மக்களின் நலன்களுக்கு எதிராக தோன்றிய தலித்தியம், பின்நவீனத்துவம் முதலிய எதிர்புரட்சிகரமான கோட்பாடுகளுக்குள் முடங்க வேண்டியதாகியது. இவர்கள் மார்சியத்தை இந்திய சூழலுக்கு எற்ப பிரயோகிக்க தவறியதன் விளைவாக மார்சியம் காலவாதியாகிவிட்டத
பின்நவீனத்துவம் அடையாள அரசியலை முன்னிறுத்திய போக்கு தோல்வியுற்று, அவை எத்தகைய முன்னேற்றத்தையும் ஏற்படுத்த இயலாது என்ற அனுபவங்களுடாக இன்றைய வரலாறு கடந்துக் கொண்டிருக்கிறது
தமது ஆத்மார்த்த வாழ்விழந்து பண்பாட்டு விருத்திக்கெட்டு போலியான ஆடம்பர வாழ்வில் மூழ்கடிக்கப்படுகின்ற பலரும் இன்று இழப்பை உணரத்தலைப்படுகின்றனர்.
நாள்தோறும் காலையில் எழுந்தவுடன் முதல் பணியாக உளவுத் துறையின் அவதூறுகளை பதினைந்து நிமிடங்கள் கேட்டுவிட்டு, தன்னுடைய அன்றாடப் பணிகளைத் தொடங்குகிறார் இந்தியப் பிரதமர். இந்நாட்டு ஊடகங்கள் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் பொதுப்புத்தியை எவ்வாறு அரசின் விருப்பத்திற்கேற்ப தகவமைக்கின்றன என அடுக்கடுக்காய் நாம் இதுவரை கேட்டிராத செய்திகளை, இந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் பதிவு செய்திருக்கிறார், எஸ்.எம். முஷ்ரிப். மாலெகவ்னில் உள்ள பிகு சதுக்கத்தில் 29 செப்டம்பர் 2008 அன்று, ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் ஆறு பேர்
தமிழர் மத்தியில் போராட்டம் என்ற போரிலும் சிங்கள உழைக்கும் மக்களிடம் பயங்கரவாத ஒழிப்பு என்ற பேரிலும் எழுச்சிபெற்ற இனவாத சக்திகள் அந்தந்த மக்களின் வரலாறு படைக்கும் ஆற்றல்களைச் சிதைக்கலாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தனளூ மலையகத்தில் தொண்டு நிறுவனங்கள் அந்தக் கைங்கரியத்தை நிறைவு செய்துள்ளது.
இந்நூலை இளயத் தலைமுறை அவதானமாகவும், ஆழமாகவும் உள்வாங்குதல் நல்ல முயற்சியாகும். ஏனெனில் இதன் பின்புலம் அடிநிலை மக்களையும், உழைக்கும் மக்களையும் தலித் பிரிவினரையும், ஒடுக்கப்பட்ட பெண்ணினத்தையும் முன்னிறுத்தி ஏகபோக எதிர் நிலைகளை எதிர்ச்;சக்திகளை மோதி, புதிய சமூகக் கட்டமைப்பை நிர்மாணம் செய்யும் ஆவல் நூலெங்கும் இழையோடி விரிகின்றது.
நாவலனின் எழுத்தானது அ.மாக்ஸ் சித்தரிப்புப் போல் செவ்வியல் மாக்சியவாதியாக அல்ல. செவ்வியல் தமிழ்தேசியவாதியாகவே தென்படுகின்றார்.
'கம்யூனிசம் ஒரு காதற் கதை' நூல் படைப்பியக்கம் கொண்ட ஓரு புதினமல்லாத ஒன்று. ஆனால் வாழ்வு ஒன்று குறித்த கதையாடல்.