பாராளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்டார் என்ற போலிக் குற்றம்சுமத்தி காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த அப்சல் குரு தூக்கிலிடப்பட்டு கொலைசெய்யப்பட்டது தெரிந்ததே. தூக்கிலிடப்பட்ட அப்சல் குரு தனது சிறைக் கதவுகளிலிருந்து நூறு மீட்டர் தொலைவிலேயே புதைக்கப்பட்டார். குடும்பத்தினருக்குக் கூட அறிவிக்காமல் நடத்தப்பட்ட இப் படுகொலை உரிமை அமைப்புக்கள், ஜனநாயகவாதிகள் கண்டித்திருந்தனர்.
அப்சல்குருவின் குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்சலின் உடலை தங்களிடம் ஒப்படைக்கும்படி கோரிக்கை வைத்தனர். இதற்கு அரசு மறுத்தது. அப்சல் குடும்பத்தினர் திகார் ஜெயிலில் வந்து பிரார்த்தனை நடத்த மட்டும் அனுமதி அளித்தது.
தற்போது அப்சலின் மனைவி தபசும், உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அப்சலின் உடலை பெறுவதற்கு தனக்கு முழு உரிமை உண்டு என்றும் காஷ்மீரில் உள்ள தங்கள் சொந்த ஊரில் மத சம்பிரதாயப்படி அடக்கம் செய்ய விரும்புவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
அடிப்படை ஜனநாயகக் கோரிக்கையான இக்கடிதம் குறித்து மத்திய அரசு இன்னும் எதுவும் கூறவில்லை.








1948. Kashmir and Palestine will always ring a bell for any Sri Lankan Tamil. Chief Minister Omar Abdullah is saying the right thing. The creation of the problem itself lies in its politics.
If everone is saying the right thing who is saying the wrong thing here ?