Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

மைத்திரிபாலவின் சகோதரர் பொலநறுவை தாதா பிரியந்த சிரிசேனவின் மரணத்தின் அரசியல்

இனியொரு... by இனியொரு...
03/29/2015
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

walirajமைத்திரிபால சிரிசேனவின் இளைய சகோதரர்களில் ஒருவரும் மணல் கொள்ளைத் தாதாவுமான வெலி ராஜு எனப்படும் புத்ததாச பிரியந்த சிரிசேன நேற்று 28.03.215 அன்று கொழும்பு வைத்தியசாலை ஒன்றில் அகால மரணமடைந்தார். அவரது மரணத்திற்கு பாகிஸ்தான் இரங்கல் செய்தி அனுப்பிய கோமாளித்தனம் தவிர இலங்கை அரசியலில் பல்வேறு அதிர்வலைகளை இச்சம்பவம் எற்படுத்தியுள்ளது. வெலி ராஜு என்ற பொலநறுவை சண்டியன் நீண்டகாலமாக மணல் கொள்ளை வியாபாரத்தில் ஈடுபடுபவர். ராஜரட்ட பில்டேர்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளரான இவர் பொலநறுவையில் அறியப்பட்ட தாதா.

பொலநறுவையில் வீடொன்றில் வைத்து நடைபெற்ற வாய்த் தர்க்கத்தில் பங்காளி ஒருவரால் கடந்த வியாளனன்று தாக்கப்பட்டார். அதன் பின்பு ஹெலிகொப்டர் ஒன்றின் ஊடாக கொழும்பிற்கு கொண்டுவரப்பட்ட வெலி ராஜு அங்கு மரணமானார். 12 உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்தின் கடைசி நபரான இவர் மைத்திரிபால உடன் எந்தத் தொடர்பும் அற்றவர் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் வெலி ராஜுவை கொழும்பிற்கு ஹெலி கொப்டரில் கொண்டு சென்றதை உதாரணம் காட்டி அவர் மைத்திரியுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தார் என்கின்றனர். சீனாவில் சுற்றுபயணம் செய்துகொண்டிருக்கும் உறுப்பினரான மைத்திரிபாலவின் சகோதரரின் மரணத்தை பாகிஸ்தான் உலக மயப்படுத்தியுள்ளது.

மைத்திரிபாலவைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்டுள்ள விம்பத்திற்கும் அவரது சகோதரரின் தாதாத் தனத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதால் மைத்திரியால் கவனிக்கப்படாமல் அவர் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்பதை அனுமானமாக வைத்துக்கொள்ளலாம்.

பொலநறுவையில் அருசி வியாபாரம் செய்யும் மில்லியனேர் டட்லி சிரிசேனவும் மைத்திரியின் சகோதரர் தான். தேர்தல் காலத்தில் மைத்திரிக்கு ஆதரவாக இவர் உடகங்களில் நேர்காணல்களை வழங்கினார்.

பொலநறுவையில் அருசி மாபியா என அழைக்கப்படும் டட்லி சிரிசேன மகிந்த ராஜபக்ச அரசின் செல்வாக்கைப் பயன்படுத்தினார் என்பதை அவரே மறுக்கவில்லை.

இவை அனைத்திற்கும் மேலாக மைத்திரி ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய சில நாட்களிலேயே தனது சகோதரர்களில் ஒருவரான குமாரசிங்க சிரிசேனவை சிறீலங்கா ரெலிகொம் இன் தலைவராக நியமித்தார்.

தெற்காசியப் பிராந்தியத்தில் ஐரோப்பா, ஆசியா மத்திய கிழக்கு போன்ற நாடுகளை இணைக்கும் தொலைத்தொடர்பு மற்றும் இன்டர்னெட் கடலடித் தொடர்புகளைக் கவனிக்கும் சிறீலங்கா ரெலிகொம் மில்லியன்கள் புரளும் வியாபாரம்.

ராஜபக்ச குடும்பம் தனது குடும்பதினரை சிறீலங்கா ரெலிகொம் இன் உள் நுளைத்து பணக் கையாடல்களில் ஈடுபட்டு வந்தது. இதனால் குமரசிங்க சிரிசேனவின் நியமனம் குறித்து எதிர்த்தரப்பு மூச்சுக்கூட விடவில்லை.
இந்தப் பணத்தின் வாசனையை அறிந்து கொண்ட மைத்திரிபால குடும்பம் ரெலிகொம் சேவையை தனது கட்டுப்பாட்டிற்கு உட்படுத்திற்று.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
தமிழ் நாடு தமிழருக்கே என்று சொல்வதற்கு தமிழ்த் தேசிய வாதிகளுக்குத் துணிவிருக்கிறதா?

தமிழ் நாடு தமிழருக்கே என்று சொல்வதற்கு தமிழ்த் தேசிய வாதிகளுக்குத் துணிவிருக்கிறதா?

Comments 2

  1. ajeevan says:
    11 years ago

    மகிந்த – காலத்திலேயே இவரது உறவை மைத்தரி முறித்துக் கொண்டார். பூர்வ சென்மத்தில் நான் செய்த பாவம் – இவன் தம்பியாக பிறந்தது என அக் காலத்தில் பகிரங்கமாக மைத்ரி சொன்னார்.

    Veröffentlicht am 19.10.2012 பதிவேற்றப்பட்ட வீடியோ
    https://www.youtube.com/watch?v=uoyz5DDt5ds&feature=youtu.be

    இனியொருவின் பதிவுகள் மஞ்சல் பத்திரிகை தரத்தில் வருவது நல்லாயில்லை. திருத்திக் கொள்ள முயலவும்.

    • தமிழ் மூடன் says:
      11 years ago

      “இனியொருவின் பதிவுகள் மஞ்சள் பத்திரிகை தரத்தில் வருவது நல்லாயில்லை. திருத்திக் கொள்ள முயலவும்”
      மிகச் சரியான புத்திமதியை இனிஒருவுக்கு கொடுத்ததற்கு நன்றி. இனிஒரு தன்னைத் தானேதிருத்திக் கொள்ள இதைக் கவனத்தில் எடுக்குமா?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...