Thursday, March 19, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ராஜபக்ச பிரதமரானார் -பின்னணியில் நடந்தது என்ன?

இனியொரு... by இனியொரு...
10/28/2018
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள், அரசியல்
0 0
1
Home பிரதான பதிவுகள் | Principle posts

கடந்த 26.10.2010 வெள்ளியன்று இலங்கையின் பிரதமரான ரனில் விக்ரமசிங்கைவைப் பதவி நீக்கம் செய்த அந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, மகிந்த ராஜபக்சவைப் பிரதமாராக நியமித்தார். இந்தியா அமெரிக்கா உட்பட இலங்கையைச் சூறையாடும் நாடுகளின் இனப்படுகொலைத் திட்டத்தை கோரமாக நடத்திக்காட்டிய மகிந்த ராஜபக்ச பிரதமராவது நாட்டின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாவதற்கு இணையானது.

ரனில் விக்ரமசிங்கவின் தலைமையிலான அரசின் நவதாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகள் வாழ்கைச் செலவை அதிகரித்திருந்தது. கடந்த நான்கு ஆண்டுகள் இலங்கையின் பொருளாதாரம் உழைக்கும் மக்கள் குறித்து எந்தக் கவலையுமின்றி பல் தேசிய நிறுவனங்களிடம் தாரை வார்க்கப்பட்டது.

இலங்கை மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக்கொண்ட ரனில் விக்ரமசிங்க அரசை மக்களின் ஏகோபித்த எதிர்ப்பின்றி மகிந்த ராஜபக்சவால் பிரதியிட முடிந்திருக்கிறது. பெரும்பானமையாக நிறுவிக்கொள்வதற்கு முன்பாகவே, மக்களின் வாழ்க்கைச் செலவு குறித்தும், பண முறி மோசடி குறித்தும், மகிந்த அறிக்கைவிடுத்துள்ளார்.

சதிப்புரட்சி போன்று இரவோடு இரவாக மகிந்த ராஜபக்சவைப் புதிய பிரதமராக மைத்திரி அறிவித்த நிகழ்வு மக்களின் எதிர்ப்பைப் பெறப் போவதில்லை என்பது ஒரு புறமிருக்க அதன் மறுபக்கத்தில் இதன் பின்புலம் என்ன என்ற கேள்விகள் இன்றைய அரசியல் களத்தின் விவாதப் பொருளாக மாற்றமடைந்துள்ளது.
தவிர, பேரினவாதத்தையே தனது அரசியல் கோட்பாடாகக் கொண்டுள்ள மகிந்த ராஜபக்சவின் மீட்சி சிறுபான்மைத் தேசிய இனங்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜபக்ச மீட்சியின் அரசியல் பின்புலம்:

2011 ஆம் ஆண்டு ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் கொழும்பு சர்வதேச கொள்கல முனையம் international South Container Terminal சீனாவிற்கு 35 வருடக் குத்தகைக்கு வழங்கப்பட்டது. அதே வேளை ஹம்பாந்தோட்ட துறைமுகம், போர்ட் சிட்டி ஆகியன 99 வருடக் குத்தகை அடிப்படையில் சீனாவிற்குத் தாரை வார்கப்பட்டது. கொழும்பு நகரின் பல பகுதிகளில் சீனத் தொழிலாளர்களின் தங்குமிடங்கள், உணவகங்கள் துருத்தலாகத் தெரிந்தன.

போருக்குப் பின்னான ராஜபக்சவின் சீனாவுடனான இறுக்கம் மேற்கு நாடுகளையும், இந்தியாவையும் அச்சுறுத்திக்கொண்டிருக்க, ராஜபக்ச ஆட்சியில் அமைச்சராகப் பதவிவகித்த மைத்திரிபால சிரிசேனவை மேற்கும் இந்தியாவும் வாங்க்கிகொள்ள இலங்கையில் புதிய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. ராஜபக்ச தோல்வியைத் தழுவ, 2015 ஜனவரிமாதம் 9ம் திகதி பதவியேற்றுக்கொள்கிறார் சிரிசேன. சிறுபான்மைத் தேசிய இனங்களின் ஆதரவுடன் வெற்றிபெற்ற சிரிசேன, ராஜபக்சவின் ஊழல் மிகுந்த சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக ஜனநாயக ஆட்சியை அமைக்கப்போவதாக உறுதியளிக்க, இலங்கைத் தீவு முழுவதும் புதிய நம்பிக்கை சுடர்விட ஆரம்பிக்கிறது.

