Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

தெற்கு சூடான் – ஏகாதிபத்தியங்களின் உத்தியோகபூர்வக் காலனி : கோசலன்

இனியொரு... by இனியொரு...
07/11/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
44
Home பிரதான பதிவுகள் | Principle posts

மனித இரத்தமும், எலும் சதையும் மட்டுமே எஞ்சிய வன்னி மண்ணில் இறுதி வரைக்கும் அமரிக்கப்படைகள் வந்து சேரும் என நந்திக் கடல்மேல் கண்வைத்துக் காத்திருந்த புலிகளின் தலைமை பேரினவாதப் பாசிசப் படைகளின் கோரத்திற்கு இரையாகிப் போனது. நம்பியிருந்த அமரிக்கப் படைகள் சட்டலைட்டில் சவாகாசமாகப் பார்த்து ரசித்துக்கொண்டிருக்க அத்தனை உயிர்களும் பேரினவாத அரசின் நன்கு திட்டமிடப்பட்ட இனப்படுகொலைக்கு இரையாகிப் போயின.

அமரிக்க, ஐரோப்பா, இந்தியா, சீனா, ரஷ்யா என்று நாளாந்தம் தெருப் பத்திரிகைகளில் அடிபடுகின்ற அத்தனை “முன்னணிப் பேரரசுகளும்” சில ஆண்டுகளாகவே திட்டமிட்டு நிறுவனப்படுத்தி, பிரச்சாரம் மேற்கொண்டு, புலிகளின் உள்ளும் புறமும் மக்கள் விரோதிகள் விலைபேசப்பட்டு வன்னியில் மனித குலத்தின் ஒரு பகுதி துவம்சம் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் செய்த குற்றம் தமிழ்ப் பேசியது என்பது மட்டுமே.

இந்தியாவின் கொல்லைப் புறத்தில், இந்தியத் தரை வழிப் பாதுகாப்பிற்கு பிரதான மையம் என நேரு காலத்தில் பரிந்துரை செய்யப்பட்ட ஆப்கானில் நேட்டோ நாடுகள் அனைத்தும் அப்பாவி மக்கள் மீது பொஸ்பரஸ் குண்டுகளை ராஜபக்சவிற்கு முன்னமே சோதனை செய்து பார்த்தன. இந்தியா அரசு பாதுகாப்புக் குறித்து வாய் திறக்க முன்னமே ஆப்கான் ஆக்கிரமிக்கப்பட்டது. இலங்கையில் மட்டும் இந்தியாவை மீறி மக்களைக் காப்பாற்ற முடியாது என்று ஒபாமா அதிகாரம் ஒப்பாரி வைத்தது.

சாரி சாரியாக அழித்துப் போட்ட ராஜபக்ச குடும்ப அரசு எந்தத் தயக்கமும் இன்றி பயங்கர வாதத்தை அழித்துத் துடைத்து விட்டோம் என்று கூற அமரிக்கா ஒபாமாவைப் போலவே பிரபாகரனையும் கொன்றீர்கள் என்று தட்டிக்கொடுக்கிறது.

தெற்கு சூடானில் மட்டும் அமரிக்கவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் மனிதாபிமானம் பெருக்கெடுத்து ஓடியதில் தனியாட்சி அமைத்துக் கொடுத்திருக்கிறது. ஆபிரிக்கவில் அழிக்கப்படத்தக்க, ஆபிரிக்காவின்  குட்டி இஸ்ரேல் ஒன்று அமரிக்க ஐரோப்பிய அதிகாரங்களுக்குத் தேவைப்பட்டது இந்த மனிதாபிமானத்தின் ஒரு காரணம்.

இதற்காக ஏகாதிபத்தியங்களின் பொய்ப் பிரச்சாரங்கள் அருவருப்பானவை! வட சூடானின் ஒடுக்கு முறைக்கு உள்ளாகியிருந்த பழங்குடி இனக்குழுக்களே விரும்பாதவை!! ஏகாதிபத்திய ஊடகங்கள் அனைத்தும் தென் சூடானிய மக்கள அனைவரும் கிறீஸ்தவர்கள் எனப் பிரச்சாரம் மேற்கொண்டன. அவர்களில் பெரும்பாலனவர்கள் வெவ்வேறு இனக்க்குழுக்களைச் சார்ந்தவர்கள். சிறு தெய்வ வழிபாடுகளை மேற்கொள்பவர்கள். தமது நாடுகளில் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்காக உள்நாட்டு யுத்தம், கிறீஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையாயன பிணக்கு என்று கடந்த பத்தாண்டுகளாகவே பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டன.

காலனியக் காலப்பகுதியில் தென்சூடானைத் திட்டமிட்டுப் புறக்கணித்த பிரித்தானிய ஆட்சியாளர்கள், வட சூடானை முதன்மைப்படுத்தின. தென் சூடானில் மக்கள் தேசிய சிறுபான்மை இனங்களாகக் கூட வளர்ச்சியடையாமல் இனக்க்குழுக்களாகவே வாழ்ந்தனர். இவர்களின் வறுமையை முன்வைத்து பல கிறீஸ்தவ அமைப்புக்கள் மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டன. இப்போதும் கூட கிறீஸ்டியன் எயிட்ஸ் என்ற தன்னார்வ நிறுவனம் தென்சூடானின் பல பகுதிகளில் தீவிர மதமாற்றங்களில் ஈடுபடுகின்றது.

வட சூடான் பலஸ்தீன விடுதலை இயக்கம் உட்பட பல இஸ்லாமிய அமைப்புக்களின் ஆபிரிக்கத் இடைத்தங்கல் வலையமாக மாறியிருந்தது. இவற்றை அமரிக்கா கட்டுப்படுத்த முடியுமா இல்லையா என்ற கேள்விகளுக்கு அப்பால், அதனைத் தந்து ஆக்கிரமிப்பிற்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என ஏகாதிபத்தியங்கள் சிந்திக்க ஆரம்பிததன் விளைவாக தென்சூடான் விடுதலை இயக்கத்திற்கு ஆதரவை வளங்க ஆரம்பித்தன. தென்சூடானைத் தனக்கு விசுவாசமான அரசியல் மையமாக, ஆபிரிக்காவின் இஸ்ரேலாக உருவாக்கத் தீர்மானித்தன.

இதன் பின்னணியில் தனக்கு ஏற்ற வகையில் இஸ்லாமிய அடிப்படை வாதத்தை வளர்த்து ஆபிரிக்கப் பிராந்தியத்தை ஆக்கிரமிக்கும் வாய்ப்பை அமரிக்க அணி ஏற்படுத்திக்கொண்டுள்ளது. மறு புறத்தில் ஆபிரிக்காவில் தனது நம்பிக்கையான தளமாக தென்சூடானை உருவாக்கிக் கொண்டுள்ளது.

உலகின் நூற்றுக்கு மேற்பட்ட பிரதேசங்களில் பிரிவினைக்காகவும், உரிமைக்காகவும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இவற்றையெல்லாம் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற தலையங்கத்தில் அழித்து நிர்மூலமாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் ஏகாதிபத்தியங்கள், தென்சூடானை குறிவைக்க இன்னொரு பிரதான காரணமும் உண்டு. தென்சூடானின் எண்ணை வளம் அமரிக்கப் பசியை அதிகப்படுத்தியது. எங்கெல்லாம் எண்ணை வளம் உண்டோ அங்கெல்லாம் அமைதியின்மையை ஏற்படுத்தி அப்பாவி மக்களைக் கொன்றொழிக்கும் ஏக போகங்கள், இப்போது ஆபிரிக்காவின் இருதயத்தில் தமது இரும்புக் கால்களால் நசுக்குவதற்கு நிரந்தர வதிவிடம் தேடிக்கொண்டுள்ளன.

ஒடுக்கு முறைக்கு எதிரான தென்சூடானிய மக்களின் போராட்டம் அதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.  தென்சூடான் விடுதலையடையவில்லை காலனியாக்கப்பட்டுள்ளது. தென்சூடான் ஏகாதிபத்தியங்களின் இந்த நூற்றாண்டின் நேரடிக் காலனியாக்கப்பட்டுவிட்டது. உலக மக்களின் விடுதலைக்கான போராட்டங்களோடு தென்சூடான் மக்களும் இனிமேல் இணைந்து கொள்வார்கள்.

அதுவரைக்கும் நாடுகடந்த தமிழீழத்தின் உருத்திரகுமார் போன்றோர் சீ.ஐ.ஏ. இன் சிலந்தி வலைக்குள் சிக்குண்டு “வரலாற்றுச் சிறப்புமிக்க உரைகளை” ஆற்றிக்கொண்டிருப்பார்கள்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

முதல் கோரிக்கை இராணுவமே வெளியேறு : வி.ஆனந்தசங்கரி

Comments 44

  1. யோகராசா says:
    15 years ago

    தென் சூடானில் லட்சக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டது உண்மையா பொய்யா?

  2. yyy says:
    15 years ago

    Christian Aid in Sudan

    On 9 July 2011 Sudan’s identity changed as the south separated from the north. No longer Africa’s largest country, Sudan still faces significant challenges if it is to build a peaceful and secure future for all.

    HIV: With people living with HIV facing discrimination, many are reluctant to talk openly about their status or even seek treatment. This hampers effective education which could help prevent the spread of the virus and so prevalence rates have increased.

    Conflict: Sudan’s referendum in which southerners voted overwhelmingly to separate from the north was the culmination of a six year peace process which ended two decades of civil war. But with ongoing conflict in Darfur affecting millions, many remain insecure.

