போரின் இறுதிக்கட்டத்தில் இடம் பெற்ற மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக பொறுப் புக்கூறுவது பற்றிய முக்கியமான விவகாரங்கள் குறித்து இலங்கை நல்லிணக்க ஆணைக் குழு கவனத்தில் எடுக்கத் தவறியுள்ளது என்று அனைத்துலக மனித உரிமை அமைப்புகளில் ஒன்றான சிறுபான்மையினர் உரிமைகளுக்கான அனைத்துலகக் குழு கண்டித்துள்ளது. இலங்கை அரசு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டமையை வரவேற்றுள்ள இந்த அமைப்பு, சிறு பான்மையினரின் உரிமைகள் குறித்த முக்கியமான சில விவகாரங்களில் ஆணைக்குழு அளித்துள்ள பரிந்துரைகளையும் வரவேற்றுள்ளது. மொழி, காணி உரிமைகள், மீள்குடியமர்வு,
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட இலேசான நில நடுக்கங்களால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளதாக கேரளா அரசு தொடர்ந்து புகார் கூறி வந்ததால், அம்மாநில அரசின் வற்புறுத்தலின் பேரில், பேரிடர் மேலாண்மை ஆணையம் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்து கடந்த 12 ஆம் தேதி உத்தரவிட்டது. இதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து கடந்த 21 ஆம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதினார். அத்துடன் தமிழக