All posts by இனியொரு...

அரசியல் யாப்பு சதிப்புரட்சியிலிருந்து தற்காலிகமாக இலங்கை மீண்டதன் பின்..

இந்திய அதிகாரவர்க்கத்தின் பின் தங்கிய கோட்பாட்டு பின்புலம் இந்துத்துவ பாசிசம் என்றால், இலங்கையில் சிங்கள பவுத்த பேரினவாதம் செயற்படுகிறது. இந்தியாவில் இந்துத்துவத்தின் பாசிச வடிவம் மோடி அரசு என்றால் அதன் இலங்கைக்கான பாசிச முன்முகம் ராஜபக்ச குடும்பம். மகிந்தவின் மீட்சிக்கு எதிரான தற்காலிகப் பின்னடைவாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.

இலங்கையிலுள்ள ஜனநாயக முற்போக்கு அணிகளாலும், சிறுபான்மைத் தேசிய இனங்களைச் சார்ந்த மக்கள் பிரிவுகளாளும் இத்தீர்ப்பு வரவேற்பைப் பெற்றது.

மகிந்த மீட்ட்சி பெற்றதும், பேரினவாதம் மற்றும் அடிப்படைவாதம் கலந்த பேச்சுக்கள் ஆதரவைத் திரட்டுவதற்கான ஆயுதமாகப் பயன்பட்டது.

ரனில் விக்ரமசிங்கவின் தாராளவாதப் பொருளாதாரக் கொள்கை மேற்கின் பல் தேசிய வியாபார நிறுவனங்களுக்கு முழு இலங்கையயும் விலை பேசிக்கொண்டிருந்தது. அத்தியாசியப் பொருட்களின் விலை நன்கு மடங்காக நான்கே ஆண்டுகளில் அதிகரித்திருந்தது. இலவசக் கல்வி, இலவச மருத்துவம் என்பன கேள்விக்குள்ளாக்கப்பட்டது. இவற்றிற்கு எல்லாம் எதிரான மக்களின் கோபத்தைப் பயன்படுத்திகொண்ட மைத்திரிபால சிரிசேன, சட்டவிரோதமாக மகிந்தவைப் பிரதமராக்கி அழகுபார்க்க விரும்பினார். கட்சி தாவலுக்காக பில்லியன்கள் வழங்கப்பட்டும், மகித்தவால பெரும்பான்மை பெற முடியாத நிலையில் பாராளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத்ட்தேர்தலை நடத்துவதாக மைத்திரி கும்பல அறிவித்தது.
நேற்றைய தீர்ப்பின் பின்னர், மைத்திரியின் திட்டம் தோற்றுப் போக இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றத்தைக் கூட்டுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில் முப்படைகளைம் அழைத்த மைத்திரி, இராணுவ சர்வாதிகார ஆட்சி ஒன்றிற்குத் திட்டமிடுவதான தோற்றப்பாட்டை ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கையில் அடிப்படை ஜனநாயகம் அழிக்கப்பட்டு நாற்பது வருடங்கள் கடந்துவிட்டன. மகிந்தவின் தேர்தல் தோல்விக்குப் பின்னான காலத்தில் ஊடக சுதந்திரம் குறித்த எல்லை வரை வழங்கப்பட்டிருந்தது,கைதுகள் குறைந்திருந்தான, ஒரு வகையான அமைதிச் சூழல் கனிந்திருந்தது.

தமது நாளாந்த பொருளாதார சிக்கல்களையும் மீறி இச் சுதந்திரம் அவர்களுக்க்த் தேவைப்பட்டிருந்தது. முப்பது வருட போர்ச் சூழலிலிருந்து கிடைத்த புதிய குறைந்த பட்ச ஜனநாயகம் மக்களை மீண்டும் இயல்பான வாழ்க்கையை நோக்கி அழைத்து வந்திருந்தது.