    Our work

    We work with partners to both help prevent and respond to conflict whilst also addressing the needs of those living with HIV who continue to face attitudes that prevent them from accessing the care and support they need. Our partners do this through:

    • addressing stigma and discrimination against people living with HIV, promoting caring attitudes towards them and ensuring that people have the knowledge to protect themselves and others from the virus

    • supporting partners to promote peace in areas around the country’s border with South Sudan

    • helping those affected by conflict in Darfur to address problems that can result in local conflict including questions around access to water and other scarce resources

    Our partners

    Christian Aid’s Darfur Appeal enabled us to support work including medical care and education in relief camps through Norwegian Church Aid and its Action by Churches Together/Caritas partners. This work has helped more than half a million people affected by the conflict.

    We continue to work with Sustainable Action Group who are enabling those who choose to remain in their homes to build a more secure future.

    Capitalising on the respect faith leaders command in the country, the Sudan Council of Churches and Gender Centre for Research and Training are working on HIV with Muslim and Christian clerics to reach thousands across Sudan.

    More Sudan content

    Sudan: Faith leaders and HIV: How Muslim and Christian leaders are changing attitudes towards HIV.

  3. Pingback: Indli.com
  4. நெருஞ்சி says:
    15 years ago

    தென்சூடான்,உங்கள் பார்வையில்,காலனியாக்கப்பட்டிருக்கலாம் அல்லது காலணியாக்கப்பட்டிருக்கலாம்.ஆனால் கொலை வெறியிலிருந்து மீண்டிருக்கிறார்கள்;கொடுங்கோலர் இடமிருந்து பிரிந்து போயிருக்கிறார்கள்.

    திட்டமிட்ட இனவழிப்பின் இறுதி எல்லையில் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள்.அதைக் காப்பாற்ற தென்சூடான் வழிதான்,இன்று எமக்கு தேவைப்படுவது.

    அமெரிக்க ‘கிரீன் கார்ட்’காரரின் இனப்படுகொலை தெரியவில்லை.உருத்திராவின் குரல் ‘சீ.ஐ.ஏ.’ஆகப்படுவது உங்கள் முற்போக்கு சிந்தனைதான்.
    அசை போடும் எருமைகளாக,நீங்கள் மாக்சிசம் அரையுங்கள்.

  5. MAARAN says:
    15 years ago

    சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள் தென் சூடானிய மக்கள். எங்கேயாவது தனி நாடு அமைந்தால் அதற்கு வாழ்த்து கூறுவதே
    சிலரின் வழக்கமாகி விட்டது. அதற்கு கிடைத்து விட்டது ஏன் எமக்குக் கிடைக்காது? இந்த நம்பிக்கையை மக்கள் மத்தியில்
    கட்டி எழுப்பியவாறு காலத்தை ஓட்டி விடுவார்கள்

    • நிர்மலன் says:
      15 years ago

      அது சரி ஈழத்தமிழருக்கு சுதந்திரம் கிடைத்தால் தங்கள் பொழப்பு என்னாவது. சவப்பெட்டி கடைக்காரனின் மனநிலையில்தான் தாங்கள் இருக்கிறீர்கள் என்பது தெளிவு.

    • mamani says:
      15 years ago

      சூடானின் எண்ணை வளத்தில் 82% தென் சூடானிலிருப்பதால் பிரித்து உறிஞ்சுவதற்கு வசதியாக மேற்குலகம் முன்னிற்கிறது. இருந்தாலும் தென் சூடானிய போராட்டம் கொச்சை படுத்தமுடியாது. பிரிவினை வேண்டி போராடும் நாமும் இன்னொரு நாடு சுதந்திரம் பெறும் போது உவகையடைவது இயல்புதானே!

      • Kumar says:
        15 years ago

        உண்மைதான் மாமணி, 

        ஆனால் வழங்களை வைத்துக்கொண்டு அதை நுகா்வதற்கு வளி இன்றி பசியாலும் பட்டினியாலும் இறந்துபோவதை விட இன்னொருவரின் உதவியுடன் அதை வெளியெடுத்து சிறு பகுதியை இழந்தாலும் நாம் அனுபவிக்கமுடியுமல்லவா.

        ஈரான்,ஈராக்,லிபியா,சவுதி போன்ற எண்ணை வள நாடுகளில் அதை தோண்டி எடுப்பதற்கேற்ற தொழில் நுட்பமோ அல்லது எண்ணையை சுத்திகரித்து பயன்படுத்த ஒரு தொழிற்சாலையோ கிடையாது வளா்ச்சி அடைந்த நாடுகள் மசகு எண்ணையை வாங்கி சுத்திகரித்து இந்த நாடுகளுக்கு மறுபடியும் விற்கின்றன ஆக தயாரான பெற்ரோலியத்தை  அனுப்பவதை இந்த வளா்ச்சியடைந்த நாடுகள் நிறுத்தினால் மேலே கூறப்பட்ட நாடுகளின் நிலை என்னவாகும்.

        உணவுப்பண்டங்களை வைத்துக்கொண்டு சமைக்கத்தெரியாமல் பசியால் இறந்து போவது சரியா அல்லது சமைக்கத்தெரிந்தவனுக்கு ஒரு பகுதியை கொடுத்து நாமும் உண்டு உயிர் வாழ்வது சரியா என்று கேட்டால் நவீன மனிதனாகிய நான் இரண்டாவதையே சரி என்பேன் ஆனால் மிகவும் கவனமாக எனது எனது கோப்பையில் சமயல்காரன் கைவைக்காமல் பார்த்துக்கொண்டு.

        • mamani says:
          15 years ago

          நீங்கள் கூறுவதுபோல் சிறுபகுதியல்ல பெரும்பகுதி இந்த முதலைகள்தான் எடுத்து கொள்வார்கள். ஓரளவு வளர்ச்சியடைந்த நோர்வே நாட்டில் 1969 எண்னைவளம் கண்டுபிடிக்கபட்டபோது(அதற்கு முன் ரஷ்யா திருடியது வேறு விடையம்) 75% ஷெல், ஸ்ரேற் ஓயில் நிறுவனங்கள் எடுத்து கொண்டன.
          இவற்றை முன்னுதாரணாமாக கொண்டு தென் சூடான்
          கவனமாக கையாண்டால் சரி.

  6. நிர்மலன் says:
    15 years ago

    மேற்குலகு நரித்தந்திர கொள்ளைக்காரர்கள்தான். அவர்கள் வலியவர்களாக இருப்பதால் அவர்கள் வகுப்பதே வாய்க்கால். விரும்பியோ விரும்பதோ அதை ஏற்பது ஒடுக்கப்படும் மக்களிற்குள்ள ஓரே மார்க்கம். மேற்குலகுடன் சேர்ந்ததால் இஸ்ரேல் ஒன்றும் கெட்டுப் போகவில்லையே. அதே போல் தென்சூடானுன் பாதுகாப்புடனும் வளத்துடனும் வாழவாழ்த்துவோம்.
    தென்சூடான் 50 வருடங்களாக இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்குள் வதைபட்டு 25 இலட்சம் மக்கள் பலிகொள்ளப்பட்டது கோசலனுக்கு கவலையில்லை. மேற்குலக ஆதரவோடு அவர்கள் விடுதலைபெற்றதுதான் தாங்கொண கவலை. ரசியா சீனா பலஸ்தீன பயங்கரவாதத்தின் நட்பு சக்தியான வடசூடான் தோற்றுவிட்டதே என்பதுதான் வாட்டும் கவலை. சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் நட்பு சக்திகளும் வடசூடானின் நட்புச்சக்திகளும் ஒன்றே. இந்நிலையில் தென்சூடானின் விடுதலையில் நொட்டை சொட்டை சொல்பவர்கள் சிறிலங்கா அரச பயங்கரவாத ஆதரவாளர்களே. அதை மறைக்க போடும் முகமூடி மேற்குலக எதிர்ப்பு.
    தென்சூடானின் விடுதலையில் நொட்டை சொட்டை சொல்பவர்கள்தான் ஈழத்தமிழரின் இனவிடுதலைப் போராட்டத்திற்கு கொம்முனிசசாயம் பூசி பலஸ்தீன பயங்கரவாதத்துடன் நட்பு பாராட்டி ஈழத்தமிழர்களை படுகுழிக்குள் தள்ளிய இந்திய/ சிறிலங்கா கைகூலிகள். இன்று சிறிலங்கா அரச பயங்கரவாதம் மேற்குலகால் குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்படவுள்ளதை சகிக்க முடியாது. மேற்குலகுஆதரவுபெற்ற தென்சூடானை காரணமின்றி வைய்கின்றனர்.

