Sunday, May 11, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

வடபகுதி மக்கள் வேண்டுவது உண்மையான வசந்தமேயன்றி முகவராட்சியல்ல:வீ. ஆனந்தசங்கரி

இனியொரு... by இனியொரு...
07/06/2009
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ,                        
இலங்கை ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு.

அன்புடையீர்,

வடபகுதி மக்கள் வேண்டுவது உண்மையான வசந்தமேயன்றி முகவராட்சியல்ல.

யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவிவரும் தள நிலைபற்றி நான்  அறிந்;தவற்றையும், பிறர் கூறக் கேட்டவற்றையும் இச்சந்தர்ப்பத்தில் சுயாதீனமாகக் கூறி வைக்க விரும்புகின்றேன் யாழ்ப்பாணத்தில் வசந்தம் வீசவில்லை. மக்கள் தங்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக அனுபவிப்பது அமைதிப்புயலே. பன்னிரண்டு ஆண்டுகளிற்கு முன் ஆரம்பித்த புயல் படிப்படியாக வலுவடைந்து சில நபர்களிற்கு வழங்கப்பட்டிருக்கின்ற சலுகைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதால் உச்ச நிலை அடைந்துள்ளது. பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதால் யாழ்ப்பாணம் எதுவித பலனையும் அடையவில்லை. ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், பத்மநாபா ஈபிஆர்எல்எவ் ஆகிய கட்சிகள் இணைந்து உருவாக்கிய இக் கூட்டமைப்புப் பற்றி நீங்கள் அறிவீர்கள். நாம் வன்முறையைக் கண்டிப்பதோடு தங்களிற்கும் முழு நாட்டவருக்கும் தனித்தனியாகவும் கூட்டாகவும் பயங்கரவாதத்தை ஒதுக்குகின்றோம் என்ற உத்தரவாதத்தைத் தர விரும்புகின்றோம். முற்று முழுதாக அகிம்சைக்குக் கட்டுப்பட்ட நாங்கள் இலங்கை வாழ் பல்வேறு சமூகங்களுக்கும் மத்தியில் நல்லெண்ணத்தை வளர்க்கக் கடமைப்பட்டுள்ளோம். எமது நடவடிக்கைகள் அத்தனையும், சகல துறைகளிலும் பின்னடைவு கண்டிருக்கும் நம் நாட்டிற்கு பயன்தரக்கூடியவையாகவும் அதற்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையிலும் அது ஒரு பலம் பொருந்திய நாடாகவும் சகல இன மக்களும் சம உரிமையுடனும் மன வேற்றுமையுமின்றி வாழ வழி சமைக்கும்.

இச்சந்தர்ப்பத்தில் வடக்கே ஜனநாயகத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் உள்ள இடையூறுகள் பற்றி நான் கூறத்தவறின் எனது கடமையிலிருந்து தவறியவனாவேன். அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு கடந்த கால் நூற்றாண்டுகளிற்கு மேல் சுதந்திரக்காற்றை சுவாசிக்கவும், சுதந்திரமாக பேச நடமாட முடியாமல் மக்கள் இருந்திருக்கின்றனர். மக்களை வன்னியிலிருந்து விடுவிப்பதற்குப் போராட்டம் நடாத்திய ஒரே தமிழன் நானாகத்தானிருப்பேன் என நம்புகின்றேன். அத்தோடு; ஏகப்பிரதிநிதித்துவ நிலைப்பாட்டிற்குப் பகிரங்கமாக சவால் விட்டவனும் நானே. வன்னி வாழ் மக்களை விடுவிக்குமாறு ஜக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திற்கு கோரிக்கை விட்டிருந்தேன். இந்நிலைப்பாட்டைக் கடைப்பிடித்தமையால் எனக்கேற்பட்ட சங்கடமான நிலைபற்றியும், மன உளைச்சல் பற்றியும் தாங்கள் அறியாததல்ல. துரதி;;;ஷ்ட வசமாக எமது மண்ணில் குறிப்பாக வடக்குக் கிழக்கு மாகாணங்களில் ஆயுதக் கலாச்சாரம் நன்றாக வேரோடியுள்ளது. பல இராணுவத்தினரும் மக்களும் பெருந்தியாகங்கள் செய்தும் எமது இழந்த சுதந்திரத்தை மீளப் பெறமுடியவில்லை. இக்கடிதத்தை நீட்டிச்செல்ல நான் விரும்பவில்லை. தாங்கள் சில விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என நாடு எதிர்பார்க்கின்றது,

