Tuesday, May 13, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

தூத்துக்குடி படுகொலைகளின் பின்னணியில் உறைந்திருக்கும் உண்மை!

இனியொரு... by இனியொரு...
05/24/2018
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள், அரசியல்
0 0
0
Home பிரதான பதிவுகள் | Principle posts
நியாம்கிரி மக்களின் போராட்டம்

தூத்துக்குடி, கன்னியாகுமாரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இன்டர்நெட் இணைப்பு எதிர்வரும் 27 ம் திகதி வரை தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. முக்கிய செயற்பாட்டாளர்கள் தமிழகம் முழுவதும் கைதுசெய்யப்படுகிறார்கள். தூத்துக்குடி, கன்னியாகுமரி திருனெல்வேலி உட்பட்ட மாவட்டங்கள் காவல்துறையின் முற்றுகைகு உள்ளாகியிருக்கிறது. நகரங்கள், கிராமங்களில் அரச படைகளின் வன்முறை அப்பாவி மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. மூன்று மாவட்டங்களிலும் வெளியுலகுடனான தொடர்புகளை முற்றாகத் துண்டித்து சாட்சிகளின்றி நடத்தப்படும் அரச பயங்கரவாதம் உலகத்தை நச்சாக்கும் வேதாந்தா என்ற நிறுவனத்தின் இலாப வெறிக்காகவே நடத்தப்படுகிறது.

இந்து பாசிசக் கட்சியான பாரதீய ஜனதாவினதும் அதன் அடியாள் படைகளதும் ஆக்கிரமிப்புற்கு எதிராக மக்கள் தற்காப்பு யுத்தம் ஒன்றைத் திட்மிடுவதற்கான புறச் சூழல் உருவாகியிருக்கிறது என்பதே தமிழக மற்றும் பாரதீய ஜனதா அரசுகள் மக்களுக்குக் கற்றுக்கொடுக்கின்றன.

இந்தியா முழுவதும் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்ட போதும் தமிழ் நாட்டில் குறிப்பாக தூத்துக்குடி சார்ந்த மக்களின் போராட்டம் இன்று முக்கியத்துவம் வாய்ந்தது.

2013 ஆம் ஆண்டு நியாம்கிரி மலைப்பகுதியிலிருந்து கனிமங்களை அகழ்ந்தெடுத்து ஒரிசா பழங்குடி மலை வாழ் மக்கள் வாழும் பகுதியில் சுத்திகரிப்பு ஆலை நடத்துவதற்காக அனில் அக்ரவாலின் வேதாந்தா குழுமம் முதலீடு செய்திருந்தது. மலை வாழ் பழங்குடி மக்களின் தொடர்ச்சியான போராட்டத்தால் 5000 கோடி இந்திய ரூபாய்களை முதலீடைக் கைவிட்டு அங்கிருந்து வேதாந்தா வெளியேறியது. ஒரிசாவில் நிறுவனத்திற்கு ஏற்பட்ட பின்னடைவை விட தூத்துக்குடி போராட்டங்கள் வேதாந்தா குழுமத்தையே மூடும் நிலையைத் தோற்றுவிக்கும் என்பதே இன்றைய சூழல்.

கடந்த சித்திரை மாதம் 18ம் திகதியன்று, முதலீடு மற்றும் தர நிர்ணைய வங்கியான கோல்ட்மன் சாஷ் (goldman shchs) வேதாந்தா நிறுவனத்தின் பங்குகளை தரக் குறைப்புச் செய்வதாக அறிவித்திருந்தது. அதற்கான காரணமாக தூத்துக்குடி ஆலை செயற்பட இயலாத சூழல் காணப்படுவதாகவும் மக்கள் போராட்டங்கள் நடைபெறுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தது. மக்களின் போராட்டங்களால் 11.5 பில்லியன் டொலர் முதலீட்டில் உருவாக்கப்பட்டத் திட்டமிட்டிருந்த தூத்துக்குடி ஸ்ரெலைட் ஆலையின் விரிவாக்கம் தடைப்பட்டிருந்தமையே இதற்கான காரணமாக குறித்துக்காட்டியிருந்தது.

கோல்ட்மன் சாஷ் இன் அறிக்கைக்குப் பதிலளித்த வேதாந்தா, தூத்துக்குடி மக்கள் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக குறிப்பிட்டிருந்தது.

