Friday, March 6, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இறப்பிற்கு பின்னரான வாழ்வு-அறிவியல் வளர்ச்சி : வி.இ.குகநாதன்

இனியொரு... by இனியொரு...
11/20/2016
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள், அரசியல், அறிவியல்
0 0
4
Home பிரதான பதிவுகள் | Principle posts

soul-falseகடந்த வெள்ளியன்று( 18-11-16) பிரித்தானிய ஊடகங்களில் அலசப்பட்ட ஒரு முக்கிய விடயமாக 14 வயது சிறுமி (புற்றுநோயால்) தனது இறப்பிற்கு பின்னரான வாழும் ஆசையினை நிறைவேற்றுவதற்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்ததனைக் குறிப்பிடலாம். அதாவது இன்றைய நிலையில் குறித்த புற்றுநோயிற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இன்னும் ஒரு நூறு வருடங்களில் அதற்கான மருந்து கண்டுபிடிக்கப்படும். உதாரணமாக நூறு வருடங்களிற்கு முன்னர் உயிர்க்கொல்லி நோய்களான மலேரியா, கசம் போன்றவற்றுக்கு இன்று மருந்து இருப்பது போன்றது. எனவே இறந்த சிறுமியின் உடலினை கடுங்குளிரூட்டல்..(Cryogenics)மூலம் நூறு வருடங்களிற்கோ அல்லது மருந்து கண்டுபிடிக்கப்படும்வரை சேமித்து வைப்பதற்கான அனுமதியினை நீதிமன்றம் வழங்கியிருந்தது.

தாய் சிறுமியின் விருப்பத்திற்கு இணங்கியபோதும் விவாகரத்து மூலம் பிரிந்துள்ள தந்தை முதலில் இதனை விரும்பவில்லை ,ஏனெனில் குறித்த வருடங்களிற்கு பின்னர் உயிர்ப்பிக்கப்படும்போது அவரது உறவினர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் என்பதாகும். ஆனால் தந்தையும் இறுதியில் மகளின் விரும்பத்திற்கு இணங்கினார். நீதிபதியும் மருத்துவமனைக்கே சென்று அனுமதி வழங்கினார். இச் சிறுமி ஒக்டோபர் 17 அன்று இறந்தார்.எனினும் இந்த விடயம் சில சட்ட நடைமுறைகளிற்காக இப்போதே வெளியிடப்படுகிறது. இப்போது இச் சிறுமியின் உடல் கடுங்குளிரூட்டலுடன் அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு Michigan Cryonics Institute இல் பராமரிக்கப்படுகிறது.

கடுங்குளிரூட்டல் மூலம் செல்களை உயிருடன் பராமரிக்கும் முறை:

இவ்வாறான பராமரித்தல் முறையினை CRYOPRESERVATION என அழைப்பார்கள். இங்கு குளிரூட்டலிற்கு பனிக்கட்டிகளைப்பயன்படுத்த முடியாது, பனிக்கட்டிகள் உடலிலுள்ள உயிருள்ள செல்களை கொன்றுவிடும். எனவே நிட்ரோஐன் (Nitrogen) வாயுக்களை கணனி கட்டுப்பாட்டுடன் (computer control by nitrogen)வைத்து பின்பு நிட்ரோஐன் (nitrogen)திரவத்தின் உதவியுடன் உடலின் செல்களை காலவரையன்றி சேமித்துவைக்கமுடியும். இவ்வாறு இங்கு (Michigan Cryonics Institute) சேமித்து வைக்கப்படும் 143வது நபர் இச் சிறுமியாகும். இச் செயல்முறைக்கு 37000 பவுண்ஸ் செலவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தங்களது உடல்களையும் எதிர்காலத்தில் சேமித்து வைக்குமாறு Seth Mcfaiane(Family guy creator), Larry King9talkhow host), Birtney Spears(singer) போன்ற பிரபலங்களும் முன்பதிவு செய்துவைத்துள்ளனர். பேராசிரியர் வாரி புல்லர் ( Barry Fuller, a professor in surgical science and low temperature medicine, at University College London) இந்த கடுங்குளிரூட்டல் முறை மூலமான மருத்துவமுறையானது அண்மைய எதிர்காலத்தில் பயன்தரும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மூளையின் எண்ணங்கள், நினைவுகளினை பராமரித்தல்:

