மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜே.வி.பி.) ஒன்றிணைந்த சமஷ்டி முறைக்கு ஆதரவளிப்பதாகவும், எகிப்து வகையிலான போராட்டத்திற்கு இலங்கை மக்கள் தயாராகும் நிலையில் அதற்குத் தாங்கள் தலைமை தாங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்து தங்களை அரசியல் புனிதர்களாக்க முனைந்திருக்கிறார்கள். ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க கட்சியின் 6 வது தேசிய மகாநாட்டில் உரையாற்றுகையிலேயே, சமஷ்டி முறையில் இரு அம்சங்கள் இருப்பதாகவும் அதிலொன்று பிரிந்த சமஷ்டி முறை, மற்றது ஒன்றிணைந்த சமஸ்டிமுறை எனவும் அதில் ஒன்றிணைந்த சமஷ்டி முறைக்கே தாம் ஆதரவளிப்பதாகவும்
ஜேர்மனியில் யூதர்களை அடையாளம் காண்பதற்காக ஹிட்லர் பயன்படுத்திய அராஜக நடவடிக்கையை போன்று யாழ்ப்பாண மக்களுக்கு எதிராகப் பதிவுசெய்யும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்கின்றது என்று ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது. வடக்கில் உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளர்கள் சீருடை தரித்தவர்களால் அச்சுறுத்தப்படுவதாகவும் அக்கட்சி தெரிவித்தது. பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி. யின் தலைமை அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே ஜே.வி.பி. யின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத் இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத்
வன்னிப் படுகொலைகளின் பின்னதாக இந்திய அரசிற்கு எதிர்புணர்வு தமிழ் நாட்டில் அதிகரித்து வருகின்றது. தமிழ்க மீனவர்கள் மீதான இந்திய இலங்கை அரச படைகளின் தாக்குதல், ஈழப் படுகொலைகளுக்கு இந்திய அரச பின்புலம், ராஜபக்ச குடும்ப அரசிற்கு இந்திய அரசின் ஆதரவு என்பன தமிழ் நாட்டு மக்களை விழிப்படையச் செய்திருக்கிறது. கஷ்மீர் மக்களுக்கு ஆதரவாகவும், பழங்குடி மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவாகவும் தமிழ் நாட்டு மக்கள் பல் வேறு வடிவங்களில் எதிர்ப்பியங்களை முன்னெடுத்து வந்துள்ளனர். திராவிடக் கட்சிகளின் மாயைக்குள் உட்படுத்தப்பட்டிருந்த