Thursday, March 12, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

மனித உரிமைவாதி அ.மார்க்ஸ் முன்னிலையில் தோழர்களை அடிக்கப் பாய்ந்த லீனா மணிமேகலை.

இனியொரு... by இனியொரு...
04/15/2010
in இன்றைய செய்திகள்
0 0
17
Home இன்றைய செய்திகள்

புரட்சிகரத் தோழர்களையும் மார்க்கிசியப் பேராசான் மார்க்சையும் மிக மோசமான முறையில் இழிவு படுத்தி லீனா மணிமேகலை மட்டகரமான கவிதை ஒன்றை எழுதியிருந்தார். அதற்கு வினவு தோழர்கள் எதிர்வினையாற்றியிருந்தார்கள். இதற்கிடையில் இந்து மக்கள் கட்சி லீனாவுக்கு எதிராக தமிழக காவல்துறையிடம் புகார் மனு ஒன்றை வழங்கியது. பாசிச இந்து மக்கள் கட்சிக்கு தமிழகத்தில் செல்வாக்கு ஏதும் இல்லை. இந்நிலையில் லீனா மணிமேகலைக்கு ஆதரவாக மனித உரிமை வாதி என்று தன்னைத் தானே கூறிக் கொள்ளும் அ.மார்க்ஸ் ஒரு அரங்கங்கக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்த நிலையில் ராஜன்குறை, அ.மார்க்ஸ், சுகுணாதிவாகர், லீனா உட்பட இன்னும் சிலரைத் தவிற வேறு எவரும் லீனாவுக்காக வரவில்லை. மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள் நாற்பது பேர் அக்கூட்டத்திற்குச் சென்றிருந்தனர். கூட்டம் தொடங்கியதும் அ.மார்க்ஸ்சிடம் ஜனநாயக ரீதியிலும்  அமைதியாகவும் தோழர்கள் சில கேள்விகளைக் கேட்டனர். கேள்வி கேட்கும் உரிமையை மறுத்த மார்க்ஸ். தொடர்ந்து பேசுமாறு ராஜன்குறையை அழைத்தார்.  லீனாவிடம் சில தோழர்கள் கேள்வி எழுப்பியதுமே அவர் பயங்கர உஷ்ணமாகி விட்டார். கடுமையான ரத்தக் கொதிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ள லீனாவுக்கு பிளட்பிரஷர் எகிற அ.மார்க்ஸ் முன்னிலையில் தோழர்களை கையோ ஓங்கியபடி அடிக்கப் பாய்ந்து விட்டார். ஜனநாயக ரீதியில் கேள்விகளை எழுப்ப வந்த தோழர்கள் அதிர்ந்து போய் அமைதியாகி. ராஜன் குறையை நோக்கி சில கேள்விகளை வீச அ.மார்க்ஸ் உடனே அரங்கத்தை விட்டு வெளியே போங்கள் என்று டென்ஷனாகி கத்த ஆகப்பெரிய ஜனநாயகவாதியின்  அஹிம்சை முகத்தைக் கண்ட தோழர்கள் ஜனநாயக ரீதியில் கோஷமிட்டபடி அரங்கை விட்டு வெளியேறினார்கள்.

-சென்னையிலிருந்து மாறன்-

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

கழிப்பறைகளை விட செல்போன்கள் இந்தியாவில் அதிகம்!: ஐ.நா. அறிக்கை.

Comments 17

  1. கேள்விக்குறி says:
    16 years ago

    மேட்டரை உடனடியாக அம்பலப்படுத்தியமைக்கு நன்றி தோழர்

    லீனாவின் யோக்கியதையை மேலும் தெரிந்து கொள்ள இங்கே போகவும்

    சீமாட்டி லீனாவும் சில கிருஷ்ண பரமாத்மாக்களும் !!
    http://www.vinavu.com/2010/04/14/leena-manimekalai/

    லீனா மணிமேகலை: அதிகார ஆண்kuriயை மறைக்கும் விளம்பர யோni !!
    http://www.vinavu.com/2010/01/06/leena/

    லீனா மணிமேகலை: COCKtail தேவதை!
    http://www.vinavu.com/2010/04/14/2010/01/11/leena-cocktail-thevathai/

  2. கமர்கட் says:
    16 years ago

    லீனா அடித்தைதையும், தோழர்கள் மிக,மிக அவர்களுக்கேயுரிய அமைதியான முறையில் கலைந்ததையும் நேரில் பார்த்தேன்…சரி.யாருக்காக இவ்வளவு அவசரம்?

