Tuesday, May 13, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

யாழ்ப்பாண மக்களின் உயிர்குடிக்கும் பல்தேசிய நிறுவனம் அச்சத்தில் அறிக்கை

இனியொரு... by இனியொரு...
02/12/2015
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

Chunnakamசுன்னாகம் நீரையும் நிலத்தையும் அழிப்பதன் பின்புலத்தில் செயற்பட்ட பல்தேசிய வர்த்தக் நிறுவனமான எம்.ரி.டி வோக்கஸ் முதல் தடைவையாக இது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மலேசியாவைத் தலைமையகமாக கொண்ட எம்.ரி.டி கப்பிடல் என்ற நிறுவனத்தின் இலங்கைக் கிளையாகச் செயற்பட்ட எம்.ரி.டி வோக்கஸ் உடன் பல்வேறு அரசியல் வாதிகளும், சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் நபர்களும் தொடர்பிலுள்ளனர். இந்த நிறுவனத்திற்கு எதிராகவும் இதன் இயக்குனர்களுக்கு எதிராகவும் நடைபெற்ற போராட்டங்களின் விளைவாக நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தம்மை குற்றங்களிலிருந்து விடுவித்துக்கொள்ள முயலும் எம்.ரி.டி வோக்கஸ், யாழ்ப்பாணத்தில் யுத்தம் உச்சமடைந்திருந்த காலத்தில் மக்களுக்குச் சேவையாற்றும் நோக்கத்துடனேயே அங்கு சென்று மின்சாரம் வழங்கும் சேவையில் ஈடுபட்டதாகத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான லால் பெரேரா விடுத்துள்ள அறிக்கையில் நீர் மாசடைந்தமைக்கும் தமது நிறுவனத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார். சமூகத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் தார்மீகப் பொறுப்பு வாய்ந்த ஒரு நிறுவனம் என்ற வகையில் நாம் கடந்த காலத்திலும் குறைந்த அளவு பாதிப்பை அல்லது தீங்கையேனும் இழைத்திருக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனம் இலங்கையில் அதிக இலாபத்தில் இயங்கும் நிறுவனங்களில் ஒன்றாகும். இலங்கைப் பங்கு சந்தையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான எம்.ரி.டி வோக்கஸ் சேவை நோக்கத்துடன் இயங்கும் ‘புரட்சிகர இயக்கமில்லை’. இலாப வெறியோடு இயங்கி மக்களின் வாழ்வாதாரங்களை அழித்த கிரிமினல்களின் கூட்டு. அவர்களுக்கு எவ்விதத் தர்மீகப் பொறுப்பும் கிடையாது.

அவர்கள் தமது பங்குதாரர்கள் மீதான கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கே அஞ்சுகின்றனர் என அறிக்கையின் மற்றொரு பகுதி மறைமுகமாகக் குறிப்பிடுகிறது.

“எமது பங்குதார்களுக்குப் பதில் அளிக்கக் கடப்பாடு உடையதும் பொறுப்புக்கூறக்கூடியதுமான எமது நிறுவனத்தின் செயற்பாடுகளால் யாழ் பொது மக்கள் பாதிப்படைய இடமளிக்கமாட்டோம்”. என அறிக்கையில் பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் முக்கிய பங்குதாரரான நிர்ஜ் தேவா என்பவருக்கு எதிராக ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் கிரிமினல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ‘பறை-விடுதலைக்கான குரல்’ என்ற அமைப்பு அறிக்கை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து அவரது இணையத்தளம் மூடப்பட்டது. இன்று பங்குதாரர்களைப் பாதுகாக்கும் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமது குற்றங்களிலிருந்து தப்பித்துக்கொள்ள எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனம், நீர் மாசடைதல் பிரச்சனை 1987 ஆம் ஆண்டிலிருந்தே காணப்படுவதாக யாழ் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் என்பவரை ஆதாரம் காட்டி செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

இதே வேளை நிர்ஜ் தேவாவிற்கு எதிராக அவரது தொகுதியில் பிரச்சார நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள பறை-விடுதலைக்கான குரல் அமைப்புத் திட்டமிட்டுள்ளதாக அந்த அமைப்பைச் சார்ந்த குமார் தெரிவிதார்.

நீதித் துறையின் விசாரணை வரைக்கும் பொறுமை காக்குமாறு தெரிவித்துள்ள இந்த நிறுவனம் நீர் நச்சாவது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் வழக்குத் தொடர்ந்தவர்களைப் பயங்கரவாதிகள் எனப் போலிக் குற்றம் சுமத்தி வழக்கைத் திசைதிருப்ப முயற்சித்தமை குறிப்பிடத்தக்கது.