முதலாவதாக ஆயுதம் வைத்திருப்பதற்கு அதிகாரம் இல்லாதவர்களிடமிருந்து உடனடியாக ஆயுதங்கள் களையப்படல் வேண்டும். தேவைப்படுவோருக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்கலாம். பணத்திற்காக அண்மையில் நடந்தது போல் பாடசாலைச் சிறுமிகளைக் கொல்வதும், மீண்டும் மீண்டும் பத்திரிகைகளைத் தாக்குவதும் இது போன்ற இன்னோரன்ன சம்பவங்கள் நடைபெறாதிருக்க கடும் நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் இப் பயங்கர செயல்களிற்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும்.

இரண்டாவதாக இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்போரது முழுப்படங்களையும் வெளியிடுவதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களையும் அதில் தொடர்புபட்டவர்களையும் இனங்காண உதவியாயிருக்கும். சம்பந்தப்பட்ட குழுவை தேடிப்பிடித்தல் மக்களிற்கு மிகப் பெரும் ஆறுதல் தரும் விடயமாகும். சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எவ்வகையில் உயர்ந்தவர்களானாலும், எதனேர்டு; தொடர்புடையவர்களாக  இருந்தாலும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆயுதக்குழுவாக செயற்பட்ட ஒரு அரசியற்கட்சியின் அலுவலகத்தின் பின்புறம் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒருவரின் சடலம் சம்பந்தப்பட்ட வழக்கில், என்ன நடந்தது என மக்கள் அறிய விரும்புகின்றனர். சுதந்திரமான பயம் பீதியற்ற ஒரு சமுதாயத்தைத் தாங்கள்  கட்டியெழுப்ப வேண்டுமென எதிர்பார்க்கும் மக்களிற்கு எமது பூரண ஆதரவு கிடைக்கும்.
 
யாழ் பல நோக்கு கூட்டுறவு சங்க தலைவராக நியமிக்கப்பட்ட ஒரு கனவானின் செயற்பாடு பற்றி அறிந்த மக்கள் அவரின் நியமனம் பற்றி மிகவும் குழப்பகரமான நிலையிலுள்ளனர். எவரின் சிபார்சின் பெயரில் அவர் நியமிக்கப்பட்டாரோ நானறியேன். ஆனால், அவர் பற்றி நான் எழுதுவது முற்றிலும் உண்மை. சுசுயுN  என்ற அமைப்பைப் பற்றித் தாங்கள் அறிந்திருப்பீர்கள் 1998 க்கும் 2002 ஆம் ஆண்டிற்குமிடையே வடக்கின் புனர்வாழ்வு மீள் குடியேற்ற அதிகார சபை இயங்கிவந்தது. அந்த அதிகார சபைக்கு ஒரு தலைவர் இருந்தார். அவருடைய உறவினர் ஒருவர் பொறியியலாளராகத் தகுதி பெற்றிராத போதும் அவ்வதிகார சபையின் பொறியியலாளராக நியமிக்கப்பட்டார். அவர் வெறுமனே வாகனத் தொழில் நுட்பவியலாளர் மட்டுமே. இவர் உயர் அரசாங்க அதிகாரி ஒருவருடன் நெருக்கமாக செயலாற்றி வந்தார். இம் மூவரும் இணைந்தே படம் வரைதல், திட்டமிடல், மதிப்பீடு செய்தல் போன்றவற்றைச் செய்து வந்தனர். பல்வேறு திட்டங்களின் பெயரில் சுசுயுN நிறுவனத்திடமிருந்து பணத்தைப் பெற்றுக் கணக்கைக் காட்டத்தவறியவர்கள். அப்பணத்தில் 50 மில்லியனிற்கு மேல் தலைவர் தவிர்ந்த ஏனைய இருவராலும் சூறையாடப்பட்டது. அவர்கள் “ஈடுபட்டிருந்த” திட்டங்களாவன,

• சாவகச்சேரி சந்தை
• கொக்குவில் சந்தை .
• யாழ் மீன் பிடி கூட்டறவு சங்கத்தில் ஜஸ் தொழிற்சாலை குளிரூட்டி அறை நிறுவுதல்
• கொக்குவில் மஞ்சத்தடி ஆலயம்
• கீரிமலை நகுலேஸ்வர ஆலயம்
• யாழ் போதனா வைத்தியசாலை பிரேத அறை நிறுவுதல் என்பனவாகும்.