  3. rapheal says:
    16 years ago

    யப்பா எத்தனை தடவைதான் படவேணும்… ஒருதடவை போதாதா.

    திரும்பத்திரும்ப இந்தக் கூட்டங்களின் கூட்டங்களுக்குப் போய் அவர்களின் உண்மை முகத்தை ஏன் இவ்வளவு சிரமப்பட்டு கண்டு பிடிக்கிறீர்கள்?
    விடுவீங்களா…?

    இனியும் அவர்கள் ஒரு ஏதோவொரு பெயரில் கூட்டம் வைக்க்கூடும். அதற்கும் 40 தோழர்கள் (ஒன்று இரண்டல்ல 40 பேர்) போய் அடிபட்டுத்தான் நிருபிப்பிங்களாக்கும்.

    எனக்கென்னவோ “காமெடி கீமெடி பண்ணலியே” என்று தான் சொல்லத் தோன்றகிறது.

  4. ளிமாகோ says:
    16 years ago

    /////////சரி.யாருக்காக இவ்வளவு அவசரம்? ///////////////

    யாருக்காக, எதுக்காக இவ்வளவு அவசரமாக லீனாவும், அவரது ரசிக சிகாமணிகள் சகிதம் அமார்க்ஸ் கூட்டம் நடத்தினாரோ அதுக்காக, அவங்களுக்காக…..

  5. ளிமாகோ says:
    16 years ago

    ////////தோழர்கள் மிக,மிக அவர்களுக்கேயுரிய அமைதியான முறையில் கலைந்ததையும் நேரில் பார்த்தேன்…///////////////

    கூட்டத்திற்கு வந்தவர்களில் மூன்றாம் தரப்பு என்று பொது ஆட்கள் மிக குறைவு. ஓரிருவர் இருக்கலாம்!

    லீனா, மார்க்ஸ் தரப்பில் வந்தவர்கள் அவர்களே பேசி அவர்களே கேட்க வந்திருப்பார்கள் போலும்! அப்புறம் இந்த மாதிரி கழிசடை கவிதைக்கு பொதுக்கூட்டமா போடமுடியும்? மக்களிடம் பிரச்சாரமா செய்யமுடியும்?

    கூட்டத்திற்கு இரண்டு தரப்பு மட்டுமே வந்திருந்திருந்த போது, நீங்கள் எந்த பக்கம்? நீங்கள் மேடையில் என்ன பேசினீர்கள் ?

  6. Garammasala says:
    16 years ago

    கவிஞர் நீலாவணன் வரிகள் (1960கள்):

    கூத்தாடிகளே விரைவாயாடுங்கள்

    பொழுது புலரப் போகுது பாரீர்!
    புலர்ந்த்தால் ஜிகினாப் பொட்டுகள் அந்தோ!
    வெளுக்கப் போகுது சாயம்! கன்டால்….
    விரையப்போகுது சனங்கள் வீடு

    கூத்தாடிகளே விரைவாயாடுங்கள்

    இருட்டு முடியும் முன்னே கூத்தை
    எப்படியேனும் நடத்திப் போடுக!
    மருட்டு வேஷம் குலைந்து போனால்
    மக்கள் கூட்டம் கலைந்து போகும்!

    கூத்தாடிகளே விரைவாயாடுங்கள்

  7. Foolபையன் says:
    16 years ago

    ஜனநாயக ரீதியில் கேள்விகளை எழுப்ப வந்த தோழர்கள் அதிர்ந்து போய் அமைதியாகி. ராஜன் குறையை நோக்கி சில கேள்விகளை வீச அ.மார்க்ஸ் உடனே அரங்கத்தை விட்டு வெளியே போங்கள் என்று டென்ஷனாகி கத்த ஆகப்பெரிய ஜனநாயகவாதியின் அஹிம்சை முகத்தைக் கண்ட தோழர்கள் ஜனநாயக ரீதியில் கோஷமிட்டபடி அரங்கை விட்டு வெளியேறினார்கள்.—-

    நிகழ்ச்சியை நேரில் பார்க்காதவர்கள் வேண்டுமானால் நீங்கள் எழுதியதை நம்பலாம்..