இராணுவத்தின் நேரடி ஒடுக்குமுறை இல்லாமல், பல போராட்டங்கள் நடைபெற்றன; சிங்களப் பகுதிகளின் மட்டுமன்றி தமிழ்ப் பகுதிகளிலும் மக்கள் தெருவில் இறங்கிப் போராடினர். பல புதிய கட்சிகள் தோன்றின. அரசியல் விவாதங்கள், நுல் வெளியீடுகள் என்று நீண்ட காலத்தின் பின்னர் புதிய சூழலுக்குள் மக்கள் நுளைந்திருந்தனர்.

இதன் மறுபக்கத்தில், மத்திய வங்கியில் ஆரம்பித்து பிரதேச சபை வரை ஊழல் தலைவிரித்தாடியது.
புதிய அரசியல் சூழலைப் பயன்படுத்தி மக்களை அணிதிரட்டுவதற்கும், ஜனநாயக வழியிலான அமைப்புக்களை உருவாக்குவதற்கும் யாரும் தயாராகவில்லை.
பிற்போக்கு புலப்பெயர் ஏஜன்டுகளாகச் செயற்பட்ட விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் போன்ற அரசியல்வாதிளின் குழுக்கள் எதிர் அரசியலை பிரதியிட்டன.
இன்று மைத்திரி – மகிந்த இணைவு தற்காலிகப் பின்னடைவு என்பது மட்டுமன்றி இலங்கையின் அரசியலமைபு அதன் பேரினவாத உள்ளடக்கத்தால் எப்போதும் கேள்விகு உள்ளாக்கப்படலாம் என்ற அச்சம் தோன்றியிருக்கிறது.
இந்த அச்சம் எதுவுமின்றி புலம்பெயர் நாட்டு தேசிய வியாபாரிகளும் அவர்களின் உள்ளூர் முகவர்களும் நேரடியாக ரனிலை எதிர்ப்பதும், மகிந்தவை மறைமுகமாக ஆதரிப்பதும் அவர்களை நிர்வாணமாக மக்கள் முன் அம்பலப்படுத்திர்யிருக்கிறது.

மகிந்த மீட்சி பெற்றால் ஏகாதிபத்திய நாடுகளை வளைத்துப்போட்டு ஈழம் பெற்றுவிடலாம் என்ற கனவை வேறு மக்கள் மத்தியில் விதைக்க ஆரம்பித்துவிட்டனர்.
இவை அனைத்துக்கும் இடையில் மைத்திரி தலைமையில் அவசரகால ஆட்சி தோன்றுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் தோன்ற ஆரம்பித்திருக்கிறது.

இனக்கொலையாளி மகிந்தவின் மீட்சியும் தமிழ் அரசியல் கோமாளிகளும்

இலங்கைப் பாராளுமன்றம் அந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவினால் கலைக்கபட்டுவிட்டது. இலங்கையின் அரசியலமைப்பிற்கு உட்பட்ட பிரதமர் ரனில் விக்ரமசிங்கவின் தரப்பிலிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களை விலைகு வாங்கி மகிந்தவைப் பிரதமராக்கும் முயற்சி தோல்வியடைந்ததும் சிரிசேன பாராளுமன்றக் கலைப்பில் ஈடுபட்டார். அதனை வர்த்தமானியில் வெளியிடுவதற்காக அரச அச்சகத்தை அதிரடிப்படையின் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தி வர்த்தமானி அச்சிடப்பட்டது. இலங்கையின் முப்படைகளைக் கட்டுப்படுத்தும் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டினுள் போலிஸ்படை கொண்டுவரப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகிந்தவிற்கு ஆதரவு வழங்க மறுத்த பின்னர் ஏற்பட்ட சூழல் இலங்கை பாராளுமன்ற அரசியலில் மைத்திரி – மகிந்த புதிய ஆட்சியைக் கேள்விக்கு உள்ளாக்கியது. அதன் பின்னரான பாராளுமன்ற்க் கலைப்பு இலங்கையின் குறைந்தபட்ச முதலாளித்துவ ஜனநாயகத்தையும் குழு தோண்டிப் புதைத்துள்ளது.