human-cryoஅறிவியல் துறையில் ஏற்பட்ட மற்றொரு வளர்ச்சியாக மனித மூளையில் சேமிக்கப்பட்டுள்ள எண்ணங்கள், நினைவாற்றல், ஆளுமைத்திறன் என்பவற்றினை ஒரு சிறப்புக் கணனியுடன் இணைப்பதன் மூலம் அவற்றினை மனிதனின் இறப்பிற்கு பின்னரும் செயற்படவைக்கும் இன்னொரு செயற்திட்டமாகும். எண்ணங்கள், நினைவாற்றல், ஆளுமைத்திறன் போன்றன மனித மூளையில் நியூரோன்களின் இணைப்பின் (connections between neurons) மூலமே செயற்படுகின்றன. இதனை கணனிமயப்படுத்தி இறப்பிற்கு பின்னரும் செயற்படவைக்கும் முறையாகும். இங்கு இந்த கணனிமயப்படுத்தப்பட்ட செயற்கை மூளையானது மனித இயற்கையான மூளையின் மிகவும் சிக்கலான செயற்பாட்டுக்கு ஈடாகுமா என்பதில் விஞ்ஞானிகளிற்குள் கருத்துவேறுபாடுகள் உள்ளபோதும் அடிப்படையில் மூளையின் செயற்பாட்டில் எல்லோருமே ஒன்றுபடுகிறார்கள்.

கேள்விக்குள்ளாகும் மதநம்பிக்கைகள்:

reincarnationமேற்குறித்த இரு அறிவியற் கண்டுபிடிப்புக்களும் சகல மதங்களினதும் உடல், ஆன்மா, மறுமை , சொர்க்கம், நரகம் , ஆவி போன்ற பல கருத்துகளிற்கு மரண அடி கொடுத்துள்ளன. எனவே இத்தகைய கண்டுபிடிப்புக்கள் மதப்பிழைப்புவாதிகளின் வயிற்றில் புளியினை க் கரைக்கப்போவது நிச்சயம். அதாவது நவீன அறிவியல் வளர்ச்சியில் ஒரு மனிதனின் இறப்பினை எளிமையாக விளங்கிக்கொள்வதற்கு நாம் அது ஒரு கணனி காலப்போக்கில் தனது செயற்பாட்டினை நிறுத்திக்கொள்வதுடன் ஒப்பிட்டு விளங்கிக்கொள்ளலாம்.

இங்கு கணனியிலிருந்து இறுதியில் எதுவுமே வெளிச்செல்வதில்லை, அதுபோன்றே மனிதனின் உடலிருந்தும் ஆன்மாவோ, ஆவியோ எதுவுமே வெளியேறுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் அவ்வாறு ஆன்மா, ஆவி என்று எதுவுமேயில்லை. ஏற்கனவே டார்வினின் பரிணாமக்கோட்பாட்டினாலும்.(இப்போது பரிணாம நிகழ்வு என்றே குறிப்பிடுகிறார்கள் –Fact not a theory) பெருவெடிப்பு நிகழ்வினாலும் ( Big bang)கடவுளின் படைத்தல் தொழில் அடிவாங்கியிருந்தது. அடுத்த தொழிலான காத்தலிற்கு மதவாதிகளே இப்போது கடவுளை நம்பாமல் சிவசேனா, ஐ.எஸ் (IS) ,பொதுபலசேனா போன்ற அமைப்புக்களை உருவாக்கி கடவுள்களையே அவர்கள்தான் பாதுகாக்கிறார்கள். இங்கு மேற்கூறிய அறிவியலின் புதிய கண்டுபிடிப்புக்கள் மூலம் கடவுளின் எஞ்சியிருந்த அழித்தல் தொழிலும் பறிபோய் கடவுள் செயலற்றவராக்கப்பட்டுள்ளார்.

உடல்-உள காலவரையற்ற அறிவியல் வாழ்வின் சாத்தியம்:

