Tuesday, May 13, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

மாவீரர் நாளின் உணர்வுபூர்வமான உள்ளர்த்தம் – ஒரு காட்டுமிராண்டியும் சில வியாபாரிகளும்

இனியொரு... by இனியொரு...
11/28/2020
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள், அரசியல்
0 0
0
Home பிரதான பதிவுகள் | Principle posts

பிரித்தானியாவிலும் ஐரோப்பாவிலும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் மாவீரர் நாள் முன்பு எப்போதும் போல பெரும் பணச் செலவில் கொண்டாடப்படவில்லை. அறிக்கைகள் கூட விமரிசையாக வரவில்லை. தமிழ் இணைய ஊடகங்கள் அனைத்தும் வியாபார நிறுவனங்களின் பிடியில் சிக்கியுள்ளதால் இலங்கை அரசோடு இசைவான போக்கைக்க் கொண்டிருக்கின்றன. பரபரப்புச் செய்திகள், சினிமாச் செய்திகள்,கிசுசுக்களோடு மக்களைச் சென்றடையும் புலம்பெயர் ஊடகங்களே இலங்கையிலும் மக்களின் பார்வைக்குக் கிடைக்கின்றன. மாவீரர் தினம் அதன் பின்புபுலத்திலுள்ள அரசியல் போன்ற எந்த அக்கறையுமின்றி வெறும் செய்திகளில் ஒன்றாக இணைய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.

2009 இனப்படுகொலையின் பின்னர் புலம்பெயர் நாடுகளில் கால்பந்தாட்ட கிளப்புகள் போன்ற, அடையாளத்தை வியாபாரம் செய்வதற்கான மாற்றமடைந்திருந்த மாவீரர் நிகழ்வுகள், புலிகளின் கொடிகள்,மேற்சட்டைகள்,தொப்பி,சால்வைகள் போன்றன அந்த நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் 50 ஆயிரம் வரையான மக்களுக்கு விற்பனை செய்யப்படுவதுண்டு. பெரும் பணச்ச்செலவில் வாடகைக்கு எடுக்கப்படும் எக்செல் மண்டபம் போன்றவற்றில் நடைபெறும் இந்த நிகழ்வின் இலாப நட்டக் கணக்குகள் வெளியிடப்படுவதில்லை. தவிர, ரெண்டருக்கு விடப்படும் சிறிய உணவகங்கள், தேனீர்க் கடைகள் போன்ற, வாகன வசதிகள் போன்ற அனைத்துமே புரட்சிகர அரசியலுக்கான ஒரு களமாக மாவீரர் நிகழ்வுகள், பயன்படுத்துவதற்குப் பதிலாக ஒரு மதத் திருவிழா போன்றே நடத்தப்பட்டுவந்தன.

நமது சந்ததியின் ஒரு பகுதி போராடியே மாண்டு போயிருக்கிறது, அத்தனை தியாகத்தின் அரசியலையும் எதிர்கால சந்ததிக்கானதாக மாற்றுவதற்கு மாவீரர் நாள் ஒரு புள்ளியாகக் கூடப் பயன்படுத்தப்படுவதில்லை. இலங்கையில் இனப்படுகொலையை நிறைவேற்றத் துணை சென்ற பிரித்தானியக் கட்சிகளது பாராளுமன்ற உறுப்பினர்கள் இரங்கல் செய்தியை வழமை போல வழங்கிவிட்டு அடுத்த தேர்தலில் கிடைக்கக்கூடிய சிறிய வாக்குத் தொகையை எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

