தலித், தலித்தியம் என்ற சொற்கள் இலங்கையின் போராட்டங்களின் பயன்பட்டவையல்ல தமிழகத்துத் தலித்தியவாதிகள் கொண்டாடுகிற டானியல் என்றுமே அச் சொல்லைத் தன் நூல்களிற் பயன்படுத்த வில்லை அவர் பஞ்சமர் என்ற சொல்லை பயன்படுத்தினார். தாழ்த்தப்பட்டோர் என்ற சொல்லே அவர்கள் தாழ்ந்தோர் அல்ல தாழ்த் தப்பட்டோர் என்ற உண்மையான நிலையை உணர்த்துகிறது. என்ற அடிப்படையில் தாழ்ந்தோர் கீழ்ச்சாதி எளியசாதி பஞ்சமர் என்பவற்றாற் குறிக்கப்பட்டோர் ஆதிக்கக்காரரால் தாழ்த்தப்பட்டோர் என்ற வரலாற்று உண்மையை அச் சொல்...
'நிலவிலே பேசுவோம்' என்கிற கதை கைலாசபதி சிறுவயதினராக இருந்த போது வந்தது. அக்கதையில் வருகிற பெரிய மனிதர் அவராக இருந்திருக்க இயலாது. அக்கதையை வலிந்து அவருடன் தொடர்பு படுத்தியவர் எஸ். பொன்னுத்துரை. விஜயபாஸ்கரன் இலங்கைக்கு வந்தபோது கைலாசபதி வீட்டில் அவருக்கு விருந்தளித்த போது பேச்சுத்துணைக்கு மேலும் ஒருவராக தேவன் அழைக்கப்பட்டிருந்தார். விருந்தின் பின்பு இடதுசாரிகளைச் சீன்டி விடுகிற விதமாக நீங்கள் எல்லாருமிருக்க ஏன் என்னை அழைத்தார் என்று...
போரை ஊக்கிரமாக முன்னெடுத்து வடக்கு கிழக்கின் நகரங்களையும் கிராமங்களையும் உள்ளடக்கிய நிலப்பரப்பைக் கைப்பற்றி வெற்றி முழக்கமிடுவதன் மூலம் போருக்கு மூலகாரணமாக அமைந்த தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுவிட முடியாது. போர் முனைப்பால் பெறப்படும் வெற்றகள் ஆட்சி அதிகாரத்தின் நீடிப்பிற்கும் எதிர்கால நிலைப்பிற்கும் உதவுமே தவிர நாட்டின் சுபீட்சத்திற்கும் வடக்கு கிழக்கின் ஜனநாயகம் சமாதானம் இயல்பு வாழ்க்கை என்பனவற்றுக்கு வழிகாட்டமாட்டாது. எனவே தேசிய இனப்பிரச்சினைக்கு தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய சுயாட்சித் தீர்வுப் பொதியை முன்வைப்பதும்
17.01.2009. பிரித்தானியாவில் அகதி புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட சுமார் நூற்றுக்கும் அதிகமான இலங்கையர்கள் அந்நாட்டு அரசாங்கத்தினால் இலங்கைக்கு நேற்று நாடு கடத்தப்பட்டுள்ளனர். பிரித்தானிய உள்துறை அமைச்சின் ஏற்பாட்டில் சிறப்பு வானூர்தியில் நேற்று வெள்ளிக்கிழமை இவர்கள் ஏற்றப்பட்டு துபாய் வழியாக இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டவர்களில் இளைஞர்கள், பெண்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் சிறுவர்களும் உள்ளடங்குவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சிறப்பு வானூர்தி குறிப்பிட்ட நேரத்துக்கு பயணமாகும் என சட்டத்தரணிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதும் சுமார்
கொழும்பிலுள்ள ஊடகங்கள் மரண வீடுகளில் எழுப்பும் ஒப்பாரிகள் புலிகளுக்குச் சார்பானவையாகவே உள்ளன என்று ஜனாதிபதி மகிந்தராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டியில் கடந்த வியாழனன்று இடம் பெற்ற கூட்டுறவு வைபவத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்து வரும் இவ்வேளையில் அரசாங்கம் நாட்டில் அபிவிருத்தியையும் முன்னெடுத்து வருகின்றது. இந்த அபிவிருத்தி முயற்சிகளைப் பற்றி அரச ஊடகங்களும் சரி தனியார் ஊடகங்களும் சரி பேசுவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். கடந்த மூன்று ஆண்டுகளில் அபிவிருத்திப் பணிகளுக்காக அரசாங்கம் 65ஆயிரம் கோடி
17.01.2009. Who killed Lasantha? Mahinda Rajaparksa’s government killed Lasantha’ - ‘யார் லசந்தாவைக் கொன்றது? மகிந்த அரசே கொன்றது’ என்று இலங்கைத் தூதரகத்தின் முன்னால் ஓங்கி ஒலிக்கப்பட்டது. சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையைக் கண்டித்து ஜனவரி 16 மாலை 4:30 மணிக்கு இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்பாக இடம்பெற்ற கண்டனப் போராட்டத்திலேயே இலங்கை அரசின் மீதான கடுமையான கண்டனம் ஓங்கி ஒலிக்கப்பட்டது. இக்கண்டனப் போராட்டத்தை தேசம்நெற்இ கொமிற்றி போர் வேக்கர்ஸ் இன்ரநசனல்இ
கெளரவ மதகுருமார்களே அன்பர்களே பிள்ளைகளே. உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் இந்தப் பொங்கல் விழாவில் கலந்து கொள்ள இங்கு வருகை தந்த உங்கள் எல்லோரையும் நான் அன்புடன் வரவேற்கிறேன். பொங்கல் நாள் உழவர் திருநாள். தமிழர் பெருநாள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அது போல இந்த வருடம் இந்து மக்கள் அனைவருக்கும் நிச்சயமாக நல்ல வழி பிறக்கும் என உறுதியாக நான் நம்புகின்றேன். இந்த நாட்டில் வாழும் எல்லா இன மக்களும் சந்தேகமில்லாமல்
இலங்கையில் நிகழும் கொடூரமான படுகொலைகள், வன்முறைகளை நிறுத்த உடனடி போர்நிறுத்தம் தேவை என இங்கிலாந்து பிரதமர் கோர்டன் பிரவுண் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கெய்த் வாஸ் நேற்று புதன்கிழமை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில், இலங்கை தொடர்பாக எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் பிரதமர் பிரவுன் இதனைத் தெரிவித்தார். இது குறித்து வாஸ் தெரிவிக்கையில், இலங்கை வன்னிப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்திருந்த ஆயிரம் பொதுமக்களில் 100 பேரை இலங்கை படையினர் குண்டுகளை வீசி கொன்றுள்ளனர். அத்துடன் படையினர் தொடர்பான செய்திகளை வெளியிட்ட
இரண்டு நாள் பயணமாக இன்றிரவு கொழும்பு செல்லும் இந்திய அயலுறவுத்துறை செயலர் சிவசங்கர் மேனன், அந்நாட்டு அதிபர் மகிந்தா ராஜபக்சவை நேரில் சந்தித்து போர் நிறுத்த குறித்து பேச்சு நடத்த உள்ளார்.இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலையை தடுத்து நிறுத்த உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று தமிழக தலைவர்கள் கடந்த சில மாதங்களாக மத்திய அரசை வற்புறுத்தி வருகிறார்கள். தமிழக தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று, அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை செல்வார்