தனது எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் அமைச்சரவையை உருவாக்கிய மைத்திரிபால, ரனில் விக்ரமசிங்கவைப் பிரதமராகத் தெரிவுசெய்கிறார். ந;ல்லாட்சி அரசு என்று அழைக்கப்பட்ட புதிய அரசு, மகிந்த ராஜபக்ச சாம்ராஜியத்தில் நடத்தப்பட்ட ஊழல்களை ஆரம்பத்தில் வெளிக்கொண்டு வந்தாலும், யாரும் தண்டிக்கபடவில்லை. கடந்த மூன்று வருடங்கள் ரனிலின் ஆட்சியில் பொருட்களின் விலை உயர்ந்தது. வாழ்க்கைச் செலவு அதிகரித்து ரூபாயின் மதிப்பு எப்போதும் இல்லாதவாறு தரமிறங்கியது. மறுபுறத்தில் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான இராணுவ ஒடுக்குமுறை தணிந்திருந்து. நேரடியான அரசியல் அச்சுறுத்தல்கள், கடந்தல்கள் என்பன குறைந்திருந்தன.
சீனாவுடனான ஒப்பந்தங்கள் நீக்கப்படாவிட்டாலும், புதிய ஒப்பந்தங்கள் எதுவும் எழுதப்படவில்லை.

கொழும்பு துறைமுக கொள்கலன் முனையம் இரண்டு பெரும்பகுதிகளைக் கொண்டிருந்தது. அதன் தென்பகுதி சீனாவின் கைகளில் இருந்தாலும், அதன் கிழக்குப் பகுதியையும் கையகப்படுத்த சீனா எடுத்த முயற்சிகள் ரனிலின் ஆட்சி காலத்தில் கைகூடவில்லை.
இத் துறைமுகங்கள் இந்தியாவின் தென்பகுதித் துறைமுகங்களோடு நேரடித் தொடர்பிலிருந்தவை. தூத்துக்குடி துறைமுகத்தின் பெரும்பகுதிக் கப்பல்கள் கொழும்பின் ஊடாக வர்த்தகத்தில் ஈடுபட்டவை. தூத்துக்குடிக்கும் கொழும்பிற்கும் இடையிலான கடல்வழிப் பாதை இந்தியாவின் நிறுவனங்களைப் பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்தது. கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்திற்கு வரும் பாரிய கப்களிலிருந்து பொருட்கள் இறக்கப்பட்டு தூத்துக்குடி உட்பட பல்வேறு துறைமுகங்களுக்கு கொண்டுசெல்லப்படுவதால் இத் துறைமுகம் இந்திய பெரு வர்த்தக நிறுவனங்களுக்கு அவசியமாக அமைந்தது. வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடியில் தனது ஆலையை அமைத்துக்கொள்ள இலங்கைத் துறைமுக வசதியும் ஒரு காரணமாக அமைந்தது.

2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையேயான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தானது. இலங்கைத் துறைமுகங்கள் தொடர்பான இந்த ஒப்பந்தத்தில் கொழும்பு கொள்கல முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை இந்தியாவில் தங்கியிருக்க வேண்டும் என்ற ஒப்பந்தம் கைச்சாத்தானது.

இந்த வருட நடுப்பகுதியில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இலங்கையின் கிழக்குத் துறைமுகத்தை இந்திய அரசிற்கு வழங்குவதை நிராகரித்ட அதே வேளை மேற்குத் துறைமுகத்தை அபிவிருத்திக்காக இந்தியாவிற்கு வழங்குவதாகக் கூறுகிறார். பாரிய கப்பல்களை உள்வாங்கும் திறனற்ற மேற்கு முனையம் இந்தியாவிற்குப் பயனற்றதாக அமைந்ததால் இந்தியா தொடர்ச்சியான அழுத்தங்களைப் பிரயோக்கித்தும் பயனற்ற நிலையே தொடர்ந்தது.

ஒக்க்ரோபர் மாதம் 19ம் திகதி இந்தியாவிற்கு சென்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த ரனில் கிழக்குத் துறைமுகம் தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்ட விவகாரம் பின்னதாக வெளியானது. இலங்கை திரும்பிய ரனில், இந்திய அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த மைத்திரிபாலவுடன் பேச்சு நடத்துவதாகத் தெரிவிக்கிறார். 18ம் திகதி ஒக்ரோபர் மாதம், கிழக்கு துறைமுகம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித செனிவரத்ன, ஜனாதிபதிகும் பிரதமருக்கும் இது தொடர்பாகக் கருத்து மோதல் இடம்பெறவில்லை என்றும், துறைமுகத்திற்குப் பாரம்தாங்கிகள் வாங்குவது தொடர்பாகவே பேசப்பட்டதாகவும் ஊடகங்களுக்குத் தெரிவிக்கிறார்.

