Tuesday, March 17, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்: சுதர்சன்

இனியொரு... by இனியொரு...
08/27/2015
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
1
Home பிரதான பதிவுகள் | Principle posts

amirதமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் பிறந்த நாள் நிகழ்வு நேற்று -26/08/2015- தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்டக் கிளையின் இன்று நடத்தப்பட்டது.

1949 ஆம் ஆண்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தமிழரசுக் கட்சியில் இணைந்துகொண்ட இளைஞன் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 1952 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் பாராளுமன்றம் செல்வதற்காகத் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

எஸ்.ஜே.வி.செல்வநாயகம் மற்றும் ஜீ.ஜீ.பொன்னம்பலம் போன்ற கொழும்புசார் அரசியல் தலைவர்கள் செல்வாக்குச் செலுத்திய காலத்தில் நடுத்தரவக்கக் குடும்பத்திலிருந்து தோன்றிய உள்ளூர்த் தலைவராக அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற ஆரம்பித்திருந்தார்.

1977 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்ற அமிர்தலிங்கம் மரணிக்கும் வரை பாராளுமன்ற அரசியல்வாதியாகவே காலத்தை நகர்த்தினார்.

1977 ஆம் ஆண்டு இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவிவகித்தார்.

இந்திய அரசு தமிழ்த் தேசிய இராணுவம் என்ற இராணுவக் குழுவை தமிழர் விடுதலைக் கூட்டணி ஊடாக உருவாக்க முற்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆயுதப் போராட்டக் குழுவாக இந்திய அரசு இக்குழுவைப் பயிற்றுவிக்க முனைந்தது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆரம்பகர்த்தா எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் மகன் சந்திரகாசன் ஊடாக இந்திய அரசு இராணுவப் பயிற்சி வழங்குவதற்கு கூட்டணியிடமிருந்து 500 இளைஞர்களைக் கோரியது. 1982 ஆம் ஆண்டு இக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. .
தமிழர் விடுதலக் கூட்டணியால் இளைஞர்களைத் திரட்ட முடியாத நிலை ஏற்பட்டதும், ஏற்கனவே ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிறிய இராணுவக் குழுக்களை இந்திய அரசு சந்திரகாசன் ஊடாக அணுகியது.

ஒவ்வொரு குழுக்களும் தமது பலத்தை இந்திய அரசிற்குக் காண்பிக்கும் நோக்குடன் நடவடிக்கைகளில் ஈடுபட்டன. ஈ.பி.ஆ.எ.எப் தனது மாணவர் அமைப்பான கெஸ் ஊடாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டது, வடக்குக் கிழக்கு எங்கும் சுவரொட்டிகளை ஒட்டிற்று. பல வெளியீடுகள் ஊடாக தமது பலத்தை நிறுவ முற்பட்டது.
ரெலோ அமைப்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தனது தலைவர்களை விடுவிக்க முயற்சி செய்து இராணுவப் பயிற்சி முகாமொன்றில் பயிற்சியெடுக்க ஆரம்பித்திருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள் பலாலி வீதியில் இராணுவத் தொடரணி ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி தமது பலத்தை நிறுவ முற்பட்டனர்.

அதன் பின்னர் 1983 ஆம் ஆண்டு ரெலோ, ஈ.பீ.ஆர்.எல்.எப், ஈரோஸ், தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய இயக்கங்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டது.

இந்திய இராணுவப் பயிற்சியை எதிர்த்து புளொட் அமைப்பு வங்கம் தந்த பாடம் என்ற நூலை வெளியிட்டது. ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பில் மக்கள் அமைப்புக்களான கிராமியத் தொழிலாளர் சங்கம், ஈழ மாணவர் மன்றம், ஈழப் பெண்கள் முன்னணி ஆகியவற்றின் மத்தியில் இந்திய அரச தலையீட்டுக்கு எதிரான கடுமையான போராட்டங்கள் தோன்றின.

ஈ,பி,ஆர்,எல்,எப் தலைமையிலிருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் பத்மநாபா ஆகியோருடன் இவ்வமைப்புக்களில் பணியாற்றிய பலர் முரண்பட்டு உட்கட்சிப் போராட்டங்களை ஆரம்பித்தனர், ஈ.பி.ஆர்.எல்.எப் இன் இராணுவப் பிரிவிற்குப் பொறுப்பாகவிருந்த டக்ளஸ் தேவானந்தாவிற்கும் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கும் அதிகாரப் போட்டி ஏற்பட்டது.

இந்திய இராணுவப் பயிற்சியால் வீக்கமடைந்த இயக்கங்கள் அரசியலற்ற இராணுவக் குழுக்களாக மாறின. இயக்கங்களிடையே சிறிய மோதல்கள் ஆரம்பித்திருந்தன.

அதே வேளை இந்தியாவிலிருந்து யாழ்பாணம் திரும்பிய அமிர்தலிங்கம் நல்லூரில் பொதுக்கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்தார். அக்கூட்டம் தமிழீழ விடுதலை புலிகளால் கைக்குண்டு வீசிக் கலைக்கப்படது.

அதன் பின்னர் கொழும்பில் சென்று குடியேறிய அமிர்தலிங்கம் 1987 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

இன்று கஜேந்திரகுமார் குழு ஒரு நாடு இரண்டு தேசம் என்று தேர்தலில் குதித்தது. அன்று அமிர்தலிங்கம் தமிழீழம் என்பதே முடிந்த முடிபு என்றார். அதற்காக உலகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அஜீவன் என்பவரின் இணையத்தில் காணக்கிடைத்த அமிர்தலிங்கம் அவர்களின் நேர்காணல் கீழே தரப்படுகிறது.

அன்னிய தேசங்களின் அடிமைகளாக ஈழத் தமிழ்த் தேசிய இனத்தை அடகுவைக்கும் நிகழ்ச்சி இனப்படுகொலைக்குப் பின்னர் தீவிரமடைந்தது. இன்று முழுமையாக ஏகாதிபத்தியங்களின் காலடியில் முழுத் தமிழர்களின் பலி கடாக்களாக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
இன்றைய அரசியல் சூழல் தொடர்பாக 2013 இல் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இன்றைய அரசியல் சூழல் தொடர்பாக 2013 இல் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Comments 1

  1. Alex Eravi says:
    11 years ago

    Vankam Thantha Paadam,; a translated book…

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...