Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

குரு உச்சத்திலயாம் பாத்துப் போடுங்கோ புள்ளடியை : ஈழ மாறன்

இனியொரு... by இனியொரு...
08/03/2015
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
0
Home பிரதான பதிவுகள் | Principle posts

kuru_and_electionநேற்று(02/08/15) ரெலோ சிவாஜிலிங்கம் பிறந்த ஊரான வல்வெட்டித்துறையில் ஒரு கட்சி நூறு பேருடன் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றை நடாத்தியது. அட அறுவானே வல்வெட்டித்துறையில சிவாஜிலிங்கம் பிறந்த காரணத்தினால் அல்ல அவையள் அந்த இடத்தை தெரிவு செய்யக் காரணம் என்று மனதுக்குள் புளுங்கிக் வெந்து வெடிப்பது கேட்கிறது. என்னைப் பொறுத்தவரையில் பாக்கு நீரிணையைக் கடந்த ஆழிக்குமரனுக்காகவும் வெடிகிடி படாமல் தப்பித்துக் கொண்ட சிவாஜிலிங்கத்துக்காகவும் வல்வெட்டித்துறை ஒரு சிம்போலிக்கான இடமாய் தெரிவு செய்து கொள்ளலாம். ஆனால், மலையக மக்களை நாட்டை விட்டு வெளியேத்தின கட்சி தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்த கட்சியின் தலை, வல்வெட்டித்துறையில விளக்குக் கொழுத்தி கூட்டம் போட்டதுக்கு காரணம் வேறை. அதைச் சொன்னால் அம்மாவாணை காறித் துப்புவியள் எண்டு எனக்குத தெரியும். அதனால் அந்த காரணத்தை நீங்களே கண்டு பிடிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஆங்கிலப் படங்களிலை, ஆரம்பக் காட்சிகளில் கேம் விளையாடுற, ஒரு கணனியில் புகுந்து விளையாடும் ஒரு அப்பாவியிக் காட்டுவார்கள். இறுதிக் காட்சியில் அந்த அப்பாவியை கதாநாயகன் உபயோகித்து அமெரிக்காவை அழிவில் இருந்து காப்பாத்துவார். வல்வெட்டித்துறையில விசயம் எதிர்மறையில் நடந்திருக்கிறது. விளக்குக் கொழுத்தி கூட்டதைத் தொடங்யிருக்கிறார்கள். அதன் மறைபொருள், தமிழர்களுக்கு விரைவில் கொள்ளி வைக்க புலன்(ம்) பெயர்ந்த புலிக் குஞ்சுகளுடன் சேர்ந்து திட்டம் ஒன்றை வைத்திருப்பதை காட்டுவதற்காகச் செய்யப் பட்ட முன் ஏற்பாடு என்பதை விளங்கிக் கொள்ள அப்துல் கலாமிடம் பயின்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது(ஆறாம் வகுப்பு வரை முருங்கைக் காயும் பிலாப்பழமும் கொடுத்து வகுப்பு முன்னேற்றப் பட்டுள்ளார் என்று
றிப்போட் வாங்கியவன்) விஞ்ஞான வாத்தி கேட்டார் நான் என்னவாக விரும்புகிறேன் என்று. விஞ்ஞான வாத்தியை குளிர்விக்க நான் விஞ்ஞானியாக விரும்புகிறேன் என்று உற்சாகமாக பதிலளித்தேன். அதன் பின் தண்ணீரின் மூலக் குறியீடு என்ன என்று கேட்கவும், நான் முழிக்கவும் வாத்தி எனக்கு பின்பக்கம் துவரம் தடியால் குறி வைக்கவும் அன்றிலிருந்து ஆங்கிலம் மட்டுமல்ல விஞ்ஞானப் பாடமும், விஞ்ஞானப் பாடம் மட்டுமல்ல “விஞ்” என்று எது ஆரம்பித்தாலும் எனக்கு குமட்டிக் கொண்டு வரும் . நேற்று முகநூலிலை இந்தக் கட்சியின் தேர்தல் விஞ்ஞானம் மன்னிக்கவும், விஞ்ஞாபனம் வெளியிடப் பட்டிருந்தது.விஞ் ஞை கண்டவுடன் எனக்கு என்ன நடக்குமோ அதற்கு இந்தக் கட்சி பொறுப்பு எடுக்க வேண்டும் என்று கனம் கோட்டார் அவர்களை கேட்டுக் கொள்கிறேன் .