    ஆனால் கூட்ட தொடங்கியதில் இருந்து – தொடங்கிய ம.க.இ.க வினரின் ’அஹிம்சை’ செயல்பாடுகளை, புரட்சிகர கூச்சல்களை – ஜனநாயக விசில் சத்தத்தை நேரில் பார்த்த எவரும் மேற்கண்ட ’கதையை’ நம்பமாட்டார்கள்…

    கோமாளி என்ற பெயருக்கேற்ற மாதிரி – தங்களின் எழுத்தில் நகைச்சுவை இல்லை – ஆனால் பொய்யும் புரட்டும் மட்டும் உள்ளது..அதனால் ‘ன்யய்பொ’ என்று பெயரை மாற்றிகொண்டு எழுதினால் மிகவும் பொருத்தமாக இருக்கும்..

  8. ளிமாகோ says:
    16 years ago

    லீனாவின் விசிலடிச்சான் குஞ்சுகள் செய்ததை தோழர்கள் பக்கம் திருப்புவது தான் உங்கள் நேர்மையாக இருக்க முடியும்!

    கூட்டத்திற்க்கு வந்திருந்தேன் என ஒப்புக்கொண்டமைக்கு நன்றி!

    //////////////கூட்டத்திற்கு வந்தவர்களில் மூன்றாம் தரப்பு என்று பொது ஆட்கள் மிக குறைவு. ஓரிருவர் இருக்கலாம்!

    லீனா, மார்க்ஸ் தரப்பில் வந்தவர்கள் அவர்களே பேசி அவர்களே கேட்க வந்திருப்பார்கள் போலும்! அப்புறம் இந்த மாதிரி கழிசடை கவிதைக்கு பொதுக்கூட்டமா போடமுடியும்? மக்களிடம் பிரச்சாரமா செய்யமுடியும்?

    கூட்டத்திற்கு இரண்டு தரப்பு மட்டுமே வந்திருந்திருந்த போது, நீங்கள் எந்த பக்கம்?
    நீங்கள் மேடையில் என்ன பேசினீர்கள் ?////////////////////////

    இதற்கு பதிலளித்து பேசலாமே ?

  9. K.R.அதியமான் says:
    16 years ago

    /////லீனாவிடம் சில தோழர்கள் கேள்வி எழுப்பியதுமே அவர் பயங்கர உஷ்ணமாகி விட்டார்.////
    என்ன கேள்விகள் என்று விளக்க முடியுமா ?

  10. THAMILMARAN says:
    16 years ago

    லீனா மணீமேகலை பேசுவதைக் கேட் காமல் அவர் மீதான வெறூப்புககள கேள்விகளாக்கி பெண்னென்பதால் அடங்கிப் போக வேண்டுமென்றூ நினைப்பது பிழையானது.பிழை கண்டு பிடிக்க ஒரு கூட்டம் அதில் லீனாவுக்கு இரத்த அழுத்தம் என்றூ பட்டம்.வக்கிரம் பிடித்த மனிதக் கூட்டங்களே இன்னும் கணவனே கண்கண்ட தெய்வம் என்றூ சீதையையே சந்தேகித்த இராமனுக்காக தீ மிதிக்க இது சீதை காலமல்ல, வேசையிடம் வாழ்ந்த கணவனுக்காக் வீதியில் இறங்கிப் போராட இது கண்ணகி காலமல்ல.லீனா மீது குற்றம் காண உங்களீல் யாரும் புனிதரும் அல்ல.
    பெண்ணூக்கு ஜானத்தை வைத்தான் புவி பேணீ வளர்த்திடும் ஈசன் மண்ணூக்குள்ள சில மூடர் நல்ல மாதர் அறீவைக் கெடுத்தார்.

  11. meerabharathy says:
    16 years ago

    காமம்இ ஆண்கள்இ (ளின்) சமூகம்இ பாலியலுறவுகள் மற்றும் பெண்கள் – ஒரு பார்வை- பகுதி 3

    பெண்களின் காமம் சக்தியும் மற்றும் அது தொடர்பான அறிவின் மீதான அடக்குமுறைகளும்!