சுன்னாகம் பேரழிவு: நிர்ஜ் தேவாவின் புறமுதுகும், வடமாகாண சபைத் தீர்மானமும்
சுன்னாகம் மின் நிலையத்திலிருந்து அழிப்பு நடத்தும் நிறுவனம் மூடப்படவில்லை
சுன்னாகம் அழிவைத் தலைமை தாங்கியது நானே :சம்பிக்க ஒப்புதல் வாக்குமூலம்
சுன்னாகம் அனல் மின் நிலையத்தை மூடுமாறு போராட்டம்
குடாநாட்டை அழிக்கும் மின்நிலையத்தில் ஆய்வு நடத்தி காலம் கடத்தப்படுகிறது
கல்லோயாவிலிருந்து வெலிவேரிய ஈறாக சுன்னாகம் வரை

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
விக்னேஸ்வரனின் அறிக்கைக்குப் பேரினவாதிகள் எதிர்ப்பு :புலம்பெயர் மக்களின் பங்களிப்பு என்ன?

விக்னேஸ்வரனின் அறிக்கைக்குப் பேரினவாதிகள் எதிர்ப்பு :புலம்பெயர் மக்களின் பங்களிப்பு என்ன?

Comments 2

  1. Parai player says:
    10 years ago

    ஸ்ரீ லங்கா விமானப் படை பொறுப்பாளனாக ஒரு இனப்படுகொலைக்காரன் லால் பெரேரா எனும் பெயரில் செயற்பட்டவன். இந்த லால் பெரேரா வேறொருத்தன். முழுப் பெயர் ஓ.டி.என் லால் பெரேரா. இவனது பொறியியற் துறை அனுபவமும் இராணுவம் அல்லது விமானப்படை சம்பந்தப்பட்டது எனும் சந்தேகம் நிலவுகிறது.
    வரலாறு அறியாதவர் எனக் கூறி பார எண்ணெய் (HFO) -ஐ எரிபொருளாக பொறுப்பின்றி மட்டுமல்ல வேண்டுமென்றே உதாசினமாக பயன் படுத்தியதற்கு பொறுப்புக் கூற வேண்டியவன் இவன். மலேசிய எம்.டி.டீ கப்பிடல் நிறுவனம் எம்.டி.டீ வோக்கர்ஸ் நிறுவனமாக கொழும்பில் கால் பதித்து முதலில் 15MW பார எண்ணெய் (HFO) பாவிக்கும் திட்டதையே சுன்னாகத்துக்கு முன்னெடுத்தது. அத்திட்டம் 30MW பார எண்ணெய் (HFO) பாவிக்கும் திட்டமாக 2010 அளவில் உருவெடுத்தது. கடைசியில் 25MW வலுவுக்குக் குறைந்த மின்சக்தி நிலையங்கள் சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆர்ரய்ச்சிகளில் இருந்து பெரிதும் விடுபடலாம் என்ற காரணமாக் இருக்க வேண்டும் 24 MW பார எண்ணெய் (HFO) பாவிக்கும் மின்னிலையமாக உருவெடுத்தது. 2011, 2012 அளவிலேயே நிராஜ் தேவா, ரவி விஜேரட்ன ஆகிய அரசியல் செல்வாக்குக் கொண்ட தனவந்தர்கள் அதுவும் ஏற்கனவே கழிவுப் பொருட்களில் இருந்து எரி சக்தி தயாரிக்கும் வியாபாரிகள் (நிராஜ் தேவா கப்பல்களுக்கு இலங்கையை மையப்படுத்தி பார எண்ணெய் விநியோகிப்பதில் பெரும் லாபமீட்டி வந்தவன்; இப்பொழுதும் அதில் கை தேர்ந்த வியாபாரி. ஐரோப்பிய ஒன்றியம் இறுக்கமான தடைகள் பலவற்றை பார எண்ணெய் (HFO) வகைகளில் அமுல்படுத்தி வருவதும் ஸ்ரீ லங்கா ஆகலும் கெட்ட பார எண்ணெய் (HFO) எரிபொருள் வகைகளை அப்புறப்படுத்தும் ஒரு கழிவு கிடங்காகவும் மாறியுள்ளது) எம்.டி.டீ வோக்கர்ஸ் நிறுவனத்தில் இயக்குனன்களாக பங்கேற்றார்கள்.
    பார எண்ணெய் (HFO) பாவனையோடு ஆரம்பிக்கப்பட்ட 2011-இன் இறுதி மாதங்களிலேயே சுன்னாக மின்சாரசபை வளாகத்தை அண்டிய பகுதிகளில் தற்போதைய விபரீதம் முதன் முறையாக உருவானது.
    ஓ. டீ. என். லால் பெரேரா 2007 இலிருந்து நேரடி ராணுவ அடக்கு முறை ஆட்சியின் கீழ் முடங்கியிருந்த யாழ் குடாநாட்டில் சுன்னாக மின்னிலை செயற்பாடுகளில் முகாமைத்துவ வேலைப்பாடுகளில் செயற்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் பல உண்டு.
    இவையனைத்திலும் ‘ஜெஹான் ப்ரசஸன்ன அமரதுங்க’ எனும் இன்னொரு தனவந்தன் முதலில் நொதர்ன் பவர் கொம்பனி-இல் பங்குகளை கொடுக்கல் வாங்கல்கள் செய்த வரலாறும் கவனிக்கப் படவேண்டியது.
    2010 ஒக்டோபர் அளவில் எம்.டி.டீ வோக்கர்ஸ் 100% நோதர்ன் பவர் கொம்பனி-ஐ கையகப்படுத்தி ‘மகிந்த சிந்தனை’ ‘வடக்கின் வசந்தம்’ என்ற இனவழிப்பு திட்டத்தினுள் இயங்க ஆரம்பித்த போது இயக்குனன்கள் பின்வருமாறு:
    Directors of NPC as at 25 October 2010 :-
    Dato’ Azmil Khalili Bin Khalid (மலேசிய பிரஜை)
    Jehan Prasanna Amaratunga (ஸ்ரீ லங்கா பிரஜை)
    Lee Leong Yow (மலேசிய பிரஜை)
    Keith George Cowling (பிரித்தானிய மற்றும் மலேசிய பிரஜை)
    Tee Kim Siew (மலேசிய பிரஜை)
    Omathage Don Nilanjan Lal Perera (ஸ்ரீ லங்கா பிரஜை) .. இராணுவ/விமானப் படை பொறியியலாளன்? … தற்போது எ.டி.டீ வோக்கர்ஸ் பீ.எல்.சீ எனும் கட்டுமானத்துறை சார்ந்த கொழும்பில் இயங்கும் உப நிறுவனத்தில் நிராஜ் தேவா போன்றோர் இயங்கும் தாய் நிறுவனமான் எம்.டி.டீ வோக்கர்ஸ் நிறுவனத்தால் பதவியுயர்த்தப்பட்டுள்ளான்.
    அதனோடு அலம்பியது தான் இப்போதைய விடயத்தை மேலும் திசை திருப்பும் யுக்தி.