    • thurai says:
      15 years ago

      தமிழ்தேசியம்பேசுவோர்,தமிழீழ விடுதலைப்புலிகள் யாவும், மேற்குலகின் கைக்கூலிகள்
      என்பதை ஒரு காலத்தில்  உலகமறியும்.-துரை

  7. thurai says:
    15 years ago

    சூடான் தனிநாடாகிவிட்டது. மக்கள் தேனும் பாலுமா பருகின்றார்கள்?இலங்கையில் தேனும் பாலும் பருகிய மக்களை தனிநாட்டுக் கோசம்போட்டு உணவிற்கு கையேந்த வைத்தவர்கள் யார்? புலம்பெயர் உல்லாச தமிழ் அரசியல் அகதிகள்தான். இவர்களின் அரசியலறிவோ பிரமாண்டம்.அவர்களின் ஊடகங்களோ
    சிங்கள்வ்ர்களிற்கு எதிராகபடமெடுக்கும் நச்சு பாம்புகள்.
    சிங்களவ்ர்களால் தமிழர் அழிவதையே காரண்ம காட்டி வாழ்க்கை நடத்துபவர்கள்.-துரை

    • நிர்மலன் says:
      15 years ago

      சுதந்திரத்தின் உன்னதம் அடிமைவிரும்பிகளிற்கு ஒருபோதும் புரியாது. மறுக்கப்பட்ட உரிமைகயை மீட்ட மக்களிற்குதான் அதன் மகிமையுரியும். 51 வருடங்களாக 25 இலட்சம் மக்களை பலி கொடுத்து பெற்று சுதந்திரம் தென்சூடானின் சுதந்திரம். அதை போராடிபெற்ற மக்கள்தான் தாமடைந்த சுதந்திரத்தின் உணர்வுபற்றி சொல்லனுமே தவிர போலியகதியாக வாழும் சிறிலங்கா அடிமை கேட்கமுடியாது “சூடான் தனிநாடாகிவிட்டது. மக்கள் தேனும் பாலுமா பருகின்றார்கள்?” என. தென்சூடான் மக்கள் தேனும் பாலும் பருக போராடவில்லை.மறுக்கப்பட்ட உரிமையை மீட்கவே போராடினார்கள். நீங்கள் வயிறுவளர்க்க அலைந்தபோல் எல்லோரும் அப்படியா! உங்கள் சிந்தனை எப்படியோ அப்படிதான் கருத்தும்.
      விடுதலைப்புலிகயை தடைசெய்து சிறையில் அடைத்ததும் அல்லது சிங்களஅரசபயங்கரவாதத்திற்கு கட்டற்ற உதவிசெய்து புலிகளை மேற்குலகு அழிக்குது. உண்மை இப்படியிருக்கா “தமிழ்தேசியம் பேசுவோர் தமிழீழ விடுதலைப்புலிகள் யாவும் மேற்குலகின் கைக்கூலிகள்என்பதை ஒரு காலத்தில் உலகமறியும்” என்கிறீரே நீங்கள் எவ்வளவு பொய்யானாய் இருத்தல் வேண்டும். ஓஓ! சிங்களஅரசபயங்கரவாதத்தினதும் அதன் ஆதரவாளர்களினது தனித்துவ அடையாளமே பொய்தானே!
      உங்களிற்கு சிறிலங்காவில் எந்தபிரச்சினையுமில்லை. மேற்குலகிலும் விருப்பமில்லை. பிறகுமேன் போலி அகதி வேசம்! சிறிலங்கா போக வேண்டியதுதானே! சிறிலங்கா அரசபயங்கரவாதத்தில் ஓடும் தேனறையும் பால் ஆறையும் அள்ளிப் பருகி உங்கள் வாழ்நாள் இலட்சியமாம் வயிறுவளர்க்கும் அவாவை அடைய வேண்டியதுதானே!

      • Kumar says:
        15 years ago

        துரை,

        போகும் போது சந்திரன்ராசா போன்றோரையும் அழைத்துச்செல்லவும் ஏனெனில் அவரும் ஒற்றுமையாக பெரும்பான்மை இனத்துடன் வாழவேண்டியவா் இங்கு தவறுதலாக வந்து அகதிதஞ்சம் கோரிவிட்டார் பாவம்.

        இலங்கைத்தமிழா்களுக்கு தேனும் பாலும் வழங்க ஏதாவது ஒரு நாட்டை கேட்க முடிவெடுக்கவேண்டும் ஏனெனில் அதை குடித்துவிட்டால் சுதந்திரம் தானாக வந்துவிடும் அதன் பின்பு யுத்தம் எதற்கு ஆயுதம் எதற்கு.

        எத்தனை துரைகளும் ராசாக்களும் இப்படி பைத்தியம் பிடித்தலைகிறீா்கள்.

        • thurai says:
          15 years ago

          சிந்தனகளால், அல்லது செயல்களால் பொய்யும்சொல்லவில்லை,களவுமெடுக்கவில்லை,கொலைகழும் செய்யவில்லை, இப்படியான துரோகத்தன்ங்களிற்கு ஒத்துழைக்கவுமில்லை.
          லட்சக் கணக்கில் தமிழரை பலி கொடுக்கும் முன்பும் இதே கருத்துத்தான் இப்போதும் தான்.
          பின் வருவதை முன் அறியமுடியாத மந்தைகளாகவும் தீர்க்கதரிசன்மற்ர சிந்தனக்ழுமுள்ளோர் தலைவ்ர்களாவ்தும் கருத்தாளர் ஆவதும் அதன் பலனை தமிழர் அனுபவிப்பதும் சொல்லித் தெரிய வேண்டிய விடயமல்ல. தொடருங்கள் பலிகளத்திற்கு தமிழரை அழைத்துச் செல்லும் வேலையை. எங்களால் உங்களின் தொழில்கள் மந்தமாகின்றது (வருமானம்)-துரை

      • thurai says:
        15 years ago

        //பிறகுமேன் போலி அகதி வேசம்! சிறிலங்கா போக வேண்டியதுதானே! சிறிலங்கா // நிர்மலன்

        சிறிலங்கா போவதென்றால் இலங்கை அரசோடு உறவாட வேண்டும். அதற்குப் பணம் வேண்டும். அது யாரிடமுள்ளது? புலிகளின் நிதி சேகரிப்பாளரிடமே யுள்ளது. அவ்ர்களைவிடவாநான் துரோகியாக உங்களிற்குத்தெரிகின்றேன்? இதைத்தானே 30 வருடமாக குருடன்
        கண் பார்வைபோல உங்களிற்குத்தெரிகின்றது. கே.பி வேற புலி,அவர் வேற புலி இவர் வேற புலி நான் இப்ப புலியில்லை என்றால். புலம்பெயர் நாட்டில் புலிகளே இயங்கவில்லையா`?
        எங்கே எல்லோரும்போய்விட்டார்கள். இலங்கை அரசு புலம்பெயர் நாடுகளிலுமா போர் செய்தது? முதலில் புலிகளிலிருந்து தமிழரை ஏமாற்ரியவ்ர்களைக்கண்டறிந்து வெளிப்படுத்தாமல் சிங்கள அரசையும் துரோகிகளையுமா தேடுகின்றீர்கள்.

        மேலும் தமிழர்களை ஏமாற்ரவா? விடுதலைக்கா? பலிகொடுக்க்கவா?-துரை

  8. S.G.Ragavan says:
    15 years ago

    நிர்மலன் குமார் இருவரும் கொடுக்கும் வலிய கருத்துள்ள மறுத்தான்களை எதிர்கொள்ள முடியாது துரை, கோசலனின் கருத்துக்கள் நியாயமற்ற பார்வைகள். புலிகள் தான் இன்று இல்லையே இல்லாத புலியை வம்புக்கு இழுத்தல் என்பது
    தமிழ் மக்களின் விடிவுக்கு எவ்வாறு உதவும்? தமிழ் மக்களின் நின்மதியான வாழ்வு புலிகள் அழிக்கப்பட்ட பின்பும் தமிழ் மக்களின் வாழ்வு
    எந்தச் சிறப்பையும் பெறவில்லை துரை என்ன சொல்கிறார் தமிழ் மக்கள் நின்மதியாக வாழ்கிறார்கள் என்றா? அப்போ நிர்மலன் குமார் சொல்வது போன்று பாலாறும் தேனாறும் ஓடும் ஸ்ரீலங்கா சென்று மகிந்தவின் ஆசீர் வாதத்துடன் வாழ்வது தானே பிறகேன் இந்த தளத்தில்
    கழுத்தறுப்பான்?

    • thurai says:
      15 years ago

      போராட்டம் தொடங்குமுன்பு இருந்தநிலமையை விட இப்போ தமிழரின்

      நிலமை
      இலங்கையில் மிகவும் கவலைக்குரியது. இதற்கான காரண்மென்ன? விடுதலையென்பது இராணுவத்தை தமிழ்ப்பகுதியிலிருந்து விரட்டுவதா?
      அல்ல்து தமிழரிற்கு சிங்கள அரசு மன்முவந்து தாமே ஆள உருமை வழ்ங்குவதா?
      இரண்டுமே இயலாத காரியமாக்கிவிட்டவ்ர்கள் யார்? இன்றையநிலைமையில்
      வடக்கு,கிழக்கில்வாழும் தமிழர் பிரச்சினையை ஈழத்தமிழர்,உலக்த்தமிழர் என்னும்பிரச்சினையாக்குவதால் என்னநன்மைகழுண்டு? தமிழக ஏழைகளை
      உசுப்பேத்தி வீதியிலிறக்குவதால் என்ன லாபம்? இலங்கையில் ஒருவன்
      தீக்குளிக்காமல் உலக்மெல்லாம் தீக்குளிப்பதால் என்ன காணப்போகின்றீர்கள்?
      தமிழரென்றால் உலகினை ஏமாற்ரி வாழ்பவர்களென்ற பெயர் ஏற்படுவதையாவ்து
      தடுக்கலாமென்றே முயல்கின்றேன்.ஏமாற்ரி வாழ்வோர் எங்களெல்லோரையும் பார்த்து சிரிக்கின்றார்கள் அதனைப் புரிந்தாலே போதும்.-துரை

      • Kumar says:
        15 years ago

        புலிகளோடு இருந்தவா்களில் சிலா் பேரினவாதிகளோடு வியாபாரம் செய்வதால் நமக்கெதற்கு சுதந்திரம்,சுயநிர்ணய உரிமை, பேசாமல் பேரினவாதிகளின் அடிவருடிகளாகவும் அடிமைகளாகவும் வாழ்ந்துவிட்டுப்போகலாம் என்பதா உமது கருத்து திருவாளா் துரை?