இந்த நிலையில் ரனிலின் தலைமையில் துறைமுகம் தனது கைகளில் வீழ்வதற்கான காலம் தாழ்ந்து போவதாகக் கருதிய இந்தியா, ஏற்கனவே மகிந்தவுடன் பேச்சுக்களை ஆரம்பித்திfருந்தது.

இந்தியாவின் கோப்ரட்அடியாளான(corporate hitman) சுப்பிரமணியன் சுவாமியின் அழைப்பின் பெயரில் இந்தியா சென்ற மகிந்த, ஆளும் பாரதீய ஜனதாக் கட்சிக்கு ஆதரவாச் செயற்படுகிறார், வன்னிப் படுகொலைகளுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் பங்களித்ததாக தொலைக்காட்சிகளில் மகிந்த நேர்காணல் வழங்க,ப.ஜ.க வின் தமிழ் நாடு அரசியல் வாதிகளும், அ.தி.மு.க வும் இணைந்து தி.மு.க மீது தாக்குதல் நடத்த ஆரம்பிக்கின்றன. தி.மு,க வைப் போர்க்குற்றவாளிக் கட்சியாக அறிவிக்க வேண்டும் என்கிறது எடப்ப்பாடி அரசு. இன்றைய திகதிக்கு பாரதீய ஜனதாவின் பிரதான எதிரிக் கட்சியாகக் கருதப்படும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது ராஜபகசவைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதலின் பின்புலத்தில் மகிந்தவிற்கும் பாரதீய ஜனதாவிற்கும் இடையேயான புரிந்துணர்வு வெளிப்பட்டது.

கிழக்குத் துறைமுகத்தை இந்தியாவிற்கு வழங்குவதற்கு ராஜபக்ச ஒப்புக்கொடதன் பின்புலத்திலேயே இவ்வளவு சம்பவங்களும் நடந்தேறியிருக்கின்றன என்பது தெளிவாக சரியாக ஒரு மாதங்கள் பொறுத்திரு வெண்டியிருந்திருக்கிறது.

ராஜபக்ச பிரதமரானதை உலகின் பல நாடுகள் கண்டித்திருக்கின்றன. இந்தியா மூச்சுக்கூட விடவில்லை. போதாக் குறைக்கு, தமிழக பா.ஜ.க வின் தமிழிசை சவுந்தரராஜன், மகிந்த இனிமேல் தவறு செய்யமாட்டார் என்ற நம்பிக்கை இருப்பதாகத் தெரிவிக்கிறார். அ.தி.மு.க வும் ஒரே குரலில் மகிந்த இனிமேல் பாரதீய ஜனதா என்ற “தமிழர் நலனில் அக்கறை கொண்ட” கட்சிகளை அனுசரித்து நடந்துகொள்வார் என்கிறது. ஆக, இந்திய அரசு துறைமுகம் உட்பட பல்வேறு திட்டங்களுக்காக மகிந்த என்ற இனக்கொலையாளியை நம்பியதன் விளைபலனே இலங்கையின் இன்றைய அரசியல் சூழல்.
மகிந்த ஆட்சி காலத்தில் கேரின் லங்கா என்ற நிறுவனத்தை ஆரம்பித்த வேதாந்தா நிறுவனமே தூத்துத்துகுடியில் நடத்தப்பட்ட 14 அப்பாவிப் பொதுமக்களின் படுகொலைகளின் பின்னணியில் செயற்பட்டது. இலங்கையின் கிழக்குத் துறைமுகக் கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை நாளையிலிருந்து வேதாந்தா ஏற்றுக்கொண்டாலும் வியப்படைவதற்கில்லை.
-சபா நாவலன்

http://www.ft.lk/front-page/Govt–rejects-dispute-between-President-and-PM-over-East-Container-Terminal/44-664999
http://www.ft.lk/columns/East-Container-Terminal-blunder–Learn-from-Chinese/4-662984

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைமையின் எதிர்காலம்…

Show my money - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேரம் பேசுகிறதா?

Comments 1

  1. Kumar says:
    7 years ago

    ஆகவே தமிழ் கட்சிகள் ராஜபக்சவிற்கு ஆதரவாக வாக்களிக்கப்போவது இதன் மூலம் உறுதியாகிறது.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...