Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ஜோன் கெரியின் இலங்கைப் பயணம் : அபாய எச்சரிக்கை

இனியொரு... by இனியொரு...
05/01/2015
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

johnkerryஅமெரிக்கா -தனது நேச நாடுகள் தவிர்ந்த- அதிகமாக உறவு வைத்துக்கொள்ளும் நாடுகள் அனைத்திலும் இரத்த ஆறு பெருக்கெடுத்திருக்கிறது. ஈரான், ஈராக், லிபியா, மாலைதீவு என்ற ஒரு பட்டியலையே போட்டுக்காட்டலாம். உலகைக் கொள்ளையடிக்கும் பல்தேசியப் பெரு நிறுவனங்களின் தலைமையகமான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பயங்கரவாதம் உலகின் மூலை முடுக்கெல்லாம் படுகொலைகளை நடத்தியிருக்கின்றது. பல்தேசிய நிறுவனங்களின் இலாப்ப் பசியைத் தீர்ப்பதற்கு அமெரிக்க ஆக்கிரமிப்பு இராணுவம் ஆயிரமாயிரமாய் மனித உயிர்களைத் தீனியாகக் கொடுத்துள்ளது.

உலகில் மக்கள் வெற்றிபெற்ற எல்லாப் போராட்டங்களும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களாகவே அமைந்திருக்கின்றன. மக்களின் உரிமைக்கான போராட்டங்களை அழிக்கும் கருத்தியல் மற்றும் இராணுவக் கொலைக்கருவிகளை அமெரிக்காவே உலகில் முதல் தடவையாக அறிமுகப்படுத்திற்று.

தன்னார்வ நிறுவனங்கள், உளவு அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், உலகவங்கி, நாணய நிதியம் போன்ற பொருளாதார அமைப்புக்கள், ஐக்கிய நாடுகள் நிறுவனம், சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற மனித உரிமை அமைப்புக்கள் என்று நூற்றுக்கணக்கான உப கூறுகள் அமெரிக்கா ஏகாதிபத்தியப் பயங்கரவாதத்தின் முகவர் நிறுவனங்களாகச் செயற்படுகின்றன.

புரட்சிகளையும் போராட்டங்களையும் அழிப்பதற்கு ‘எதிர்ப்புரட்சி அமைப்புகளை’ அமரிக்கவே தோற்றுவித்தது. புரட்சிகளைத் தனது முகவர்கள் ஊடாகத் தலைமை தாங்கி அழித்தது.

உலகத்தில் நாகரீமடைந்த சமூகங்கள், மக்கள் பற்றும் மனிதாபிமானமும் உடையவர்கள் அமெரிக்காவை எதிரியாகவே எண்ணுகின்றனர். தமிழர்கள் மட்டும் ஐ.நாவில் அமெரிக்கா கொண்டுவரப்போகும் போர்க்குற்ற அறிக்கையை அண்ணார்ந்து பார்த்துக்கொண்டு உரிமைகளைக் கோட்டைவிட்டார்கள்.

மத்திய கிழக்கு நாடுகளில் இதுவரை களமாடிய அமெரிக்கா அங்கு ஆயிரக்கணக்கான அகதிகளைத் உருவாக்கியது. லட்சம் லட்சமாக மக்கள் கொல்லப்பட்டனர். சர்வாதிகளையும், கொடுங்கோலர்களையும் வளர்த்து ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கிற்று.

இனிமேல் ஆசியாவில் தாம் கவனம் செலுத்த வேண்டும் என ஆசிய பசிபிக் கட்டளை என்ற கடற்படைப் பிரிவை ஆரம்பித்து ஆசியக் கடற்பிராந்தியத்தை இராணுவமயப்படுத்திற்று. வன்னிப் படுகொலைகளின் பின்னணியில் செயற்பட்டு தெற்காசியாவில் மனிதப் பலிகளை ஆரம்பித்து வைத்தது.

உலகத்தில் குற்றச் செயல்கள் மிகக் குறைவாகக் நடைபெறும் நாடுகளில் ஒன்றான மாலைதீவில் இந்தியாவுடன் இணைந்து சதிப் புரட்சியை ஆரம்பித்து வைத்தது. இந்தியாவில் ஒரு புறத்தில் இந்து பாசிசத்தையும் மறு புறத்தில் இஸ்லாமியத் தீவிரவாதத்தையும் உருவாக்கத் துணை போயிற்று.