சரி விஞ்ஞானம் தான் விளங்கேல்லை, விஞ்ஞாபனம் ஆவது விளங்குதோ பாப்பம் என்று பகீரதப் பிரயத்தனம் செய்து வாசிக்கத் தொடங்கினால், மூன்று மாதப் பிள்ளைத் தாச்சிகள் மாதிரி, மூண்டு நாலு தடவை வாந்தி எடுக்க வேண்டியதாய் போச்சுது. இருந்தாலும் அம்மாவாணை எங்கை இருந்துதான் தைரியம் வந்துதோ தெரியேல்லை, வாந்தி எடுக்கிறதும் வாசிக்கிறதுமாய், பகல் ஒரு மணிக்கு தொடங்கின வாசிப்பு இரவு ஒன்பது மணிவரை நீடித்தது என்பதை புரட்சிகர கட்சிக்கு தெரியப் படுத்த வேண்டியது என் கடமை என்பதை இங்கு அறிவிக்க விரும்புகிறேன்.

பல்கலைக் கழகத்தில் படிச்ச ஆக்களுக்குத் தெரியும் ஆரும் எழுதிய கட்டுரைகளில் கொஞ்சத்தை விட்டிட்டு மீதியை வெட்டி எங்கடை விளையாட்டையும் கொஞ்சம் சேத்து கட்டுரை எழுதிற மாதிரி அண்ணைன்ர கட்சியும் ஒரு புரட்சிகர ஸ்தாபனத்தின் அரசியல் திட்டத்தை கொப்பி பண்ணி சிலதை விட்டு ஒரு விஞ்ஞாபனம் தயாரித்திருக்கிறார்கள். அதில விடு பட்ட பகுதில ஒன்று பிரதேசவாதம். அது விடு பட்டுதோ இல்லை விடப்படப் பட்டுதோ தெரியேல்லை. அதை விட்டதும் ஒரு வகையில நல்லது தான். உந்தப் பாயில ஒட்ட வைக்கிற மட்டக்களப்பானோடையும், படிப்பறிவில்லாத வன்னிக் குரங்குகளோடையும் எப்பிடித்தான் இந்தப் படிச்ச வேளாள உயர்குடி யாழ்ப்பாணத்து வாரிசுக் குஞ்சுகள் அரசியல் நடத்திறது?

பரிஸ்ரர் படிப்புப் படிச்சிட்டு போயும் போயும் வன்னியானோடைவயும், மட்டக்களப்பானோடையும் அரசியல் நடத்திறதோ? இதை விஞ்ஞாபனத்தில சொன்னா யாழ் வேளாளக் குஞ்சுகள் புள்ளடி போடுவினமோ சொல்லுங்கோ?

எனக்கு சுகர் ஏறுது போல கிடக்கு, கொஞ்ஞம் இருங்கோ இரண்டு மெற்போமின் போட்டிட்டு வாறன். சரி எங்கை விட்டனான்? ஓ பிரதேசவாதம். இதை விட இன்னும் நிறைய விஞ்ஞானப் பாடம் போலவே ஏதோ எல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள். மாவோ செத்திட்டாரா? என்று வாய்விட்டுக் கேட்கும் அளவுக்கு விஞ்ஞாபனம் வெளுத்து வாங்கியிருக்கு? பெண்களுக்கு உரிமை கிடைக்க வேலைத் திட்டங்களை உருவாக்குவார்களாம்? எப்பிடி? அதைக் கேட்கக் கூடாது. திமிழர் பேரவை ஒண்டும் இயங்குமாம். அதுக்கும் அதிகாரம் வழங்கப் படுமாம். எப்பிடி அதைக் கேட்கக் கூடாது . இப்பிடி வழங்கல், கொடுக்கல், செய்தல், பிரட்டல் என்று யோ கர்ணன் கூட்டமைப்புப் பற்றி கூறியது போலவே கலவை எண்டா கேஎவ்சி சிக்கின் ரெசிப்பி மாதிரி யாராலையும் கண்டு பிடிக்கேலாது. முதல்ல கட்சி அலுவலங்களில வேலை செய்ய இரண்டு பேரை உருவாக்குங்கோ தல.

