Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

புத்தரும் நதி நீர்ப் பிரச்சினையும் : இராமியா

இனியொரு... by இனியொரு...
05/29/2018
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
2
Home பிரதான பதிவுகள் | Principle posts

புத்தரைப் பற்றி நமக்குக் கிடைக்கும் செய்திகளில் பெரும்பாலானவை உண்மைக்கு மாறானவையே. அவர் ஒரு பரம நாத்திகர். ஆனால் அவர் திருமாலின் ஒன்பதவது அவதாரம் என்று கதை கட்டிக் கொண்டு இருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர் ஒரு முரணற்ற லோகாயதவாதி அதாவது பொருள் முதல்வாதி. ஆனால் அவர் பெயரில் கணக்கற்ற ஆன்மீகக் கதைகள் உலவிக் கொண்டு இருக்கின்றன.

புத்தர் துறவியாவார் என்று சோதிடர்கள் சொன்னதால், அவ்வாறு ஆகி விடாமல் தடுக்க அவரை வெளி உலகமே தெரியாமல் வளர்த்ததாக நமக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள். அவர் எதேச்சையாக ஒரு நாள் ஒரு பிச்சைக்காரனைப் பார்த்ததாகவும், இன்னொரு நாள் நோயாளி ஒருவரைப் பார்த்ததாகவும், இன்னொரு நாள் மரணம் எய்திய ஒரு மனிதனைப் பார்த்ததாகவும் அவற்றின் மூலம் இவ்வுலகின் “நிலையாமைத்” தத்துவத்தைப் புரிந்து கொண்டதாகவும் நமக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள். உலகின் நிலையாமையைக் கண்டு “மனம் கலங்கிய” அவர் இதற்கு விடை தேடும் பொருட்டுத் துறவு பூண்டார் என்றும், அதன் பின் ஒரு நாள் போதி (அரச) மரத்தடியில் திடீரென ஞானம் உதித்ததாகவும், தர்க்கவாதத்திற்குச் சற்றும் பொருத்தம் இல்லாத கதையை வலுக்கட்டாயமாக மக்களின் மனங்களில் திணித்து வைத்து இருக்கிறார்கள்.

ஆனால் அது உண்மையா? இல்லவே இல்லை. உண்மை இதற்கு முற்றிலும் மாறானது. புத்தர் துறவு பூண நேர்ந்த காரணத்தை அண்ணல் அம்பேத்கர் அவருடைய “புத்தமும் அவருடைய தம்மமும்” என்ற நூலில் தெளிவாக விளக்குகிறார்.

கபிலவஸ்து சாக்கியர்களின் தலைநகரம். அங்கே சாக்கிய மன்னர் சுத்தோதனரின் மகனாகப் பிறந்தவர் தான் புத்தர். .பெற்றோர்கள் அவருக்கு இட்ட பெயர் கவுதம சித்தார்த்தர். கவுதம சித்தார்த்தர் மற்றவர்களைப் போல் தான் வளர்க்கப்பட்டாரே ஒழிய வெளி உலகம் தெரியாமல் வளர்க்கப்படவில்லை. அவருக்கு இருபது வயது நிரம்பிய உடன் சாக்கிய சங்கத்தில் உறுப்பினராக இணைக்கப்பட்டார். அவர் சங்கத்தில் சேர்க்கப்பட்டு எட்டு ஆண்டுகள் வரை பிரச்சினை இல்லாமல் காலம் சுமுகமாகவே சென்றது. அவருடைய இருபத்து எட்டாவது வயதில் ஒரு பி
ரச்சினை தோன்றியது.
சாக்கிய நாடும் கோலிய நாடும் அண்டை நாடுகள். இரு நாடுகளும் விவசாயத்திற்கு ரோகினி ஆற்றின் நீரைப் பகிர்ந்து கொண்டு இருந்தன. நதி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையில் இரு நாட்டினருக்கும் இடையே சச்சரவுகள் வருவதும் பேச்சு வார்த்தைகள் மூலமாகவோ சிறு சிறு மோதல்களினாலோ தீர்வு காண்பதும் வழக்கமான ஒன்றாக இருந்தது. அந்த ஆண்டு சச்சரவு மிகப் பெரிதாகி, போர் தொடுக்கும் அளவிற்கு முற்றி விட்டது. இதைப் பற்றி விவாதிக்க, படைத்தலைவர் சங்கத்தைக் கூட்டினார். நடந்த சச்சரவுகளை விளக்கி விட்டு இதைத் தீர்க்கக் கோலியர்கள் மீது படை எடுக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் கவுதம சித்தார்த்தரும் அவருடைய நண்பர்கள் சிலரும் போர் தேவை இல்லை என நினைத்து விவாதித்தனர். வினாவிற்கு விடையும், விடைக்கு மேல் வினாக்களுமாக விவாதம் தொடர்ந்தது. இறுதியில் கவுதம சித்தார்த்தரின் அறிவுக் கூர்மையான விவாதம் கோலியர்களுக்குத் தண்ணீர் தர மறுப்பதும், அவர்கள் மீது போர் தொடுக்க முனைவதும் நியாயம் அல்ல என்று உணர்த்தியது.