புலம்பெயர் தமிழ்த் தலைமைகளின் அரசியல் வியாபாரம் முன்னைப் போன்று இல்லாமைக்குக் காரணம் கொரோனா நோய்த் தொற்று மட்டுமல்ல.
இதற்கு பிரதான காரணம் மக்கள் மீதும், போராட்டத்தின் மீதும் நடத்தப்படும் உளவியல் யுத்தம். 2009 ஆம் ஆண்டு புலிகள் அழிக்கப்பட்ட சில நாட்களிலிருந்தே புலிகளின் தலைவர் பிரபாகரன் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்ற போலிக் கதைகள் பரப்பப்படன. தென்னிந்தியாவிலிருந்தும் புலம்பெயர் நாடுகளிலிருந்தும் பரப்பப்பட்ட இவ்வாறான கட்டுக்கதைகள் மட்டுமே 2009 இற்குப் பின்பான ஐந்து வருடங்கள் வரை பேசு பொருளாக இருந்தது.

இனிமேல் இலங்கையில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் சாத்தியமற்றது என்ற அச்ச உணர்வைத் தோற்றுவிக்கும் உளவியல் யுத்தம் பின்னதாகக் ஆரம்பமானது. இதுவரை நடைபெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் என்பது தவறுகளே அற்ற விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட இனிமேல் பிரதியடப்படமுடியாத போராட்டம் என்ற பிரச்சாரம் புலம்பெயர் நாடுகளிலிருந்து மட்டுமல்ல தென்னிந்தியாவிலிருந்தும் முன்னெடுக்கப்பட்டு அடுத்த சந்ததிக்குக் கடத்தப்படுகிறது. ஆக,இனிமேல் போராட்டம் என்பது சாத்தியமற்றது என ஒரு சந்ததி நம்பவைக்கப்படுகிறது.

இந்த நம்பிக்கையற்ற திட்டமிட்டு உருவாக்கப்பட்ட புறச் சூழல் என்பது மாவீரர் தினம் போன்ற நிகழ்வுகளை வெற்றுச் சடங்காக மாற்றிவிட்டது. இன்னும் சில வருடங்களில் இது முழுமையான பண்டிகையாக மாறிவிடும். போர்க்குணமும், மனித நேயமும், மனிதாபிமானமும் அதிகாரவர்க்க எதிர்ப்பும் இணைந்திருக்கவேண்டிய ஒரு நிகழ்வு வெற்றுச் சடங்காக அழிந்து போவதற்கு அச்சம் தரும் வகையில் நடத்தப்படும் இந்த உளவியல் யுத்தமும் ஒரு காரணம்.

தவிர, தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் புதைக்கப்பட்ட இடத்தில் வழமையாகக் கொண்டாடப்படும் மாவீரர் தினம் என்பது, புத்தகங்களை காவிக்கொண்டு பள்ளிக்குச் செல்லும் வயதில் போராட்டத்திற்கு என்று மட்டும் வீடுகளிலிருந்து சென்று இணைந்துகொண்ட ஆயிரக்கணக்கான ஏனைய இயக்கப் போராளிகள் இந்தத் தினத்தில் துரோகிகளாக்கப்படுதை ஒரு அங்கமாகக் கொண்டிருந்தது. இது அவர்களை மீண்டும் மீண்டும் கொலை செய்வதற்கு ஒப்பானதாகும், புலிகள் இல்லாமல் போன பின்னரும் இதனை இக் கொலைகள் தொடர்வதன் பின்னால் மனிதாபிமானம் புதைக்கப்படுகிறது என்பதை எப்படி நிராகரிக்க முடியும்?

புலம்பெயர் நாடுகளில் மாவீரர் நிகழ்வு என்பது முன்னைப் போல் இல்லாமல் போனாலும், தமிழகத்திலிருந்து ஈழ அரசியலை வைத்து அரசியல் இலாபம் தேடும் சிறிய கூட்டமும் இலங்கையில் மோதிக்கொள்ளிம் வாக்குப் பொறுக்கிகளும் தமது நலன்களுக்காக இதனைப் பயன்படுத்திக்கொள்கிறார்க்ள். தமிழகத்தில் சீமானிலிருந்து, புலிகளின் பிடிக்குள் இருந்ததால் சுந்திரமாக அரசியல் செய்ய முடியாமல் இருந்தது என்று கூறி தேர்தல் அரசியலுக்கு வந்த சீ.வீ.விக்னேஸ்வரன் வரை, தமது சொந்த நலன்களுக்காக ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடி மாண்டுபோன ஆயிரக்கணக்கானவர்களின் தியாக உணர்வை விலை பேசுகிறார்கள்.