புலன்பெயர் ஆக்களோடையும் சேந்து உள்ளூரில இருக்கிற ஆக்களோடையும் சேந்து அமெரிக்காவை உலுப்பு உலுப்பி,இந்தியாவைஆட்டு ஆட்டெண்டு ஆட்டி ( இதுக்குள்ள ரோ இவையளைப் பின் தொடருதாம். ) இலங்கை அரசை சின்னாபின்னமாக்கி இரண்டு தேசத்தை உருவாக்கிற பிளான் இருக்கெண்டு சொல்லுகினம். வடிவேலு கொமடி தலைக்கு நல்லாப் பிடிக்குமோ? எதையும் பிளான் பண்ணாம்ப் பண்ணக்கூடாது என்பதனால், எல்லாத்துக்கும் பிளான் இருக்காம்.

சரி, முல்லத் தீவில, மட்டக் களப்பில, திருகோணமலையில ஏன் பருத்தித்துறையில கூட கட்சியின் அலுவலகம் முந்தநாள் துறந்தநீங்கள், எப்பிடி இந்தப் பெரிய திட்டத்துக்கு ஆள் திரட்டுவியள். வ்வுனியாவில திறந்த அலுவலகத்தில இருக்கிறதுக்கு ஒருவரும் இல்லாம பூட்டிக் கிடக்கு. இந்த லட்சணத்தில மக்களை அணிதிரட்டி தூய்மையிலும் தூய்மையான புலம்பெயர் புலிப் பினாமிகளிடம் விலை போன விலைபோகாத தலமை தமிமீழம் எடுத்துக் குடுப்பினமாம். ஊரில சொல்லுவாங்களே கூரை ஏறிக் கோழி பிடிக்கத் தெரியாதவன், வானத்தில ஏறி… அந்தக் கதைமாதிரி எல்லோ இருக்கு விஞ்ஞாபனம்.

கடவுளிலை நம்பிக்கை இல்லை எண்டாலும், கடவுளை நம்பின ராஜகோபுரனை மீள்கட்டுமாணம் செய்து வியாபாரத்தைப் பெருக்க திட்டம் போட்டிருக்கும் களவாணிக் கும்பலிட்டைக் கேக்கிறன், நாகபூசணி அம்மாளாணை கேட்கிறன் வெளிநாட்டிலை யாவாரத்தைக் கூட்ட நீங்கள் போடுற நாடகத்தில நடிகிற வேட்பாளர்கள் எத்தினபேருக்கு அவையின்ர பக்கத்து வீட்டில இருக்கிற விதவைப் பெண்ணின் கணவன் சுடப்பட்டதுக்கு, காணாமல் போனதிற்கு உங்கட வேட்பாளர் நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமாய் இருந்தினம் எண்டும் அவைக்கு உங்கட வேட்பாளர்கள் ஒண்டுமே செய்யேல்லை எண்டும்.