    ஆணாதிக்க சமூகத்தில்; ஆண்களின் காம உணர்வின் தேவையை பூர்த்தி செய்யும் பாலியல் பொருட்களாகவே பெண்கள் பார்க்கப்பட்டுவருகின்றனர். அதேவேளை பொதுவாக பெண்களும் ஆண்களுக்கு சேவை செய்யவும் மற்றும் அவர்களை கவர்வதை நோக்கி தம்மை அழகுபடுத்தவுமே பயிற்றிவிக்கப்பட்டுள்ளார்கள் என பெண்ணியவாதிகள் வாதிடுகின்றனர். இதன் ஆரம்பமம் பெண்கள் குழைந்தைகளாக இருக்கும் பொழுதுதே ஆரம்பித்துவிடுகின்றது. அதாவது ஒரு பெண் (குழந்தை) எப்படி இருக்கவேண்டும்இ நடக்கவேண்டும்இ உடை உடுத்தவேண்டும்இ என அதன் வாழ்வின் ஒவ்வொரு பகுதிகளும் என பயிற்றுவிக்கப்படுகின்றது. மேலும் தாயியுடன் வீட்டுவேலைகளைில் பங்குகொள்ள நிர்ப்பந்திக்கும் அதேவேளை ஆண்களை அதிலிருந்து விடுவித்தும்விடுகின்றனர். இதற்கும் மேலாக ஆண் குடும்ப அங்கத்தவாகளுக்கு குடும்பத்தில் முதலிடமும் கொடுப்பதும் பெண் குடும்ப அங்கத்தவர்கள் அவர்களுக்கு பணிவிடையும் செய்வது சாதாரண சமூக பழக்கவழக்கமாக ஏற்றுக்கொள்கின்ற அளவிற்கே சமூகங்களின் பண்பாடு கலாசராங்கள் கட்டமைக்கப்பட்டு இருக்கின்றது. இதன் தொடர்ச்சியாக பெண்களின்; முதல் மாதவிடாய் வெளிவந்தவுடன் அந்த செய்தியைஇ தம் உறவுகளை அழைத்து பெரும் சடங்காக தென்னாசிய சமூகங்களில் மட்டுமல்ல புலம் பெயர் தமிழ் பேசும் சமூகங்களிலும் வெகு விமர்சையாக நடாத்தப்படுகின்றது. இதன் அர்த்தம் நம் வீட்டு பெண் பிள்ளைகள் குழந்தை பெருவதற்கு தயார் என்றும் பெண் கேட்டு வாருங்கள் என உறவுகளுக்கு அழைப்பு விடுவிக்கும் ஒரு சடங்காகவே பாரம்பரியமாக பின்பற்றபட்டுவந்திருக்கின்றது. ஐரோப்பிய வட அமெரிக்க சமூகங்களிலோ இதற்கு மாறாக பெண்களுக்கு நடைபெறும் இந்த உடலியல் மாற்றமானது இரகசியமானதாகவும் அசிங்கமானதாகவும் பார்க்கப்படுவதாக இதுதொடர்பான பெண்ணிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுபோன்று பெண்களின் காம உண்ர்வும் அதன் இன்பமும் அவர்களது பாலியல் தேவைகளும்இ சமூகத்தின் (ஆகவே ஆண்களின்)இ அக்கறைக்கு அப்பாற்பட்டவை மட்டுமல்லஇ மாறாக அவை மிக மோசமாக அடக்கப்பட்டும் வந்திருக்கின்றன. அதேநேரம் பெண்கள் ஆண்களின் பாலியல் தேவைகளையும் திருப்தி செய்யவேண்டியுள்ளார்கள். இவ்வாறான நிலைமைக்குஇ குறிப்பாக பெண்களது காம மற்றும் பாலியல் பாலியலுறவு தொடர்பான அறிவுகளும் அழிக்கப்பட்டு அடக்கப்பட்டு வந்தமையும் ஒரு காரணமாகும். இந்த அறிவுகளுக்கு மாறாகஇ ஆணாதிக்க இருபால் உறவு சமூகத்தால் தமக்கு ஏற்றபடி செயற்கையான பொய்மையான தகவல்களின் அடிப்படையில்இ இவை தொடர்பான கருத்துக்களை கட்டமைத்துஇ பெண்களை காம பாலியல் பொருட்களாக கட்டமைக்கவும் பயன்படுத்தவும் வித்திட்டிருக்கின்றன என சமூக ஆய்வாளர்களும் பெண்ணியவாதிகளும்; குறிப்பிடுகின்றனர். இதன் தொடர்ச்சியாகத்தான் பெண்களை போகப்; பொருட்களாகப் பார்ப்பதும் மற்றும் அவர்களை வன்புணர்ச்சி செய்வதும்இ அடக்கி வைத்திருப்பதும் (ஆணாதிக்க) சமூகத்தில் சாதராண நிகழ்வுகளாக இருக்கின்றன…
    தொடர்ந்தும் வாசிக்க…..பிரக்ஞை வலை சஞ்சிகை….hவவி://றறற.யறயமநபெைெயறயசநநெளள.ழசப/
    …மீராபாரதி
    (ஆண்மையும் பெண்மையும்)

    • thamilmaran says:
      16 years ago

      பெண் என்பவள் உணர்வு மயமானவள் எப்போடும் தன் பிரச்சனைகள பேசுபவளாகவும் ஆண் என்பவன் அறீவு மயமானவன் பிரச்சனைகளூக்கான் தீர்வைத் தேடுபவனாகவும் அணூம் பெண்ணூம் இரு வேறூ கோணங்களீல் சிந்திப்பவர்களாகவே இருக்கிறார்கள்.