பல்வேறு திட்டங்களில் இவை சிலவாகும். 2003 ஆம் ஆண்டு சம்பந்தப்பட்ட அமைச்சு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு வழங்கிய முறைப்பாட்டின் பெயரில் மதிப்புமிக்க பல ஆதாரங்கள் கிடைத்திருந்தன. அதன் காரணமாக உயர் அரசாங்க அதிகாரியின் ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டு அவர் வேலை இழந்தார். சில அழுத்தங்கள் காரணமாக விசாரணைகள் திடீரென முடிவிற்கு வந்தன. இதில் ஆபூர்வமான விடயம் என்னவெனில் வைமன் வீதியில் உள்ள மேற்படி “பொறியியலாளரது” வீடு அவரால் விடுதலைப்புலிகளின் அலுவலகத்திற்கென இலவசமாக வழங்கப்பட்டது, அடுத்த அதிர்ச்சிகரமான தகவல் இக் கனவானே தற்போது யாழ் மாநகர சபையின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இத்தகைய ஆலோசகர் எவரும் இது நாள் வரையில், யாழ் மாநகர சபையில் செயற்படவுமில்லை. அந்நியமனத்திற்கான  அங்கீகாரமுமில்லை. அவர் இப்பதவிக்கு நியமிக்கபட்டடிருப்பது உண்மையில்  மர்மமான ஒன்றாகவே  உள்ளது,
இக் கனவானே தற்போது யாழ் பல நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கும் தலைவராக செயற்படுகின்றார். இயக்குநர் சபை ஏதுமில்லாமல் தனிஆளாக எல்லாம் அங்கே நடந்தேறுகின்றன. யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்துக் கூட்டுறவுச் சங்கங்களுமே நட்டத்தில் இயங்குவது தாங்கள் அறி;ந்ததே. ஒர் அமைச்சு நிதியத்திற்கு  ஒரு மில்லியன் ரூபாவை நன்கொடையாக தம் சங்கத்தின் சார்பில்  வழங்கியதோடு ஏனைய 26 சங்கங்களையும் மேற்படி தொகையை வழங்க வழிவகுத்துள்ளார்.

தொடர்ந்து 6 ஆண்டு காலமாக பயங்கரவாதத்தை ஒழித்து மக்களை மீட்பதற்காக நான் எடுத்த முயற்சிகளை அனைவரும் அறிவர். இந்தப்பணியில் எனக்கேற்பட்ட மனச்சங்கடம் மன உளைச்சல் என்பன ஒருவரின் கணிப்பிற்கும் கற்பனைக்கும் அப்பாற்பட்டதாகும். ஏனெனில் பிரயோகிக்கப்பட்ட வார்த்தைகளும், அடுக்கு மொழிகளும் எழுத்தில் வடிக்க முடியாதவையாகும். தமிழர்களிடையே பயங்கரவாதத்திற்கு எதிராக தனியாளாக நான் எப்போதும் போராடி வந்துள்ளேன் என்பதை தாங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்.

வடக்கிலும் கிழக்கிலும் மேலும் சிறப்பான ஜனநாயகத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டிய கடப்பாடு தங்களிற்குண்டு. அனைத்து அரசியற்கட்சிகளும் பீதியற்று தடையற்று செயலாற்ற நல்லதொரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படல் வேண்டும். நீங்கள் இந்த நாட்டின் ஜனாதிபதியாகக் கடமையாற்றுகின்ற காலத்தில் மக்கள் தங்களின் செயற்பாடுகளை சரியான வகையில் புரிந்து கொள்வர்.

நாம் அரசாங்கத்தோடு முரண்படவில்லை. எமது எதிர்பார்ப்பெல்லாம் தமிழர்களால் நேர்மையான முறையில் ஓர் தலைமை தெரிவு செய்யப்பட்டு அதன் மூலம் நிரந்தரமான தீர்வை இனப்பிரச்சினைக்கு ஏற்படுத்த வேண்டுமென்பதே.

அன்புள்ள

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

கே.பி இன் இந்தியச் சார்பு நிலையும் இந்தியாவின் இஸ்ரேலும் : சபா நாவலன்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In