        துரை, மறுபடியும் ஒரு தடவை நான் உமக்கு கூறிக்கொள்ள விரும்புவது என்னவென்றால்,உமக்கு தெரிந்ததாக காட்டிக்கொள்ளும் விடயங்களை விட மேலும் பல விடயங்கள் எமக்குத்தெரியும் ஆனால் அப்படிப்பட்ட விடயங்கள் யாவுமே ஆரம்பமாவதும் முடிவதும் மீண்டும் தலைதூக்குவதற்கும் முக்கிய காரணம் 60 வருடமாக தொடரும் சிங்கள பேரினவாதத்தின் தமிழா் மீதான அடக்குமுறை அந்த அடக்குமுறை நீங்காத வகையில் இப்படிப்பட்ட வியாபாரிகளும் உம்மைப்போன்ற எசமான் விசுவாசிகளும் முளைத்துக்கொண்டே இருப்பார்கள், இது இன்றல்ல நேற்றல்ல சரித்திரம் பூராகவும் நடக்கும் நிகழ்வுகள். 

        அதிஸ்டவசமாக தமிழா்களில் பலரின் மூளைகள் அவா்களுடய சொந்த தலையிலேயே உள்ளது யாரிடமும் அடகு வைக்கவில்லை ஆதலால் சுயமாக சிந்திக்கமுடிகிறது அதனால் இயல்பாக உணரமுடிகிறது அடக்குமுறையை, ஆனால் நீரோ அடிமைத்தனத்தில் இருந்து இன்பம் கண்டு பழகிப்போனதால் அதற்குமேல் உம்மால் நகரமுடியவில்லை.

        எனக்குத்தேவை,எமக்குத்தேவை,எம் இனத்திற்குத்தேவை சுதந்திரம்,சுயநிர்ணயம் எமது பாதையை நாமே அமைத்துக்கொள்வது,புத்தா்மேல் எமக்கு பிரியமுண்டு அவருக்கு சிலைகளை நாம் விரும்பும்போது விரும்பிய இடத்தில் அமைத்துக்கொள்கிறோம் யாரும் திணிக்கவேண்டியதில்லை
        ஆகவே நாங்கள் போராடவேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம் அது தொடரும் உம்மைப்போன்றவா்களுக்கு அது தேவையில்லை என்றால் ஒதுங்கிவிடவும். Nothing impossible who has hope, but not  for  person  like  you.

        • thurai says:
          15 years ago

          ஒரு சமூகமாக´ ஒற்றுமையாக ஒரு இடத்தில் வாழ்த்தெரியாத, பழகாத தமிழர்களிற்கு உருமை,சுதந்திரம் நாம் ஒர் இனமென்று கூறும் தகுதியுண்டா? என்னிலும் பார்க்க கூடுதலாக விடயம் தெரிந்தால் அதனை வெளிப்படுத்த ஏன் தயக்கம்? தமிழனைத் தமிழன் ஏமாற்ரலாம், கொல்லலாம் அவற்ரினை மறைப்போம், ஆனால் சிங்களவர் ஏதாவது தவ்றுவிட்டால் அதனை
          உலக்மறிய பறைசாற்றுவோம். இதன் பரிமானம் தான் தமிழ் பயங்கரவாதம். உலகம் ஒருபோதும் ஏற்கமாட்டாது. இந்தக் குணம் உள்ளவரை தமிழரை அழிப்பதற்கு வேறு யாரும்தேவையில்லை.-துரை

  9. S.G.Ragavan says:
    15 years ago

    துரையின் கருத்தில் உண்மையுண்டு ஆனால் அவரின் முடிவுரை தான் வருத்தமாக உள்ளது. தமிழரின் தவறுகள் திருத்தப் படவேண்டியவை
    தமிழர்கள் தவறிழைத்தார்கள் (தமிழரை தமிழர் அடக்குமுறைக்கு உள்ளாக்கியமை) என்பதற்காக சிங்களவர்களின் அடக்குமுறைகளை ஏற்றுக்கொள்ளமுடியுமா துரை? குமார் துரையை ஒருமையில் விளிப்பதை நிறுத்தவும்.

    • thurai says:
      15 years ago

      சிங்களவரின் அடக்குமுறை எந்த வடிவில்,எப்படி எதற்காக எம்மீது
      என்பதைப் பற்ரி
      யாராவது ஆய்வுநடத்தினார்களா? நாம் கடந்து வந்தபாதை தவறென்பதை ஏற்றுள்ளார்களா? தமிழரிடம் தமிழரையே அழிக்கும் ஓர் விசப்பாம்பு போன்ற
      சக்தியொன்று உள்ளது. இதனைக் கண்டறிந்து திருத்தாவிட்டால் தமிழினம் மேலும் அழிவினையே சந்திக்கும். சிங்களவ்ருடன் பகைமையை மூட்டி
      வாழும் ஓர் பகுதியினர் நம்மிடையேயுள்ளபோது சிங்களவ்ர்களைப் ப்கைப்பது ஒட்டுண்ணி வாழ்வு வாழும் தமிழர்களிற்கு உடந்தையாக நாமும் மாறிவிடுவோம். தமிழரிடையே நாம் தமிழர் என்னும் எண்ணம்மலர பாடுபடாத தலைவர்கள்
      உள்ளவரை தமிழினம் என்றும் அடிமையே. முதலில் தமிழர் தமிழராக
      தம்மைவிடுவிக்க வேண்டும். சமூக பொருளாதார வளர்ச்சியில் கையோடு கைகோர்த்து ஒன்றுபட்டு செய்ற்படவேண்டும். அப்போது தமிழரின் விடுதலை உணர்ச்சி ஆழமாக் வேரூன்றும். இதனை செய்ற்படுத்தவேண்டியது பிறந்த மண்ணில். இதனைத்தவறவிட்டால் தமிழர் தாமே அடிமைகளாக்கியே வாழ்வார்கள்.-துரை

      • நிர்மலன் says:
        15 years ago

        //சிங்களவரின் அடக்குமுறை எந்த வடிவில்இஎப்படி எதற்காக எம்மீது
        என்பதைப் பற்ரியாராவது ஆய்வுநடத்தினார்களா//
        போதியளவு ஆய்வு நடத்தப்பட்டுவிட்டது. அதில் கிடைத்த முடிவு ” ஆரியவாத மகாவம்ச மனநிலை” இதில் உங்களிற்கு உடன்பாடு இல்லாவிட்டால் உங்களின் ஆய்வை எழுதங்கள் அதன் ஊடக “சிங்களவரின் அடக்குமுறை” மனநிலையின் இன்னொரு பக்கத்தை தெரிந்து கொள்ளலாம்.

        • thurai says:
          15 years ago

          தமிழரிடம் தமிழரை அடக்கி வாழ வேண்டுமென்ற எண்ணம் இல்லையா? அப்படிநடந்ததில்லையா? சிங்களவ்ர் தமிழர் மீது அடக்குமறைகளை பாவிப்பதும், தமிழர் தமிழர் மீது
          அடக்கு முறைகளை பாதிப்பதும் ஒரே வகையான் மனிதமீறல்தான். இதே சமயம் எல்லா சிங்களவ்ர்கழும் எல்லா தமிழர்க்ழும் அட க்கு முறையினை ஆதரிப்பவ்ர்களல்ல. தமிழர்களிற்கு சிங்களவ்ர்கழும், சிங்களவ்ர்களிற்கு தமிழரும் உதவியாக வாழ்ந்தும் வருகின்றர்கள். பதவியும் புகழும்
          பொருழும் சேர்க்கும் ஆசைகொண்ட தமிழர்கழும்
          சிங்களவ்ர்க்ழுமே இனத் துவேசத்தையும் மக்களின் அழிவையும் ஆதரிக்கின்றார்கள். சமூக், பொருளாதார வளர்ச்சியில் அக்கறை கொண்ட
          யாவ்ரும் ஒற்ருமையே விரும்புவார்கள். இலங்கையின் பொது எதிரியை கன்டு கொள்ளாமல் துவேச மனப்பான்மையுடன்
          பிரச்சினைகளைநோக்கினால் இரு பகுதியினரும் அழிவினையே சந்திப்பார்கள். தமிழரிற்கு தேவை அறிவுள்ள தலைவ்ர்கள். தமிழீழமென்ற ஆசையைக்காட்டி மேலும் மோச்ம் பண்ண வேண்டாம்.-துரை

  10. chandran.raja says:
    15 years ago

    சூடான் சுகந்திரம் ஏதோ ஒரு பக்கத்தில் சூடோறிப் போகிறது என்பதை உணரலாம்.
    முழுஆபிரிக்க நாடுகளுமே உரலில் அகப்பட்ட எள்ளுவாக எண்ணையாக கசியும் போது சூடான் மாத்திரம் சுகந்திரம் பெற்றதாக எப்படி கருதமுடியும்?.

    காந்திக்கு கீழ்-மேல்பார்வையில் போராட்டத்தில்இந்தியா சுகந்திரம் பெற்றதாக நீட்டிமுழங்கியவர்கள் தான் சூடான் சுகந்திரம் பெற்றுவிட்டது. சுகந்திரகாற்றை சூடான்மக்கள் அடைந்துவிட்டார்கள். அதேபோன்ற சுகந்திரத்தை “ஐஸ்”சை குடுக்க வேண்டும். நாமும் தமிழீழத்தை பெற்றாக வேண்டும் என கருத்துதான் வரும் பின்னோட்டங்களில் காணக்கூடியதாக இருக்கிறது.

    இந்த பேதைகளுக்கு தற்போதைக்கு சொல்லுவது இது தான். அளவுக்கதிகமான இனிப்பு பண்டங்கள் குளிர்மையை ஏற்படுத்துகிற ஐஸ் வகையாறவைகள் பல்லுகளுக்கு மட்டுமல்லாமல் உடம்புக்கும் பரம்பரைக்கும் ஊறுவிழைக்கும்.

