Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

எழுக தமிழ் பிரகடனத்தில் சுய நிர்ணய உரிமையை மறுத்து பேரினவாதத்திற்கு துணைசென்ற விக்னேஸ்வரன்

இனியொரு... by இனியொரு...
09/27/2016
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

vikneswaranசுய நிர்ணய உரிமை என்பது ஒரு தேசிய இனம் பிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்கான உரிமை என்பதைத் தவிர வேறில்லை. சுய   நிர்ணய உரிமையைக்  கோருதல் என்பது இலங்கை உட்பட உலகின் எந்த நாடுகளிலும் தடைசெய்யப்படவில்லை. சுயநிர்ணய  உரிமையைக் கோருவது ஒரு தேசிய இனத்தின் அடிப்படை ஜனநாயக உரித்தாகும். அதனை நிராகரிப்பது ஜனநாயக விரோதச் செயற்பாடாகும். இலங்கையில் வாழும் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்குச் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்காமை என்பது இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனநாயக விரோதச் செயற்பாடாகும். சுய நிர்ணய உரிமை என்ற அடிப்படை ஜனநாயக உரிமையை வழங்க மறுப்பது என்பது தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதை மறுப்பது என்றே அர்த்தப்படுத்தப்படும். கடந்த சனியன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எழுக தமிழ் என்ற நிகழ்வின் இறுதியில் வட மாகாண சபை முதலமைச்சர் சுய நிர்ணய உரிமையை மிகவும் தந்திரமாக நிராகரித்து இலங்கை அரசின் பேரினவாத நோக்கங்களுக்குத் துணை சென்றுள்ளார்.

முன்பெல்லாம் வாக்குக் கட்சிகள் மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கிவிட்டு பின்னதாக அதனை நிராகரிப்பது வழமை. விக்னேஸ்வரன் ஒரு படி மேலே சென்று சுய நிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டியை இலங்கை அரசிடம் கோருகிறோம் என எழுக தமிழ்ப் பிரகடனத்தில் கூறியுள்ளார். சுய நிர்ணய உரிமை என்பது ஒரு தேசிய இனத்தின் தன்னுரிமை, அத் தேசிய இனம் பிரிந்து சென்று தனியரசு அமைத்துக்கொள்வதற்கான அடிப்படை ஜனநாயக் உரிமை. சமஷ்டி என்பது அதுவல்ல. அது மத்திய அரசின் உப அரசாக ஒரு தேசிய இனம் சார்ந்த பகுதிகள் செயற்படுவதற்கான நிர்வாக அமைப்பு முறை.

ஐக்கிய நாடுகள் நிறுவனம் கூட சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்துள்ளது, மக்களின் சுய நிர்ணய உரிமை என ஐக்கிய நாடுகள் நிறுவனம் குறிப்பிடும் சரத்துக்கள் உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக மக்களின் போராட்டங்களால் ஏற்பட்ட அழுத்தங்களை எதிர்கொள்ளவே ஐக்கிய நாடுகள் சபை சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
எடுத்ததற்கெல்லாம் ஐக்கிய நாடுகள் சபையில் முறையிடுவோம் எனக் கூறும் போலிகள் யாரும் இதுவரை இலங்கையிலுள்ள சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுய நிர்ணய  உரிமையை இலங்கை அரசு நிராகரிக்கிறது என முறையிட்ட வரலாறில்லை.
சுய நிர்ணய உரிமை வேண்டாம் சமஷ்டியே போதுமானது எனக் கூறுவதற்கு விக்னேஸ்வரனுக்கு முழு உரிமையும் கருத்துச் சுதந்திரமும் உண்டு, அதனை அவர் முன்வரைபு செய்த யாப்பிலேயே குறிப்பிட்டுள்ளார். அந்த யாப்புத் திருத்தம் கூட சமஷ்டி என்பதை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தனியான விடையம்.

ஆனால் சுய நிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி என மக்களை ஏமாற்றுவது கூச்சமின்றி அவர் நடத்தும் ஆபத்தான அரசியல்.

தமிழ் பேசும் மக்கள் சுய நிர்ணய உரிமை என்ற அடிப்படை ஜனநாயக உரிமைக்குக் குறைந்த எந்தத் தீர்வையும் ஏற்றுக்கொள்வது ஆபத்தானது. நாங்கள் பிரிந்து போவதாகக் கூறவில்லை, மாறாக பிரிந்து செல்லும் உரிமையை வழங்குங்கள் என்றே அரசிற்கு எதிராகப் போராடியிருக்கிறோம். இதுவரை கால இழப்புகளின் பின்னரும் பிரிந்து செல்லும் உரிமயை மிகவும் தந்திரமாக மறுக்கும் விக்னேஸ்வரன் அடிப்படையில் பேரினவாதத்திற்குச் சேவை செய்கிறார்.

எந்த அவமான உணர்வுமின்றி விக்னேஸ்வரனின் சுய நிர்ணய உரிமை மறுப்பை ஆதரித்துக் கொண்டாடும் புலம்பெயர் தமிழ் அரசியல்வாதிகளுக்கு சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஆசீர்வாதங்களும் நிச்சயம் கிடைக்கும்.

உள்ளூராட்சி தேர்தல் வருகிறது என்ற போக்கில் மக்களை உணர்ச்சிவசப்படுத்தும் போலி முழக்கங்களை முன்வைத்து நடத்தப்படும் நிகழ்வுகள் அல்ல இன்றைய எமது தேவை. வாக்குப் பொறுக்கும் போலிகளின் பிழைப்புவாத அரசியலுக்கு அப்பால், சுய நிர்ணய உரிமைக்கான அரசியல் முன்வைக்கப்பட வேண்டும். அதற்காக மக்கள் அணிதிரட்டப்பட வேண்டும்.

விக்னேஸ்வரன் தனது உரையில் சிங்கள மக்களுக்கும், உலக மக்களுக்கும் தமிழ் மக்களின் செய்தியைச் சொல்வதே பேரணியின் நோக்கம் என்கிறார். அதற்காக அவர் பாரட்டப்படவேண்டும். எந்தச் செய்தி சொல்லப்பட வேண்டும் என்பது தான் இங்கு கேள்வி. தமிழ் பேசும் மக்களின் பிரிந்து செல்லும் உரிமை அங்கீகரிக்கப்பட்டாலே இலங்கை என்ற தீவில் கூட்டாட்சி அமைவதற்கான அடிப்படைச் சாத்தியங்கள் உண்டு, இல்லையெனில் இலங்கை அமைதியற்ற நாடாக மாறிவிடும் என்பதே வரலாறு கூறும் பாடம்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
தமிழ்  அரசியல் தலைமைகளால் மலினப்படுத்தப்படும்  வட-கிழக்கு வெகுஜனப் போராட்டங்கள்  :எஸ்.என்.கோகிலவாணி

பேரினவாதக் கட்சிகளின் பிடிகளுக்குள் நகர்த்திச் செல்லப்படும் வட மாகாணம்: எஸ்.என் கோகிலவாணி

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...