    சுன்னாக மின்சாரசபை வளாகம் ஸ்ரீ லங்கா விமானப்படையால் 1990 ஆகஸ்ட் மாதத்தில் (சுன்னாகச் சந்தையும் தாகப்பட்டு கலைக்கப்பட்ட காலமளவில்)விமாம குண்டு வீச்சுத்தாக்கத்துக்கு இலக்கானதும் அதனால் எங்கும் வெடிப்புக்கள் கவனிக்கப்படாத நிலக்க்கீழ் குதங்குகள் இருந்தனவா என்பன பற்றி கதைப்பது நீர் மாவசடைவைச் சரி செய்ய வரலாற்று ரீதியான உதவியாகலாம். இதற்கு இந்த ஓ.என்.டி லால் பெரேரா உதவலாம். இல்லையென்றால் வாயைப்பொத்திக் கொண்டு இருக்கவேண்டும்.

    [மெலுள்ளவை அனைத்தும் ஆதாரங்களுடன் வாசித்தறியப்பட்டவை. இந்த ஆதாரங்களுக்கு தேவையிருப்பின் இனியொரு இணைய தளத்தினூடாக தொடர்பு கொள்ளவும் ]

    ஆராய்ச்சிகளுக்கு உதவக் கூடிய மேலதிக வாசிப்புக்கள்:-
    ஓ.என்.டி லால் பெரேரா ஆடிய அண்மைய கூத்து
    http://www.tamilwin.com/show-RUmtyCSVKdhu3.html
    http://www.ft.lk/2015/02/12/wrong-steps-could-may-aggravate-jaffna-water-contamination-issue-northern-power/

    பார எண்ணெய் (HFO) மற்றும் தொடர்புடைய பல விடயங்கள் அடங்கிய ஒரு அண்மைய ஆய்வுச் செய்தி:-
    http://www.foilvedanta.org/articles/cairn-lanka-and-the-corporate-takeover-of-the-tamil-seas/

  2. N.Harikumar says:
    10 years ago

    எந்த நிலை நீடித்தால் யாழ்ப்பாணம் மட்டும் இல்லை பன்னாட்டு நிறுவனங்களை ஆதரிக்கும் இந்தியாவுக்கும் எதே நிலைமை தான்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...