இலங்கையில் அமெரிக்காவின் அனுசரணையுடன் கொலைகளுக்காக வளர்க்கப்பட்ட மகிந்த ராஜபக்சவை ஆட்சியிலிருந்து அகற்றிவிடு தனது பொம்மைகளை ஆட்சியிலமர்த்க ஜோன் கெரி நேரடியாகவே தலையிட்டார். சர்வாதிகாரி மகிந்த ஆட்சியிலிருந்து விலக மறுத்த போது கெரி தொலைபேசியில் மகிந்தவை மிரட்டினார் என்ற செய்திகள் வெளியாகின.

உககத்தின் தெற்காசிய மூலையின் கண்ணீர் போலக் காட்சி தரும் இலங்கை போன்ற ஒரு நாட்டிற்கு அமெரிக்காவின் ராஜாங்கச் செயலாளர் திடீர்ப் பயணம் செய்வது என்பது அமெரிக்க அரசின் நேரடித் தலையீட்டின் முன்னறிப்பாகும். அழிவிற்கான முன்னெச்சரிக்கையாகும். தெற்காசியாவில் தலையிடும் அமெரிக்காவின் திட்டத்திற்கு இலங்கையே தளமாகப் பயன்படுத்தப்படும்.

வியட்னாம் ஆக்கிரமிப்பு யுத்தக் குற்ற்வாளி ஜோன் கெரி பதக்கம் பெறுகிறார்
வியட்னாம் ஆக்கிரமிப்பு யுத்தக் குற்ற்வாளி ஜோன் கெரி பதக்கம் பெறுகிறார்

வியட்னாம் யுத்தத்தின் போது தாய்லாந்து நாடு அமெரிக்காவின் பின் தளமாகச் செயற்பட்டது. அமெரிக்க இராணுவம் தாய்லாந்தின் கலாச்சாரத்தையே தலைகீழகப் புரட்டிப் போட்டது. அமெரிக்க இராணுவம் தாய்லாந்தில் தங்கியிருத்த போது பெண்களைப் பாலியல் வல்லுறவிற்கு உடப்டுத்தியது. பின்னர் பாலுறவைத் தொழிலாக மாற்றியது. இன்றும் தாய்லாந்தின் பிரதான தேசிய வருவாய்களில் ஒன்றாக பாலியல் காணப்படுகின்றது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவம் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவது ஆதரபூர்வமாக நிறுவப்பட்டது. உலகம் முழுவதும் அமெரிக்க அரசு நடத்தும் நர வேட்டையை இலங்கையிலும் அதே வேகத்தில் ஆரம்பிக்கத் தலைப்படுகிறதா என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஜோன் கெரி நாளை 02.05.2015 இலங்கைக்குப் பயணம் செய்யவுள்ளார். இதன் பின்புலத்திலுள்ள ஆபத்தை ஆராய்வதைத் தவிர்த்து ஜேன் கெரியின் காலடியில் விழுந்து வணங்கத் தயாராகும் தமிழர்களுக்கு உலகில் போராடும் எந்த சமூகமும் ஆதரவு வழங்க முன்வராது.
ஜோன் கெரி சார்ந்த நாட்டின் ஆதரவுடன் நடைபெற்ற வன்னிப் படுகொலைகளின் போது கணவரை இழந்த இராணுவத்தின் மனைவியரை ஜோன் கெரி சந்தித்து ஆறுதல் கூறவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. இதனை அறிந்த ஒபாமாவிற்கான தமிழர்கள் அமைப்பு என்ற ஏகாதிபத்திய ஒட்டுக்குழு தமிழர்களையும் சந்திக்குமாறு ஜோன் கெரிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஜோன் கெரிக்கு போர் புதியதல்ல, வியட்டனாமில் ஆக்கிரமிப்பு யுத்தத்தில் ஈடுபட்டதற்காக பதகம் பெற்றவர். 1971 ஆம் ஆண்டு வியட்னாமிய யுத்தத்திற்கு எதிராகச் செயற்பட்டதாகக் கூறும் ஜோன் கெரி, ஜோர்ஜ் புஷ் இற்கு எதிராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது தனது ஆக்கிரமிப்பு யுத்தத்தைப் பிரச்சார சாதனமாகப் பயன்படுத்தினார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
சம்பூரில் மக்கள் போராட்டம் : தொடரும் திட்டமிட்ட இனவழிப்பு

சம்பூரில் மக்கள் போராட்டம் : தொடரும் திட்டமிட்ட இனவழிப்பு

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...