வரலாறு இதுவரையில் காணாத அளவிற்கு இலங்கையில் பேரினவாதம் தலைவிரித்தாடுகிறது. தனக்கு சிறுபான்மைத் தேசிய இனங்களின் வாக்குத் தேவையற்றது என ஒரு சனாதிபதி வெளிப்படையாகப் பேசுகிற அளவிற்கு தாம் பிறந்து வளர்ந்து வளப்படுத்திய சொந்த மண்ணிலேயே தமிழ்ப் பேசும் மக்கள் நாடற்றவர்கள் ஆக்கப்படுகிறார்கள். இனிமேல் போராட்டத்தை அழித்துவிட வேண்டும் என்ற திடத்துடன் செயற்படும் புலம்பெயர் புலிகள் ஆதரவுக்குழுக்களாகட்டும், வாக்குப் பொறுக்கும் அரசியல் வாதிகளாகட்டும் இந்த மண் எங்கள் சொந்த மண் இதைப் போராடிப் பெறுவோம் என்ற உணர்வுக்குப் பதிலாக அமெரிக்காவையோ இந்தியாவையோ அழைத்துவந்து மீட்டுக்கொள்வோம் என்று கூச்சலிடுகிறார்கள்.

இலங்கை அரசின் ஆட்சிக் கோட்பாடாகப் பேரினவாதமே காணப்படுகிறது. அதனைப் பயன்படுத்தியே சிங்கள மக்களின் எதிர்ப்பை இலங்கை அரசு எதிர்கொள்கிறது. எதிர்வரும் காலங்களின் தமிழ்ப் பேசும் மக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதும், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை நடத்துவதுமே இலங்கை அரசின் ஒடுக்குமுறை வடிவமாக அமையும்.

புலிகள் இன்னும் இருக்கிறார்கள் என்றும் சிங்கள மக்களை அதன் பிடியிலிருந்து காப்பாற்றுவேன் என்றும் தன்னை வெளிப்படுத்தும் கோத்தாபய ராஜபக்ச என்கிற காட்டுமிராண்டித் தனமான பேரினவாதியின் அரசு, மாவீரர் நிகழ்வுகளைத் தடை செய்தது. இன்றைய உலகின் முதல் தர அரச பயங்கரவாதியான கோத்தாபயராஜபக்சவைப் பலவீனப்படுத்தும் எந்த அரசியல் தந்திரோபாயமும் மாவீரர் தினத்தைப் பயன்படுத்தி இலாபமடையும் எந்த அரசியல் வாதியிடமும் இல்லை.

இலங்கையில் போராடாமல் விடுதலை என்பது சாத்தியமற்றது. புலிகளின் போராட்டங்களிலிருந்த அரசியல் தவறுகளைக் கற்றுக்கொண்டு புதிய விமர்சன சுய விமர்சன அடிப்படையில் போராட்டத்தைத் திட்டமிடுவதற்கு தயாரானால் மட்டுமே மாவீரர் நாள் அதன் உண்மையான அர்த்தைத்தைப் பெறும். அந்த மாவீரர் நாளில் மக்களுக்காகத் தம்மை அர்ப்பணித்த அனைத்துப் போராளிகளும் நினைவு கூரப்படுவார்கள். சந்தர்ப்பவாதிகளும் வியாபாரிகளும் கருவறுக்கப்படுவார்கள்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
பேரிடர் நிவாரணம் : தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசு!

பேரிடர் நிவாரணம் : தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசு!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...