சரத் பொன்சேகாவை விசாரிக்க இரண்டு இராணுவ நீதிமன்றங்கள்!

 

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிட்ட சரத் பொன்சேகா அவர்கள் இரண்டு இராணுவ நீதிமன்றங்களை எதிர்கொள்ளவுள்ளார்.

அவற்றின் நீதிபதியாக ஒரு ரியர் அட்மிரல் இருப்பார். அவருக்கு துணையாக மூன்று மேஜர் ஜெனரல்கள் செயற்படுவார்கள்.

சீருடையில் இருந்தபோதே அவர் அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டதாகக் கூறும் மூன்று குற்றச்சாட்டுக்களை ஒரு நீதிமன்றம் விசாரிக்கும்.

இராணுவ தளவாடங்கள் வாங்குவது தொடர்பில் அவர் விதிகளை மீறியதாக கூறுப்படும் 4 குற்றச்சாட்டுக்களை மற்றொரு நீதிமன்றம் விசாரிக்கும்.

சரத்பொன்சேகா அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்படைத் தலைமையகத்தில் இந்தக் குற்றச்சாட்டுக்கள் எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் அவர் மீது சுமத்தப்படும்.

இந்தக் குற்றச்சாட்டுக்களின் முழுமையான விபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை. அத்துடன் அவர் மீதான விசாரணைகள் மூடிய அறையில் வெளியாருக்கு அனுமதி இல்லாத நிலையில் நடத்தப்படும்.

தான் எந்தவிதமான தவறையும் செய்யவில்லை என்று சரத் பொன்சேகா கூறிவருகிறார்.

BBC.

Leave a Reply

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English