    இங்கு கருத்துச் சொல்லுபவர்கள் அநேகமாக தமிழ்மக்கள் மீது ஒருஇனபடுகொலையை நடத்தியவர் ராஜபக்சா என குற்றம் சாட்டுகிறார்கள். இங்கு தமிழ்மக்கள் தலைமைகளின் சிந்தனைபற்றியோ பிற்காலத்தில் ஈழத்தின் வல்லரசாக புலிகள் நாற்படைகள் வைத்து சதிர்ராட்டம் ஆடியதைப்பற்றியோ யாரும் கேள்வி எழுப்பவில்லை. மக்கள் என்று சொல்லும்போது என்றும் மக்கள் தான். நாம்எம்லாம் உயரடுக்கில் உள்ளவனை மக்களாக கருதுவதில்லை. அதில் ஒரு தொழிலாளி விவசாயி சிறுமட்டத்தில் உள்ள வியாபாரி இந்தஉலகத்துடன் அறிவுவளர்ச்சியில் ஒத்துயோட முடியாத பழங்குடிமக்கள் இன்னமும் இந்த புதுஉலகத்துடன் தம்மை கலக்க விரும்பாத வேடுவயினம் இதேயே மக்கள் என்கிறோம்.

    இவர்களின் வாழ்வையொட்டியதே விடுதலை என்பது. இதையெல்லாம் புரிந்து கொள்ளுவதற்கு நாம்தமிழர்கள் தான் என்பதான மட்டமான அறிவு தேவையில்லை. மனிதயறிவு இருந்தாலே போதுமானது. இது நிர்மலன் குமார் அவர்களுக்கு வக்காளத்து வங்குகிற ராகவனுக்கும்இது அவசியமானது.

    • நிர்மலன் says:
      15 years ago

      chandran.raja!
      அடிமைகளிற்கு சுதந்திரமென்பது வேம்பாய் கசக்கத்தான் செய்யும். மகிந்தாவிடமிருந்து ஓசியில் மது மாதுவும் கிடைக்குதென்பதால் அதன் பாவனையும் உடலிற்கு மட்டுமல்ல உள்ளத்திற்கும் மனித/சமூக நடைத்தைக்கும் படுகெடு.
      தமிழின அழிப்பு மகிந்தாவால் நடத்தப்பட்டதாக தமிழர் மாத்திரம் சொல்லவில்லை ஐநாநிபுணர் குழுவும் சனல் 4 தொலைக்காட்சியும் ஆதாரத்துடன் சொல்கிறது முடிந்தால் அதை அவர்களிடம் நேரில் சென்று மறுப்பதுதானே. இங்கு சொல்லி என்ன பிரயோசனம்.
      தமிழினபடுகொலையாளானின் கையாட்களை நாம் மளிதராகவே கருதுவதில்லை. இந்நிலையில் “நாம்எம்லாம் உயரடுக்கில் உள்ளவனை மக்களாக கருதுவதில்லை” எனும் கதைவேறை. உங்களைப் போன்றவர்களலேயே ஈழத்தமிழர் இடதுசாரியம் பேசுவோரை ஈனர்களாக பார்க்கிறார்கள்.

      • thurai says:
        15 years ago

        //தமிழினபடுகொலையாளானின் கையாட்களை நாம் மளிதராகவே கருதுவதில்லை//நிர்மலன்

        தீர்ப்பொன்றை வழங்குமுன் எத்தனையோ விசாரணைகள்,
        சாட்சிகள், ஆலோசனைகள். தமிழீழவிடுதலை விரும்பிகளிற்கோ
        மாற்றுக்கருத்தாளர்,வழிகாட்டிகள், குற்ரங்களை சுட்டிக்காட்டுபவர்கள், யாவரும் கைக்கூலிகள்,துரோகிகள்,
        எட்டப்பங்ள் இப்படி எத்தனையோ பட்டங்கள் கொடுத்து மரணதண்டனைநிறைவேற்ருவீர்கள். உங்களைப்போன்றவ்ர்கள்
        உருமை,விடுதலை என்னும் சொற்களை வாயாலும் சொல்லலாமா?-துரை

  11. S.G.Ragavan says:
    15 years ago

    சந்திரன் ராஜா, துரை ஆகியோர் தெளிவாக சிந்திக்கும் போது அதனை ஆதரிப்பது எனது கடமை. அது எவ்வாறு அரச சார்பு நிலை ஆகாது நினைக்கிறேனோ அது போலவே குமார் நிர்மலன் தெளிவாக கேட்கும் கேள்விகளில் நியாயம் இருப்பதால் அதனை ஆதரிக்கிறேன்.
    இருப்பினும் குருட்டுத்தனமாக புலிகளையும் அவர்களின் தவறுகளையும், சிங்கள இனவெறி ஆட்சி ஆளர்களையும் ஆதரிக்க நான் தயாரில்லை. சிங்களவர்கள் எமது சதா எதிரிகள் அல்லர் என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு. 1997 இல் சிங்களப் படை அதிகாரி ஒருவருக்கு எதிரான தாக்குதல் ஒன்றில் சந்தேக நபராக கைது செய்யப் பட்ட எனது பல்கலைகழக நண்பர் குறித்து அவரினதும் எனதும் சிங்கள நண்பர்கள் கூறிய விடயமொன்றை சொல்கிறேன். அவனை நாங்கள் குறை சொல்ல மாட்டோம் சிங்கள அரசின் அடக்குமுறை அவனை பாதித்து இருக்க கூடும் அதனால் அவன் புலியில் இணைந்து இருக்கலாம் என்றார். எனவே எம்மை எமது போராட்டத்தை புரிந்து இருக்கக் கூடிய சிங்களவர்களை நாம் அரவணைத்தோ அல்லது நம்பவோ இல்லை தமிழர்களின் அவர்களின் அரசியல் சக்த்திகளின் குறைபாடு. மகாவம்ச மனநிலை அல்லது கருத்தியல் சிங்களவர்களை தமிழர்களுக்கு எதிராக பகைமை கொள்ளச் செய்கின்றது
    உண்மையே. ஆனால் மகாவம்ச கதையையே ஒரு புரட்டு என்றும் அதுவே தமிழ் சிங்கள முரண் பாட்டை கொழுந்து விட்டு எரியச் செய்வதாக
    கருதும் சிங்கள மக்கள் உண்டு. சிங்கள பொது மக்களை இலக்கு வைத்து நடத்தப் பட்ட புலிகளின் தாக்குதல்கள் எமது போராட்டத்தை ஆதரித்த மக்களையும் மனம் மாறச் செய்தது. வெறும் குறுந் தேசிய உணர்வால் புலிகள் தாமும் உந்தி மக்களையும் உந்தப் பண்ணினார்கள். எனது முடிபு, புலிகளின் தவறுகள் என்பது சிங்கள பேரினவாத அடக்கு முறைகளை நியாயப் படுத்தும் அலகு அல்ல.

    • thurai says:
      15 years ago

      தமிழர்களிற்கு சிங்களவ்ர்களிடம் மட்டும் எதிரிகளில்லை தமிழர் மத்தியிலும் எதிரிகள் உண்டு. இத்தகைய உண்மைகளை ராகவ்ன் போன்று சிந்திக்கக் கூடியவர்க்ளாலேயே அறியமுடியும். முள்ளில் விழுந்த சீலைபோல் வாழும்
      இலங்கைத்தமிழினதிற்கு குறிப்பாக் வட,கிழக்கில் வாழ்வோரிற்கு எவ்வாறான அரசியல்முன்னெடுப்புக்கள் தேவையென்பதே இன்றைய கேள்வி. அது மட்டுமல்ல
      மாறிவருமுலகிலும், இலங்கையின் பொருளாதார நிலமைகளிற்கேறப இனங்களில்
      மாற்ரங்கள் வருவதை தவிர்க்கமுடியாது. இவைகளை கருத்திற் கொள்ளாது
      சிங்களவ்ர்கழும் தமிழர்க்ழும் அரசியல் லாப நோக்கோடு பேச முனைந்தால்
      தீர்வு ஒரு போதும் கிட்டாது.-துரை

  12. நிர்மலன் says:
    15 years ago

    //தமிழரிடம் தமிழரை அடக்கி வாழ வேண்டுமென்ற எண்ணம் இல்லையா? அப்படிநடந்ததில்லையா? சிங்களவ்ர் தமிழர் மீது அடக்குமறைகளை பாவிப்பதும்இ தமிழர் தமிழர் மீது
    அடக்கு முறைகளை பாதிப்பதும் ஒரே வகையான் மனிதமீறல்தான்.//thurai

    துரை இந்த இணையத்தில் கிடைக்கும் கருத்துப்பகிர்வதற்கான வாய்பை தவறான திசைதிருப்பலுக்கு பாவிக்கவேண்டாம். நான் கேட்ட கேள்விக்கு சம்பந்தமில்லாத ஒன்றை பதிலாக சொல்லி நழுவுவதுடன். வழமை தமிழினவடுதலைக்கெதிராக சேறு அடிப்பதில்தான் அதிஈடுபாடு காட்டுகிறீர்கள்.
    தமிழருக்கிடையேயுள்ள சமூக ஒடுக்குமுறை மனநிலைக்கு காரணம். இந்துசமய வர்ணச்சிரம முறைமை என்பதை மிகப்பெரும்பாலான தமிழர்கள் நம்புகிறார்கள் அதனை எதிர்க்கிறார்கள். ஆனால் சிங்களவரில் மிகப்பெரும்பாலனோர் தம்மை புத்தமதத்தை (?) சார்ந்தாக சொல்கிறார்கள். ஆனால் புத்த போதனை எந்த அடக்கு முறையையும் ஆதரிக்கவில்லை. அப்படியானால்!முதலாவது சிங்களவருக்கு எங்கிருந்து அந்த அடக்குமுறை மனநிலை வந்தது?
    அடுத்தது. தமிழரிடையேயுள்ள சமூக அடக்குமுறைக்கெதிராக அதி மிகை உச்ச தொனியில் பேசும் தாங்கள் சிங்கள அடக்குமுறைக்கு சாமரம் வீசுகிறீர்கள் இது ஒரு சாதரண மனநிலையா? இதன் காரணமென்ன?

