பூந்தமல்லி சிறப்பு முகாமில் விசாரணையே இல்லாமல் 5 வருடங்களுக்கு மேலாக தம்மை அடைத்து வைத்திருப்பதை எதிர்த்து கடந்த 30 திகதி முதல் உண்ணாவிரதம் இருந்து வரும் ஈழத் தமிழ் அகதியான பகீரதனின் உடல்நிலை மிகவும் பாதிப்படைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 5.3.2007 ஆண்டு இலங்கைக்கு பொருட்கள் கடத்தியவர்களுக்கு பணம் கொடுத்தார் என்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார். பின்னர் பிணையில் வெளிவந்த இவரை சிறை வாசலிலேயே கைது செய்த கியூ பிரிவினர் செங்கல்பட்டு சிறப்புமுகாமில் அடைத்தனர்.
செங்கல்பட்டு சிறப்புமுகாமில் இவர் உட்பட பலர் தங்களை விடுதலை செய்யக்கோரி கடந்த 2.2.2010 அன்று உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரதம் இருந்தவர்கள் காவல்துறையினரை தாக்க முயன்றார்கள் என்று பொய்யான குற்றம் சுமத்தி இரவோடு இரவாக 200 காவல்துறையினர் முகாமிற்குள் நுழைந்து உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த உண்ணாவிரதத்தை ஒருங்கிணைத்த பகீரதன் உட்பட முக்கியமான 15 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். 43 நாட்களுக்கு பின் பிணையில் விடுதலை செய்யப்பட்ட இவர்களை மீண்டும் கியூ பிரிவினர் கைது செய்து பூந்தமல்லி முகாமில் அடைக்கப்பட்டனர்.
2.2.2011 வெளியிலிருந்து வழக்கை நடத்திக்கொள்ளலாம் என்று இவர் விடுவிக்கப்பட்டார்.விடுதலை செய்யப்பட்ட பகீரதன் வழக்கை முடிக்காமல் நாட்டைவிட்டு வெளியேற முயன்றார் என்று 4.7.2012 அன்று கைது செய்து மீண்டும் பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார்.
யாழ்.பல்கலைக்கழக மாணர்வகள் கைதுசெய்யப்படதற்குக் கூட கழுத்து நரம்பு புடைக்க ஆவேசமாக அலறும் சீமான், வைகோ குழுவினர் இவர் சிறையில் அடைத்துவைக்கப்பட்ட ஐந்து வருடங்களும் தமிழ் நாட்டிலேயே வாழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் நாட்டில் வாழும் தமிழ் இனவாதிகள் முள்ளிவாய்க்கால் படுகொலைக் காலத்தில் அங்கு எழுச்சிகள் ஏற்படவிடாமல் தடுத்தவர்கள். தமிழ் நாட்டிலேயே வதைக்கப்படும் ஈழத் தமிழர்கள் குறித்து இவர்கள் கண்டுகொள்வது கிடையாது.








Most degrading place for Eelam Tamils outside Sri Lanka where justice is denied to them