இலங்கையின் பெரும்பாலான ஜனநாயக முற்போக்கு இயக்கங்களும், தனி மனிதர்களும் இன்றைய சூழலில் அந்த நாட்டின் குறைந்தபட்ச ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற நிலைக்கு வந்தடைந்துள்ளனர். இந்த ஒரே காரணத்திற்காக ரனில் விக்ரமசிங்கவின் இருப்பைப் பாதுகாக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ரனிலின் நவ தாராளவாதப் பொருளாதாரக் கொள்ளையால் தமது அன்றாடப்பாஅ வாழ்க்கையைத் தொலைத்த அப்பாவிப் பொதுமக்கள் இன்று மகிந்த வரவை எதிர்பார்த்திருக்கின்றனர்.

மகிந்தவிற்கு எதிரான மக்கள் சார்ந்த அரசியலை முன்வைக்கவும், ஜனநாயாகம் குறித்து மக்கள் சார்ந்து செயற்படவும் நிறுவன மயப்படுத்தப்பட்ட அமைப்புக்கள் எதுவும் இல்லாத நிலையில் மகிந்த மைத்திரியின் ஆட்சியே புதிய தேர்தலில் உறுதி செய்யப்படும் நிலை தோன்றியுள்ளது.

மீண்டும் இனவாதம் அரசியலாவதற்கும் அதன் வெம்மையில் நாட்டைக் கொள்ளயடிப்பதற்கும் மகிந்த குடும்பத்திற்கு மக்கள் அதிகாரத்தை வழங்கும் ஆபத்தான நிலை தோன்றியுள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரை போர்க்காலப் பொருளாதாரத்திற்குப் பின்னான காலத்தில், யார் ஆட்சிக்கு வந்தாலும் நவதாராள வாதக் கொள்ளையிலிருந்து மீள முடியாது. ஆனால் இலங்கையில் குறைந்தபட்ச ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். பேரினவாதத்தின் வெம்மை தணிய வேண்டும்.

இவை அனைத்திற்கும் மேலாக வன்னியில் மனிதப்படுகொலைகளைத் திட்டமிட்டு நடத்திய மகிந்த ராஜபகச குடும்பம் அரசியல் நீக்கம் செய்யப்பட வேண்டும்.

தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய கிரிமினல்களை அதிகாரத்தில் அமர்த்த முன்னெடுக்கப்படும் எந்த நடவடிக்கைகளும் மனிதகுலத்தின் அவமானம் என்று கருதும் நிலை மக்கள் மத்தியில் உருவாக வேண்டும்.
இன்று பெரும்பான்மைப் பலத்தோடு அதிகாரத்தில் அமர்வதை மேற்கு ஏகாதிபத்திய அரசுகள் விரும்பாத சூழலில், அமெரிக்கா,பிரித்தானியா,சுவிற்சிலாந்து போன்ற நாடுகள் மகிந்தவின் மீட்சியை எதிர்க்கின்றன. இவை தவிர்க்கவிலாத சூழலில் மகிந்தவோடு சமரசம் செய்துகொள்ளவு தயங்கமாட்டா.

இங்கு வேடிக்கை என்னவெனில் மகிந்த ராஜபக்ச கும்பலை ஆதரிப்பதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்க்கிறோம் என்ற தலையங்கத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்வைக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அதன் சமூக வலைத்தள விசிறிகளும் மக்கள் மத்தியில் கோமாளிகளாகியுள்ளனர்.

தமிழ்ப் பேசும் மக்களைப் பொறுத்தவரை ராஜபக்ச குடும்பம் என்பது இனப்படுகொலையின் குறியீடு! ரனிலின் ஆட்சியில் குடும்பச் சுமை அதிகரித்து தமது வாழ்வாதார அடிப்படைகள் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருந்தாலும், மகிந்தவிற்கு சிறுபான்மைத் தேசிய இனங்கள் ஆதரவளிக்கப்போவதில்லை.
ஆனால், ஐக்கிய நாடுகளிடமும், அமெரிக்காவிடமும் போர்க்குற்ற விசாரணைக்காக என மண்டியிட்டிருந்த பலர், ரனிலை ஆதரிக்கும் ஏகாதிபத்தியங்களை விட மைந்தவின் ஆட்சி மேலானது என புதிய விசுவாசிகளாக மாறியுள்ளனர்.

