறுக்கப்படுகின்றது. தமிழ் மாணவர்கள் பலர் சட்டவிரோதமாக தமிழ் மற்றும் இந்தியர்களின் வர்த்தக நிறுவனங்களில் வேலைக்கு ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அவர்கள் வழங்கும் ஊதியம் பிரயாணச் செலவிற்கே போதுமானதாக இல்லை.

இந்த நிலையில் பிரித்தானியாவிற்கு வந்துள்ள மாணவர்களில் பலர் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். கிளின்வர், மேற்கு லண்டன், பெர்போர்ட்செயர் ஆகிய பல்கலைக் கழகங்கள் உட்பட 57 வெளிநாட்டவர்கள் பயிலும் கல்லூரிகளின் வெளிநாட்டு மாணவர்கள் பயில்வதற்கான அனுமதிப்பத்திரத்தை பிரித்தானிய உள்துறை அமைச்சகம் இரத்துச்செய்துள்ளது.

பிரித்தானியாவில் கல்விபயிலும் அனுமதியைப் பெறுவதற்கு குறித்த ஆங்கிலப் பரீட்சையில் தேர்ச்சி பெறுவது அவசியம். பயண முகவர்கள் அப்பாவி மாணவர்களுக்கு போலி ஆங்கிலப் பரீட்சைக்கான சான்றிதழ்களை வழங்கி பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக்கொடுப்பது வழமை. 48 ஆயிரம் மாணவர்களில் 29 ஆயிரம் போலிச் சான்றிதழ்கள் எனவும் 18 ஆயிரம் உறுதிப்படுத்தப்படாதவை எனவும் உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதால் இந்தப் பல்கலைக் கழகங்களுக்குரிய அனுமதி இரத்துச்செய்யப்பட்டுள்ளது.

இப் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் அனுமதிபெற்று வந்தவர்கள் இந்த வருட இறுதிக்குப் பின்னர் கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அனுமதிப்பத்திரமுள்ள வேறு பல்கலைக்கழகங்களில் இவ்வருட இறுதிக்குள் அனுமதிபெறாவிட்டால் தமது நாடுகளை நோக்கி இவர்கள் திருப்பி அனுப்பப்படும் நிலை உருவாகியுள்ளது.

பிரித்தானிய உட்பட மேற்கு நாடுகளை நோக்கிப் புலம்பெயர்பவர்களின் அவல நிலை வெளியே பேசப்படாமல் மறைக்கப்படுகின்றது. உலகம் முழுவதும் பிச்சை கேட்கும் நிலைக்கு இலங்கை அரச பாசிசமும் அதன் பின்புலத்தில் செயற்படும் மேற்கு ஏகாதிபத்தியமும், இந்திய அரசும் துரத்தி வந்திருக்கின்றது.

இது பேசப்பட வேண்டும். இலங்கையிலிருந்து வரும் அப்பாவித் தமிழர்களுக்குப் புலம்பெயர் நாடுகளில் ஏற்படும் அவல வாழ்க்கை குறித்த விழிப்ப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

இலங்கையிலிருந்து கல்விகற்க லண்டன் வரும் மாணவர்களின் அவல நிலை : சசீதரன்

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ஜூலையின் ஞாபகங்கள் : ப்ரியந்த லியனகே

Comments 2

  1. Rengan says:
    12 years ago

    யாழ்ப்பாணத்தில் குடாநாட்டுத் தினசரிகளில் தினமும் மூன்றிலிருந்து நாலு அல்லது அய்ந்து நிறுவனங்களாவது வெளிநாடுகளுக்கு மாணவர்களை அனுப்ப உதவுவதாக கவரச்சிகரமான விளமபரங்களை வெளியிடுகின்றன. இந்நாடுகளுள் லணடனும் அடக்கம். மூ ன்று வருடங்களுக்கு முன்னர் ஒரு வருடத்துள் லண்டனில் நிரந்தர வதிவிடஉரிமை என விளம்பரம் செய்து அபபாவி மாணவர்களை ஏமாற்றிய ஒரு நிறுவனத்தை நீதிமன்றத்திற்குக் கொண்டுசென்று ஒவ்வொரு மாணவர்களுக்கும் 7 லட்சம் ரூபா இழப்பீடு பெற்றுக் கொடுத்திருந்தேன். ஆனால் அப் பணத்தை இன்னொரு நிறுவனத்திடம் பறிகொடுத்து அம் மாணவர்கள் சிலர் இப்போது நீதிமன்றம்; வந்துபோயக் கொண்டிருக்கிறார்கள். ஏமாற்றப்படுபவர்களுள் பெரும்பாலோர் அப்பாவி ஏழைகள். ஏமாற்றும் நிறுவனங்களுள் ஒன்றின் உரிமையாளர் புலம்பெயர் நாட்டிலுள்ள தமிழர். கட்டுப்படுத்த எவருமில்லை. போர்க்குற்ற விசாரணை தவிர்ந்த வேறெந்தப் பிரச்சினையும் தமிழ் மக்களின் பிரச்சினையாகக்காட்டபடுவதில்லை. அறுபது வருடமாகத் தமிழ் மக்களை ஏமாற்றி வயிறுவளர்த்துவந்திருந்த தமிழ் தேசிய அரசியல் தலைமைகள் இவைகளைக் கண்டுகொள்ளத் தயாரில்லை. உங்களது செய்தியை இங்கு எவரும் ஏற்றுககொள்ள மாட்டார்கள். நீங்கள் உட்பட தமிழ் தேசியஅரசியல் வியாபாரிகள் தோற்கடிக்கப்படும்வரை இவை தொடரும்.

    • Sutharsan says:
      12 years ago

      What you are doing or done is good. As long as there are idiots to be conned there will always be conmen. Don’t give me this BS that who get conned all poor kids. They are rich enough to pay the fees. That is not poor in SL.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Loading Comments...