இரண்டு லட்சம் பேருக்கு மேல் சாக்க் காரணமாய் இருந்த இயக்கம், குஞ்சு குருக்கானில இருந்து இந்தியா சீனா ஐரோப்பா ஈறா கொலை செய்து பயங்கரவாத இயக்கம் எண்டு பேர் எடுத்த இயக்கம், கிடைக்க கூடிய அத்தனை தீர்வையும் தட்டிக் கழித்த இயக்கம், மாற்று இயக்கங்கள், முற்போக்குச் சக்திகள், கொட்டாவி விட்டவன், கோழி களவெடுத்தவன் வரைக்கும் சுட்டுத் தள்ளி வீராப்படைந்த இயக்கம், தப்பிக்க முயற்சி செய்த மக்களைச் சுட்டுக் கொன்ற இயக்கம், தங்களப் பாதுகாக்க மக்களைக் கேடயமாக்கிய இயக்கம், ஒன்றையும் பெற்றுக் கொடுக்காமல் ஒரு துண்டுக் காணிக்குள் மாத்திக் கட்ட துணியில்லாமல் நிர்க்கதியாய் நின்று கொண்டு ஆயுதங்களை மௌனிக்கிறோம் என்று கதறி அழுத இயக்கம், அழிந்த பின் மிஞ்சியது பதினைந்து நாடு சேந்து அழிச்சுப் போட்டாங்கள் என்று ஒப்பாரி வைத்த இயக்கத்தின் வரலாற்றைப் புகழ் பாடி வல்வெட்டித் துறையில சிம்போலிக்கா கூட்டம் போட்டா ஏமாந்து போக மக்கள் ஒன்றும் குமாருகள் அல்ல.

அதற்குத் திட்டம் போடுவோம், இதுக்கு பிளான் போடுவோம், சர்வதேசத்தை கூட்டிக் கொண்டு வருவம். மகிந்தவை தூக்கில போடுவம். மண்ணை மீட்பம். ஆமியைக் கலைப்பம். காணியை உழுவம். சாதியை நசுக்குவம் என்று நாய் பிடிக்கிற முனிசிப்பல் காரன் மாதி தீர்வுத் திட்டத்தோட வந்தா யாபாரம் சூடு பிடிக்காது என்று ஆரும் புலம் பெயர்ந்த பரிஸ்ரர் மார் ஆலோசனை சொல்லேல்லையா? அட உண்ணாணைக் கேட்கிறன், சர்வதேசம் எண்டா ரொரன்ரோவில, லாச்சப்பேலில, ஈஸ்ராமில விக்கிற முருங்கை காயோ அண்ணை குறைச்சுப் போடமாட்டியளோ எண்டு கேட்கிறமாதி கேக்கிற விசயமே சர்வதேசம்.

கடைசியா ஒண்டு சொல்லுறன். உழுற மாடு ஊருக்குள்ள உழும். புலன்பெயர் புலிப் பினாமிகளினர கலப்பைலதான உழும் எண்டா அது உழப்போவது தமிழர்களின் தாயகத்தை அல்ல மக்களின் வாழ்வாதாரத்தை. யாழ்ப்பாணத்தில ஒரு சீற் கிடைக்கும எண்டு சொல்லுறாங்கள். அம்மாவாணை 17 ஆம் திகதி உங்களுக்கு வியளன் போய் சனி மாறுது எண்டு நினைச்சு புள்ளடியைப் போடுங்கோ. அடுத்த கலவரம் வந்தா கறுப்புக் போவணமும் கிடையாது. சொல்லிப் போட்டன். பிறகு அமரிக்ன் உதவி செய்திட்டான். இந்தியன் இறங்கி அடிச்சுப் போட்டான். எண்டு ஒப்பாரி வைக்க கஜேந்திரன் நாட்டில இருக்காது. 40’000 சவப்பெட்டி தயார் பண்ணுங்கோ எண்டு சொன்னவர் படகில ஏறி பறந்திடுவார். வெளிநாட்டுக் குஞ்சுகளுக்கு வியாபாரம் சூடு பிடிக்கும். வீடு, கடை மண்டபம் எண்டு வாங்கப் பிளான் வைச்சிருக்பிறவைக்கு குரு உச்சத்தில நிண்டு விளையாடும். பாத்துப் போடுங்கோ புள்ளடியை.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
சிங்களவனின் தோலில் மீண்டும் செருப்புத் தைக்கப்படுகிறது : வியாசன்

சிங்களவனின் தோலில் மீண்டும் செருப்புத் தைக்கப்படுகிறது : வியாசன்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...