    • thurai says:
      15 years ago

      ஒருவனோடு பகைக்கு முன், எதிர்த்து போராட முற்படுமுன் தன் பலத்தை
      முதலில் தானே அறிந்திருக்க வேண்டும். இந்த விடய்த்தில் ஈழத்தமிழர்நாங்கள் என்று சொல்பவ்ர்கள் முதலாவது படிகட்டில் கூட காலடியெடுத்து வைக்கவில்லை.
      இந்தநிலமையை மாற்ராது விடுதலை சுதந்திரம் பற்ரிப் பேசுவது வீண்பேச்சு.
      விசேடமாக புலம்பெயர்தமிழர் விடுதலை சுதந்திரம் பற்ரிப்பேசுவது புலம்பெயர்ந்தவ்ர்களின் புலம்பலாகவே மாறும்.-துரை

      • நிர்மலன் says:
        15 years ago

        ஆக தங்களிடம் சுயசிந்தனையோ, சுயதேடலோ கிடையாது. இருப்பது ஈழத்தமிழினத்திற்கெதிரான கோடாரி காம்புத்தனமும், சிங்கள அடிமை விசுவாசம்தான். உங்கள் கருத்தை ஒரு கணக்கில் எடுக்கதேவையில்லை. சிங்களத்திடம் வேண்டும் கூலிக்கு அலம்பி, புலம்பி திரியும் ஒருவரின் ஊழையாக கொள்லலாம்.

        • thurai says:
          15 years ago

          தமிழரனின் முதலெதிரி தமிழினத்துக்குள்ளேதான் உள்ளான்.இதனை
          அறியாது சிங்களவனை காட்டுபவரெல்லாம்
          சுயநல கூட்டம்தான்.-துரை

          • Soorya says:
            15 years ago

            நுணலும் தன் வாயால் கெடும்.

  13. chandran.raja says:
    15 years ago

    இங்கிருந்தே தொடங்குகிறேன் ராகவன் அவர்களே! //புலிகளையும் அவர்களின் தவறுகள்… சிங்கள இனவெறியாட்சிளார்களையும் ஆதரிக்க தயாரில்லை//

    ஒருவர்க்கத்து ஒரு நியாயம் இருக்கும் ஆனால் ஒரு இனத்திற்கு ஏதாவது ஒரு நியாயம் இருப்பதாக என்னறிவுக்கு படவில்லை.அதற்கு எப்பவுமே இரு முகங்கள்.
    அதை தான் சமூகவிஞ்யாணத்தில் வர்க்கம் என்பார்கள். ஒரு வர்க்கம் தனது வாக்கத்திற்காக தன்னையே பலிகொடுக்கும். அடுத்த முகம்-வர்க்கம் மற்றவரை பலிகொடுக்கவிட்டு பார்த்துமகிழ்ந்து அனுபவிக்கும். இதுவெல்லாம் தமிழருக்கு மாத்திரம் பொருந்தகூடிய தல்ல. உலகத்தில் வாழும் சகல இனங்களுக்கும் அச்சொட்டாக சரிவரக்கூ
    டியதே.

    இதில் இருந்து தெரிவது என்வென்றால் எந்த இனமும் குற்றவாளி இல்லை என்பதே.இதில் சிங்களயினம் மட்டும் குற்றவாளியாக காண்பது என்னவோ?.

    வேண்டுமானால் சிங்களயரசை குற்றவாளியாக்குங்கள். அது நியாமானது.நீதியானது.அதே நேரத்தில் தமிழ்யரசியல்வாதிகளை என்ன செய்யப் போகிறீர்கள். இன்றும் நாடமேடைகளில் ஐந்துபேர் ஐந்துதலைமுடி கீரீடத்துடன் ஆகக் குறைந்தது ஐந்து கிராமங்களையாவது தா! என்பது போல் உங்களுக்கு தெரியவில்லையா?. ஆகமொத்தத்தில் அதிகாரம் எப்பவுமே மக்களுக்காக செலுத்தப் படவேண்டும்.மன்னர்காலத்து நீதியில் வாழ்பவர்கள் இன்றுள்ள மக்கள். என்னை நீ த
    லவனாக்கு உனக்கு தொண்டாற்றுகிறேன் என்கிற தமிழ்நாட்டு அரசியயிலையும் கேட்பார் யாருமில்லை.
    உங்கள் பார்வையில்-நியாயத்தில் இனவாதயரசுக்கெதிராக புலிகளை குறைகண்டு கொள்ளமாட்டேன் என்பது அதுவும் ஒரு பலவீனமட்டுமல்ல முட்டான் தனமே. மேற்கொண்டுஅரசியலில் தடம்பதிப்பற்கான இயலாமையே! இந்த விதத்தில்…காந்தியின் ஆயுதத்தையும் “நீ அடிக்கும் வரை அடி நான் எழுந்து நிற்பேன்” என்ற வைராக்கியம் கூடி எமக்கில்லை. தெற்கில் இனக்கலவரம் நடக்கும் வடக்கில் இருந்த ´சிங்களமக்களை பாதுகாப்பு கொடுத்து எம்முடன் வைத்திருந்தால்… இந்த அரசியல்-மனிதநேயத்திற்கு உட்பட்ட அணுகுமுறை. ஆயிரம் தற்கொலைதாரிகளை விட ஒரு இனத்திற்கு மாககீர்த்தியை ஏற்படுதியிருக்கும் என்பதை விட தமிழனம் புத்தனைவிட மிஞ்சியிருக்கும்.

    இப்படியான வழிவகைகள் இருக்கும் போது வழிவகைகள் தெரிந்தவர்களை துரோகி
    என்று முத்திரை குத்தி கொன்றழித்த போதும் புலிகளை புகழ்பாடிய வாய்யால் மகிந்தாவை பாடமாட்டேன் என்றால் எனக்கு சங்கடமாக இருக்கிறது ராகவன்.

    சிறுகுறிப்பு. கர்பத்தில் இருந்து நிர்வாணமாகவே வந்தோம். திரும்பவும் நிர்வாணமாகவே போகிறோம். இது விபிலிய வேதத்தில்லுள்ள மிகப்பிடித்த வாசகம்.யாரையும் கொன்று ஒழித்து அரசியல் நடத்த வேண்டிய அவசியம் பொதுயுடைமை வாதிகளுக்கு கிடையாது. உலகத்தை குலுக்கிய ருஸ்சிய அக்டோர் புரட்சியையே வெறும் ஆறுஉயிர்களை பலிகொடுத்து தான் நடத்தி முடிக்கப் பட்டது
    என்பது உங்களுக்கு தெரியுமா?… மீண்டும் விவாதிப்போம்.

    • நிர்மலன் says:
      15 years ago

      //ஒருவர்க்கத்து ஒரு நியாயம் இருக்கும் ஆனால் ஒரு இனத்திற்கு ஏதாவது ஒரு நியாயம் இருப்பதாக என்னறிவுக்கு படவில்லை.//
      உங்கள் தெரிந்த நீங்கள் சேர்ந்து இயங்கும் வர்க்கம்கொலை கடத்தல் கற்பழிப்பு மணல் கொள்ளை தொடக்கம் பணக்கொள்ளை நடத்தும் ஈபிடிபி அரசியல். அப்படிபட்ட உங்களிற்கு எங்கு நியாயம் தெரியப்போகிறது.
      //இதில் சிங்களயினம் மட்டும் குற்றவாளியாக காண்பது என்னவோ?. வேண்டுமானால் சிங்களயரசை குற்றவாளியாக்குங்கள்//
      முதலில் அரசென்றால் என்ன? சிறிலங்கா நாடளமன்ற உறுப்பினர்களையும் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியையும் யார் தேர்வு செய்வது? அவர்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசின் தவறுகளிற்கு அந்த மக்கள் பொறுப்பில்லையா? சிங்களவர் அறுதி பெரும்பான்மையை தனித்தே நிறுவக்கூடியவர்கள். மொத்த மக்கள் தொகையில் 74வீத மக்கள். மகிந்தாவே சொன்னவர் முதல்முறையாக பதவியேற்கும் போது தன்னை சிங்கள மக்களே தேர்ந்தெடுத்தவர்கள் நான் சிங்களவர்களின் ஜனாதிபதி என இந்நிலையில். “சிங்களயினம் மட்டும் குற்றவாளியாக காண்பது என்னவோ” எனும் குதர்க்க கேள்வி.
      // தமிழனம் புத்தனைவிட மிஞ்சியிருக்கும்.//
      புத்தன் இல்லறத்தை வெறுத்தவர். இருந்த அதிகாரத்தையும் துறந்து துறவறம் போனவர். ஈழத்தமிழர் சாதரண இல்லற வாழ்வை விரும்பும் சாதரணமக்கள். ஓம் போகிற போக்கில் டக்ளஸ்கும்பல் தமிழர்களிடமிருந்து எல்லாவற்றையும் பறித்து தமிழர்களை அம்மணமாக்கி நிர்வாணநிலை கொடுப்பீர்கள்.
      //உலகத்தை குலுக்கிய ருஸ்சிய அக்டோர் புரட்சியையே வெறும் ஆறுஉயிர்களை பலிகொடுத்து தான் நடத்தி முடிக்கப் பட்டது
      என்பது உங்களுக்கு தெரியுமா?… //
      ஆட்சி முறைமைமாற்றம் செய்வதற்கு உயிர்பலியே கொடுக்காது அமைதியான ஐனநாயக தேர்தல் வாக்களிப்பு முறைமையிருக்கும் தேசத்தில் வாழ்ந்து கொண்டு. பழங்கதை பேசிகிறீர்களா? அந்த அக்கடோபர் புரட்சின் இன்றையநிலையென்ன? செய்வது கோடாரிகாம்புத்தனம் அதிலை புரட்சி புலுடா வேறை!