ஆனால் படைத் தலைவர் விவாதத்தைத் திசை திருப்பி வாக்கெடுப்பு நடத்த வேண்டினார். அவ்விதமே வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. மிகப் பெரும்பான்மையான உறுப்பினர்கள் போர் நடத்தவே விரும்பினர். ஆனால் கவுதம் சித்தார்த்தரால் இம்முடிவை ஏற்க முடியவில்லை.

சங்கத்தின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் முடிவு செய்தால், மற்றவர்களும் அதன்படி நடக்க வேண்டும். அப்படி நடக்க மறுப்பவர்களுக்குத் தண்டனை அளிக்கச் சங்கத்திற்கு அதிகாரம் இருந்தது. சங்க விதிகளின்படி, சங்கத்தின் முடிவுக்குக் கட்டுப்பட மறுப்பவரின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யலாம்; அல்லது அவரை நாடு கடத்தலாம்; அல்லது அவருக்கு மரண தண்டனை அளிக்கலாம்.

ஆனால் கவுதம சித்தார்த்தர் விஷயத்தில் தண்டனையை நிறைவேற்றுவதில் ஒரு சிக்கல் இருந்தது. சாக்கிய நாடு கோசலப் பேரரசின் கீழ் ஒரு சிற்றரசாக இருந்தது. கவுதம சித்தார்த்தர் அறிவிலும் அழகிலும் பண்பிலும் மிகச் சிறந்த மனிதராக இருந்தார். அவருடைய ஆளுமை கோசலப் பேரரசரை மிகவும் கவர்ந்து இருந்தது. பேரரசர் கவுதமர் மேல் அளவு கடந்த அன்பு கொண்டிருந்தார். இப்பொழுது அவருக்குத் தண்டனை அளித்தால் பேரரசர் நிச்சயமாகத் தலையிடுவார். அப்படித் தலையிட்டால் சங்கத்தின் முடிவு தவறு என்று உணர்ந்து சங்கத்தின் மீதே நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டார்.

இக்கட்டில் மாட்டிக் கொண்ட படைத் தலைவர் கவுதம சித்தார்த்தரிடம் பேரரசரின் அன்பைப் பெற்ற ஆணவத்தில் சங்கத்தை எதிர்க்கிறாயா எனக் கோபமாகக் கேட்டார். கவுதம சித்தார்த்தர் தனக்கு அவ்வித ஆணவம் இல்லை என்றும், இந்த இக்கட்டில் இருந்து மீள்வதற்கான தீர்வைத் தானே தருவதாகவும் கூறினார். சங்க விதிகளின்படி நாடு கடத்துவது ஒரு தண்டனை ஆகும் என்று சுட்டிக் காட்டி, அதற்கு ஈடாகத் தானே துறவு பூண்டு நாடு விட்டுச் சென்று விடுவதாகக் கூறினார். சங்கத்தைப் பொறுத்த மட்டில் அவரை நாடு கடத்தியது போல் ஆகி விடும் என்றும், பேரரசர் சங்கத்தின் மேல் குறை காண முடியாது என்றும் விளக்கினார்.

இவ்வாறு கூறி, கவுதம சித்தார்த்தர் துறவறம் பூண்டு சென்றார் .புத்தரின் துறவறம் இந்தச் சூழ்நிலையில் தான் நிகழ்ந்ததே ஒழிய, பார்ப்பனர்கள் கட்டி விட்ட கதைகளின் போல் அல்ல.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
“POLICE”தான் சமூக விரோதி.

"POLICE"தான் சமூக விரோதி.

Comments 2

  1. Sri Sriskanda says:
    8 years ago

    Pali had started to compete and replace Sanskrit. Prince Siddartha saw something in his mind. A new civilization. .

    • Raj Selvan says:
      8 years ago

      Buddha’s language wasn’t even Pali, it’s Magadhi Prakrit.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...