Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

TCC பிரான்ஸ் கிளையின் ஒருங்கிணைப்பாளர் மீது துப்பாக்கிச் சூடு!

இனியொரு... by இனியொரு...
02/19/2016
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

paramalingam 58eeதமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரான்ஸ் ஒருங்கிணைப்பாளர் திரு. பரமலிங்கம் மீதான கொலை முயற்சியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் (TCC) உறுப்பினர் ஒருவர் துப்பாக்கி மோதலில் ஈடுபட்டுள்ளமை இது முதல் தடவையல்ல. இதற்கு முன்னதாகக் கடந்த ஆண்டு நடுப்பகுதியில் பரமலிங்கம் ஒரு தடவை கத்திக்குத்திற்கு இலக்காகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமீழீழ விடுதலைப் புலிகளின் அழிவின் பின்னர் அதன் தொடர்ச்சி தாமே எனக் கூறிக்கொள்ளும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் அதன் உறுப்பினர்களும் புலிகள் இயக்கத்தின் பெருந்தொகையான சொத்துக்களுக்கு இதுவரை பொறுப்புக் கூறியதில்லை. பிரித்தானியா, பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளில் முதலிடப்பட்ட பெருந்தொகையான சொத்துக்கள் தனி நபர்களின் கைகளில் முடங்கியுள்ளது.

வீடுகள், வியாபார நிறுவனங்கள், நிதிவளம் போன்றன புலிகளின் அழிவுடன் காணாமல் போய்விட்டன. புலிகள் இயக்கத்தின் தொடர்ச்சி என்றும் தமிழர்களின் புதிய தலைமை தாமே என்றும் கூறும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு போன்ற அமைப்புக்கள் புலிகளின் சொத்துக்கள் தொடர்பாக மட்டும் வாய்திறப்பதில்லை. இறுதிக்கட்டப் போரின் போது சேகரிக்கப்பட்ட பெர்ந்தொகையான பணம் தொடர்பான அனைத்துத் தரவுகளுன் மூடி மறைக்கப்படுகின்றன.

ஏனைய அனைத்தையும் தெரிந்துவைத்திருப்பதாகக் கூறும் ரீ.சீ.சீ பணம் தொடர்பாக மட்டும் எந்தத் தகவல்களையும் தெரிந்து வைத்திருக்கவில்லை எனக் கூறுவது கேலிக்கூத்தாகும்.

இதனால் மக்கள் மத்தியில் ரீ.சீ.சீ போன்ற அமைப்புக்கள் மீதான சந்தேகங்கள் தோன்றின. ஈழத்தில் தமிழர்களின் அவலங்களுக்காகப் போராடுவதாகக் கூறும் ரீ.சீ.சீ, மக்கள் பாதிக்கப்படும் போது எந்தப் போராட்டங்களையும் நடத்தியதில்லை. நடத்தப்பட்ட சில பொதுவான போராட்டங்களிலும் இலங்கை அரசிற்கு எதிரானதும், ஏகபோக அரசுகளுக்கு எதிரானதுமான சுலோகங்கள் முன்வைக்கப்படுவதற்குப் பதிலாக ‘எமது தலைவர் பிரபாகரன், எமது மண் தமிழீழம்’ என சுலோகம் மட்டுமே முன்வைக்கபடும்.

மக்களை விரக்திக்குள் தள்ளிய இந்த அமைப்புக்கள் நடத்தும் போராட்டங்களில் மக்கள் பெருமளவில் கலந்துகொள்வதில்லை.

இவ்வாறு போராட்டங்களை அழித்து மக்களை விரக்தி நிலைக்குள் தள்ளிய இந்த அமைப்புக்களின் ஒரே குறி பணம் மட்டுமே. மாவீரர் தின நிகழ்வை வியாபார உக்திகளோடு நடத்தும் இந்த அமைப்புக்கள், மரணிக்காமல் வாழும் போராளிகளின் அவலங்களைக் கண்டுகொள்வதில்லை.

மூடி மறைக்கப்பட்ட பணத்தின் மீதான கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகளே ரீசீசீ அமைப்பின் உறுப்பினர்களின் துப்பாக்கி மோதல்களின் பின் புதைந்துள்ள காரணம் என சந்தேகிப்பதற்கான அத்தனை நியாயங்களும் எம் மத்தியிலுள்ளன.

தாங்கள் வழங்கிய பணத்திற்கு என்ன ஆனது என்பதை அறிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உள்ளது. அதனை மறைப்பதற்கு ரீ.சீ.சீ போன்ற அமைப்புக்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. தமது முழு நடவடிக்கைகளையும் சுய விமர்சனம் செய்துகொண்டு புதிய அரசியலை புலம்பெயர் அமைப்புக்கள் முன்வைக்கத் தவறினால் ஆயுத மோதல்கள் மேலும் வலுவடைவது தவிர்க்க முடியாதது ஆகிவிடும்.

இனப்படுகொலை நடத்திய அதே நபர்களால் ஆளப்படும் அரசு இன்று ஏகாதிபத்திய நாடுகளுடன் இணைந்து வட-கிழக்கின் தேசிய இனச் செறிவைச் சிதைத்துவருகிறது. முழு இலங்கையையும் ஏகாதிபத்திய நாடுகளுக்குக் குத்தகைக்குக் கொடுத்துவருகிறது. இலங்கை அரசிற்கு எதிரான போராட்டம் என்பது இன்றைய தவிர்க்க முடியாத முன் தேவையாக உள்ளது. இந்த நிலையில் நேர்மையும் இதயசுத்தியுமுள்ள மக்கள் சார்ந்த அமைப்புக்கள் அவசியமானது மட்டுமல்ல வியாபாரிகள் அரசியல் நீக்கம் செய்யப்படவேண்டும் என்பதும் தேவையானது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ஐங்கரநேசன் மற்றும் விக்னேஸ்வரனின் போலி நிபுணர்குழுவை அம்பலப்படுத்திய நீதிமன்றம்

ஐங்கரநேசன் மற்றும் விக்னேஸ்வரனின் போலி நிபுணர்குழுவை அம்பலப்படுத்திய நீதிமன்றம்

Comments 4

  1. sumerian says:
    10 years ago

    பிரான்சில் மட்டும் இவ்வாறான தாக்குதல்கள் நடைபெறுவதும் தொடர்புடைய எவருமே கைது செய்யப்படாததும் பிரான்ஸ் காவல்துறையை நோக்கி சில கேள்விகளை எழுப்புகின்றன.

    • Pomerian says:
      10 years ago

      Yes, now blame it on the French government.

  2. Sakivara says:
    10 years ago

    சபாலிங்கத்தில் இருந்து இதே நிலைதான் உள்ளது.

    • Pomerian says:
      10 years ago

      Did the French get involved in that too ?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...