எந்தக் கூச்சமுமின்றி “மேற்கு எதிர்ப்பாக” ஒலிக்கும் இவர்களின் குரலும் குறைந்தபட்ச ஜனநாயகத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது.

இவ்வாறான அரசியல் பின்புலத்தில் ஏகாதிபத்தியங்களின் நேரடி அடியாளான ரனிலையும், முதிர்ந்து உதிரும் நிலையுள்ள பிற்போக்கு வலதுசாரிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் ஆதரிக்க வேண்டிய துர்பாக்கிய சூழலுக்கு மக்கள் தளள்ளப்பட்டுள்ளனர்.

விலை போன வியாழேந்திரனும் கிழக்குப் பிரிவினைவாதமும்

வன்னி இனப்படுக்லைக்குப் பின்னால், பல் வேறு நாடுகளின் அதிகாரவர்க்கங்கள் மட்டுமல்ல, புலம்பெயர் அரச ஆதரவாளர்கள், புலிகளின் ஆதரவாளர்களின் வியாபார நோக்கம்ங்களும் காணப்பட்டதை இன்றைய அரசியல் சூழல் மீண்டும் வெளிப்படுத்துகிறது.
இனப்படுகொலையைத் தலைமை தாங்கி நடந்திய மகிந்த ராஜபக்சவின் கோடிகளுக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் விலை போன பின்னர், வெளியாகும் எதிர்வினைகள் மறுபடி ஒருமுறை அணிகளை தெளிவாக வரையறுத்துக்காட்டுகிறது.

கிழக்கு மாகாணத்தின் மீது யாழ்ப்பாண மேலாதிக்கம் திணிக்கப்பட்டிருந்ததையும் அது தொடர்வதையும் யாரும் மறுக்க முடியாது. இவ்வாறான சமூக ஒடுக்கு முறைகளுக்கு எதிரான உணர்வை ஒடுக்கும் அரசுகளுக்கு ஆதரவாக மாற்றும் ஒரு கும்பல் வியாழேந்திரன் விலைபோனதை எதிர்த்தால் யாழ் மையவதம் எனக் கிளம்பிவிடுகிறது.

பேரினவாதிகளுக்கும், ஒடுக்குமுறையாளர்களுக்கும் ஆதரவான அனைத்து ஆயுதங்களையு ம் தேடித்தேடிப் பொறுக்கும் இக் கும்பல்கள் இன்று பிரதேச வாதத்தின் ஊடாக வியாழேந்திரனை நியாயப்படுத்துகிறது.

ரனில் என்ற இலங்கையின் மேல்தட்டு மனிதனின் ஆட்சிக் காலத்தில் வெறுப்படைந்த சிங்கள மக்களில் பெரும்பான்மையானவர்கள் மகிந்த ஆட்சிக்கு வந்ததும் தமது அன்றாட வாழ்க்கை வழமாகும் என நம்பிக்கொண்டிருக்கிறார்கள். நாளாந்த அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறுகிய காலத்துள் இரண்டுமடங்கா உயர்த்திய ரனிலின் நான்கு வருட ஆட்சி மகிந்தவிற்கு ஆதரவாக மக்களை மாற்றியிருக்கிறது,

அப்படியிருந்தும் மகிந்தவிற்கு ஆகரவால சிங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அணி வகுக்கவில்லை. தமது தொகுதியை அபிவிருத்தி செய்வதற்கு மகிந்த தேவை என்ற முட்டாள் தனமான வாதத்தை முன்வைக்கவில்லை. மகிந்தவிடம் இணைந்தவர்கள் கடுமையாக ஊடகங்களின் விமர்சனத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இன்று மக்களைச் சாரி சாரியாகக் கொன்று குவித்த ஒரு கிரிமினல் மீண்டும் அரசாள முன்வைந்த போது எந்தக் கூச்சமும் இல்லாமல் வெறும் பணத்திற்காக இணைந்து கொள்ளும் வியாழேந்திரன் எமது சமூகத்தின் சாபக்கேடு.