    • Kumar says:
      15 years ago

      கிழக்கு ஐோ்மனிக்குள் இருந்த மேற்கு போ்ளினைச்சுற்றி இரவோடிரவாக மதிலை கட்டி மக்களை தனிமைப்படுத்தி 40 வருடங்களுக்கு மேலாக அந்த மேற்கு போ்ளினை அடைவதற்கு கிழக்கு ஐோ்மனி மக்கள் பட்ட அவலமும் அதற்கு அவா்கள் கொடுத்த விலையிலுமிருந்து நாம் அறியலாம் பொதுவுடமைவாதிகள் எவ்வளவு நாகரீகமான அரசியல் நடத்தியவா்கள் என்பதும் தனி மனித சுதந்திரத்தை எப்படி பேணியவா்கள் என்பதும்.

      • thurai says:
        15 years ago

        ஆனால்மதிலுக்குள் இருந்தவ்ர்கழும் வெளியே இருந்தவ்ர்கழும்
        தாங்கள் ஜேர்மனியர்தான் என்று வாய்ப்பேச்சோடு இல்லாமல்
        ஜேர்மனியராக வாழ்ந்தும் வந்தார்கள்.. அப்படியான மக்கழுடன்
        சாதி,சமயம்,ஊர்,பிரதேசம், புலி,புலி எதிர்ப்புஇப்படி குத்துப்படும் ஒரு சமூகத்தின் பிரச்சினையை ஒப்பிடலாமா?-துரை

        • Kumar says:
          15 years ago

          நான் குறிப்பிடுவது பொதுவுடமைவாதிகளான கிழக்கு ஐோ்மனியரின் அன்றய செயற்பாட்டை.
          அதாவது பொதுவுடமைவாதிகள் யாரையும் கொன்றொளித்து அரசியல் நடத்துவதில்லை என்பதற்கு பதிலாகும்.இங்கு விடயம் வேறு, எதனுடனும் எதையும் நான் ஒப்பிடவில்லை.மிரண்டவன் கண்ணுக்கு இரண்டதெல்லாம் பேய் என்பதுதான் ஞாபகம் வருகின்றது. 

    • Soorya says:
      15 years ago

      தெளிவாக சிந்திப்பதாக அத்தாட்சிப் பத்திரம் கொடுத்தவருக்கு அந்தோ பரிதாபம் கிடைத்ததோ முட்டாள் பட்டம்.

  14. chandran.raja says:
    15 years ago

    கிழக்குஜேர்மனி மேற்குஜேர்மனி இதுவே தனியுடமைக்கும் பொதுயுடைமைக்குமான இலக்கணம். இதையும் தாண்டி வடகொறியா தென்கொறியாவையும் கூடா எடுத்துக் கொள்ளலாம். இதையும் விட்டால் சோவியத்
    யூனியன் மக்கள்சீனத்தையும் இன்னொருவர் எடுத்துகொள்ளலாம்.

    இப்படியாக முடிவுக்கு வருபவர்கள் குமார்மட்டுமல்ல உலகின்பெரும்பான்மையினா; இந்த சுற்றுவட்டத்திற்குள் தான் இழுக்கப்பட்டிருக்கிறார்கள். இவைகளெையே நுனிபுல்
    மேய்நதுவிட்டு அப்பவந்து கருத்துச் சொல்லிவிட்டு தலைமைவாகி விடுவார்கள்.

    பேளின்மதில் உடைக்கப்பட்டு இன்று இருபதுவருடங்கள் ஆகின்றன. கிழக்குஜேர்மனியின் ஒரு தொழிலாளியை கண்டால் அவன்சொல்லுவது இருந்த மதிலை இன்னும் ஒரு மீற்றர் உயர்த்தி கட்டியிருக்க வேண்டுமென்பதே. மேற்கு ஜேர்மனியர்கள் எம்மை கடன்காரர்களாக ஆக்கிவிட்டார்கள் என்பது போன்ற புலம்பல்களே. ஒரு விவசாயிக் கேட்டால் விளைவித்தோம் வாழ்தோம். மற்றவருக்கும் பகிர்ந்து எமது பிறதேவையை பூர்த்திசெய்யக் கூடியதாக இருந்தது.

    இது ஒட்டுமொத்த கிழக்குஜேர்மனியரின் கருத்தல்ல. கிழக்கு ஜேர்மனியரின் ஒரு தொழிலாளி விவசாயின் கருத்தே!. இங்கு தான் பொதுயுடைமைக்கான தேடல் இருக்கிறது என்பது எனது கருத்து. ஆகவே கம்யூனிசத்திற்காக கருத்து சொல்ல குமார் முற்படும் போது சீனாவையோ மண்மூடிப்போன மக்கள்சீனாத்தை பற்றி ஈயடிச்சான் கொப்பிமாதிரி புலமையை வெளிப்படுத்தாமல். ………
    இனிவரும் காலங்களில் மனிதவரலாற்றுக்கு உந்துசக்தியாக அக்டோபர் புரட்சி அந்த புரட்சியால் சோவியத்து அரசியல் தலைமைகுள் நடந்த போராட்டங்கள். அதில்
    வெற்றி பெற்றவர் யார்? தோற்றவர் யார்?

    கடந்த முப்பதுவருடங்களில் புதுசீனத்தைகட்யெழுப்ப நாநுhறு மில்லியன் கிராமப்புறத்:தில்லிருந்து வந்த விவசாயிகள் எப்படி தொழிலாளர்கள் ஆனார்கள்?. மில்லியன் கனக்காண தொழிலாளர்கள் இலவுவாக தமது கிராமத்திற்கு பயணத்து விடுவார்களா? இதுவே பொதுவுடைமைவாதிகளின் முன் நிற்கும் கேள்விகள்.

    இதில் குமார் ´எந்தப் பாத்திரமோ?. மதிலிருந்து மனிதமனத்திற்கு தாவவேண்டியதே எனது அவா.

    • நிர்மலன் says:
      15 years ago

      சந்திரன்ராசா! அப்ப ஏனாம் முன்னைய கிழக்கு ஜேர்மனியில் தங்காது மேற்கு ஜேர்மனிக்கு போலியகதியாய் வந்தீர்கள்! வடகொரிய மக்கள் உணவுபஞ்சத்திலை வாடுகிறார்கள். இந்நிலையில் கொம்முனிச சித்தார்ந்த வெட்டிப்பேச்சிற்கு குறைவில்லை! தமிழினகொலை கொள்ளை பாலியல்வல்லுறவு விபச்சாரதொழிலுக்கு பெண்கள்கடத்தல் கடத்தல் கப்பம் ஊழல் இலஞ்சம் மணற்கொள்ளை…. இப்படியான மனுக்குல விரோத செயலை தொழிலாக கொண்ட அமைப்பான ஈபிடிபியின் உறுப்பினரா இருந்து கொன்டு. பொதுவுடமை புரட்சி என புலுடாபேச்சு. உங்களை போன்ற வேசதாரிகளால்தான் “பொதுவுடமை புரட்சி” என்றாலே ஈழத்தமிழர் பயந்தொதுங்கிறார்கள். ஒரு சமூகநன்மைமிக்க “பொதுவுடமை புரட்சி” என்பவற்றை ஏன்தான் துஸ்பிரயோகம் செய்கிறீர்கள்.! கியூபாவிலோ வடகொரியாவிலையோ போய் இருக்க வேண்டியதுதானே!

      • chandran.raja says:
        15 years ago

        மணல்கொள்ளையை பற்றி சொல்லுகிறீர்களே! நிர்மலன் ஏழைகளுக்கும் அறுதாலிபிள்ளைகளுக்கு “சயினட்” கட்டி அவர்களின் வாழ்வை கொள்ளையடித்தது பற்றியோ கேணல் தளபதிகள் உயர்மட்ட தாதாக்கள் உயிர்பிச்சை கேட்டு வெள்ளைகொடி பிடித்த சமாச்சாரத்தை பற்றி ஏன்? மூச்சும் விடுகிறீர்கள் இல்லை.

        அல்பிரட்துரையப்பாவின் கொலையில் தொடங்கி கப்பம் கடத்தல் ஆயிரம்வருடங்கள் கூடிவாழ்ந்த சமூகத்தின் உடமைகளை கொள்ளையடித்து காதுத்தோடு அறுத்து விரட்டியவரை இறுதியில் நந்திக்கடலில் சங்கமாகியது வரையான வரலாற்றுபதிகத்தின் பக்தி இதெல்லாவற்றையும் பரவசமாக படிக்க வாய்கூசுகிறதோ..?

        ஈழத்தமிழரின் வாழ்வைசூறையாடிவர்களும் காவோலை போட்டு கொளுத்தியவர்களும் உங்களைபோல் பழமையில் ஊறிய புலம்பெயர் புண்ணாக்கு பேர்வழிகளால் தான் சாத்தியமானது என்கிற உண்மையாவது உங்களுக்கு தெரியுமா? நிர்மலன்.