      • dana says:
        16 years ago

        பெண் என்பவள் உணர்வு மயமானவள் எப்போடும் தன் பிரச்சனைகள பேசுபவளாகவும் ஆண் என்பவன் அறீவு மயமானவன் பிரச்சனைகளூக்கான் தீர்வைத் தேடுபவனாகவும் அணூம் பெண்ணூம் இரு வேறூ கோணங்களீல் சிந்திப்பவர்களாகவே இருக்கிறார்கள்.

        when a women,s knowledge is suppressed feeling is expressed.in the society there is no room for the women to execute her thinking .it is not true that women are always talking about themselves they are compelled always to think about their family .but even if they think about society there they are stopped forciblbly.

  12. மார்க்ஸ் குஞ்சு says:
    16 years ago

    தலைப்பை “மனித உரிமைவாதி அ.மார்க்ஸ் முன்னிலையில் தோழர்களை செருப்பால் அடிக்கப் பாய்ந்த லீனா மணிமேகலை” என்று கூட போட்டிருக்கலாம்…

    பொய் சொல்றதுதான் சொல்றீங்க ..இன்னும் கொஞ்சம் மிகைப்படுத்தி சொன்னால் குடியா முழுகிவிடப்போகிறது….

    • xxx says:
      16 years ago

      லீ. ம. கையை ஓங்கவே இல்லை என்கிறீர்களா?
      கூட்டத்தில் நீங்களும் இருந்தீர்களா?

  13. Garammasala says:
    16 years ago

    பெண்ணுரிமை என்ற பேரில் பிழைப்பு நடத்துகிற கூட்டங்கள் உள்ளன. அவற்றின் அக்கறை மிக மோசமாகச் சுரண்டப்படும் பெண்கள் பற்றியதல்ல.
    பெண்ணுரிமையைப் பிற சமூகப் பிரச்சனைகளுடன் சேர்த்து நோக்குகிற பெண்ணியவாதிகள் இந்தியாவில் உள்ளனர். நிச்சயமாக லீனா மணிமேகலை அவர்களுள் ஒருவரல்ல.
    அவருடன் இப்போது கூட்டுச் சேர்ந்திருப்பவர்கள் இலங்கை அரசின் வாளங்களை அனுபவிப்பவர்களாக உள்ளமையும் வியப்புக்குரியதல்ல.
    வக்கிர உணர்வுள்ள சொற்பிரயோகங்கள் ஆணிடமிருந்து வரும் போது ஆணாதிக்கம் என்றால் அவை பெண்ணிடம் இருந்து வரும் போது விடுதலை என்று சொல்லுவது எப்படி?
    பாலியல் நிந்தனைச் சொற்களில் எகப் பெரும்பாலானவை பெண்களை நிந்திப்பனவே. அவற்றை எதிர்ப்பது கூடப், பெண் விடுதலையின் ஒரு அவசியமானா பகுதியாகும்.

  14. ளிமாகோ says:
    16 years ago

    பொய் சொல்றதுதான் சொல்றீங்க ..இன்னும் கொஞ்சம் மிகைப்படுத்தி சொன்னால் குடியா முழுகிவிடப்போகிறது….//////////////////////

    லீனா வுக்கும் கூவுறதுக்கு ஆள் இருக்குப்பா….

    இன்னுமா டா இந்த ஊர் நம்மள நம்புது?

    அது அவங்க தல விதி பாஸ்! மன்னிக்கவும்… அது அவங்க தல விதி லீனா….

    நான், ம.க.இ.க,… கூட்டத்திற்க்கு சென்றிருந்தேன். நீங்கள்?? கூட்டத்திற்க்கு வந்திருந்தீர்களா? பதிலளியுங்கள் தொடர்ந்து பேசலாம்!

    இல்லை யென்றால், கிளம்புங்கள் காத்து வரட்டும்! புரளிகளுக்கும் அவதூறுகளுக்கும் பதிலளிக்க முடியாது!

    எது பொய் என்பதை நீங்களும் அறிவீர்கள்! மற்றபடி இங்கு எழுதுவதால் (கூவுவதால்) நடந்தது பொய்யாகிவிடாது, கைப்புள்ளை களே…..

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...