தான் மதிக்கும் ஒரே தமிழ் அரசியல் வாதி விக்னேஸ்வரன் எனக் கூறும் வியாழேந்திரன் அவரைத் தான் ஒரு காலத்திலும் எதிர்க்கப்போவதில்லை என்கிறார்.

மகிந்த என்று இதுவரை பெயர் குறிப்பிடாவிட்டாலும், இனப் படுக்லைக்கு நியாயம் பெற்றுத் தருவதாக பூவோடும் பொட்டோடும் முழங்கி வந்த விக்னேஸ்வரன் இப்போது எங்கே என்ற கேள்வி இத்தோடு தொக்கி நிற்பது இயல்பானது

விக்னேஸ்வரனும் விசிறிகளும் மூச்சுக்கூட விடாமல் மதில்மேல் பூனையாகி விட்டதன் உள்ளஎர்த்தம் என்ன?
இதுதான் வியாழேந்திரனின் அரசியல் வரலாற்றின் கடைசி அத்தியாயம். இனிமேல் அவர் காணாமல் போய்விடுவார். ஆனால், இன்னும் ஒரு முறை விக்னேஸ்வரன் மகிந்தவோடு குடும்பசகிதம் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டு தொடர்ந்தும் அரசியலில் இருப்பார். சிலவேளைகளில் தமிழ்த் தேசிய முன்னோட்டியாகக் கூட முன்னிறுத்தப்படுவார். ஆக, விக்னேஸ்வரனுக்கும் வியாழேந்திரனுக்கும் இடையிலான இடைவெளியில் தான் யாழ் மையவாதம் குடியிருக்கிறது, தவிர, இரண்டு முகங்களுமே வரலாற்றில் தமிழ்ப் பேசும் மக்கலின் சாபக்கேடுகள் தான்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு: இலங்கையின் இன்றைய கதாநாயகர்கள்

இலங்கை அரசியலின் இன்றையக் கதாநாயகன் யாரென்றால் மகிந்த, மைத்திரி,ரனில் என்ற பெயர்களை எல்லாம் கடந்து சென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே உயர்ந்து நிற்கிறது. பல பில்லியன்கள பணம் புரளும் இலங்கை அரசியல் பேரத்தில் மகிந்த ராஜபக்சவின் முகத்தில் அறைந்தால் போல் திரு,சம்பந்தன் நீங்கள் சட்டவிரோத பிரதமர் எனக் கூறியதும் அதன் பின்னான கூட்டமைப்பின் அறிக்கையும், அக் கட்சி வரலாற்றின் கறைபடியாத ஒரு அத்தியாயத்தையும் கடந்து சென்றிருக்கின்றது.
கட்சியின் அறிக்கை,
1. மகிந்தவை சட்டவிரோத பிரதம மந்திரி என பகிரங்கமாக அறிவிக்கிறது.
2. மைத்திரிபால சிரிசேனவின் நடவடிகை சட்டவிரோதம் என்கிறது.
3. பாராளுமன்ற அமர்வுகளை பின்போடுவது பேரம்பேசுவதற்கான கால அவகாசம் என்கிறது.

ஜே.வி.பி உட்பட இலங்கையின் எந்தக் கட்சியும் முன்வைக்காத, இனவாதம் கலக்காத, இலங்கையின் முழு மக்களுக்குமான எதிர்க்கட்சியின் குரலாக ஒலிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் துணிகரமான குரல் இன்றைய காலத்தின் கட்டாயம்.
கூட்டமைப்பிற்கு புதிதாக முளைத்திருக்கும் முதுகெலும்பு முழு வீச்சில் வளர்ந்து உறுதியாக நிலைத்திருக்க வேண்டும் என சமூகப்பற்றுள்ள அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

இதற்கிடையில் இனக்கொலையாளி மகிந்த ஆட்சிக்கு வந்தால், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும், சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு புதிய திட்டங்கள் அறிவிகப்படும் எனவும், மகிந்த ஆதரவு செய்தி இணையங்கள் போலிப் பரப்புரைகளை மேற்கொள்கின்றன.