மேற்குறித்த அறிவியல் கண்டுபிடிப்பாகவிருக்கப்போகும் எல்லையற்ற வாழ்வு நிச்சயமாக நிகழுமா என்பது பற்றி விஞ்ஞானிகளிடமே முற்றுமுழுதான உடன்பாடில்லை என்பது உண்மையே. இதனை இரு கோணங்களில் பார்க்கலாம். முதலாவது கோணத்தில் சில நூற்றாண்டுகளிற்கு முன்பு சாதாரண மாரடைப்புக்கே மருத்துவம் இல்லாத காலத்தில் இன்று சாத்தியமாகும் இருதய மாற்றுச்சிகிச்சையினை கற்பனையே பண்ணிருக்கவே முடியாது. அதேபோல இன்று கற்பனை போலத்தோன்றும், ஆனால் அறிவியல் அடிப்படைகளைக்கொண்டுள்ள செயற்திட்டங்கள் ஒரு சில நூறு வருடங்களில் சாத்தியமாகலாம்.. மற்றைய கோணம் எல்லையற்ற வாழ்வு என்றுமே சாத்தியமில்லை என்று தெரிந்து கொண்டே சில விஞ்ஞானிகளும், சில நிறுவனங்களும் நிதி ஒதுக்கீட்டினைப் பெறுவதற்காக இவற்றின் மீதான நம்பிக்கையினை அதிகப்படுத்திக் காட்டுகிறார்கள் என்பதாகும். இவ்விரு கோணங்களில் எது உண்மை என்பதனைக் காலம் தீர்மானிக்கும். இவற்றில் எது உண்மையானாலும் இரண்டு உண்மைகளை மறுக்கமுடியாது.

1. இக் கண்டுபிடிப்புக்கள் மூலம் மருத்துவத்துறை முன்னேற்றமடைந்து மனித வாழ்வு தரத்திலும், காலத்திலும் அதிகரிக்கும்.

2. இவ்வடிப்படைகள் மூலம் மதம், கடவுள் என்பவற்றின் மீதான நம்பிக்கைகள் தகர்த்து எறியப்படும்.

முடிவு:

karlமதரீதியான மறுவாழ்வு, ஆன்மா என்பனவெல்லாம் கற்பனைகள் என்பதனை அறிவியல் தெளிவுபடுத்தியுள்ளது. அறிவியல்ரீதியான எல்லையற்ற வாழ்வு என்பதில் சில அடிப்படைகள் கண்டுகொள்ளப்பட்டுள்ளபோதும் இன்னும் பல வினாக்கள் தொக்கிநிற்கின்றன. ஆனால் ஒரு மனிதன் தனது வாழ்வினை சக மனிதர்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்பதன் மூலம் எல்லையற்ற வாழ்வினை வாழலாம். அவ்வாறு வாழ்ந்துவரும் ஒரு மனிதனின் பிறந்த ஆண்டின் இருநூறாவது ஆண்டினையே அடுத்தாண்டு கொண்டாடவுள்ளோம். அவர்தான் கார்ல் மார்க்ஸ்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
பாரிஸில் மாவீரர் தின வாள் வெட்டு வன்முறை நாளைய சந்ததிக்கும் விதைக்கப்படுகிறது?

பாரிஸில் மாவீரர் தின வாள் வெட்டு வன்முறை நாளைய சந்ததிக்கும் விதைக்கப்படுகிறது?

Comments 4

  1. pakalavan says:
    9 years ago

    விஞ்ஞானத்தின் முன்னேற்றத்திற்கும் ஒரு அளவு உண்டு. எனவே எல்லையற்ற வாழ்வு சாத்தியமானால், எண்ணற்ற மனிதர்கள் வாழ்வது எங்கே?

    • Wijey Kulathungam says:
      9 years ago

      Who says there is restriction in scientific development ? The human population in the year 1000 was 254 million. Now it is 6080 million (6 Billion) Nearly 24 times more. Science will find a way. Current trend in storage is floating store rooms in air up and above. There will be floating apartment/Flats/hotels too up in the air (very safe from natural disasters). Who knows what is there in future.

  2. Prithiviraj Kulasingham says:
    9 years ago

    • sumerian says:
      9 years ago

      விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்கப்பாத விடயங்களிற்குள் மதம் ஒழிந்துகொள்ள முயலுகிறது. முதலில் மதங்கள் பெருவெடிப்பு big bang என்பது பற்றி எதையுமே சொல்லவில்லை. இப்போது பெருவெடிப்பிற்கு கடவுள்தான் காரணம் என்கிறார்கள். முன்பு பூமி கோளவடிவமானது எனக்கூறியதற்காக புருனோ என்ற விஞ்ஞானியினை உயிரோடே எரித்தார்கள். இப்போது விஞ்ஞானத்தை வைத்து கண்ணாம்பூச்சி காட்டப்பார்க்கிறது. இதனை ” God is myth “என்ற புத்தகம் தெளிவாக விளக்குகிறது. எல்லாம் சரி, ஆதாமினை களிமண்ணிலிருந்து படைத்தது பற்றி இப்போதைய விளக்கம் என்ன?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...