வெங்கட கிருஷ்ணன்

கோட்ல்மன் சாஷ் இன் தரக்குறைப்பைத் தொடர்ந்து தமிழ் நாட்டு பிராமணரான சிறீனிவாசன் வெங்கட கிரிஷ்ணன் என்பவர் வேதாந்தாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். தென்னாபிரிக்காவில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் ஆங்கிலோ கோல்ட் லிமிடட் என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகச் செயற்பட்ட வெங்டககிரிஷ்ணன் அந்த நிறுவனத்தின் தலைமை நிதி நிர்வாகியாகப் பதவி வகித்த காலப்பகுதியிலேயே மரிக்கான தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

அமைதியாகப் போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் மீது தென்னாபிரிக்க அரசு தனது படைகளை ஏவி 34 நிராயுதபாணியான அப்பாவிகளைக் கொலை செய்தது. 2012 ஆம் ஆண்டு வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களைப் பதவி நீக்கம் ஆங்கிலோ கோல்ட் நிறுவனம் பதவி நீக்கம் செய்ததன் பின்னரே தொழிலாளர்கள் போராட ஆரம்பித்தனர். படுகொலைகள் நிகழ்த்தப்பட்ட பின்னர் ஆங்கிலோ கோல்ட் நிறுவனத்தின் மீது எந்தக் குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படவில்லை. இக் கொலைகள் நடத்தப்பட்டு ஒராண்டிற்கு உள்ளாகவே அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக வெங்கடகிருஷ்ணன் நியமிக்கப்படுகிறது.

மரிக்கான படுகொலைகள்

 கோல்ட்மன் சாஷ் இன் தரக்குறைப்பின் பின்னர் வேதாந்தாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக வெங்கடகிருஷ்ணன் நியமிக்கப்பட்டதும் அதனைத் தொடர்ந்து தூத்துக்குடிப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டதும் தற்செயலான சம்பவங்கள் அல்ல. படுகொலைகளை இந்திய மற்றும் தமிழ் நாடு அரசுகளின் ஊடாக நடத்துவதற்காகவே வெங்கடகிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் நியாயமானவையே.

கோல்ட்மன் சாஷ் இன் தர மதிப்பீட்டின் அடிப்படையில் வேதாந்தா ஏற்கனவே பங்கு சந்தையில் நெருக்கடிகளைச் சந்தித்துவருகிறது. அதன் பங்குகளின் விலை 3.45 வீதம் சரிவைச் சந்த்தித்தது. தூத்துக்குடியில் ஸ்ரெலைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுமானால் வேதாந்தா நிறுவனம்பெரும் சரிவைச் சந்திக்கும். உலகளாவிய அதன் நிறுவனங்களின் பங்குகளில் வீழ்ச்சி ஏற்படும். ஆக, எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் விதைத்து தனது இருப்பைக் காப்பாற்ற வேதாந்தா நிறுவனம் முயற்சிக்கும்.

அனில் அக்ரவால்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனும் பாரதீய ஜனதாக் கட்சியுடனும் நெருக்கமான உறவைப் பேணும் அனில் அக்ரவாலை தனது மானிலமான குஜராத்தில் அலுமினிய ஆலையை அமைத்துக்கொள்ளுங்கள் என அழைப்புவிடுத்தவரே நரேந்திர மோடி தான். பாரதீய ஜனதாக் கட்சிக்கு அதிக நிதிவழங்கும் பல் தேசிய நிறுவனங்களுள் வேதாந்தா முதலிடத்தை வகிக்கிறது.

இந்த நிலையில் அனில் அக்ரவாலின் நிறுவனத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் பாரதீய ஜனதாவும் அதன் அடியாள் அரசான தமிழக அரசும் தம்மாலான அனைத்தையும் கையாளத் தயங்காது.மேலும் படுகொலைகள் நடத்தவும் தமிழகம் முழுவதையும் போர்களமாக்கவும் தயக்கம்காட்டாது.

தமிழக மக்கள் அரசபடைகளின் வன்முறையிலிருந்து தம்மைத் தற்காத்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆயுதம் தாங்கிய அரசபடைகளின் வன்முறைக்கு எதிரான தற்காப்பு மக்கள் யுத்தத்திற்கு எதிர்காலத்தில் தயாராக வேண்டிய நிலையை அரச படைகள் மக்களுக்கு உணர்த்திவருகின்றன.
வேதாந்தாவின் வளச் சுரண்டலால் பாதிக்கப்படும் கர்நாடக மக்களையும், ஏனைய மாநிலங்களைச் சார்ந்தவர்களையும் இணைத்துக்கொண்டு பலம் மிக்க போராட்டம் ஒன்று நடத்தப்படுமானால் மட்டுமே அழிவுகளிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ஸ்ரெலைட் ஆலை தொடர்ந்து செயற்படும் : சர்வதேச கிரிமினல் அனில் அக்ரவால்

ஸ்ரெலைட் ஆலை தொடர்ந்து செயற்படும் : சர்வதேச கிரிமினல் அனில் அக்ரவால்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...