        நான் இருக்கும் நாடு கால்மாக்ஸ் பிறந்த நாடு. ஒரு நாட்டில் சோசலிஸ புரட்சிநடவேண்டுமாக இருந்தால் அந்த நாட்டில் பஞ்சம்
        அடக்குமுறை வறுமையிருந்திருக்க வேண்டுமென்பதை பத்துவயது
        சிறுவன் கூடா சொல்லதயாராக இருக்கும் போது உங்களுக்கு இந்த நியாயம் தெரியாது என்னவோ? அல்லது உண்டியல் குலுக்கும் ஆர்வத்தில் அப்பாவி புலம்பெயர் தமிழர்களுக்கு கரடி விடுகிறீர்களா?

        முஸ்லீம்சமூகத்தை துரோகிகளாக கணிக்கிறதும் சிங்களயினத்தை
        பகைவர்களாக நிறுத்துவன் எவனும் தொழிலாளவர்கத்தின் வலிமைப்பற்றி அறிந்திருக்கமாட்டன். நீங்கள் பொதுவுடைமைக்காண விளக்கம் கொடுப்பது சாத்தான் ஓதியவேதமே!.

        இந்தயுலகம் என்பதுவருடங்களுக்கு பிறகு தனது உற்பத்திமுறையில் விளைந்தவிளைவுகளால் நச்சுவலையத்திற்குள்
        ஈர்க்கப்பட்டு கொந்தளிப்பு நிலையை அடைந்திருக்கிறது.திரும்பவும்
        உலகை மறுபங்கீடு செய்வதற்கும் காலணிநாடாக ஆக்குவதற்கும் காரணங்கள் தேவையில்லை. காரணங்கள் கண்டுபிடிக்கப்படும்.

        ஒருநாட்டில் ஒருவன் அரசியல்´தஞ்சம் கோரியிருந்தால் அந்தநாட்டு முதாலித்துவவர்கத்திற்கு விசுவாசமாக செயல்பட வேண்டுமென்று எந்த உடன்பாடும் இல்லை. ஏனெனில் முதாலித்துவகொள்கை-உறவு என்பது அந்த நாட்டுமக்களின் செயல்பாடுகள் அல்ல. மிகக்குறைந்த தொழில்துறை பணமுதலைகளின் செயல்பாடே! ஆகவோ தொழிலாவர்கத்தின் நிலைப்பாட்டை ஒருவன் எடுக்கும்போது அது அந்த நாட்டுமக்களின் நிலைப்பாடகவே கருத்தப்படும்.தொழிலாளிவர்கம் என்றுமே கொலை கொள்ளை இனப்பெருமை மதப்பெருமை யுத்தம் போன்றவற்றை விரும்புவதும் இல்லை.அணுவதும் இல்லை.

        ஆனால் உங்களுக்கு ஏகாதிபத்தியகூடாரங்களில் பதுங்கியிருந்து கொண்டு நந்திக்கடல் பதிகம் பாடுவதற்கு வாய்ப்புகள் காத்திருக்கிறது. அதை நீங்கள் செய்யுங்கள். அதற்காகத்தானே உங்கள் பாசிஸசசிந்தனைகளை கருத்தாக்கி விட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இதையே தொடர்ந்தும் செய்து கொண்டிருங்கள். நீங்கள் திருந்தப்போவதில்லை.உங்களைப் போன்ற
        புலம்பெயர் லும்பன் கொள்கைளும் வெல்லப்படும்.

  15. நிர்மலன் says:
    15 years ago

    சந்திரன்ராசா! முதலில் எனது கேள்விக்கு பதிலைசொல்லும் பிறகு என்மீது குற்றச்சாட்டை முன்வையுங்கள். கேள்விக்கு பதில் பதில்கேள்வியல்ல!
    1)உங்களிடம் கேட்கப்பட்டது ! “அப்ப ஏனாம் முன்னைய கிழக்கு ஜேர்மனியில் தங்காது மேற்கு ஜேர்மனிக்கு போலியகதியாய் வந்தீர்கள்!” உன. தவிர கார்ல் மார்க்ஸ் எங்கை பிறந்தவரென்றல்ல!
    2)தமிழினகொலை கொள்ளை பாலியல்வல்லுறவு விபச்சாரதொழிலுக்கு பெண்கள்கடத்தல் கடத்தல் கப்பம் ஊழல் இலஞ்சம் மணற்கொள்ளை…. இப்படியான மனுக்குல விரோத செயலை தொழிலாக கொண்ட அமைப்பான ஈபிடிபியின் உறுப்பினரா இருந்து கொன்டு; “இந்தயுலகம் என்பதுவருடங்களுக்கு பிறகு தனது உற்பத்திமுறையில் விளைந்தவிளைவுகளால் நச்சுவலையத்திற்குள்
    ஈர்க்கப்பட்டு கொந்தளிப்பு நிலையை அடைந்திருக்கிறது.திரும்பவும்
    உலகை மறுபங்கீடு செய்வதற்கும் காலணிநாடாக ஆக்குவதற்கும் காரணங்கள் தேவையில்லை. காரணங்கள் கண்டுபிடிக்கப்படும்.” எனும் இந்த வெட்டிப்பேச்சு தேவையா! துணைபோவது ஈபிடிபியினதும் சிறிலங்கா அரசபயங்கரவாதத்தினதும் மக்கள் விரோத செயற்பாட்டிற்கு கதையளப்பது மக்கள்நலம்(?) என்ன பச்சோந்தித்தனம்!
    3) சிறிலங்காவிலும் கிழக்கு ஜேர்மனியிலும் பாலாறும் தேனாறும் ஒடுது! மேற்கு ஜேர்மனியில் பஞ்சம் தலைவிரித்தாடுது!. எனவே அங்கு பொதுவுடமை புரட்சி செய்யவெனவா! வாக்குமூலம் கொடுத்து மேற்கு ஜேர்மனியில் அகதி தஞ்சம் கோரினீர்கள்??? வடகொரியாவில் பஞ்சமாம் போங்களேன் பொதுவுடமை புரட்சி செய்ய!
    //“சயினட்” கட்டி அவர்களின் வாழ்வை கொள்ளையடித்தது பற்றியோ கேணல் தளபதிகள் உயர்மட்ட தாதாக்கள் உயிர்பிச்சை கேட்டு வெள்ளைகொடி பிடித்த சமாச்சாரத்தை பற்றி ஏன்? மூச்சும் விடுகிறீர்கள் இல்லை.//
    ஐநாநிபுணர்குழு சனல்4 தொலைக்காட்சி தொடக்கம் சிறிலங்கா நீதிமன்றில் (???) உள்ள வெள்ளைகொடி வழக்கு வரை இதுபற்றிதானே பேசப்படுகிறது. பிறகென்ன “வெள்ளைகொடி பிடித்த சமாச்சாரத்தை பற்றி ஏன்? மூச்சும் விடுகிறீர்கள் இல்லை” என்ற பொய் கதை?
    இப்போ கருணாவும் கேபியும் உங்கள் கட்டுப்பாட்டில்தானே! நீதிமன்றில் முன்னிறுத்தி தண்டிப்பதில் இன்னுமேன் தாமதம். உங்கள் பிரச்சினை 11000 போராளிகள் உயிர்தப்பியதே தவிர.சிறிலங்கா அரச பயங்கரவாதத்திடம் வதைபடும் தமிழர் பற்றியல்ல. இனப்பிரச்சினையின் காரண காரியம் பற்றியல்ல!
    //அல்பிரட்துரையப்பாவின் கொலையில் தொடங்கி கப்பம் கடத்தல் ஆயிரம்வருடங்கள் கூடிவாழ்ந்த சமூகத்தின் உடமைகளை கொள்ளையடித்து காதுத்தோடு அறுத்து விரட்டியவரை இறுதியில் நந்திக்கடலில் சங்கமாகியது வரையான வரலாற்றுபதிகத்தின் பக்தி இதெல்லாவற்றையும் பரவசமாக படிக்க வாய்கூசுகிறதோ..?//
    தமிழின கோடாரிக்காம்பு துரையப்பாவிற்கு மரணதண்டணை கொடுத்தது என்ன தவறு! கூடியிருந்து குழிபறித்த /பறிக்கும் சிறிலங்கா முஸ்லிம்கள் துரோகிகள்தான். இதுவரை பொய்புரட்டின் மொத்தவடிவமான சிறிலங்கா முஸ்லிமே சொல்லவில்லை தமிழர் தமது காதை அறித்ததாக. இதிலிருந்தே தெரிகிறது நடக்காதவொன்றை இட்டுக்கட்டும் உலகமகா பொய்யர் தாங்கள்தானென!
    //ஈழத்தமிழரின் வாழ்வைசூறையாடிவர்களும் காவோலை போட்டு கொளுத்தியவர்களும் ….//
    இதை செய்தது செய்துகொண்டிருப்பது போலிதமிழ்கொம்முனிசிற்றுக்களும் ஈபிடிபி காடையர்களும்.
    //ஆனால் உங்களுக்கு ஏகாதிபத்தியகூடாரங்களில் பதுங்கியிருந்து கொண்டு நந்திக்கடல் பதிகம் பாடுவதற்கு வாய்ப்புகள் காத்திருக்கிறது..//
    ஓஓஓ தாங்கள் வாழ்வது வயிறு வளர்ப்பது வடகொரியாவத! இல்லை கியூபாவா! எப்ப தொடக்கம் மேற்குஜேர்மனி பொதுவுடமை நாடானது!
    கொம்முனிச ஆக்கிரமிப்பும் மதில்கட்டிபிரிப்பும் ஜேர்மனியை அழிக்கவில்லை! அணுகுண்டு ஜப்பானை இல்லாதொழிக்கவில்லை என்பது எப்படி யதார்த்தமோ அப்படியே நந்திக்கடல் ஈழவிடுதலைபோராட்டத்தின் முடிவல்ல!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...